> குருத்து

July 16, 2023

Will you be there (2016) தென்கொரியா - Feel Good Movie



நாயகன் ஒரு மருத்துவர், தன் கல்லூரி செல்லும் பிரியத்துக்குரிய மகளுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு புற்றுநோய் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமென்றாலும் செத்துபோய்விடும் நிலையில் இருக்கிறார்.


கம்போடியாவில் மருத்துவ முகாம் சென்றிருந்த பொழுது, கண் தெரியாத ஆதிவாசி ஒருவரின் பேத்திக்கு உதவும் பொழுது, நன்றிக்கடனாக அவர் (மந்திர) மாத்திரைகளைப் போல இருக்கும் ஒரு சின்ன பாட்டிலைத் தருகிறார்.

அதில் ஒன்றை விழுங்கினால், சரியாக முப்பது வருடங்களுக்கு முன்பாக காலப் பயணம் செய்கிறார். அங்கு தன்னுடைய இளவயதுள்ளவனைப் பார்க்கிறார். எல்லாம் இருபது நிமிடம் தான். மீண்டும் சமகாலத்துக்கு வந்துவிடுகிறார்.

மீண்டும் பயணிக்கிறார். தான் காதலித்த பெண்ணைப் பார்க்க செல்கிறார். இதில் இளவயது நாயகனுடன் பேசும் பொழுது, அவள் ஒரு விபத்தில் இறந்து போகும் ஒரு செய்தியை வாங்கிவிடுகிறான். காதலியைக் காப்பாற்ற வேண்டும் என்கிறான். அவளைக் காப்பாற்றினால், அதற்கு பிறகு ஒருவரை திருமணம் முடித்து பிறந்து, இப்பொழுது தன் மகளாக இருக்கும் அவள் இல்லாது போய்விடுவாள்.

இருவருக்கும் பாதிப்பு இல்லாமல் என்ன செய்வது என்பதை இருவரும் பேசி வைத்துக்கொண்டு நடக்க முயல்கிறார்கள். ஆனால், இயற்கை சில திருப்பங்களை தருகிறது. அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***
காலப்பயணம் குறித்து உலக அளவில் நிறைய படங்கள் வந்துவிட்டன. தமிழிலும் கூட படங்கள் வந்துவிட்டன. முன்பெல்லாம் காலப்பயணம் குறித்து நீட்டி முழக்கிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. சமீபத்தில் பார்த்த ஒரு படத்தில் ஒரு இருட்டான அறையில் போய் ஒரு தேதியை நினைத்துக்கொண்டால், அங்கு போய்விடுவார் என காட்சி வைத்திருந்தார்கள். அது போல இந்தப் படத்திலும், எளிதாக ஒன்றை வைத்திருக்கிறார்கள்.

காலப்பயணத்தில் (என்ற கற்பனையில்) நல்லதும் இருக்கிறது. அபாயமும் இருக்கிறது தானே! இப்பொழுது உள்ள கொஞ்சம் நஞ்சம் நல் வாழ்க்கையும் தொலைந்து போனால் என்ன செய்வது? தனக்கு கிடைத்த நல் (!) வாய்ப்பினை அந்த மருத்துவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார்? அதில் வெற்றி பெற்றரா என்பதை பீல் குட் மூவியாக நகர்த்தியிருக்கிறார்கள். உணர்வுப்பூர்வமாகவும் நகர்த்தியிருக்கிறார்கள்.

ஒரு மனிதனுடைய ஆளுமை கட்டமைக்கப்படுவது என்பது, அவன் வாழ்ந்த வாழ்வியலில் தானே இருக்கிறது. வாழ்க்கையை அதன் திசை வழியில், அப்போதிருந்த மனநிலையில் , சூழலில் வாழ்ந்து, அதன் நல்லது, கெட்டதில் கற்றுக்கொண்டு, அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துவிடுவது தான் சரியானது. என்ன சொல்கிறீர்கள்?

