April 28, 2020

"சார் ஸ்கூல்ல பாம் வைச்சுட்டாங்க!"

அவசர போலீஸ் 100 கட்டுப்பாட்டு அறை!

"சார் ஸ்கூல்ல பாம் வைச்சுட்டாங்க!"

"ஸ்கூல்ல பாம் வெச்சுட்டுங்களாம்!" என போனில் கேட்டு பதறும் புதிய நபரை...

மூத்த அதிகாரி

"பதறாதீங்க! அவங்க ஸ்கூல் என்னன்னு கேளுங்க!"

ஸ்கூல் பெயரை சொன்னதும்...

'பெயர் குமாரான்னு கேளுங்க"

கேட்டதும்... "நம்மளை யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்கடா" என ஒரு மாணவன் போனை விட்டுவிட்டு ஓடிவிடுவான்.

அந்த மூத்த அதிகாரி கூலாக சொல்வார்.

"அந்த பையன் நம்ம ரெகுலர் காலர் (Caller) தான்! எக்ஸாம் நடக்கும் சமயங்களில் இந்த மாதிரி அடிக்கடி பசங்க போன் பண்ணுவாங்க. பதறாதீங்க" என்பார்.
 
#அதர்வா நடித்த 100 படத்திலிருந்து...

பசங்களுக்கு பள்ளி மீதும் தேர்வு மீதும் எவ்வளவு வெறுப்பு இருந்தால்... இப்படி போன் செய்வார்கள்?

இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை பாளையங்கோட்டையில் யூனிபார்மோடு வெளியில் சுற்றி இரண்டு குழுவாக பிரிந்து சண்டை போட்டுக்கொண்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து, ஒரு இன்ஸ்பெக்டர் பெற்றோர்களை வரவழைத்து, பசங்களை 1330 குறளை எழுதி தரச்சொல்லி, பிறகு எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

மாணவர்களின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறத

No comments:

Post a Comment