நாம் எந்த மனிதரை முதலில் சந்திக்கிறோமோ, அவரைப் பற்றி உருவாகும் முதல் கருத்து ஆடையிலிருந்தே துவங்குகிறது. அது சரியா தவறா என்பது விவாதத்துகுரியது; ஆனால் அதுதான் நடைமுறையாக இருக்கிறது. . இந்த உண்மையைப் புரிந்து ஆடைமேலாண்மையை (Dress Management) கவனமாகப் பார்க்க வேண்டிய காலம் இது.
ஆடை
என்பது சமகாலத்தில் அடையாளம் மட்டுமல்ல; அது ஒரு Statement”
ஆடை
என்பது
- நம் நிலையை,
- நம் ஒழுங்கை,
- நம் துறைக்கான
மரியாதையை,
- நம் சுய
கட்டுப்பாட்டை,
வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நாம்
பேசுவதற்கு முன்பே
நம்மை
முன்
கொண்டு
செல்லும் முதல்
தூதர்
— இதுதான் ஆடை.
இன்றைய
உலகில்
ஒவ்வொருவரும் நம்
செல்கின்ற துறைக்கு ஏற்ப
ஆடையை
அணிகிறார்கள், மதிக்கிறார்கள், அதனால்தான் “ஆடை
அடையாளம்” மிகப்
பெரிய
பங்கை
வகிக்கிறது.
ஒரு வரி ஆலோசகருக்கு ஏன் அவசியம்?
வரி
ஆலோசகர் என்பது
வெறும்
கணக்குப் புத்தகங்களைச் சரி
பார்க்கும் நபர்
அல்ல.
அவர்
- வாடிக்கையாளர்
நம்பிக்கையை கொண்டிருக்கும் நபர்
- வாடிக்கையாளருக்காக அரசுத்
துறையுடன் தொடர்பு கொள்ளும் நிபுணர்
- தொழிலதிபரின்
நிதி ரகசியத்தை காக்கும் நம்பகமானவர்.
- தணிக்கையாளர்,
அதிகாரி, வாதாடுபவர் என எல்லாவற்றின் கலவை
இப்படி
இருக்கும் நிலையில், அறிவு மட்டும் போதாத காலம் இது.
அறிவு = உள்ளடக்கம் ஆடை
= அதன் அட்டைப்படம்
அட்டைப்படம் அழகாக
இல்லையெனில், உள்ளடக்கத்தைப் படிப்பவரின் மனதிலும் ஒரு
இடைவெளி பிறக்கும். அதை
நாம்
தவிர்க்க வேண்டாம்.
எளிமையான, சுத்தமான, சீரான
ஆடை
— வரி
ஆலோசகருக்கு தொழில்
மதிப்பை இரட்டிப்பாக்கும்.
அறிவு இருந்தால் போதுமானதா?
சமூக
உளவியல் ஒன்று
சொல்கிறது: “நாம் யாரை நம்புகிறோமோ,
அவர்கள் முதலில் நமக்கு எப்படி தோன்றுகிறார்களோ அதில்தான் 60% முடிவு செய்கிறோம்.”
அறிவு
என்பது
வலுவான
மரம்.
ஆடை
என்பது
அந்த
மரத்தில் மலரும்
பூ.
ஆடை
என்பது
அழகு கூட்டுவது மட்டும் அல்ல, நம்மை
சீராகவும், தொழில்முறையாகவும் காட்டும் கருவி.
ஆடை எத்தனை அதற்கு அழகூட்டுகிறது?
ஒரு
நல்ல,
சுத்தமான, பொருத்தமான ஆடை:
- நம் உடல்நிலையையும்
(posture) மேம்படுத்துகிறது
- நம் மனநிலையையும்
வெளிப்படுத்துகிறது
- நம்மை நம்பகத்தன்மையுடன்
காட்டுகிறது
- “நான் தயாராக இருக்கிறேன்” என்ற உள் உணர்வை உருவாக்குகிறது
- நம்மை ஒரு
professional-ஆக காட்சிப்படுத்துகிறது
அறிவின் மேல் அழகு மிதக்காது; ஆடை - அறிவை வெளிச்சமாக காட்டும் விளக்கு.
இறுதியாக…
ஆடை
என்பது
பார்வைக்காக மட்டும் அல்ல;
ஒரு
தொழில்முறை பழக்கம்,
ஒரு
சுய மரியாதை, ஒரு
நிசப்தமான மொழி.
நல்ல
ஆடை,
நல்ல
அறிவை
— அதிக நம்பிக்கையோடு, அதிக கவர்ச்சியோடு, அதிக தாக்கத்தோடு
இலக்கை
அடைய
உதவுகிறது.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ
ஆலோசகர்,
எல்.ஐ.சி. முகவர்
📞 95512 91721


