பிரார்த்தனை!
குற்றாலத்தில் மழை!
மதுரையில் மழை! என
கடந்தவாரம்
செய்தி கண்ணில்பட்டது.
மழைப் பார்த்து
மாதங்களாயிற்றே!
மழை பார்க்க
ஆசை வந்தது!
நேற்றிரவு யாரோ
எழுப்பியது போல எழுந்தேன்.
'சோ' வென பெரும்மழை
பூமியை நனைத்துக்கொண்டிருந்தது!
மழை விட்ட பிறகு தான்
தூங்கப்போனேன்!
No comments:
Post a Comment