> குருத்து

July 21, 2026

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?


இன்றைய கூட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்த பொழுது, அதை எப்படி என தெரிந்துகொள்ள ஒருவர் கேட்டார். அவருக்காக சொன்ன பதிலை இங்கு பகிர்கிறேன்.

 

இணையத்தில், NHM writer என தேடினால், 1 MB என்கிற அளவில் கிடைக்கும். அதை உங்கள் Windows மூலம் இயங்கும் உங்கள் கணிப்பொறியில்  தரவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்.

 

அந்த சின்ன மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் பொழுது தமிழ் மொழியை தேர்வு செய்யுங்கள். (அதில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நிறைய இருக்கும். தேவையெனில் அதிலும் எழுதலாம்.) 

 

ஒருவேளை உங்கள் சிஸ்டத்தில் வேலை செய்யவில்லை என்றால், உங்கள் கணிப்பொறி தன்னுடைய பாதுகாப்புக்காக புதிய மென்பொருள் எதையும் கணிப்பொறியில் அனுமதிக்காமல் தடுக்கும். அதை சரி செய்தால் தான், இந்த மென்பொருள் வேலை செய்யும்.

 

Alt + 2 press செய்தால் தமிழ் மொழியில் தட்டச்சு செய்யலாம்.  மீண்டும் Alt + 2 press செய்தால்  பழைய நிலைமைக்கே ஆங்கிலத்தில் மாறும்.

 

முயற்சி செய்யுங்கள்.

 

நன்றி.

 

-         இரா. முனியசாமி

 

குறிப்பு : NHM மென்பொருளை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை காணொளியில் விளக்குகிறார். கவனியுங்கள்.

 

https://www.youtube.com/watch?v=6OlWMK8Tsqc

 

July 18, 2026

ஒரு மனிதனைப் பற்றிய உணர்வுகள்


திரு. ஹரிஹரசுதன் – ஒரு Ethical Hacker – ஆனந்தவிகடனில் இணைய வழி திருட்டைப் பற்றியும், அதனை தடுப்பது பற்றியும் ஒரு தொடர் எழுதினார்.  இன்று அவருடைய பேஸ்புக்கில் ஒரு Prompt பகிர்ந்து, பயன்படுத்திப் பாருங்கள் என்றார்.

 

இதை சாட் ஜிபிடியிடம் கொடுத்தேன்.  தொடர்ந்து சாட் ஜிபிடியிடம் பேசிய அம்சங்களை வைத்து என்னைப் பற்றி என்ன எழுதி தந்திருக்கிறது என பாருங்கள்.

 

நீங்களும் இது போல முயலலாம். நீங்கள் எந்த அளவிற்கு அதனோடு உரையாடியிருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு ஆழமாக தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

***

”நான் இறந்துவிட்டதாகவும், முன்பின் தெரியாத ஒருவர் என் கைபேசியைக் கண்டெடுத்ததாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவர்கள், "இந்தக் கைபேசி யாருடையது?" என்று கேட்கிறார்கள். நமது உரையாடல்கள் மூலம் நீங்கள் என்னைப் பற்றி உண்மையாகத் தெரிந்துகொண்ட அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, நான் உண்மையில் யார் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.

 

என்னை மிகைப்படுத்திக் காட்டவோ அல்லது எதையும் புனைந்து கூறவோ வேண்டாம். நேர்மையுடனும், அன்பாகவும், கருணையுடனும் பேசுங்கள். என் ஆளுமை, போராட்டங்கள், கனவுகள், உறவுகள், விழுமியங்கள், பழக்கவழக்கங்கள், பலங்கள், குறைகள், மற்றும் என்னை நானாக ஆக்கிய சிறுசிறு விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள். நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒரு கதையைக் கொண்ட ஒருவரை அறிமுகப்படுத்துவது போல, அதை உணர்வுப்பூர்வமான, இயல்பான தமிழில் எழுதுங்கள்.

 

தாங்கள் சந்திக்காத ஒருவரை இழந்தது போன்ற உணர்வை வாசகருக்கு ஏற்படுத்துங்கள். அதை மனப்பூர்வமானதாகவும், யதார்த்தமானதாகவும், ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமானதாகவும் வைத்திருங்கள் - ஆனால் மிகவும் நீளமாகவோ அல்லது மிகவும் குட்டையாகவோ இருக்க வேண்டாம்.”

****

 

இந்தக் கைபேசி திரு. இரா. முனியசாமி அவர்களுடையது. அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால், இந்தக் கைபேசியின் உரையாடல்களைப் பார்த்தபோது, அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கான பல சிறிய தடயங்கள் கிடைத்தன.

