> குருத்து: குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது! - தோழர் மருதையன்

February 13, 2011

குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது! - தோழர் மருதையன்


முன்குறிப்பு : சமீபத்தில் தோழர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வு நடைபெற்றது. தோழர் மருதையன் வாழ்த்துரை வழங்கினார்.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

அதன் தொடர்ச்சி :

இப்படி கெளரவிக்க மரபை பின்பற்றுகிற(!) இவர்கள் சொல்கிறார்கள். அங்கு போய் அமெரிக்காவிலே குடியேறிய ஐ.டி. தம்பதியரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று? ஆனால் இங்கே நம்முடைய பத்திரிக்கைகளிலே, நம்முடைய தொலைக்காட்சிகளிலே என்ன பேசுகிறார்கள் என்றால், "அமெரிக்காவிலே குடும்பம் சீர் குலைந்துவிட்டது. நம் நாட்டிலே குடும்ப அமைப்பு வலிமையாக இருக்கிறது". இது நம்முடைய மேன்மையான நாகரிகம். அங்கே நினைத்தால், விவாகரத்து செய்துவிடுகிறார்கள். இங்கே அப்படியெல்லாம் கிடையாது. இது எதைக் காட்டுகிறது என்றால்... இந்த நாட்டின் 5000 ஆண்டு தொன்மைமிக்க கெளரவமான நாகரிகத்தை காட்டுகிறது என பேசுகிறார்கள். இது பொய்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் நாகரிகமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். பிடிக்காத ஒரு ஆணும், பெண்ணும் அங்கு சேர்ந்து வாழ்வதில்லை. காரணம் என்ன என்பது வேறு விஷயம். கணவன் ஆணாதிக்கவாதியாக இருக்கிறான்.அல்லது பொறுக்கியாக இருக்கிறான் அல்லது பேராசைக்காரனாக இருக்கிறான் என்பதினால் மனைவி அவனை வெறுக்கலாம். சில வேலைகளில் புருஷன் குறட்டைவிடுகிறான் என்பதற்காகவும் விவாகரத்து செய்பவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களுடைய விருப்பம். ஆனால், மனம் இணங்காத ஒரு தம்பதி அங்கே சேர்ந்து வாழ்வதில்லை. நம்முடைய நாட்டில் இணக்கம் இல்லாத தம்பதிகள் சேர்ந்து வாழ நிர்ப்பதிக்கப்பட்டிருக்கிறோம்.

அநேகமாக பெண்கள் கட்டாயமாக இங்கு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு வாய்ப்பில்லை என்பதினால், சேர்ந்து வாழும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஐ.டி. துறையில் பணிபுரியும் இளைஞர்கள் பலர் வந்திருக்ககூடும். ஒரு ஆங்கில சொற்பிரயோகத்தில், ஒரு வேறுபாடு இருக்கிறது. மேலைநாடுகளில் "Saving the marriage" என்று சொல்வார்கள். திருமணத்தை காப்பாற்றிக் கொள்வது . இங்கு, "Saving the family" குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது. அங்கு திருமணம் வேறு. குடும்பம் வேறு. இங்கே குடும்பத்துக்கு உட்பட்டது மண உறவு. ஒரு பிள்ளை என வந்துவிட்டபிறகு, அதைக் காப்பாற்றுவதற்காக மனைவி விட்டுக்கொடுக்கவேண்டும். மனைவி அடிமையாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இங்கே இருக்கிறது. ஆக, அந்த நாகரிகத்தை விட மேம்பட்ட நாகரிகத்தில் வாழவில்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக சேர்ந்துவாழ்கிறோம்.

*****

விட்டுக்கொடுப்பது பெருமை என மேடையெல்லாம் பேசுவார்கள். நான் விட்டுக்கொடுக்க கூடாது என்று சொல்வேன். எதிலே விட்டுக்கொடுக்கனும்? எதிலே விட்டுக்கொடுக்க கூடாது ? ஒரு மனிதன் எதை விட்டுக்கொடுக்கிறான் என்பதில் தான் அவனுடைய தரம் இருக்கிறது.

தொடரும்.

0 பின்னூட்டங்கள்: