> குருத்து: இந்தியாவின் இதயத்தின் மீதான போர் - அருந்ததிராய்

January 27, 2010

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் - அருந்ததிராய்


The heart of India is under attack' - 31, அக்டோபர், 2009 கார்டியன் இதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரையை சிறப்பாக தமிழாக்கம் செய்து, நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது.

நூலிலிருந்து...

// நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஊர் பேர் தெரியாத நிறுவனங்கள் முதல், உலகின் மாபெரும் சுரங்க மற்றும் இரும்பு நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால்.... வேதாந்தா வரை அனைவரும் பழங்குடி மக்களின் தாயகத்தை அபகரித்துக் கொள்வதற்குப் போட்டி போட்டுக்கொண்டு பாய்கின்றனர்.

ஒவ்வொரு மலையின் மீதும், ஒவ்வொரு நதியின் மீதும், காட்டின் பசும்புற் திட்டுகள் மீதும், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது"// பக். 23

// "சொல்லிக் கொள்ளப்படும் இந்தச் சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்து அறுபதாண்டுகளுக்குப் பின்னரும், கல்வி, மருத்துவம் அல்லது சட்டப்படியான நிவாரணங்கள் என எதுவுமே கிடைக்க பெறாத மக்கள் அவர்கள். பல்லாண்டுகளாக அவர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டவர்கள்; கந்து வட்டிக்காரர்களும், சிறு வியாபாரிகளாலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்கள்; போலிசும், வனத்துறை அதிகாரிகளும் தமது உரிமை போல் கருதி பழங்குடிப் பெண்களை வல்லுறவு கொண்டனர். அப்பழங்குடி மக்கள் தம் கண்ணியத்தை சிறிதளவேனும் மீளப் பெற்றார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களுடன் பல்லாண்டுகளாக வாழ்ந்து, அவர்க்ளுடன் தோளோடு தோள் நின்று போராடிய மாவோயிஸ்டு கட்சியின் அணிகள்தான்."// பக். 7.

//" நான் தாண்டேவாடா சென்றிருந்த போது, தனது ' பசங்களால்' கொல்லப்பட்ட 19 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் என்னிடம் காட்டினார். "இவர்கள் மாவோயிஸ்டுகள் தான் என்று நான் மற்றவர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்" என்று கேட்டேன். "பாருங்க மேடம், இவுங்க கிட்ட மலேரியா மாத்திரை, டெட்டால் பாட்டில் எல்லாம் இருந்துச்சு.... இதெல்லாம் வெளியில இருந்து வந்த விச்யங்களில்லையா?" என்றார்" // பக். 11

// "தாண்டேவாடாவில் ஹிமான்ஷூ குமார் என்பவரால் நடத்தப்படும் வன்வாசி சேத்னா ஆஸ்ரம் எனும் காந்திய ஆசிரமம், சில மணி நேரங்களில் புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அந்த ஆசிரமம் தான் போர்க்களப் பகுதி துவங்குமிடத்திற்கு முன்னால் அமைந்திருந்த ஒரே ஒரு நடுநிலைப் புகலிடம். இப்பகுதிக்கு வேலை செய்ய வரும் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயல்வீரர்கள், ஆய்வாளர்கள், உண்மை அறியும் குழுவினர் ஆகியோர் தங்கிச் செல்வதற்கு எஞ்சியிருந்த ஒரே இடம்." // பக். 11

// அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதில் பழங்குடி மக்கள் தமக்கென ஒரு நீண்ட, நெடிய வீரஞ்செறிந்த பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அந்தப் பாரம்பரியம் மாவோயிசம் பிறப்பதற்கும் முந்தையது என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது" //


விலை ரூ. 15/- பக்கங்கள் - 32.

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.
விவசாயிகள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள் :
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை - 83
தொலைபேசி : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110/63, என்.எஸ். கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
தொலைபேசி : 94448 34519

தொடர்புடைய பதிவுகள் :

ஆபரேசன் கிரீன் ஹண்ட் எதிர்ப்பியக்கம்!

பினாயக்சென் விடுதலை : அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை

Anonymous said...

What the fight against maoists is fight against indias heart.ridiculous.maoists actually are the balls of China not the heart of India you son of a bitch.

சுனா பானா said...

Government is trying to grab adivasis homeland and sell it to mining corporates. Also in the name of operation green hunt, govt is arming itself and propagating against all kinds of people struggles. It is govt sponspored terrorism against Indian people.