> குருத்து: June 2018

June 19, 2018

மோடி நான்காண்டு சாதனைகள் : நம்பிக்கை!

ஒரு வயதான தாய். கணவனை இளம் வயதிலேயே இழந்தவள். அண்ணனின் பராமரிப்பில் வாழ்ந்தாள். அண்ணன் இறந்த பிறகு. அண்ணனின் மகன் தன் வருமானத்தில் தன் குடும்பத்தையே கவனிக்க முடியாத நிலையில்... அத்தை சுமையாகிறாள். தன் வாழ்வை, தன் சாவை தானே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை உணர்கிறாள்.

அருகில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்கிறாள். தன் தேவையை சுருக்கிகொண்டு சிறுக சிறுக சேமிக்கிறாள்.

ஒரு மழைநாள் இரவில் மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என தொலைக்காட்சியில் அறிவிக்கிறார். மருமகன் போய் நிலைமையை விளக்கி சேமித்து வைத்த பணத்தை மாற்றித்தர கேட்கிறார்.

நம்பிக்கையற்ற நிலையில் மருமகன் பொய் சொல்வதாக நினைத்து தர மறுக்கிறார். தன் வாழ்நாளில் செல்லாது என அறிந்ததேயில்லை அந்த தாய். பிரதமரை நம்புகிறார்.

பனி விழும் ஒரு நாளில் அந்த தாய் மரித்துப்போகிறார். அந்த தாயின் சுருக்குப் பையில் 63 - ஐநூறு தாள்களும் அவள் உடலில் உள்ள சுருக்கங்களை விட அதிக சுருக்கங்களோடு இருந்தன.

காலம் கடந்துவிட்டதால்... அந்த பணத்தாள்கள் வெற்றுதாள்களாகிவிட்டன!

இறுதியில் பிரதமரும் அந்த தாயை ஏமாற்றிவிட்டார். நல்லவேளை அந்த உண்மையை அறிய அந்த தாய் உயிரோடு இல்லை! 

#உண்மை சம்பவம்



😢

Eight Below (2006) - மரண போராட்டம்!

எங்கு பார்த்தாலும் உறைபனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகா மலைப் பிரதேசம். அங்கு ஆராய்ச்சிக்கு வருபவர்களுக்கு, ஜெரி உதவுகிற வேலை. அங்கு போய்வர வண்டி எதுவும் பயன்படுத்த முடியாத நிலை. ஆகையால், ஜெரியால் பயிற்சி கொடுக்கப்பட்ட, சுறுசுறுப்பான எட்டு நாட்கள் போய்வர உதவுகின்றன.

மெர்க்குரியிலிருந்து விழுந்த கல்லைத்தேடி, ஆய்வுக்கு வருகிறார் ஒரு விஞ்ஞானி. காலநிலை சரியில்லை என ஜெரி தயங்குகிறான்.. நிர்வாகம் அழுத்தத்தால், வேறு வழியில்லாமல் அரைகுறை மனதோடு அழைத்து செல்கிறான். அந்த பயணத்தின் பொழுதே, புயல் வந்து கொண்டிருப்பதாகவும் உடனே திரும்பும்படியும் உத்தரவிடுகிறார்கள்.. ரிஸ்க் எடுக்காமல் எதுவுமில்லை என ஜெரியிடம் பேசி, அரைநாளில் கல்லைத் தேடி எடுத்துவிடுகிறார். இந்த பயணத்தில் இரண்டுமுறை விஞ்ஞானியின் உயிரை, ஜெரியும், நாய்களும் காப்பாற்றுகிறார்கள். தட்டுத்தடுமாறி வந்து சேருகிறார்கள். புயல் நெருங்கிவிட, அங்கிருந்த அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு செல்ல விமானம் தயாராய் நிற்கிறது. நாய்களுக்கு விமானத்தில் இப்பொழுது இடமில்லை. பிறகு வந்து கூப்பிட்டுக்கொள்ளலாம் என ஆறுதல் சொல்கிறார்கள். நாய்களோடு தானும் அங்கிருப்பதாக சொல்கிறான். அது உயிருக்கு ஆபத்து என அவனை அழைத்து செல்கிறார்கள்.

