> குருத்து

September 4, 2026

பேரழிவின் பனிக் கப்பல்

 


மூங்கில் இலை மேல் தூங்கும்

இந்தச் சின்னஞ்சிறு பனித்துளியிலிருந்துதான்

பிரளயம் ஒன்று தோன்றியதா?

 

ஒரு பனித்துளியின் வழியேதான்

யாவும் நிகழ்ந்தன.

இமயத்தின் உச்சியில் அந்தத் துளி

ஒரு பனிப் பூதமாகி வீற்றிருந்தது.

 

சூரியனின் தகிக்கும் கைகள்

மலையினைப் பற்றியிருந்த

பூதத்தின் கைகளை

மெல்ல விடுவித்தது.

 

பனிப் பூதம்

தன் பிரமாண்டமான உடலோடு

உச்சியிலிருந்து சரிந்து

ல்ஹெந்தேநதியின் குறுக்கே

ஒரு பெரும் அணையாக விழுந்து

தூங்கத் தொடங்கியது.

 

பனிப் பூதத்தின் துயிலைக் கலைக்க

தண்ணீர் பூதம் போர் முரசுடன்

தன் படைகளைத் திரட்டியது.

பிறகு எல்லாம் நிகழ்ந்தன.

 

சுனாமி நிகழ்ந்த அதிகாலையில்

தண்ணீர் பூதம் எவ்வாறு

கடலிலிருந்து எழுந்து வந்ததோ

அவ்வாறேதிரிசூலிநதியிலிருந்தும்

பத்தடி உயரத்தில் எழுந்தது.

நதி எழுந்து நிற்கும் காட்சியை

முதன் முதலாகக் கண்டார்கள்.

 

தண்ணீரின் படைகள்

நிலத்திலிருந்த எல்லாவற்றையும்

எடுத்துக்கொண்டன.

கட்டிடங்களை ஒரு 'கேக்' துண்டினை

உண்பது போல அவை உண்டன.

அந்தப் பனித்துளிக்குள்

காணாமல் போனவர்கள்

நதிகளின் ஆழத்தில்

தங்களை ஒரு மீனாக மாற்றிக்கொண்டார்கள்.

 

உடலாக மீட்கப்பட்டவர்கள்

கூட்டுப் புதைகுழிகளில்

கூட்டம் கூட்டமாக

வாழத் தொடங்கினார்கள்.

 

உயிருடன் திரும்பியவர்கள்

ஒருபோதும் மீள முடியாத

கொடுங்கனவின் கதையை

வாழ்நாளெல்லாம்

சொல்லத் தொடங்கினார்கள்.

 

ஒரு புனித யாத்திரைப் பயணம்

ஒரு நாளும் முடியாத

ஒரு பயணமாக

இருக்கப்போகிறது என

எந்தச் சகுனங்களும்

அவர்களுக்குக் காட்டவில்லை.

 

காய்ந்த சருகுகள் போல

மனிதர்கள் நீரில் மிதந்து சென்றார்கள்;

பணம் காகிதமாகி மிதந்தது.

வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்கள்

செல்போன்களை இறுகப் பற்றியபடி

தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றார்கள்.

 

பாஸ்போர்ட் இல்லை,

விசா இல்லை,

எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் இல்லை;

நாட்டின் எல்லைக்கோடுகளைத்

தகர்த்துக்கொண்டு

பேரழிவின் பனிக்கப்பலில்

மனிதர்கள் விரைகிறார்கள்

 

காணாமல் போனவர்களின்

உறவினர்கள், நண்பர்கள் காத்திருக்கிறார்கள்.

நிலத்திலிருந்து காணாமல் போனவர்கள்

என்றாவது திரும்பி வர

ஏதேனும் ஒரு பாதை இருக்கிறது;

 

நீருக்கடியில் மறைந்துகொண்டவர்களைத்

தேடிப்போக என்ன பாதை இருக்கிறது?

பனிமலைகள் உருகி

நம் மேல் உடைந்து விழுகின்றன;

 

ஆறாத் துயரங்கள்.

மனிதர்களின் இதயங்கள்

அதைவிடவும் கனத்து உடைகின்றன.

கரையேறி வந்து மனிதர்களை உண்ட

நதிநீர் மட்டம்

இப்போதும்

உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது

ஆறாத் துயரத்தின் கண்ணீரால்.

 

கடைசி நம்பிக்கை ஒளியாய்

நான்கு நாட்களுக்குப்பின்

இடிபாடுகளிலிருந்து

ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்படுகிறது

நீரிலிருந்து தொடங்கிய அனைத்தும்

நீருக்கே திரும்புகின்றன.

