> குருத்து

August 10, 2026

வரி ஆலோசகரின் வேலை பிரச்சனையை தீர்ப்பது தான் தொழில்! சுமப்பது தொழில் அல்ல!

 


வரி ஆலோசகரா... நிறுவனத்தின் உரிமையாளரா?

 

ஒரு நிறுவனத்திற்கு ₹10 லட்சம் வரி Demand வருகிறது. நிறுவன உரிமையாளர் என்ன செய்கிறார்? “சார்... பார்த்துக்கலாம்!” என்று சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்குகிறார். ஆனால் ஆலோசகர்?  அன்று இரவு தூக்கமே போச்சு!

 

எந்த Section- பதில் கொடுக்கலாம்?” “இந்த Case Law உதவுமா?” “இந்த Notice-க்கு என்ன செய்யலாம்?” “அந்த Invoice ஏன் இப்படிப் போச்சு?” என்று இரவு 2 மணி வரை நிறுவனத்திற்காக ஆலோசகரே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்!

 

இதுதான் பல Tax Consultants-ன் சிக்கலான நிலை. ஒரு நிறுவனத்தின் தவறை கண்டுபிடித்து சரி செய்வது நமது வேலை. ஆனால்... அந்த நிறுவனத்தின் தவறை நம்முடைய தவறாக எடுத்துக்கொண்டு மனதில் சுமப்பது நமது வேலை அல்ல.

 

வாடிக்கையாளர் தகவல் கொடுக்கவில்லை...

 

சார், Return போடணும்!” “Sales details கொடுத்தீர்களா?” “இல்லை சார்...” “Purchase details?” “இல்லை சார்...” “Bank statement?” “அதுவும் இல்லை சார்...”“அப்படியானால்?” “நீங்களே பார்த்து போட்டுடுங்க சார்!”  இதுதான் சில நிறுவனங்களின் கணக்கு நடைமுறை!

 

ஆலோசகர் என்ன செய்வது?

தகவல் இல்லாமல் Return உருவாக்குவது ஜோதிடம் பார்ப்பது மாதிரி ஆகிவிடும்.

தேவையான தகவல்கள் கிடைத்த பிறகே பணியைச் செய்ய முடியும் என்பதுதான் சரியான தொழில்முறை நிலைப்பாடு.

 

Notice வந்தது இன்று...  ஆனால் Notice- பார்த்தது? கடைசி தேதி அன்று! அதற்குப் பிறகு:  சார்... அவசரம்!”  அவசரம் யாருக்கு? Notice- சரியான நேரத்தில் பார்க்காத நிறுவனத்திற்கு இல்லை. ஆலோசகருக்குத்தான்!

 

இதுபோன்ற இடங்களில் மனதிற்குள் ஒரு கோடு போட்டுக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் அவசரம்ஆலோசகரின் அவசரம்.

ஒவ்வொரு வேலையையும்:

  • இன்று செய்ய வேண்டியது
  • குறிப்பிட்ட தேதிக்குள் செய்ய வேண்டியது
  • வாடிக்கையாளர் தகவல் கொடுத்த பிறகு செய்ய வேண்டியது

என்று பிரித்துக்கொள்ள வேண்டும்.

 

நான் சொல்லவில்லை என்று ஆகிவிடக்கூடாது!”

 

இதற்குத்தான் ஒரு நல்ல மருந்து இருக்கிறது. எல்லாவற்றையும் எழுத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தேதிக்குள் இந்த ஆவணங்கள் தேவை.” “இவை கிடைத்த பிறகே Return தாக்கல் செய்ய முடியும்.” “இந்தத் தகவல் கிடைக்காததால் Compliance தாமதமாகலாம்.” என்று WhatsApp அல்லது Email-ல் பதிவு செய்துவிடுங்கள்.

 

இதனால் இரண்டு நன்மைகள்: தொழில்முறை தெளிவு + மன அமைதி.

 

ஒரு விஷயத்தை மட்டும் மறக்கக்கூடாது...

 


ஆலோசகர், நிறுவனத்தின் உரிமையாளர் அல்ல. நிறுவனத்தின் Managing Director அல்ல. நிறுவனத்தின் நிர்வாகத் தவறுகளுக்குப் பொறுப்பானவர் அல்ல.

 

நாம் செய்ய வேண்டியது:  பிரச்சினையை கண்டுபிடிப்பது. சட்ட நிலையைச் சொல்வது. ஆபத்தை விளக்குவது. தீர்வைச் சொல்வது. தேவையான Compliance செய்வது. அதற்குப் பிறகு...

 

வாடிக்கையாளர் என்ன முடிவு செய்கிறார்களோ, அந்த முடிவு அவர்களுடையது.

 

இன்னொரு பெரிய பிரச்சினை...

 

ஒரு நிறுவனத்தின் கவலையை வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். பிறகு இரண்டு நிறுவனங்கள். பத்து நிறுவனங்கள். இருபது நிறுவனங்கள். ஐம்பது நிறுவனங்கள்... அப்படி ஒவ்வொரு நிறுவனத்தின் பிரச்சினையையும் வீட்டுக்குக் கொண்டு வந்தால்...