இதுவரை வராத புயல் இப்பொழுது தாக்க, காலநிலை மிக மோசமடைகிறது. நாய்களை அழைத்துவர விமானம் கேட்கிறான். போய்வருவதற்கு சாத்தியமேயில்லை என சொல்லிவிடுகிறார்கள். நாய்களை காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சியில் நிம்மதியில்லாமல் அலைகிறான். மீட்டு வர பல்வேறு வகைகளில் முயன்றும். எதுவும் பலனனிக்க வில்லை. நாட்கள் மெல்ல மெல்ல நகருகின்றன. அந்த உறைபனி குளிரில், புயலில் நாய்கள் வாழ்வதற்காக போராடுகின்றன. 

அந்த நாய்கள் உயிர் பிழைத்தனவா? ஜெரி நாய்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றானா என்பது மீதி முழுநீள கதை!

***
பாதிப்படத்திற்கு மேலாக பனிப்பிரதேசத்தில் தான். நம்மால் அந்த கடுங்குளிரை உணரமுடிகிறது. அந்த குளிரில் நாய்களின் உழைப்பு, போராட்டம் என மொத்த படத்தையும் அந்த எட்டு நாய்கள் தாங்கி நிற்கின்றன. ஜெரிக்கு அந்த நாய்களுடான பிணைப்பையும் அருமையாக நம்மால் உணரமுடிகிறது. 

அவர்கள் விட்டு சென்ற பிறகு, வீசும் காற்றில் அவர்களின் கொடி அறுந்து கீழே விழும். ஒரு நாய் ஓடி சென்று, அதை கடித்து குதறும். "உங்களுக்காக நாயா உழைச்சமே, அந்த நன்றி உணர்வு கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லையேன்னு!" சொல்வது போல தோன்றும்.

சிறு வயதில் பக்கத்துவீட்டில் ராணி என்றொரு அருமையான நாய் ஒன்று இருந்தது. என் மொத்த வாழ்விலும் அதோடு மட்டும் தான் எனக்கு நெருக்கம் இருந்ததாக உணர்கிறேன். மற்றபடி, நாய்கள் என்றால் எப்பொழுது எனக்கு பயம் உண்டு. காரணம். கடித்தால், வயிற்றைச்சுட்டி 16 ஊசி போடவேண்டும் என சுற்றி உள்ளவர்கள் எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள். நமக்கு ஊசின்னா ரெம்ப பயம். 

எங்கள் வீட்டில் எப்பொழுதும் நாய் வளர்த்ததில்லை. அம்மாவிடம் ஆவலாய் எப்போதாவது சொன்னால், உங்களை வளர்க்கிறதே பெரும்பாடா இருக்கு! இதில் நாய் வேற! என்பார்.

இந்தப்படத்தைப் பற்றி நாய் வளர்ப்பவர்கள் எழுதியிருந்தால் இன்னும் உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்கள் என நம்புகிறேன்.

இது உண்மையில் நடந்த கதை என்கிறார்கள். 1983-ல் அண்டார்டிகா என்ற பெயரில் ஜப்பானிய படம் ஒன்று வந்திருக்கிறது. அதுவும் இணையத்தில் கிடைக்கிறது. மற்றபடி அந்த படத்தில் இறுதியில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும், இந்த படத்தில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும் வித்தியாசப்படுகிறது.

நான் தமிழில் பார்த்தேன். குழந்தைகளோடு பார்க்ககூடிய படம். பாருங்கள்.

June 13, 2018

இயக்குநர் மகேந்திரனின் நண்டு ‍ (1981)

உத்திரப்பிரதேசத்தில் நம்மூர் ஜமீன் குடும்பம் போல‌ ஒரு பணக்கார குடும்பம். நான் சொன்ன பொண்ணத்தான் கட்டணும்னு அப்பா அதிகாரமாய் சொல்ல, சுதந்திர சிந்தனை உள்ள நாயகன் வீட்டை விட்டு வெளியேறி நாயகன் சென்னைக்கு இன்ஜினியர் வேலைக்கு வருகிறார்.