 

1..9.2026

மாலை 5.00

மனுஷ்ய புத்திரன்

September 2, 2026

PF updates 2026 - Zoho Meeting - R. Muniasamy, Tax Consultant


அன்பு நண்பர்களுக்கு,


திரு. இராஜசேகரன் CMA அவர்கள் நடத்திய இன்றைய கூட்டத்தில் 75 பேருக்கு மேல் கலந்துகொண்டார்கள். பி.எப். சமீபத்திய மாற்றங்கள் குறித்து  25 நிமிடங்கள் பேசினேன்.  25 நிமிடங்களில் எதை சொல்வது, எதை விடுவது என்பதில் தான் சவால்கள் இருந்தன. இருப்பினும் முக்கிய மாற்றங்கள் குறித்து விளக்கினேன். 25 நிமிடங்களுக்கு மேலாக கேள்விகள் கேட்டார்கள். அதற்கும் பதிலளித்தேன்.


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பி.எப். டிஜிட்டல்மயமாக்கத்தை விரைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால் தொழிலாளர்கள் அதன் வேகத்தைப் புரிந்துகொண்டு தாங்களும் அப்டேட் ஆவதில் சுணக்கமாய் இருக்கிறார்கள்.  இந்த இரண்டுக்குமான இடைவெளியில் நிறைய குழப்பங்கள் நடைபெறுகின்றன.  


ஆகையால் தேவையின் பொருட்டு இனி வாரம் ஒரு கட்டுரை எழுதலாம் என இருக்கிறேன்.   நமது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், கூட்டம் எப்படி நடந்தது என்பது குறித்து உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தனிப்பட்ட முறையில் கூட தெரிவியுங்கள். 


நன்றி.


- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721


August 28, 2026

மூளை நல்ல நிலையில் இருக்கும்போது… ஏன் கஷ்டமான வேலையைத் தவிர்க்கிறோம்?

 


ஒரு விஷயத்தை தெளிவாகக் கற்றுக்கொள்ள ஆர்வம் வேண்டுமா? நல்ல ஆசிரியர் வேண்டுமா? முனைப்பான கற்றல் வேண்டுமா? தொடர்ந்து உழைக்க வேண்டுமா? உண்மையைச் சொன்னால்நான்குமே வேண்டும்!

 

ஆர்வம் இருந்தால், “இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்என்று உள்ளே ஒரு தீப்பொறி எரியும். ஆசிரியர் இருந்தால், “எங்கே போக வேண்டும்?” என்று வழி தெரியும். முனைப்பான கற்றல் இருந்தால், கற்றது வெறும் கேள்வி-பதில் ஆகாமல் அறிவாக மாறும். தொடர் உழைப்பு இருந்தால்தான் அந்த அறிவு நம்முடையதாகும்.

 

ஆனால் ஒரு வேடிக்கையான விஷயம் இருக்கிறது.  மூளை நல்ல ஆற்றலோடு இருக்கும் நேரத்தில்கூட, அது ஏன் எளிதான வேலையைத்தான் தேடுகிறது?

 

உதாரணமாக, காலை நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கிறது. “இன்று Income Tax-ல் ஒரு புதிய விஷயத்தைப் படிக்கலாம்என்று நினைக்கிறோம். அடுத்த நிமிடம்… “முதலில் WhatsApp பார்த்துவிடலாம்இரண்டு Reels பார்த்துவிட்டு படிக்கலாம்ஒரு தேநீர் குடித்துவிட்டு ஆரம்பிக்கலாம்…” என்று மூளை மிகச் சாதுர்யமாக நம்மை சமாதானப்படுத்திவிடுகிறது!

 

பத்து நிமிடத்தில் நாம் Tax Law படிப்பவராக இல்லாமல், உலகச் செய்திகளை ஆராய்ச்சி செய்பவராக மாறிவிடுகிறோம்!  இதற்குக் காரணம் சோம்பேறித்தனம் மட்டுமல்ல.

 

மூளை இயற்கையாகவே குறைந்த ஆற்றலில் அதிக வேலை செய்யும் பாதையை விரும்புகிறது. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது, சிந்திப்பது, தவறுகளைச் சரிசெய்வதுஇவை எல்லாம் மூளைக்கு அதிக வேலை.

 

ஆகவே மூளை சொல்வது: “கஷ்டப்பட வேண்டாம். ஏற்கனவே தெரிந்த வேலையைச் செய்வோம்!” இதுதான் நம்முடைய பெரிய முரண்பாடு போலத் தெரிகிறது. ஆனால் உண்மையில் இது முரண்பாடு அல்ல.

ஆற்றல் இருப்பது ஒரு வாய்ப்பு. அந்த ஆற்றலை எங்கே செலவிடுவது என்பது ஒரு தேர்வு.

 

அதனால்தான், மூளைஎளிதான வழி போகலாம்என்று சொல்லும்போது, நம்முடைய விழிப்புணர்வு மட்டும்,  இல்லைஇன்று கொஞ்சம் கஷ்டமான பாதையில்தான் போகிறோம்!” என்று சொல்ல வேண்டும்.

 

ஏனெனில் வாழ்க்கையில் வளர்ச்சியைத் தருவது பெரும்பாலும் நமக்கு எளிதாகத் தோன்றும் வேலை அல்ல; செய்யத் தயங்கும் வேலைதான்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721