 

அவர் ஒரு வரி ஆலோசகர். GST, வருமானவரி, PF, ESI, தொழிலாளர் சட்டங்கள் போன்ற பலருக்கு சிக்கலாகத் தோன்றும் விஷயங்களை எளிமையாகப் புரியவைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். சட்டத்தை வெறும் பிரிவுகளாக அல்லாமல், மக்களுக்கு உதவும் கருவியாகப் பார்த்தவர்.

 

அவருடைய வேலை என்பது வருமானம் ஈட்டும் ஒரு தொழில் மட்டுமல்ல. தொடர்ந்து கற்றுக்கொள்வதும், கற்றதை மற்றவர்களுடன் பகிர்வதும் அவரது இயல்பாக இருந்தது. ஒரு Zoom வகுப்பு, ஒரு YouTube பதிவு, ஒரு WhatsApp அறிவிப்பு, ஒரு சிறிய விளக்கக் கட்டுரை... இவற்றில் எதையாவது செய்து கொண்டே இருப்பார். "இதை இன்னும் தெளிவாகச் சொல்ல முடியுமா?" என்பதே அவர் அடிக்கடி கேட்ட கேள்விகளில் ஒன்று.

 

தமிழ்மொழி மீது அவருக்கு ஒரு தனி பற்று இருந்தது. தேவையற்ற ஆங்கிலக் கலப்பு இல்லாமல், சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் தமிழில் எழுத வேண்டும் என்று விரும்பினார். சட்ட மொழியும் மனித மொழியாக மாற வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

 

ஒன்றை எழுதுவார். மீண்டும் மீண்டும் தன் எழுத்தைப் பலமுறை திருத்துவார். சிறிய தவறுகளைக்கூட சுட்டிக்காட்டுவார். சில நேரங்களில் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களை மிகுந்த பொறுப்புடன் எடுத்துக்கொள்வார். வேலை முடிந்த பிறகும், அடுத்த பதிவை எப்படி சிறப்பாக உருவாக்குவது என்று சிந்தித்துக்கொண்டிருப்பார்.

 

அவருடைய உரையாடல்களில் குடும்பத்தைப் பற்றிய அக்கறையும், உடல்நலத்தைப் பற்றிய கவலையும், சமூகத்தின் மீது கொண்ட பொறுப்புணர்வும் அமைதியாகத் தெரியும். பெரிய சாதனைகளைப் பற்றி அவர் அதிகம் பேசவில்லை. ஆனால், மற்றவர்கள் வளர வேண்டும் என்பதற்காக நேரத்தை ஒதுக்கியது மீண்டும் மீண்டும் தெரிகிறது.

 

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பற்றியும் அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால், தொழில்நுட்பம் மனிதர்களை மாற்ற வேண்டுமென்று அல்ல; மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு அதை அணுகினார்.

 

இந்தக் கைபேசியில் பல கோப்புகள் இருக்கலாம். பல எண்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை விட அதிகமாக இருப்பது, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் சுவடுகள்.

 

நீங்கள் அவரை ஒருபோதும் சந்தித்திருக்காமல் இருக்கலாம். ஆனால், அவரைப் பற்றி ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

 

சிக்கலான விஷயங்களை எளிமையாக்கி, தெரிந்ததைத் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் பகிர்ந்த ஒருவர் அவர்.

 

அவருடைய வாழ்க்கை உலகையே மாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவரிடம் ஆலோசனை கேட்ட சிலரின் உலகத்தை அவர் நிச்சயமாக கொஞ்சம் எளிதாக்கியிருப்பார்.

 

அதுவும் ஒரு மனிதர் நினைவில் வாழ்வதற்கான அழகான காரணங்களில் ஒன்று.

 

-          இரா. முனியசாமி

July 15, 2026

"கடந்த கால அனுபவங்கள்…!"

 


மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு இளம் தொழில் முனைவோர் சந்தித்தார். முகத்தில் சிரிப்பு இருந்தது. ஆனால், அவர் சொன்ன அனுபவங்களைக் கேட்டதும், "தொழில் தொடங்குவது எளிது; தவறுகளைச் சரிசெய்வதே பெரிய தொழில்!" என்று தோன்றியது.

 

"ஆர்கானிக் பொருட்களை வாங்கி, இயந்திரத்தில் அரைத்து, அழகாக டப்பாவில் அடைத்து விற்கலாம் என்று நினைத்தோம். அதற்காக முதலில் ஸ்டிக்கர் அச்சிட வேண்டும். ஸ்டிக்கரில் GSTIN இருக்க வேண்டும். அதனால் அவசரமாக GST பதிவு வாங்கிவிட்டோம்.

 

பிறகுதான் கணக்கு போட ஆரம்பித்தோம்.

ஆர்கானிக் பொருட்களின் விலை...