படத்தில் நடித்தவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு எடுத்தது என்கிறார்கள். படம் மெதுவாகத் தான் நகர்கிறது. நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள். இப்பொழுது இணையத்தில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. நான் நண்பரிடமிருந்து வாங்கிப் பார்த்தேன்.

July 13, 2023

Koode (2018) மலையாளம் அண்ணனுக்கும் தங்கைக்குமான உரையாடல்


“உங்களுக்குத் தேவையானது உங்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு மனிதர் மட்டுமே. ஆனால் உங்களைக் கண்டுபிடிக்க, நீங்கள் எப்போதும் கடமைகள் மற்றும் தளைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். அங்கு, அடிவானத்தில், உண்மையான சுதந்திரம் உள்ளது.”

- From Hindustan times

அம்மா, அப்பா, பள்ளி படிக்கும் மாணவன் என சிறுகுடும்பம் அது. மீண்டும் ஒரு மகள் பிறக்கிறாள். அவளை மொத்த குடும்பமும் மகிழ்வோடு வரவேற்கிறது.

இந்த மகிழ்ச்சி எல்லாம் இரண்டு வருடங்கள் தான். அந்த குழந்தை நோயுறுகிறாள். அவளின் நோயைக் குணப்படுத்த மருந்தில்லை அவள் வாழும் வரை வாழட்டும். அதற்கு மருத்துவம் உதவி செய்யும் என சொல்லிவிடுகிறது.

மருத்துவ செலவுகள் அந்த எளிய குடும்பத்தை தலைகீழாய் புரட்டிப்போட்டுவிடுகிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு போய்விடுகிறது. மகனின் பத்தாவது படிப்பை நிறுத்திவிட்டு, அவனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள். அவனுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம் இருந்தாலும், தங்கையின் நிலைக்காக அவன் சம்மதித்து செல்கிறான்.

அவளுக்கு வாழவேண்டும் என அத்தனை ஆசை. அத்தனை உற்சாகம். ஆனால், கல்லூரி படிக்கும் பொழுது, அவள் அணைந்துவிடுகிறாள். அவளின் இறப்புக்கு பிறகு நாயகனான சகோதரன் ஊருக்கு வந்துசேர்கிறான்.


தங்கையின் உணர்வுகளால் அவன் உந்தப்படுகிறான். ஆகையால், அவனுக்கு மட்டும் கண்ணில்படுகிறாள். அப்பா வைத்திருந்த ஒரு பழைய வேனை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வருகிறான். அந்த வேனில் அவனோடு கலகலப்பாக பேசுகிறாள். விவாதிக்கிறாள். சண்டை போடுகிறாள்.

அவனோடு பள்ளிப் படித்த நாயகி, திருமணமாகி, பிறகு விவாகரத்தாகி, இப்பொழுது தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக வேலை செய்கிறாள். அவளின் குடும்பம் பழைய விழுமியங்களோடு இருக்கிறது. நாயகனோடு பேச துவங்குகிறாள். அந்த குடும்பம் சண்டைக்கு வருகிறது.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

படம் மனித உணர்வுகளைப் பற்றித்தான் பேசுகிறது. தங்கையைப் பிடிக்கும். தங்கையின் வாழ்வுக்காக தான் அவன் வெளிநாடு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். ஆகையால் சூழலின் மீது அத்தனை கோபம் அவனுக்கு. அவன் இழந்து போன வாழ்வில் தேங்கி நிற்கிறான். தங்கையோ அந்த தன் வாழ்நாளின் இறுதி தெரிந்துவிட்டதால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உற்சாகமாய் வாழ்ந்தாள். அண்ணனுடனான உரையாடல் மூலம் அவனையும் நிகழ்காலத்துக்கு இழுத்து வருவது தான் கதை.

