நம்ம
ஊரில்
சிலரைப் பார்த்திருப்போம். காலை
கண்
திறந்ததும் கைபேசியைத் திறப்பார்கள். இரவு
கண்
மூடுவதற்கு முன்பும் கைபேசியைத்தான் பார்ப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை முழுக்க ஒரு
பட்டியல்.
இன்று
என்ன
வேலை?
நாளை
என்ன
வேலை?
அடுத்த
மாதம்
என்ன
திட்டம்? அடுத்த
ஆண்டு
என்ன
இலக்கு?
அப்படி
வாழ்கிறவர்கள் கெட்டவர்கள் அல்ல.
ஆனால்
வாழ்வதைவிட, ஓடுவதில்தான் அதிக
நேரம்
செலவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு
மனிதன்
இருந்தான். அவனுக்கு ஒரு
நிலம்
வாங்க
வேண்டும். ஏற்கனவே நிலங்கள் நிறைய இருந்தன. ஆனால்
இன்னொரு நிலம்.
ஏற்கனவே பணம்
இருந்தது. ஆனால்
இன்னும் கொஞ்சம் பணம்.
ஏற்கனவே நல்ல
வாழ்க்கை இருந்தது. ஆனால்
அதை
அனுபவிக்க நேரம்
மட்டும் இல்லை.
ஒருநாள் ஒரு
நல்ல
வாய்ப்பு வந்தது.
தொலைவில் ஒரு
நிலம்
விற்பனைக்கு வந்திருக்கிறது. "நாளை போய்ப்
பார்க்கலாம்" என்றார்கள். "இல்லை. இன்று
போனால்
தான்
லாபம்"
என்றான்.
குதிரை
வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவனோடு
வேலைக்காரனும் வந்தான். மாலை
நேரத்தில் புறப்பட்ட பயணம்,
இரவுக்குள் சிக்கலாகிவிட்டது. பனிப்புயல் ஆரம்பித்தது.
முதலில் மெதுவாக. பிறகு
கண்முன் நின்ற
மனிதனையே காண
முடியாத அளவுக்கு. வழி
தெரியவில்லை. திசை
தெரியவில்லை. எங்கே
போகிறோம் என்பதும் தெரியவில்லை. ஆனால்
விசித்திரமாக, அந்த
நேரத்திலும் அவன்
மனதில்
ஓடியது
நிலத்தின் விலைதான். "அந்த நிலத்தை வாங்கினால் எவ்வளவு லாபம்
வரும்?"
மனிதன்
சில
நேரங்களில் அப்படித்தான். உயிர்
கையில்
இருந்தாலும் பழக்கப்பட்ட கவலையை
விடமாட்டான். குளிர்
அதிகரித்தது. வேலைக்காரன் நடுங்க
ஆரம்பித்தான்.
அப்போது அந்த
மனிதன்
சுற்றிப் பார்த்தான். எங்கும் வெள்ளை.
ஒரே
அமைதி.
வாழ்க்கையில் முதல்
முறையாக அவன்
எதையும் செய்ய
முடியாத நிலையில் நின்றிருந்தான்.
அப்போது தான்
அவனுக்குள் ஒரு
கேள்வி
எழுந்தது. "நான் இத்தனை
வருடமாக என்ன
செய்து
கொண்டிருந்தேன்?" அவன் நினைத்துப் பார்த்தான். மகனின்
மழலை. மனைவியின் புன்சிரிப்பு. நண்பர்களின் அழைப்பு. மழை
பெய்த
மாலை.
விடுமுறை நாள்.
குடும்பத்தோடு அமர்ந்து பேசக்கூடிய நேரங்கள். எல்லாமே இருந்திருக்கின்றன. ஆனால்
அவன்
எப்போதும் பிஸியாக இருந்தான். அவற்றை
அனுபவிக்காமல் கடந்து
சென்றுவிட்டான்.
பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்தபடி வெளியே
இருக்கும் அழகைக்
கவனிக்காமல் கைபேசியையே பார்த்துக் கொண்டிருப்பது போல.
அப்போது அவனுக்கு ஒரு
உண்மை
புரிந்தது. தான்
பணத்தைத் துரத்தவில்லை. "ஒருநாள் சந்தோஷமாக வாழ்வேன்" என்ற நாளைத்
துரத்திக் கொண்டிருந்தான். ஆனால்
அந்த
நாள்
மட்டும் வரவே
இல்லை.
அவன்
வேலைக்காரனை அணைத்துக் கொண்டு
படுத்தான். தன்னுடைய உடல்
வெப்பத்தை அவனுக்குக் கொடுத்தான். அந்த
இரவில்
அவன்
ஒரு
நிலத்தையும் வாங்கவில்லை. ஒரு
ஒப்பந்தத்தையும் முடிக்கவில்லை. ஒரு
ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை.
ஆனால்
வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு
விஷயத்தைப் புரிந்துகொண்டான். வாழ்க்கை என்பது
நாம்
சேர்ப்பது அல்ல.
தவறவிடாமல் அனுபவிப்பது.
சிலர் வாழ்க்கையை வாழ்கிறார்கள். சிலர் வாழ்க்கைக்காகத் தயாராகிக் கொண்டே இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இரண்டாவது வகையினருக்கு ஒருநாள் தெரியவரும். அவர்கள் காத்திருந்த வாழ்க்கை, அவர்கள் ஓடிக்கொண்டிருந்த காலத்திலேயே அமைதியாகக் கடந்து போய்விட்டது என்று!
- இரா. முனியசாமி

