ரசிய நாவல்களின் வரிசையில் மிகவும் பிடித்தமான நாவல். 100 பக்கங்களை கொண்டது.
இரண்டாம் உலகப் போரில் இட்லரை வீழ்த்தி உலகத்தை பாசிசத்திலிருந்து காப்பாற்றியதற்காக ரசியா கொடுத்த விலை இரண்டு கோடி பேர். அதில் ஒருவன் தான் இவான்.
ரசியாவின் எல்லைப்புறத்தில் நதியின் கரைகளில் நடந்த உக்கிரமான போரில், நாஜிப்படை இருக்கும் பகுதிகளில் உளவு பார்க்கும் இவான் ஒரு சிறுவன்.
போரில் தன் குடும்பத்தை தொலைத்தவன். எதிரிகளை வீழ்த்த, நடுங்கும் கடும்குளிரை தாங்குவது, சிக்கினால் தன் உயிர் போய்விடும் என தெரிந்தும் ஈடுபடும் துணிவு. ராணுவ ஒழுங்கை கறாராக கடைப்பிடிக்கும் பண்பு எல்லாம் பிரமிக்கத்தக்கவை.
இவானை போன்ற உறுதி கொண்டவர்களால் தான் இட்லர் வீழ்த்தப்பட்டான். சோர்வாக இருக்கும் பொழுதெல்லாம் இவானை தான் நாடுகிறேன்.
#50_Books_Challenge_2

No comments:
Post a Comment