நாயகன் பிரித்விராஜ். மென்சோகத்தோடு அலைகிற பாத்திரம். கச்சிதமாக பொருந்துகிறார். துறுதுறுப்பான தங்கையாக நஸ்ரியா. இந்தப் பாத்திரம் வேறு யாருக்கும் இத்தனை பொருந்திபோகும் என தெரியவில்லை. நஸ்ரியாவிற்காக இந்தக் குழு காத்திருந்திருக்கிறது. நாயகியாக பார்வதி. அருமையாக நடித்திருக்கிறார்.

படத்தில் வரும் அந்த வேனுக்கு படத்திலேயே ஒரு காதல் கதை சொல்வார்கள். எனக்கு அந்த வேனைப் பார்த்ததும், Into the wild (2007) கிறிஸ்டோபர் நினைவுக்கு வந்தார். அவர் ஒரு மாணவர். தன் எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டு, அலாஸ்காவிற்கு போய், இப்படி ஒரு வேனில் தான் வாழ்ந்து, உயிர் துறப்பார். அது ஒரு உண்மைக் கதை. அதுவும் நல்லப் படம். பாருங்கள்.

Bangalore days இயக்கிய அஞ்சலி தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். நல்ல படம். பாருங்கள். அமேசானிலும், யூடியூப்பிலும் இருப்பதாக இணையம் சொல்கிறது.

July 12, 2023

தியாகிகளுக்கு வணக்கம்


வழக்கமாக பொருளாதார வல்லுநர்கள் அட்வைஸ் பண்ணும்போது, உங்களது சம்பளத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா, நான் இன்னொன்று சொல்கிறேன். நீங்கள் செய்யும் இரண்டாவது செலவு உங்களுக்கான சொந்த செலவாக இருக்கவேண்டும். சேமிப்பை விட இது ரொம்ப முக்கியம். இன்னும் சொல்லப்போனால் சேமிப்பே இரண்டாம் பட்சம்தான்.


ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள். பல சைக்கோக்கள் உருவாவதற்கு அவர்கள் கைக்கொள்கிற "தியாக உணர்ச்சிதான்" காரணம். ஒரு நல்ல பேண்டோ சட்டையோ வாங்காமல் பையன் படிப்புக்கும் பெண் படிப்புக்கும் செலவு பண்ணும் தகப்பன். குழந்தைகளுக்கு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துவிட்டு இப்போதும் அந்த பழைய நோக்கியா போனில் செட்டில் ஆகும் அம்மா. எப்போதும் கிழிந்த ஜட்டியையே போட்டுக்கொண்டு அதை தியாகமாக கற்பனை செய்துகொண்டிருக்கும் மாமாக்கள் இவர்களால் நிறைந்திருக்கிறது உலகம்.

வீட்டிற்கு இப்படி தியாகம் செய்து ஓடாக உழைக்கும் இந்த அடிமைகள் சமூகத்திற்கு என்ன மாதிரியான தீங்குகளை விளைவிப்பார்கள் என்று பாருங்கள். பெரும்பாலும் மிஸ்ட் கால் கொடுப்பார்கள். ஓசி குடி குடிப்பார்கள். டீயை ரொம்ப நேரம் ஊதி ஊதிக் குடிப்பார்கள். சேர்ந்து உணவு அருந்தியபிறகு பில் கொடுக்கும் நேரத்தில் அவர்களுக்கு போன் வரும். யார் என்ன பொருள் வாங்கினாலும் அது என்ன விலை என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அது அழகாக இருக்கிறதா என்பது முக்கியமே இருக்காது. இவள் என் மகன் என் மகள் என்று நண்பர்கள் யாராவது அறிமுகப்படுத்தினால், என்ன படிக்கிற, எந்த ஸ்கூல், என்று கேட்டுவிட்டு அப்படியே திரும்பி எவ்ளோ ஃபீஸ் கட்டுறீங்க, அந்த அளவுக்கு ஒர்த்தா, டியூஷன் எங்க போட்ருக்கீங்க அந்த ஃபீஸுக்கு அது ஒர்த்தா போன்ற முக்கியமான கேள்விகளைக் கேட்பார்கள். இதை விட அந்த ஸ்கூல் டீச்சர்களுக்கு பூப்ஸ் நல்லாருக்குமா என்று கேட்கும் தகப்பன் மன ஆரோக்கியம் உள்ளவன்.