சென்னையில் லைன் வீட்டில் குடியேறுகிறார். அங்கிருக்கும் குடும்பங்களில் நாயகியும் குடும்பமும் ஒன்று. கூடுதலாக நாயகி, நாயகன் அலுவலகத்திலேயே வேலை செய்கிறார்.

சிறுவயதிலிருந்தே நாயகன் ஆஸ்துமாவில் மிகுவும் சிரமப்படுகிறார். நாயகியின் குடும்பம் அவரை அக்கறையுடன் பார்த்துகொள்கிறது.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் காதுபடவே தப்பாக பேசுகிறார்கள். இந்த களேபரத்தில் நாயகன் விருப்பம் தெரிவித்து நாயகியை திருமணம் செய்துகொள்கிறார்.

நாயகனின் குடும்பம் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதா? அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொள்ள நேரிடுகிறது. அது என்ன என்பது மீதி முழு நீளக்கதை!

****

'அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா', 'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே', 'Kaise kahoon' - இந்தி பாடல் - இந்த படத்தின் மூன்று பிடித்த‌ பாடல்களையும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு! அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என நினைத்தேன். இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும்பலம். சிவசங்கரி எழுதிய நாவலை மகேந்திரன் படமாக்கியிருக்கிறார்.

படத்தில் வரும் எல்லா சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் நிற்பது சிறப்பு. லயன் வீடுகளில் வரும் பாத்ரூம், தண்ணீர் பிரச்சனை, புறணி, வீட்டு சொந்தக்காரர் செய்யும் தொந்தரவுகள், ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துகொள்வது என நன்றாக பதிவு செய்திருக்கிறார்.

சாதி மறுத்து செய்யப்படும் திருமணங்களில் பெரிய இடைஞ்சலாய் பெரும்பாலும் நிற்பது சம்பந்தகாரர்கள் தான். அதையும் நன்றாக பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் இறுதியில் சொல்லப்படும் அந்த 'செய்திக்காக'வா இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு!

நாயகன் சுரேஷின் பெயர் ராம் பிரசாத்.  நாயகி அஸ்வினியின் பெயர் சீதா.   இதில் ஏதும் காரணம் உள்ளதா என தெரியவில்லை.

June 1, 2018

ரயில் - சில குறிப்புகள்

எல்லா பருவ காலங்களிலும்
ரயில் பயணம் சுகமானது தான்!
இளையராஜா இன்னும்
சுகமாக்குகிறார்.

படிக்க முடிவதாலேயே
ரயில் பயணம்
அவ்வளவு பிடிக்கும்.

தனக்கு கிடைத்த
படுக்கையை - மக்கள் 
அத்தனை காதலிக்கிறார்கள்.

முன்பெல்லாம்
ரயில் சிநேகம் உண்டு.
இப்போதெல்லாம்
செல்லோடு தான் சிநேகம்.

ரயில் முன்னேற முன்னேற
கடந்த பாதையை
மெல்ல மெல்ல
அசை போட வைக்கிறது.

தூங்கி, என்னுடைய நிறுத்தத்தை
விட்டுவிடுவேன் என்ற பயம் எப்பொழுதுமே உண்டு.
ஒருநாளும் அப்படி நடந்ததில்லை.

காலங்கள் உருண்டாலும்
ரயில் உணவு கொடுப்பினை இல்லை!
கடந்த முறை 
கெட்டுப்போன பிரியாணியை விற்றுவிட்டார்கள்.

இரண்டு உலகம் இங்குண்டு.
பதிவு செய்தும்,
பதிவு செய்யாமலும்
பயணம் செய்து பாருங்கள்.

மரண போராட்டம்!

