> குருத்து: சூப்

January 4, 2019

சூப்

தேநீர் கடைகள் தெருவிற்கு இரண்டு இருக்கின்றன. சூப், பருத்திப்பால் என மாற்றாக கிடைப்பது சிரமமாக தான் இருக்கின்றன.

மாலை வேளைகளில் அசைவ சூப் கூட சில கடைகளில், உணவகங்களில் கிடைத்துவிடுகின்றன. எனக்கு சில சமையல் பொருட்களில் ஒவ்வாமை இருப்பதால், அசைவ சூப் கடைகளில் குடிப்பதை நிறுத்திவிட்டேன்.

ஒருநாள் கோடம்பாக்கம் லிபர்டி பாலத்திலிருந்து, அம்பேத்கர் சிலைக்கு முன்பாக இடது பக்கம் வரும் வளைவில் ஒரு சூப் கடை இருக்கிறது.

வல்லாரை, மூலிகை, முருங்கை, வாழைத்தண்டு, காய்கறி என 10 வகை சூப்புகளில் தினம் மூன்று வகை என பட்டியலிட்டு விற்பனை செய்கிறார்கள். எனக்கு பிடித்தது மிர்த்தானியா.

சூப்புகளின் சுவை அருமை. உடன் சாப்பிட தரும் சிறு அரிசி முறுக்குகளும் தனிச்சுவை தான். மாலை நாளை நான்கு மணிக்கு மேல் கிடைக்கிறது. எப்பொழுதும் நான்கு, ஐந்து பேர் குடித்துக்கொண்டு இருப்பார்கள். சாண்ட்விச்சுகள் கூட கிடைக்கிறது. ஒருநாளும் நான் சாப்பிட்டதில்லை. இங்கு சூப் சாப்பிட்டால் எனக்கு ஒவ்வாமையும் ஏற்படுவதில்லை. ஒரு சூப்பின் விலை ரூ. 20.

ஒரு குடும்பாக கடையை நடத்தி வருகிறார்கள். ஒருநாள் போயிருந்த பொழுது, சூப் பரிமாறுகிறவரும் சூப் குடித்துக்கொண்டிருந்தார். கேசியர், சூப் ஊற்றித்தருகிறவர் என அந்த கடையில் இருப்பவர்கள் எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடு தான் இருக்கிறார்கள்.

எனக்கு என்ன பயம்னா அந்த பக்கம் போகும் பொழுதெல்லாம் சூப் அருந்துகிறேன். சூப் பாக்கெட்களிலும் விற்கிறார்கள். அதையும் வாங்கிப்போய் வீட்டில் குடிக்கிறோம். தொடர்ச்சியா இங்க சூப் குடிச்சா நாமளும் அவங்கள போல ஆகிவிடும்னு ஒரே சம்சயமாக இருக்கிறது. 

0 பின்னூட்டங்கள்: