> குருத்து: October 2007

October 7, 2007

ராமசாமியும், அவன் பொண்டாட்டியும், கந்தசாமியும்...

நன்றி : பால்வெளி

ஒரு குட்டி கதை சொல்லட்டா?

நம்ம ராமசாமி பொண்டாட்டிய புதுசா வேஷம் கட்டிக்கினு வந்த கந்தசாமி வூட்டுக்குள்ளாற பூந்து தூக்கினு பூட்டானாம்.. ராமசாமி ரிடர்ன் வந்து விஷயத்தை கண்டுக்கினு படா டென்ஷன் ஆகிக்கினானாம்..அப்பால கந்தசாமியோட பேக்கிரவுண்டு இன்னா, ஏதுன்னு விசாரிக்கசொல்லோ மெய்யாலுமே மெர்சலாகி போச்சு தாம் ராமசாமிக்கு.. சரி இன்னா பண்றதுன்னு வூட்டாண்ட இருந்த ஆளுங்கள எல்லாம் வலிச்சுகினு போனாலும் பத்தாதுன்னு நெனைச்சுகினு போற வழியில நம்ம வீராசாமியயும் அவம் ஆளுங்களயும் கூட்டம் சேர்த்துகினு கிளம்புனானாம். அப்படியே கெளம்பி போயி கந்தசாமியோட பேட்டைக்குள்ளாறயே ஜபர்தஸ்தா பூந்து சும்மா அடி பின்னி எடுத்துப்புட்டு, வீராசமிய வுட்டு பேட்டையில அல்லாத்தயும் கொளுத்தி போட்டுட்டு அவம்பொண்டாட்டிய மட்டும் வூட்டுக்கு இட்டாந்தானாம்.. அதுக்கு பொறவுதான் ஒரு டவுட்டானானாம்.. இன்னாடாது.. நம்ம பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த பொறவு அவ போக்கே செரியில்லயே..இத்தினி நா கந்தசாமி வூட்டுல இருக்கசொல்லோ எதுவும் மேட்டர், கீட்டர் ஆயிடுச்சான்னு..அத கேட்ட ராமசாமி பொண்டாட்டிக்கு மெய்யாலுமே மனசுக்கு கஸ்டமா பூடுச்சாம். இன்னாடாது நமக்கு கட்டுனவனும் சரியில்ல, இவனுக்கு தூக்கிட்டு போனவனே தேவலாம்போலன்னு சொல்லிகினு தாம் மேலயே நெருப்ப பத்த வச்சுகினாளாம். அவ்ளோதான்! கத முடிஞ்சு போச்சு...

இன்னாம்மே முயிக்கிறே..
இந்த கத உனுக்கு தெரியாதா..? இன்னாமே சொல்ற?
இத தானம்மே ஆயிரம், ரெண்டாயிரம் வருசமா நம்ம நாட்டுல சொல்லிகினுகீராங்க..
பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த ராமசாமியத்தான் அங்கங்க செல வச்சு கும்பிட்டுகினுகீறாங்களாமே..
இந்த கத தாம்மே நம்ம நாட்டுக்கே பேர் பெத்த ஏதோ "ராமாயணம்"னுவாங்களாமே?
----------------------------------------------------------
உங்கள் புரிதலுக்காக இங்குள்ள சென்னைத்தமிழ் வார்த்தைகள்..

வூடு - வீடு
பூந்து - புகுந்து
பேக்கிரவுண்டு - பின்னணி
மெர்சல் - பயம்
வலிச்சுகினு - சேர்த்துக் கொண்டு
பேட்டை - இடம்
ஜபர்தஸ்தாக - தைரியமாக, வலுக்கட்டாயமாக
டவுட்டு - சந்தேகம்
செல - சிலை
-----------------------------------------------------------
-படைப்புக்கு மூலக் கருத்து பேரா. பெரியார்தாசன் சொற்பொழிவில் இருந்து உருவானது..

பின்குறிப்பு :

மேலும், இது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது என்பவர்கள், சூத்திரென்றும், பஞ்சமரென்றும் சொல்லி, நாளும் உடலையும், உள்ளத்தையும் புண்படுத்துவதை நிறுத்திவிட்டு வாருங்கள். பிறகு, உங்கள் மனம் புண்படுவதைப் பற்றி யோசிக்கலாம்.