> குருத்து: September 2013

September 26, 2013

இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” - ஆர்ப்பாட்ட செய்திகள்!


”இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞ்ர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதன் ஒரு பகுதியாக, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் தோழர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.பு.மா.இமு-வின் சென்னை மாவட்ட இணைச்செயலாளர் தோழர்.சேட்டு கண்டன உரையாற்றினார். 10 பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

திருச்சி வேர்ஹவுஸ் பாலத்தின் அருகில் காலை 11.30 மணியளவில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் தலைமையில் 19 பெண்கள் உட்பட 120-க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர். அனைத்து தோழமை அரங்கின் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் கூடி நின்று நோட்டீஸ்களை வாங்கிப் படித்தனர்.

September 11, 2013

வட சென்னை : நாசமாகிறது நிலத்தடி நீர்! களமிறங்கி போராட வாருங்கள்!

எண்ணெய் கிடங்கானது போர்வெல்!
நாசமாகிறது நிலத்தடி நீர்!


BPCL நிர்வாகமே!! மத்திய அரசே!

எண்ணெய் கசிவை உடனே நிறுத்து!
“கணக்கு காட்டாமல்”
மக்களின் தேவைக்கு நீர் வழங்கு!

தமிழக அரசே!

மண்ணையும் நீரையும் மாசுப்படுத்திய
எண்ணெய் நிறுவனங்களிடம் அபராதம் வசூலித்து
பாதிப்படைந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கு!
மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்!

பகுதிவாழ் மக்களே!

களமிறங்கி போராடுங்கள்!
இணைந்து போராட காத்திருக்கிறோம்!

தொடர்புக்கு :

வழக்கறிஞர் மில்டன் - 9842812062
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை

September 5, 2013

உயர்நீதிமன்றத்தில் தமிழ்! தமிழக வழக்கறிஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!!


உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் அவரவர் தாய்மொழியிலேயே நீதிமன்றங்கள் நடக்கிறது!

மக்களுக்குத் தெரிந்த மொழியில் – அவரவர் தாய்மொழியில் நீதிமன்றம் நடைபெறுவதே
ஜனநாயகம்!

நீதிமன்றங்கள் மக்களுக்கானது!
மக்களுக்கு நீதி வழங்குவதற்கானது!
நீதிபதிகள்-வழக்கறிஞர்களுக்கு வேலை
அளிப்பதற்கு உருவாக்கப்பட்டதல்ல!

வழக்காடியும் தமிழன்!
வக்கீலும் தமிழன்!
நீதிபதியும் தமிழன்!
இடையில் எதற்கு ஆங்கிலம்?
யார் நலனுக்கு ஆங்கிலம்?

ம.பி. – உ.பி, ராஜஸ்தான் – பீகாரில்
1961-லிருந்து இந்தி உயர்நீதிமன்ற மொழி!
தமிழகம்,மேற்கு வங்கம்,குஜராத் மக்களின்
கோரிக்கைகள் மட்டும் கிடப்பில்!
ஏன் இந்தப் பாரபட்சம்?

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும்
தங்கள் தாய்மொழியில் உயர்நீதிமன்றங்களில் வழக்காட அனுமதிக்கப்பட வேண்டும்!

ஆங்கிலேயன் போய் 65 ஆண்டுகள் ஆன பின்பும்
தமிழில் வாதிட போராட்டம் நடத்த வேண்டியிருப்பது அவமானம்! அவமானம்!!

ஐந்து முறை முதல்வராயிருந்து-நடுவண் அரசில்
தொடர்ந்து அங்கம் வகித்த அய்யாவும்!
2010 வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது எதிர்கட்சித் தலைவராயிருந்து- நான் ஆட்சிக்கு வந்தால் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவேன்- என உறுதிமொழியளித்த அம்மாவும்!

என்ன செய்யப் போகிறார்கள் தமிழுக்காக?
தங்கள் கட்சியின் கோடான,கோடித் தொண்டர்களை
வீதியில் இறங்கி போராடச் செய்வார்களா?

குறைந்தபட்சம் அரசு வழக்கறிஞர்கள் தமிழில்
வாதிட ‘அம்மா’ உத்தரவிடுவாரா?

சாகும் வரை உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம்,மறியல் முற்றுகை,கருத்தரங்கம்
பொதுக்கூட்டம்,நீதிமன்றப் புறக்கணிப்பு
சிறை சென்று போராட்டம்
டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் என்ற தொடர்
போராட்டத்தில்...............இன்று மதுரை முதல்
சென்னை வரை வாகனப் பேரணி.......... வெற்றியடைந்து......தமிழ் உயர்நீதிமன்ற
மொழியாக அறிவிக்கப்படும் வரை..............
  
தொடர்ந்த பயணத்தில்.......... 
-----------------------------------------------------
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

தொடர்புக்கு:
வழக்கறிஞர் மில்டன், சென்னை உயர்நீதிமன்றம்.(9842812062) 
வழக்கறிஞர் வாஞ்சி நாதன் மதுரை உயர்நீதிமன்றம்.(9865348163)

September 3, 2013

துக்கமும் சந்தோஷமும்!

நேற்று பெய்த கனமழையும், காற்றும் எங்க வீட்டு உயரமான முருங்கை மரத்தை சாய்த்துவிட்டது.  :(

சாய்ந்த மரத்தை வெட்டியதில், நண்பர்கள் இருவருக்கு கன்றுகளாய் கொடுத்தாயிற்று! :)

September 1, 2013

வாஸ்து கொல்லும்!

வாஸ்து கொல்லும்!

சென்னை செங்குன்றத்தில் அழகுநிலையம் துவங்க, அப்பாவும், பொண்ணும் பூஜை போட்டிருக்கிறார்கள். பூஜையில் கலந்துகொண்ட பகுதியில் அறிமுகமான  நண்பர், வாஸ்து பெயர் பலகை இப்படி இருக்க கூடாது என சொல்லியிருக்கிறார். அப்பா, பொண்ணு, வாஸ்து சொன்னவர், இன்னொருவர் என நால்வரும் அதை திருப்பியிருக்கிறார்கள்.

திருப்பும் பொழுது, 1100 வோல்டேஜ் போன மின்கம்பியில் தட்ட, நால்வரும் ஸ்பாட்டிலேயெ உயிரை விட்டிருக்கிறார்கள். வாஸ்துவின் நுணுக்கம் தெரிந்தவருக்கு மின்சாரத்தை தொட்டால் உயிர் போகும் என கவனமாய் வேலை செய்யாமல் போய்விட்டார். அதன் இயல்பில் அப்படியே கூட விட்டிருக்கலாம். இப்பொழுது வாஸ்து படி வைக்கிறேன் என நாலு பேர் மனித உயிர்கள் அநியாயமாக போய்விட்டது.

விசேசத்திற்கு வருகிறவர்கள் தங்களுடைய அறிவை காட்டுகிறேன் என எப்பொழுதும் இப்படி ஒருவர் இருவர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடை திறப்பில் விபரீதம் : மின்சாரம் பாய்ந்து நால்வர் பலி! - தினமணி