முன்குறிப்பு : நாம் வெளியிட்ட ஒரு செய்தியை வாட்சப்பில் உள்ள நண்பர்கள் எப்பொழுது பார்க்கிறார்கள்? என எப்பொழுதாவது கவனிப்பதுண்டு. சிலர் இரவு 11.30 மணியளவில் பார்த்திருக்கிறார்கள். சிலர் நடுநிசியில்… இன்னும் சிலர் விடிகாலை 4.30 மணிக்கு மேல்! நகர வாழ்க்கையும், மொபைலும் நம் தூக்கத்தை தொந்தரவு செய்து வருகின்றன.
****
ஒரு
கேள்வி.
ஒரு
முதலாளி வந்து,
"உங்களது ஒரு
நாளில்
8 மணி
நேரத்தை எனக்குக் கொடுங்கள். அதற்குப் பதிலாக மாதம் சம்பளம் தருகிறேன்" என்று சொன்னால், அதை
நாம்
வேலை
என்று
அழைக்கிறோம்.
ஆனால்
இன்னொருவர் வந்து,
"உங்களது ஓய்வு
நேரத்தைக் கொடுங்கள். குடும்பத்துக்கு ஒதுக்கும் நேரத்தைக் கொடுங்கள். தூக்க
நேரத்தைக் கொடுங்கள். பதிலுக்கு முடிவில்லாமல் வீடியோக்கள் தருகிறேன்" - என்று சொன்னால்? அதை
நாம்
பொழுதுபோக்கு என்று
அழைக்கிறோம்.
இதுதான் இன்று
பலருடைய வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கிறது.
அலுவலக ஒழுக்கம்
பல
அலுவலகங்களில் தனிப்பட்ட மொபைல்
பயன்படுத்த அனுமதி
இருக்காது. சில
தொழிற்சாலைகளில் உள்ளே
செல்லும் முன்பே
மொபைலை
வாங்கி
வைத்துவிடுவார்கள்.
ஏன்?
உற்பத்தித் திறன்
குறையக்கூடாது. கவனம்
சிதறக்கூடாது. பாதுகாப்பு பிரச்சனை வரக்கூடாது. அலுவலகம் தனது
நேரத்தை பாதுகாக்கிறது.
ஆனால்
வீட்டுக்கு வந்த
பிறகு
நமது
நேரத்தை யார்
பாதுகாக்கிறார்கள்? அங்கேதான் பிரச்சனை தொடங்குகிறது.
இரவு
10 மணிக்கு தூங்கப் போகிறோம். "ஒரு ஐந்து
நிமிடம் மட்டும் ரீல்ஸ்
பார்க்கலாம்." பிறகு ஒரு
வீடியோ.
அதற்குப் பிறகு
இன்னொன்று. பிறகு
யாரோ
அனுப்பிய செய்தி.
பிறகு
ஒரு
செய்தி
இணைப்பு. பிறகு
ஒரு
நகைச்சுவை.
திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தால் 11.30. தூங்கச் சென்றவர் காணாமல் போய்விட்டார். மொபைல்
மட்டும் இன்னும் வேலை
பார்த்துக்கொண்டிருக்கிறது.
தூக்கம் தொலைக்கிறோம்
இதில்
மிகப்பெரிய பிரச்சனை நேர
விரயம்
மட்டும் அல்ல.
நமது
உடலுக்குள் ஒரு
கடிகாரம் இருக்கிறது. மாலை
ஆனதும்
உடல்
மெதுவாக, "தூங்கத் தயாராகுங்கள்" என்று அறிவிக்கத் தொடங்கும். Melatonin
என்ற
ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். அதுதான் இயற்கையான தூக்க
அழைப்பு.
ஆனால்
மொபைல்
திரையின் நீல
ஒளி
அந்தச்
செய்தியை குழப்பிவிடுகிறது. உடல்
என்ன
நினைக்கிறது தெரியுமா? "இன்னும் பகல்தான் போலிருக்கிறது." அதனால் தூக்கம் தள்ளிப் போகிறது. தூங்கினாலும் ஆழமான
தூக்கம் கிடைக்காமல் போகிறது.
தூக்கம்
என்பது தூக்கம் மட்டுமில்லை
"சரி, கொஞ்சம் தூக்கம் குறைந்தால் என்ன
ஆகும்?"
என்று
பலர்
கேட்பார்கள். பிரச்சனை அங்கேதான். தூக்கம் என்பது
சும்மா
கண்
மூடிக்கொண்டு கிடப்பது அல்ல.
அது
உடலின்
இரவு
நேர
பராமரிப்பு வேலை.