 

அலுவலகம் ஒரு பக்கம் இருக்கும்; ஆலோசகரின் தலைக்குள் 50 அலுவலகங்கள் ஓடிக்கொண்டிருக்கும்! அதனால் அலுவலகம் முடிந்ததும்: இன்றைக்கு என்னால் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன். மீதமுள்ளவை திட்டமிட்டபடி கையாளப்படும்.” என்று மனதிற்குள் சொல்லிக்கொள்ள வேண்டும்.

 

இது அலட்சியம் அல்ல. Professional Discipline.

 

அனுபவம் அதிகரிக்கும்போது...

 

முதலில் ஒரு நிறுவனம். பிறகு பத்து. பிறகு ஐம்பது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்கிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு நிறுவனத்தின் பிரச்சினையையும் தலையில் சுமந்தால்...

 

வாடிக்கையாளர்கள் வளர்கிறார்கள்; ஆலோசகரின் மன அமைதி சுருங்குகிறது!

 

அதனால் அனுபவம் அதிகரிக்கும்போது வேலை செய்யும் திறன் மட்டும் வளரக்கூடாது. வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் எல்லை போடும் திறனும் வளர வேண்டும்.

 

இறுதியாக...

 

நாம் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்கள். பிரச்சினைகளைச் சுமப்பவர்கள் அல்ல. வாடிக்கையாளரின் தவறை மறைக்க வேண்டியவர்கள் அல்ல. அவர்களின் தவறை நம்முடைய தவறாக மாற்றிக்கொள்ள வேண்டியவர்களும் அல்ல.

 

சட்டத்தைச் சொல்லுங்கள்.
ஆபத்தை விளக்குங்கள்.
தீர்வைக் கொடுங்கள்.
எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யுங்கள்.
உங்களால் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.

 

அதற்குப் பிறகு...

 

வாடிக்கையாளரின் நிறுவனத்தை வாடிக்கையாளரே நடத்தட்டும். ஆலோசகரின் வாழ்க்கையை ஆலோசகரே நடத்தட்டும்!

 

ஒரு நல்ல Tax Consultant எத்தனை நிறுவனங்களின் கவலைகளைத் தலையில் சுமக்கிறார் என்பதில் பெருமை இல்லை.

 

எத்தனை நிறுவனங்களின் பிரச்சினைகளைச் சரியாக கையாண்டுவிட்டு, இரவு நேரத்தில் நிம்மதியாக வீட்டுக்குச் செல்கிறார் என்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது.

 

-     இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

July 21, 2026

இன்றைய கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 100 வரை கலந்துகொண்டார்கள்.

 


45 நிமிடங்களில் கூட்டம் என்பது எதைச் சொல்வது? எதை விடுவது? என்பதே சவாலாக இருக்கிறது.


இருப்பினும் துவக்க நிலையில் உள்ளவர்களை மனதில் வைத்து எடுத்தேன்.    இரண்டு விசயங்களில் Demo யும் காட்ட முடிந்தது.  


ஆகையால் நமது குழுவில் கலந்துகொண்டவர்கள் யாராவது பேசியது குறித்து கருத்து சொன்னால் நல்லது.


இதைக் கூட்ட ஏற்பாட்டாளர் திரு. இராஜசேகரன் அவர்களிடம் கேட்டால்,  குறைவான நேரத்தில் வகுப்பாக எடுக்கமுடியாது தான்.  ஆனால் ஒரு Spark தருகிறோம் என்கிறார்.


இன்றைய கூட்டத்தின் பிபிடியை பகிர்கிறேன்.  


ஏதேனும் சந்தேகம் இருந்தால் அழையுங்கள்.


நன்றி.


- இரா. முனியசாமி


****

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் சில கருத்துகள். அவர்களுக்கு நன்றி.







தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?


இன்றைய கூட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்த பொழுது, அதை எப்படி என தெரிந்துகொள்ள ஒருவர் கேட்டார். அவருக்காக சொன்ன பதிலை இங்கு பகிர்கிறேன்.

 

இணையத்தில், NHM writer என தேடினால், 1 MB என்கிற அளவில் கிடைக்கும். அதை உங்கள் Windows மூலம் இயங்கும் உங்கள் கணிப்பொறியில்  தரவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்.

 

அந்த சின்ன மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் பொழுது தமிழ் மொழியை தேர்வு செய்யுங்கள். (அதில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நிறைய இருக்கும். தேவையெனில் அதிலும் எழுதலாம்.) 

 

ஒருவேளை உங்கள் சிஸ்டத்தில் வேலை செய்யவில்லை என்றால், உங்கள் கணிப்பொறி தன்னுடைய பாதுகாப்புக்காக புதிய மென்பொருள் எதையும் கணிப்பொறியில் அனுமதிக்காமல் தடுக்கும். அதை சரி செய்தால் தான், இந்த மென்பொருள் வேலை செய்யும்.

 

Alt + 2 press செய்தால் தமிழ் மொழியில் தட்டச்சு செய்யலாம்.  மீண்டும் Alt + 2 press செய்தால்  பழைய நிலைமைக்கே ஆங்கிலத்தில் மாறும்.

 

முயற்சி செய்யுங்கள்.

 

நன்றி.

 

-         இரா. முனியசாமி

 

குறிப்பு : NHM மென்பொருளை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை காணொளியில் விளக்குகிறார். கவனியுங்கள்.

 

https://www.youtube.com/watch?v=6OlWMK8Tsqc