August 8, 2022

ராஜஸ்தான் : புஸ்கர்


தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பிரம்மா மீது கோபத்தில் அவருடைய மனைவி சாவித்திரி கொடுத்த சாபத்தினால், அவருக்கு வேறு எங்கும் கோயில்கள் இல்லையாம். சாப விமோசனமாக மூலவராக ஒரு இடத்தில் இருக்கும் பிரம்மா கோயில் புஸ்கரில் தான் இருக்கிறதாம். அவரின் இன்னொரு மனைவியான காயத்ரி தேவியுடன் இருக்கிறார்.

பிறகு ராஜஸ்தானில் புஸ்கரைச் சுற்றி சுரங்கங்கள் தோண்டப்பட்டக்கொண்டே இருப்பதால், தார் பாலைவனம் கொஞ்சம் நீண்டுக்கொண்டே வருகிறதாம். ஆகையால் ஒட்டகம்/ஜீப் உதவியுடன் அங்கு மக்கள் செல்கிறார்கள்.
ஆரவல்லி மலைத்தொடரில் நல்ல உயரத்தில் இருக்கும் பிரம்மாவின் துணைவியார் சாவித்திரி கோயில் இருக்கிறது. நமது பழனி முருகன் கோயில் போல ரோப் கார் காலையிலிருந்து மாலை வரை இயக்குகிறார்களாம். தலைக்கு ரூ. 150 வசூலிக்கிறார்களாம்.
விரிவாக தெரிந்துகொள்ள பின்னூட்டத்தில் காணொளி பாருங்கள்.

#ராஜஸ்தான்

https://www.youtube.com/watch?v=gMVhplKt1xY

No comments:

Post a Comment