நாம்
தூங்கும்போது: மூளை
தன்னை
ஒழுங்குபடுத்துகிறது. நினைவுகளை சேமிக்கிறது. உடல்
செல்களைப் புதுப்பிக்கிறது. நோய்
எதிர்ப்பு அமைப்பு வேலை
செய்கிறது. மன
அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
சுருக்கமாகச் சொன்னால், பகலில்
நாம்
பயன்படுத்திய உடலையும் மூளையையும் இரவில்
சர்வீஸ் செய்கிறது.
தூக்கம் தான் உடலுக்கான சர்வீஸ்
ஒரு
காரை
எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும்
ஓட்டிக்கொண்டே போகிறோம். எண்ணெய் மாற்றமில்லை. பராமரிப்பு இல்லை.
சேவை
இல்லை.
எவ்வளவு நாள்
ஓடும்?
மனித
உடலும்
அதேதான்.
வேறுபாடு என்னவென்றால், காருக்கு சர்வீஸ் சென்டர் இருக்கிறது. உடலுக்கு தூக்கம்தான் சர்வீஸ் சென்டர்.
உடலும்
மனமும்
மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்து எச்சரிப்பது என்ன?
தொடர்ச்சியான தூக்கமின்மை:
• உடல் எடை
அதிகரிக்கலாம் • நீரிழிவு அபாயம்
உயரலாம் • இரத்த
அழுத்தம் பாதிக்கப்படலாம் • இதய
நோய்
அபாயம்
கூடலாம் • நோய்
எதிர்ப்பு திறன்
குறையலாம் என்று. ஆனால்
பலர்
உடல்
பிரச்சனைகளைவிட மன
ரீதியான பாதிப்புகளையே முதலில் உணர்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். காரணமே
இல்லாமல் எரிச்சல். சின்ன
விஷயத்திற்குக் கோபம்.
வேலையில் கவனம்
இல்லாமை. பெயர்கள் மறப்பது. முடிவெடுக்க முடியாமை. சோர்வு.
இவற்றில் சில
நேரங்களில் காரணம்
வாழ்க்கை அல்ல.
தூக்கமின்மையாக இருக்கலாம்.
ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு.
அலுவலகம் உங்களிடம் 8 மணி
நேரம்
வாங்குகிறது. பதிலுக்கு சம்பளம் தருகிறது. மொபைல்
என்ன
செய்கிறது? உங்களிடம் 2 மணி
நேரம்
வாங்குகிறது. சில
நேரங்களில் 3 மணி
நேரம்
வாங்குகிறது. சிலரிடம் 5 மணி
நேரம்
கூட
வாங்குகிறது.
பதிலுக்கு என்ன
தருகிறது? இன்னும் கொஞ்சம் ஸ்க்ரோல் செய்ய
வேண்டும் என்ற
உணர்வு.
அவ்வளவுதான்.
அதனால்
மருத்துவர்கள் சொல்வது மிகவும் எளிய
விஷயங்கள். படுக்கப் போவதற்கு ஒரு
மணி
நேரம்
முன்பு
மொபைலை
விலக்குங்கள். படுக்கையறையை தூக்கத்திற்காக மட்டும் பயன்படுத்துங்கள். அறிவிப்புகளை அணைத்துவிடுங்கள். தினமும் ஒரே
நேரத்தில் தூங்க
முயலுங்கள்.
காலை
எழுந்த
உடனே
மொபைலைப் பார்க்காதீர்கள். இவை
பெரிய
தியாகங்கள் அல்ல.
ஆனால்
பெரிய
மாற்றங்களை உருவாக்கக்கூடியவை.
ஒரு
காலத்தில் மக்கள்
தூக்கத்தை கெடுத்தது வேலை
என்று
நினைத்தார்கள். இன்று
பலருடைய தூக்கத்தை கெடுப்பது வேலை
இல்லை.
வேலை
முடிந்த பிறகும் கையில்
இருந்து வைக்கப்படாத மொபைல்தான்.
இறுதியாக...
அலுவலகம் நம்மிடம் வேலை
நேரத்தை மட்டுமே வாங்குகிறது. மொபைல்,
நாம்
கவனிக்காவிட்டால், நமது
ஓய்வு
நேரத்தையும், குடும்ப நேரத்தையும், தூக்கத்தையும் மெல்ல மெல்ல எடுத்துக்கொள்கிறது.
நமது
உடலுக்கும், மனதுக்கும், உறவுகளுக்கும் நாம்
செய்யக்கூடிய மிக
எளிய
முதலீடு என்ன
தெரியுமா? இன்றிரவு கொஞ்சம் சீக்கிரமாக மொபைலை
கீழே
வைப்பதுதான்.
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ
ஆலோசகர்,
எல்.ஐ.சி. முகவர்
#Mobile_Addiction_Article_Series_Part7

