May 23, 2020

லாக்டவுன் கதைக‌ள் - 2

மகாராஷ்டிரம் நாசிக்கில்
கணவனுக்கு வேலை.
ஊரடங்கு வேலையை பறித்தது.
செய்த வேலைக்கு
கூலியும் தரவில்லை.
மனைவி சகுந்தலாவோ நிறைமாத கர்ப்பிணி.
இனி இங்கு
வாழ வழியில்லை என உறைத்தது.

சொந்த ஊரான மத்தியபிரதேசத்தில் இருக்கும்
சட்னா மாவட்டத்தின் உச்சாரா
செல்ல முடிவெடுத்தார்கள்.

16 பேரும் நடக்க துவங்கினார்கள்.
70 கி.மீ பயணம்.
ஆக்ரா - மும்பை
சாலையில் செல்லும் பொழுது வலி வந்து..
மே 5ல் பிரசவம்.
மோடியின் ராஜ்ஜியத்தில்
புதிய உயிர்.
ஒருமணி நேரம் ஓய்வு.
இன்னும் செல்லவேண்டிய தூரம் 900 கிமீ.
தாமதித்தால்
நெருக்கடிகள் பெருகும்.
விரைவாய்
நடக்க ஆரம்பித்தார்கள்.

போகும் வழியில்
சீக்கிய குடும்பம்
இளைப்பாற
உதவி செய்தது.

மீண்டும் நடந்தார்கள்.
230 கிமீ கடந்ததும்
மத்தியபிரதேச எல்லையை தொட்டார்கள்.

போலீசு அதிகாரி கவிதாவும், குழுவினரும் மறித்தனர்.
அவர்களின் பரிதாபநிலை கண்டு உணவளித்தனர்.
மீதி இருக்கும் தூரத்தை கடக்க
பேருந்து ஏற்பாடு செய்தனர்.

Source : Times of India

https://timesofindia.indiatimes.com/city/indore/madhya-pradesh-woman-gives-birth-on-roadside-and-marches-on-for-160km/articleshow/75654249.cms?fbclid=IwAR1SrPOJss4qptaVeGzLV7cjwyp8VrVKuSa-YSdoYfXkAdV_VgMciKZuFEM&from=mdr

No comments:

Post a Comment