> குருத்து: பெருமழை நாளில் மகள்

January 4, 2019

பெருமழை நாளில் மகள்

சென்னையில் விடாமல் மழை பெய்துகொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் நீர் குளமாய் தேங்கியிருந்தது.

குழந்தை பிறப்பதற்கு மருத்துவர் குறித்த நாளும் நெருங்கி கொண்டிருந்தது. சுகப்பிரசவம் தான். சிக்கல் ஏதும் இல்லை என மருத்துவர் சொல்லியிருந்தார்.

திடீரென பனிக்குடம் உடைந்துவிட்டது. குழந்தையை உடனே வெளியே கொண்டுவரவேண்டும். ஆகையால் சிசேரியன் என சொல்லிவிட்டார்கள். பதட்டமாகிவிட்டது!

11.11.2006 மதியம் 1.28 மணியளவில் மகள் பிறந்தாள். துணைவியார் மயக்கத்தில் இருந்தார். குழந்தை உடம்பு முழுவதும் ஒரு மாவு அப்பியிருந்தது. பக்கத்து அறையில் தொட்டிலில் படுக்க வைத்திருந்தார்கள்.

முதன் முதலாய் மகளைப் பார்த்தேன். ஒருவித பரவசத்தில் இருந்தேன்.

வெளியே மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. உள்ளேயும் பெய்துகொண்டிருந்தது!

0 பின்னூட்டங்கள்: