> குருத்து: February 2015

February 23, 2015

அம்மா சுட்ட தோசை!



·       
  அம்மாவிற்கு பிடித்தது இட்லி.
ஐந்து குழந்தைகளுக்கு தோசை சுட்டால்
நேரம் என்ன ஆவது என்பார்.

·         பிடிவாதத்தால் தோசைகளும் கிடைக்கும்.
பல நேரங்களில் ‘அடி’தோசை தான் கிடைக்கும்.

·         வளர்ந்த பிறகு தான் தெரிந்தது.
கனமான கல்தோசையை தான்
தோசை என பலகாலம் ஏமாற்றியிருக்கிறார் என!

·         வளர்ந்த நாட்களில்
மெல்லிசா ஏன் சுட்டுத்தரவில்லை என்றால்,
’பசங்களுக்கு பசி அடங்காதுடா! என்பார் அன்புடன்.

·         உட்கார வைத்து விதவிதமாய் மணக்க மணக்க
சுட்டு பரிமாறலாம் என்றால்
காலம் இருவருக்கும் ஐநூறு கி.மீட்டர்
தூரம் வைத்திருக்கிறது.

·         எத்தனை விதமாய் சுட்டாலும்,
அம்மா தரும் கனமான தோசைக்கும், சாம்பருக்கும் தான்
சுவை அதிகம் இருக்கிறது.