Eight below (2006)
எங்கு பார்த்தாலும் உறைபனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகா மலைப் பிரதேசம். அங்கு ஆராய்ச்சிக்கு வருபவர்களுக்கு, ஜெரி உதவுகிற வேலை. அங்கு போய்வர வண்டி எதுவும் பயன்படுத்த முடியாத நிலை. ஆகையால், ஜெரியால் பயிற்சி கொடுக்கப்பட்ட, சுறுசுறுப்பான எட்டு நாட்கள் போய்வர உதவுகின்றன.

மெர்க்குரியிலிருந்து விழுந்த கல்லைத்தேடி, ஆய்வுக்கு வருகிறார் ஒரு விஞ்ஞானி. காலநிலை சரியில்லை என ஜெரி தயங்குகிறான்.. நிர்வாகம் அழுத்தத்தால், வேறு வழியில்லாமல் அரைகுறை மனதோடு அழைத்து செல்கிறான். அந்த பயணத்தின் பொழுதே, புயல் வந்து கொண்டிருப்பதாகவும் உடனே திரும்பும்படியும் உத்தரவிடுகிறார்கள்.. ரிஸ்க் எடுக்காமல் எதுவுமில்லை என ஜெரியிடம் பேசி, அரைநாளில் கல்லைத் தேடி எடுத்துவிடுகிறார். இந்த பயணத்தில் இரண்டுமுறை விஞ்ஞானியின் உயிரை, ஜெரியும், நாய்களும் காப்பாற்றுகிறார்கள். தட்டுத்தடுமாறி வந்து சேருகிறார்கள். 

புயல் நெருங்கிவிட, அங்கிருந்த அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு செல்ல விமானம் தயாராய் நிற்கிறது. நாய்களுக்கு விமானத்தில் இப்பொழுது இடமில்லை. பிறகு வந்து கூப்பிட்டுக்கொள்ளலாம் என ஆறுதல் சொல்கிறார்கள். நாய்களோடு தானும் அங்கிருப்பதாக சொல்கிறான். அது உயிருக்கு ஆபத்து என அவனை அழைத்து செல்கிறார்கள்.

இதுவரை வராத புயல் இப்பொழுது தாக்க, காலநிலை மிக மோசமடைகிறது. நாய்களை அழைத்துவர விமானம் கேட்கிறான். போய்வருவதற்கு சாத்தியமேயில்லை என சொல்லிவிடுகிறார்கள். நாய்களை காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சியில் நிம்மதியில்லாமல் அலைகிறான். மீட்டு வர பல்வேறு வகைகளில் முயன்றும். எதுவும் பலனனிக்க வில்லை. நாட்கள் மெல்ல மெல்ல நகருகின்றன. அந்த உறைபனி குளிரில், புயலில் நாய்கள் வாழ்வதற்காக போராடுகின்றன. 

அந்த நாய்கள் உயிர் பிழைத்தனவா? ஜெரி நாய்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றானா என்பது மீதி முழுநீள கதை!

***

பாதிப்படத்திற்கு மேலாக பனிப்பிரதேசத்தில் தான். நம்மால் அந்த கடுங்குளிரை உணரமுடிகிறது. அந்த குளிரில் நாய்களின் உழைப்பு, போராட்டம் என மொத்த படத்தையும் அந்த எட்டு நாய்கள் தாங்கி நிற்கின்றன. ஜெரிக்கு அந்த நாய்களுடான பிணைப்பையும் அருமையாக நம்மால் உணரமுடிகிறது.

நாய்களை விட்டுவிட்டு போனதும், புயல் அடிக்க துவங்கியதும், அந்த கேம்பில் மேலே பறந்து கொண்டிருந்த கொடி காற்றில் ஆடி கீழேவிழும்.  உடனே ஒரு நாய் ஓடிப்போய் அந்த கொடியை கோபத்துடன் கிழிக்கும்.  “எங்களை அம்போன்னு விட்டுட்டு போயிட்டிங்களேடா!” என்று சொல்வது போன்ற காட்சி அது!

