ஒரு கடலோர
கிராமம். நாயகி தன் கணவன், மகன், கணவனின் தங்கை என அமைதியாக வாழ்ந்துவருகிறார்கள்.
கடல் பயணத்திற்கு
சென்ற நாயகியின் கணவன் கொடூரமான கடற்கரை கொள்ளையர்கள் குழுவிடம் சிக்குகிறான். அவனிடம் இருந்த தங்க கட்டியைப் பார்த்து, அது ஒரு
பெரிய பொக்கிசத்தின் ஒரு பகுதி என வில்லன் அறிகிறான்.
அவனையும்
இழுத்துக்கொண்
டு, அந்த கடலோர கிராமத்தை வந்தடைகிறார்கள். அங்கிருப்பவர்களை எல்லாம் கொடூரமாக கொல்கிறார்கள்.
நாயகி அந்த
கடற்கொள்ளையர்களில் ஒருவராக இருந்து, இப்பொழுது மனந்திருந்தி வாழ்பவள்.
ஆனால் பழைய பகை அவளைத் தேடி வந்திருக்கிறது.
அவர்களிடம்
இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றினாளா என்பது முழு நீள ஆக்சன் கதை.
****
ரஜினி நடித்த
பாட்சா கதை தான். இதில் புதுசு என்னவென்றல
இந்த ஆங்கிலப்படத்தில், பிரியா சோப்ரா நடித்திருத்திருக்கிறார். ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருந்தார் என நினைவுக்கு
வருகிறது.
எளிய கதை
தான். பிரியங்கா சோப்ராவும், Boys சீரிசில்
அதிகாரியாக ”சூப்பர் நாயகர்களுடன் மல்லுக்கட்டும் Karl Heinz urban தான் வில்லனும்
என இருவரும் மொத்தப் படத்தையும் தாங்குகிறார்கள்.
படம் ஆஹோ
ஓஹோ என இல்லை. வழக்கமான ஒரு ஆக்சன் படம் தான்.
அமேசானில்
தமிழில் இருக்கிறது. ஆக்சன் ரசிகர்கள், நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்:
Post a Comment