> குருத்து

May 30, 2026

வாழ்வும், பயணமும்

 


வேறு வேறு விஷயங்களுக்காக நமது உறுப்பினர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த ஏற்காடு பயணத்தைப் பற்றியும் பேச்சு வந்தது.

 

நிறுவனங்களில் வேலை பார்க்கும் நால்வர், “ஜூலை முதல் வாரம் சார்சம்பளம், TDS, கணக்குகள்எங்கும் நகர முடியாதுஎன்றார்கள். அதே நேரத்தில், “ஜூன் கடைசி வாரம் இருந்திருந்தால், ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம்என்ற வார்த்தையும் வந்தது. இது ஒரு சிறிய கவனிக்க வேண்டிய விஷயம்.

 

நமது வேலைகள் எப்போதும் நம்மை சுற்றியே இருக்கும். அவை முடிந்த பிறகே நாம் ஓய்வெடுப்போம் என்று காத்திருந்தால், அந்த நாள் வருவது அரிது. வேலை நமக்கு விடுப்பு கொடுத்து, “சென்று வாருங்கள்என்று சொல்லாது. நாம்தான் அதிலிருந்து சில நாட்களை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இங்கே எனக்கு தெரிந்த ஒரு மனிதர் நினைவுக்கு வருகிறார். கே.கே. நகரில் இருக்கும் தணிக்கையாளர் திரு. கிருஷ்ணன். 38 வயது வரை LIC-ல் Branch Manager ஆக பல மாநிலங்களில் பணியாற்றியவர். அதற்குப் பிறகு முடிவு செய்து, தேர்வு எழுதி தணிக்கையாளராக மாறினார்.

 

இப்போது நடுத்தர, பெரிய நிறுவனங்களை கையாள்கிறார். ஆனால் அவரின் வேலை முறையே வித்தியாசம். ஜூலை மாதம் கடைசி தேதி என்றால், அவர் ஜூன்  மாதத்திலேயே முடித்துவிடுவார்.  அக்டோபர் மாதம் கடைசி தேதி என்றால்அதிகப்பட்சம் செப்டம்பருக்குள் முடித்து விடுவார்.

 

நாம் கடைசி தேதிகளில் தளத்தோடும், ஆவணங்களோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அமைதியாக ஒரு நாட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பார்.

 

அவரிடம் ஒரு பழக்கம்: பயணத்திற்காக எந்த ஏஜென்சியையும் அணுகமாட்டார்தானே படித்து, தங்கும் இடம் முதல் திட்டம் வரை அனைத்தையும் முன்கூட்டியே அமைத்து, தன் துணைவியாருடன் கிளம்பிவிடுவார்.


இந்தியாவிலிருந்து தொடங்கி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம்… இப்படி 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

 

இது மட்டும் அல்ல. அவரது அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் ஐந்து நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை, மேலும் பயண செலவுக்கும் உதவி அளிக்கிறேன் என்றார். ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னார்: “இவ்வளவு கொடுத்தும், சிலர் இன்னும் ஊரைவிட்டு நகர மாட்டேன் என்பார்கள்என்று.

 

இந்த அனுபவம் ஒரு விஷயத்தை நினைவுபடுத்துகிறது. பயணம் என்பது நேரம் இருந்தால் செய்வது அல்ல. நேரம் ஒதுக்கி செய்வது. நாம் செய்யாமல் இருந்தால்வேலை எப்போதும் காரணம் தரும். இந்த ஆண்டு நமது சங்கத்தின்  ஏழாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஏற்காட்டிற்கு இரண்டு நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இது ஒரு சாதாரண சுற்றுலா அல்ல. சில நாட்கள் வேலை வட்டத்திலிருந்து வெளியே வந்து, மனதையும், உறவுகளையும் சீராக்கிக்கொள்ளும் ஒரு வாய்ப்பு. இந்த முறை வர முடியாத காரணங்கள் இருந்தால், அது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் வர முடியும் நிலை இருந்தும் தள்ளிப்போட வேண்டாம்.

 

ஏனெனில்இப்படியான வாய்ப்புகள் அடிக்கடி வருவதில்லை. இறுதியாக... வேலை எப்போதும் இருக்கும். ஆனால் அந்த வேலைக்கிடையில் நாம் உருவாக்கிக்கொள்ளும் நினைவுகள்தான் நீண்ட நாள் நிற்கும்.


- இரா. முனியசாமி

May 27, 2026

AIன்னா என்னடா இது?

 


இப்போ எங்கே பார்த்தாலும் AI… YouTube திறந்தாலும் AI. மொபைல் வாங்கினாலும் AI. அலுவலக கூட்டத்திலும் கூட “AI integration”ன்னு பேசுறாங்க. இதைக் கேட்ட சிலருக்கு: “இது உலகத்தையே கைப்பற்றப் போகிறதாம்!” ன்னு பயம்.

 

மற்ற சிலருக்கு: “AI இருந்தா இனிமேல் வேலை செய்யவே தேவையில்லை!” ன்னு அதீத நம்பிக்கை. உண்மையிலே இந்த இரண்டுமே முழு உண்மை இல்லை.

 

எளிமையாக சொன்னால்

 

AI என்பது: “நிறைய தகவல்களைப் பார்த்து, அதிலிருந்து pattern கற்றுக்கொண்டுஅடுத்ததாக என்ன வரலாம் என்று கணிக்கும் தொழில்நுட்பம்.” அதுதான்.