சிறு வயதில் பக்கத்துவீட்டில் ராணி என்றொரு அருமையான நாய் ஒன்று இருந்தது. என் மொத்த வாழ்விலும் அதோடு மட்டும் தான் எனக்கு நெருக்கம் இருந்ததாக உணர்கிறேன். மற்றபடி, நாய்கள் என்றால் எப்பொழுது எனக்கு பயம் உண்டு. காரணம். கடித்தால், வயிற்றைச்சுட்டி 16 ஊசி போடவேண்டும் என சுற்றி உள்ளவர்கள் எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள். நமக்கு ஊசின்னா ரெம்ப பயம். 

எங்கள் வீட்டில் எப்பொழுதும் நாய் வளர்த்ததில்லை. அம்மாவிடம் ஆவலாய் எப்போதாவது சொன்னால், உங்களை வளர்க்கிறதே பெரும்பாடா இருக்கு! இதில் நாய் வேற! என்பார்.

இந்தப்படத்தைப் பற்றி நாய் வளர்ப்பவர்கள் எழுதியிருந்தால் இன்னும் உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்கள் என நம்புகிறேன்.

இது உண்மையில் நடந்த கதை என்கிறார்கள். 1983-ல் அண்டார்டிகா என்ற பெயரில் ஜப்பானிய படம் ஒன்று வந்திருக்கிறது. அதுவும் இணையத்தில் கிடைக்கிறது. மற்றபடி அந்த படத்தில் இறுதியில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும், இந்த படத்தில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும் வித்தியாசப்படுகிறது.

நான் தமிழில் பார்த்தேன். குழந்தைகளோடு பார்க்ககூடிய படம். பாருங்கள்.

ஜியானின் ’நல்ல நினைவுகளும்’, மோடியின் நான்காண்டு ’சாதனைகளும்”!


டோரிமான் தொடரில் வருகிற ஜியான் ஒரு முரட்டு பையன். அவன் ஒரு நாள் தெருவில் நடந்து வர, எதிரே வீட்டு நாயொன்று தெருவில் வருகிறது. அவனைப் பார்த்ததும் அவனுடன் ஒட்டிக்கொள்கிறது. சிறிது நேரத்தில் ஜியான் வயதில் ஒரு பெண் அந்த நாயை தேடி வருகிறாள். தங்கள் நாய்க்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, மிகுந்த ”நன்றி” சொல்கிறாள். ”தங்கள் நாய், நல்லவர்களிடம் மட்டுமே போகும். நீங்கள் நல்லவர்” என பாராட்டு பத்திரமும் தருகிறாள். 

இந்த ‘நல்ல’ நினைவோடு, உற்சாகமாய் விசிலடித்துக்கொண்டே தெருவில் வருகிறான். எதிரே வந்த பையன் கவனமில்லாமல் இவன் மீது மோத இருவரும் தெருவில் உருள்கிறார்கள். ஜியான் எழுந்து, அந்த ‘நல்ல’ நினைவை நினைத்துப் பார்க்கிறான். மோதிய அதிர்ச்சியில் அந்த ‘நல்ல’ நினைவு கலைந்துவிடுகிறது. செம கடுப்பாகி, மோதியவனை துவைத்து எடுக்கிறான்.

***

மோடியின் கடந்த நான்கு ஆண்டு செயல்பாடுகளான பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமுலாக்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், நீட்டை அமுல்படுத்தியது என மக்களை இடைவிடாமல் தொடர்ச்சியாய் தாக்கிக்கொண்டு, எப்பொழுதும் பதட்டமாக தான் வைத்திருக்கிறது. மக்கள் முன்பு சேமித்து வைத்திருந்த சில ’நல்ல’ நினைவுகளும் தொலைதூரத்திற்கு காணாமல் போய்விட்டன.

ஜியான் நல்ல வலுவான பையன். அதனால் எதிராளியை துவைத்து எடுத்துவிட்டான். பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் தனித்தனியாக போராடிக்கொண்டிருப்பதால், நம்மால் துவைக்க முடியவில்லை. நாம் எல்லோரும் ஓரணியில் திரண்டு போராடினால், நமக்கும் சாத்தியம் தான்! நமக்கும் நிறைய நல்ல நினைவுகள் நிச்சயமாய் கிடைக்கும்!