இயந்திரங்கள்...

சோலார் ட்ரையர்...

தொழிலாளர்கள்...

பேக்கிங்...

சந்தைப்படுத்தல்...

எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், லாபம் மட்டும் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு 'என்னைத் தேடிப் பாருங்கள்!' என்று விளையாடிக் கொண்டிருந்தது.

'இந்த தொழில் வேண்டாம்!' என்று முடிவு செய்து விட்டோம்.

 

அதுவரை நான்கு, ஐந்து மாதங்கள் Nil Return மட்டும் தாக்கல் செய்து வந்தோம். 'சரி... GST-யை சரண்டர் செய்து விடலாம்' என்று விண்ணப்பித்தோம்.

 

அங்குதான் கதை இரண்டாம் பாகம் ஆரம்பித்தது.

 

'ஆறு மாதமாக என்ன செய்தீர்கள்? வங்கி கணக்கு கொண்டு வாருங்கள்... ஆவணங்கள் கொண்டு வாருங்கள்...' என்றார்கள். இரண்டு முறை அலுவலகத்திற்குப் போனேன்.  இரண்டு முறையும் Assistant Commissioner மட்டும் இல்லை!

 

நான் போகும் நேரத்தைப் பார்த்து அவருக்கே வேறு வேலை வந்ததோ என்னவோ!" அதற்குள் வாழ்க்கை இன்னொரு திருப்பம் கொடுத்தது.

 

"₹35 லட்சம் கடன் வாங்கலாம் என்று வங்கி மேலாளரைச் சந்தித்தேன். அங்கிருந்தே ஒரு வரி ஆலோசகரை தொலைபேசியில் பேச வைத்தேன். அவர் சொன்னது ஒன்று.. ஆலோசகர் புரிந்துகொண்டது ஒன்று...

 

இறுதியில், வருட வருமானம் ₹4,90,000 என்று Income Tax Return தாக்கல் செய்து விட்டார்கள். அந்த ரிட்டனை எடுத்துக்கொண்டு வங்கிக்குப் போனால்...

'இந்த வருமானத்தை வைத்து இந்தக் கடன் தர முடியாது!' என்று ஒரே வரியில் தீர்ப்பு."

 

இதற்குப் பிறகாவது அமைதி வந்ததா?

எங்கே...

"எனக்குத் தெரிந்த வேலை Civil Contract தான். எங்கு டெண்டர் கேட்டாலும், 'GST இருக்கிறதா?' என்பதே முதல் கேள்வி.

 

சரி... மீண்டும் புதிய GST பதிவு வாங்கலாம் என்று நினைத்தோம்.

வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளர் பெயரில். மின்சார ரசீது அவருடைய துணைவியார் பெயரில். இரண்டையும் ஆலோசகரிடம் கொடுத்தேன்.

 

அவரும் அப்படியே பதிவேற்றிவிட்டார். இப்போது Portal-க்கு சந்தேகம். 'இரண்டு பெயரும் ஏன் வேறு?' என்று விளக்கம் கேட்டிருக்கிறார்கள்."

 

அதுமட்டுமல்ல...

"ஏற்கனவே ஒரு GST பதிவு சரண்டர் ஆகாமல் நிலுவையில் இருக்கிறது. முதலில் அதை முறையாக முடித்து, இறுதி ரிட்டன் எல்லாம் தாக்கல் செய்து வாருங்கள். அதற்குப் பிறகுதான் இதைப் பார்க்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள்."

 

அவர் பேசிப் முடித்ததும் நான் சிரித்தேன். அவரும் சிரித்தார்.

 

ஏனென்றால், தொழிலில் ஏற்பட்ட இழப்பை விட, தவறான ஆலோசனைகளால் ஏற்பட்ட சுற்றுலாப் பயணங்கள்தான் அவரை அதிகம் சோர்வடையச் செய்திருந்தன.

 

இறுதியில், அவர் எங்களிடம் வந்தார். ஒவ்வொரு முடிச்சாக இருந்த பிரச்சினையையும் அவிழ்த்தோம். எந்த விண்ணப்பம் எப்படி முடிக்க வேண்டும்... எந்த ஆவணம் திருத்தப்பட வேண்டும்... எந்த பதிவு முதலில் நிறைவு பெற வேண்டும்... எல்லாவற்றையும் வரிசைப்படுத்தி சரி செய்து கொடுத்தோம்.

அவர் கிளம்பும்போது சொன்ன ஒரு வரி மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது.

 

"சார்... தொழில் தொடங்குவது கஷ்டமில்லை. சரியான ஆலோசகரை முதல் நாளிலேயே தேர்ந்தெடுப்பதுதான் பெரிய முதலீடு போலிருக்கிறது!"

 

-          இரா. முனியசாமி