இந்த ஓல்மாரித்தனம் ஏன் ஒரு மதமாக நம் ஆட்களிடம் இருக்கிறது என்பதைக் கள ஆய்வு செய்து நான் கண்டுபிடித்த முடிவுகளையே இங்கு சொல்கிறேன். தனக்கென்று இவர்கள் எதுவுமே செய்துகொள்வது கிடையாது. எது செய்தாலும் குடும்பத்த்தோடு சேர்ந்து செய்வது என்பதாக டியூன் ஆகியிருக்கிறார்கள். அப்படி செய்து செய்து, தான் ஒரு தனி மனிதன் என்கிற சொரணையே அற்றுப் போய்விட்டது. அது சுரண்டலாக மொன்னைத்தனமாக மாறிவிட்டதைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த கொடூர தவறுகளை சமன்படுத்தும் காரியத்தைத்தான் அவர்களது தியாக உணர்ச்சி செய்கிறது. வெளி ஆட்களுக்கு கொடூர மொக்கையாக இருக்கும் இவர்கள் எப்படி வீட்டில் மட்டும் தியாகிகளாக இருக்கிறார்கள்?

இதிலிருந்து வெளியேற சில வழிகள்.

கொஞ்சம் பணம் இருந்தாலும் சரி, தனக்கென்று ஏதாவது வாங்குங்கள். வெறும்
அழகுணர்ச்சிக்காகக் கூட அது இருக்கட்டும். ஒரு சிறிய பிளாஸ்டிக் ரோசாப்பூ, ஐந்து ரூபாய் கூட இருக்கலாம், நீங்கள் பில் பே பண்ணும் மேசை பக்கத்தில் இருக்கிறது என்று வையுங்கள், சும்மா வாங்குங்கள். பொண்டாட்டிக்கோ, கேர்ள்பிரண்டுக்கோ கொடுங்கள். இல்லையா கொஞ்ச நேரம் சும்மா கையில் வைத்திருந்துவிட்டு தூக்கிக் கீழே போடுங்கள். பணம், மதிப்பு என்று அந்த சில்லறை விஷயத்துக்கு அல்லாடாதீர்கள்.

தனியாகப் போய், ஏதாவது பர்சேஸ் பண்ணுங்கள், ஒரு ஜட்டியோ பணியனோ கிழியும் வரைக் காத்திருக்காதீர்கள். அது கிழியாவிட்டாலும் சில மாதம் கழித்து மாத்துங்கள். பொண்டாட்டிக்கு, கேர்ள் பிரண்டுக்கும் வாங்கலாம். அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பிரச்சினை இல்லை. இது ரொம்பவும் நுணுக்கமானது. இது உங்களுக்குப் பிடிக்கிறது வாங்குகிறீர்கள். இதுவேதான் பெண்களுக்கும். புருஷனுக்குப் பிடிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. தூக்கிப் போடட்டும். பரவாயில்லை.

எப்போதும் படுக்கையறைக்கு வரும்போது சாம்பார் தாளித்த வாசனை நைட்டியின் நெஞ்சுப் பகுதியில் கமழக் கமழ மனைவி வருகிறாளா, நைட்டியை உங்கள் கையாலேயே உருவி எடுத்து விடுங்கள். மிதியடியாக கட்டிலுக்குக் கீழே போடுங்கள். இல்லை அந்த சாம்பார் வாசனைதான் விரைப்பைத் தூண்டுகிறது என்றால் பரவாயில்லை. ஃபெட்டிஷ் ஓரளவுக்கு ஓகேதான்.

யார் வீட்டுக்குப் போனாலும் இது சொந்த வீடா வாடகை வீடா இந்த பொருள் எப்போது வாங்கினீர்கள் என்று கேட்காதீர்கள். கேபிள் டிவியா, செட்டாப் பாக்ஸா, கேரண்டி இருக்கா மூச்...