 

இதைக் கேட்டு சிலர்: “அப்போ இது மனித மூளை மாதிரியா?” ன்னு கேட்பார்கள். இல்லை. மனிதன் புரிந்து யோசிப்பான். AI கணக்கிட்டு கணிக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு.

 

வரித்துறையிலேயே எடுத்துக்கொள்ளுங்கள்

 

ஒரு அனுபவமுள்ள GST ஆலோசகரிடம் Notice கொடுத்தால்அவர் Notice முழுவதையும் படிக்காமலேயே: “இது ITC mismatch issue போல…” “இது probably 3B vs GSTR-1 பிரச்சனை…” “இதுக்கு department usually என்ன கேக்கும் தெரியும்…” என்று உடனே ஒரு கணிப்பு வரலாம்.

 

ஏன்? ஏற்கனவே ஆயிரக்கணக்கான கோப்புகளை பார்த்த அனுபவம். AI-யும் அதே மாதிரி தான். கோடிக்கணக்கான தகவல்களைப் பார்த்து: “இந்த கேள்விக்குப் பிறகு பொதுவாக என்ன பதில் வரும்?” என்று மனம் கணிக்கிறது.

 

ஆனா இங்க தான் முக்கியமான டிவிஸ்ட் இருக்கு

 

பலர் நினைப்பது: “AI சொன்னா சரிதான்.” அதுதான் ஆபத்து. ஏன்னா AIக்கு:

  • வெட்கம் கிடையாது,
  • தயக்கம் கிடையாது,
  • எனக்கு தெரியாதுன்னு சொல்லும் பழக்கம் குறைவு.

தவறான தகவலாக இருந்தாலும்அதை நம்பிக்கையுடன் சொல்லிவிடும்.

 

சில நேரம்: இல்லாத வழக்குகளை கற்பனையில் உருவாக்கும், தவறான செக்சனை சுட்டிக்காண்பிக்கும். பழைய சர்க்குலரை அமுலில் உள்ளது மாதிரி சொல்லும், computation- பிழை விடும். ஆனா படிக்கிறவர்களுக்கு அது தெரியாமல் போகலாம். ஏன்னா அதனுடைய வழங்கும்முறை ரொம்ப தெளிவாக இருக்கும்.

 

இதுதான் இப்போ நடக்கும் பெரிய பிரச்சனை

 

முன்னாடி: “Google இருந்து copy paste” பண்ணினார்கள்.  இப்போ: “ChatGPT இருந்து copy paste” பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனா சரிபார்க்கிற பண்ணுற பழக்கம் மட்டும் இன்னும் வரல. அதுதான் ஆபத்து.

 

AI எதுக்கு நல்லா பயன்படும்?

 

சரியாக பயன்படுத்தினால் நிறைய பயன் இருக்கு.

குறிப்பாக:

  • Notice draft,
  • Client mail,
  • Reconciliation analysis,
  • Data sorting,
  • Excel formula help,
  • Legal summary,
  • Research starting point

இவைகளில் நேரத்தை மிச்சப்படுத்தும். ஒரு வேலைக்கு 3 மணி நேரம் எடுத்துக்கொண்டது… 30 நிமிடமாக குறையலாம். அதனால்தான் உலகமே இதைப் பற்றி பேசுகிறது.

 

ஆனா ஒரு விஷயம் மட்டும் மறக்கக்கூடாது

 

AI:  தகவல் தரும் கருவி.”  மனிதன்: “பொறுப்பு ஏற்கும் நபர்.” இந்த இரண்டு வேறுபாடு இன்னும் மாறவில்லை. துறை சார்ந்த நோட்டிசு வந்தால்… “இதைக் ChatGPT தான் சொன்னது சார்…” ன்னு சொல்லி தப்பிக்க முடியாது.

 

கையெழுத்து போட்டது யார்? பதிலை தாக்கல் செய்தது யார்? ஆலோசனை கொடுத்தது யார்? இறுதியில் மனிதர்தான் பொறுப்பேற்கவேண்டும்.

 

அடுத்த காலத்தில் என்ன ஆகும்?

 

முன்பு: “கணிப்பொறி தெரிந்தவர்முன்னேறினார்கள்.

இப்போது: “AI- சரியாக பயன்படுத்த தெரிந்தவர்முன்னேற ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

ஆனா இன்னும் முக்கியமானவர்கள் யார் தெரியுமா? AI சொல்வதை கூட cross-check செய்ய தெரிந்தவர்கள். ஏன்னாகருவி புத்திசாலி ஆகலாம். ஆனா தீர்மானம் இன்னும் மனிதரிடமே இருக்கு.

 

இறுதியாக...

 

AI என்பது சினிமாவில் காட்டுவது போல உலகத்தை கைப்பற்ற வந்த ரோபோ இல்லை.

 

அதே நேரத்தில்: “இதெல்லாம் வெறும் hype” ன்னு dismiss பண்ணக்கூடிய விஷயமும் இல்லை. இது ஒரு சக்திவாய்ந்த கருவி. சரியாக பயன்படுத்தினால்: நேரத்தை மிச்சப்படுத்தும். சிந்திக்காமல் நம்பினால்: பிரச்சனையை வேகமாக பெரிதாக்கும்.

 

அதனால்... AI-ஐ பார்த்து பயப்பட வேண்டாம். ஆனால் சோதிக்காமல் நம்பவும் வேண்டாம்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721