October 24, 2013

மோடியை அம்பலப்படுத்தும் அரங்க கூட்டம்! அனைவரும் வருக!

சென்னையில் மழைக் காலம் தொடங்கி விட்ட நிலையில், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்த முடியாத சூழலில், எம்.ஜி.ஆர் நகரில் நடைபெறவிருந்த பொதுக் கூட்டம் அரங்க கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இடம் மாற்றம் குறித்த விவரம் கீழே,
இந்து மதவெறி பாசிஸ்டு 
இந்தியாவின் ராஜபக்சே

மோடியின் முகமூடியைக் கிழித்தெறியும்

அரங்க கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை  மாலை 6 மணிக்கு

புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபத்தில்

(ஓட்டல் தாச பிரகாஷ், பூந்தமல்லி சாலை, புரசைவாக்கம் எதிரில், சங்கம் தியேட்டர் அருகில்)
நடைபெறும்.

        “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி”

என்ற திருச்சி பொதுக் கூட்டத்தில் தோழர் மருதையன் பேசிய உரை அடங்கிய
நூல் வெளியிடப்டும்.
இடம் மாற்றத்தை நண்பர்கள் மத்தியில் பரவலாக பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
உரையாற்றுவோர் :

தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க

வழக்குரைஞர் பாலன், பெங்களூரு உயர்நீதி மன்றம்

புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு
மோடி போஸ்டர்
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

October 17, 2013

நீரோ மன்னன் தமிழில் இல்லையா?

சமீபத்தில் ஒரு வாசகர், எழுத்தாளர் ஒருவரைப் பிடி பிடியென்று பிடித்துவிட்டார்.

அவர்களுக்குள் நடந்த கடிதச் சமரில் வாசகர் தான் வெற்றி பெற்றார். அந்த எழுத்தாளர் கொடுங்கோன்மைக்கு உதாரணமாக நீரோ மன்னனைக் காட்டியிருந்தார். அவன் தாயைக் கொன்று, மனைவியைக் கொன்று சகோதரனையும் கொன்றான். கடைசியில் அரிய தத்துவ மேதையான அவனுடைய குரு சேனகாவையும் கொன்றுவிட்டான். இவன் தான் ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்தவன்.

வாசகருக்கு பற்றிவிட்டது. கொடுங்கோல் மன்னன் என்றால் நீரோ மட்டும் தானா?

தமிழில் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள். அவர்களை சொல்லலாமே. ஏன் சங்ககாலத்தில் கூட நன்னன் என்ற மன்னன் கொடுங்கோலாட்சி செய்திருக்கிறான். நீராடப் போன பெண் நீர் இழுத்து வந்த பசுங்காயை தெரியாமல் உண்டுவிட்டாள். மன்னன் அதற்கு தண்டனை விதித்தான். அவள் இழப்பீடாக 81 யானைகளும், அவள் எடைக்கு எடை பொன்னும் தருவதாகச் சொல்லியும் மன்னன் திருப்தியடையாமல் அவளைக் கொன்றான். இவ்வளவு சிறப்பான அரசர்கள் இருந்தும் கொடுங்கோல் தன்மையில் தமிழ்நாடு குறைவானது என்று சொல்லியது இவருடைய ரத்தத்தை சூடாக்கிவிட்டது. இவருடைய தேசப்பற்றும், அதை முந்திக்கொண்டு வந்த தமிழ் பற்றும், அதை முந்திக்கொண்டு வந்த சங்கப் பாடல் பற்றும் என் பக்கத்தில் நிற்பவர் மயிரைக்கூட சிலிர்க்கவைக்கும்.

‍வாசகர் கடிதம், அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரையிலிருந்து!

October 16, 2013

"மேற்கு வங்கத்தில் விவசாயிகள் மீது ஆயுதம் தாக்குதல் நடத்தினீர்களே! அது தவறல்லவா!"

நேற்று பெண்கள் விடுதலை முன்னணியினரை சேர்ந்த தோழர்கள் தி.நகரில் மோடி வருகையை எதிர்த்த பொதுக்கூட்டத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வசூலில் ஈடுபட்டிருந்ததை கவனித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அருகில் வந்து "மேற்கு வங்கத்தில் விவசாயிகள் மீது ஆயுதம் தாக்குதல் நடத்தினீர்களே! அது தவறல்லவா!" என்றார்கள்.

'நீங்கள் சிபி.எம் என எங்களை நினைத்துவிட்டீர்கள். நாங்கள் தேர்தலில் பங்கெடுக்காத எம்.எல். அமைப்பு என்றதும்' "ஸாரி" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.

இப்படி மக்களே தவறு செய்த கட்சிகளை நேரிடையாக கேட்பது எவ்வளவு அருமையான விசயம்!