அந்த வீட்டுக் குழந்தைகள் பற்றி எதுவுமே விசாரிக்காமல் இருக்க முடியுமா என்று பாருங்கள். அவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்கள் என்பதற்காக சும்மாவாவது எதுவும் கேட்காதீர்கள். நீங்களும் சொல்லாதீர்கள். இரண்டு நண்பர்கள் மீட் பண்ணும்போது குடும்ப விவகாரம் பற்றி பேசாமல் வேறு ஏதாவது பேச வருகிறதா என்று முயன்று பாருங்கள்.

போனவுடனேயே உங்கள் wifi பாஸ்வோர்ட் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்காதீர்கள். netflix, amazon பாஸ்வோர்ட் கேட்பது அராஜகம். அப்படியே அவசரமாக பாஸ்வோர்ட் தேவைப்பட்டால் ஃபோனை அவரிடமே கொடுத்து டைப்படிக்க சொல்லுங்கள். horny neighbour என்று கூட இருக்கலாம். நீங்கள் பக்கத்து வீடாக இருக்கையில் மனவுளைச்சலாக இருக்கும்.

சுற்றியுள்ளவர்களுக்கு அதாவது குடும்பத்துக்கு உறவினர்களுக்கு ஏதாவது வாங்கினால், அதை முதலில் உங்களுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களுக்கு வாங்குங்கள். இது நீங்கள் கிஃப்ட் பண்ணும் பொருள் மீதான உங்கள் உடமை மனப்பான்மையை மட்டுப்படுத்தும். நான் எனக்குன்னு செஞ்சுக்காம உனக்காக பண்ணேனே போன்ற ஊளை சென்டிமென்டுகளை ஒழிக்கும். இது ரொம்பவும் முக்கியம்.

அடுத்தவர்களுக்கு கிஃப்ட் பண்ணுவதற்கு, ஹோட்டலில் சுடும் பொருட்கள், ஆபீசில் இருந்து எடுத்து வரும் பொருட்கள், உங்களுக்கு யாராவது கிஃப்ட் பண்ணும் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் பரிசாக தருகிறீர்கள் என்பதால் நீங்கள் அற்பர் என்பது மாறிவிடாது.

சர்பிரைஸாக யாருக்காவது செலவு செய்யுங்கள். காரணமே இல்லாமல் இருக்கட்டும். உடனே மறந்துவிட முயற்சி செய்யுங்கள்.

எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொண்டு அதை மீண்டும் சந்திக்கையில் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். இப்படித்தான் நான் போன முறை உங்க வீட்டுக்கு வந்தப்ப, நீங்க கோவிலுக்கு கிளம்பிட்டிருந்தீங்க பையன் அடம் பண்ணிட்டிருந்தான், அன்னைக்கு நீங்க கொடுத்த காப்பியில் சுகர் கொஞ்சம் அதிகமா போட்டுட்டீங்க ஹி...ஹி...

யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். கேட்டாலும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசியுங்கள். இரண்டு நண்பர்கள் தொடர்புடைய காரியத்தில் இரண்டு பேருக்கும் சேர்த்து மூன்றாவது நண்பரிடம் கமிட் பண்ணாதீர்கள். அது டீ குடிப்பதாக இருந்தாலும் சுவர் ஏறிக் குதிப்பதாக இருந்தாலும் சரி...

சம்பளத்தில் இது எனக்கான பணம், எனக்கு மட்டுமேயான பணம் என்று கொஞ்ச பணத்தை மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள். அதைக் களிப்புடன் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், அது எவ்வளவு அற்பத்தனமாக இருந்தாலும் சரி, அடுத்தவரை சுரண்டாமல் காயப்படுத்தாமல் களிப்புடன் செலவு பண்ணிப் பாருங்கள். இணையருக்கும் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு அதை மறந்துவிடுங்கள். ஆத்மார்த்தமாக மறக்க முயலுங்கள்..

- காரல் மார்க்ஸ் கணபதி, முகநூலில்....!