> குருத்து: September 2012

September 27, 2012

வின் தொலைக்காட்சியில் 11 மணிக்கு விவாதம்!

இன்று காலை 11 மணி அளவில் 'வின்' தொலைக்காட்சியில் "சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய முதலீடு" குறித்தான விவாதத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சுப. தங்கராசு பங்கேற்கிறார்.

பாருங்கள்!

தொடர்புடைய சுட்டிகள் :

சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!! - வினவு

இந்துத்துவா கும்பலின் சுதேசி பித்தலாட்டம்! - வினவு

சில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!! - வினவு

September 26, 2012

முதலாளிகளின் 'நேர்மையும்' உழைக்கும் மக்களின் நேர்மையும்!

நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் மாதம் இது. தணிக்கையாளர் அலுவலகம் அடிக்கடி போய்வருகிறேன். ஒவ்வொரு முதலாளியும் தணிக்கையாளருடன் தனித்தனியாக ரகசியம் பேசி கிளம்புகிறார்கள்.

தங்கள் ஈட்டிய லாபத்திற்கு வரி கட்ட மூக்கால் அழுகிறார்கள் முதலாளிகள்.  10 லட்சம் கட்ட வேண்டியிருந்தால், 1 லட்சம் கட்டினால் போதும் என்கிறார்கள்.  தணிக்கையாளர்  லாபத்தை கொஞ்சம் கூடுதலாக காட்டலாம் என எப்படியெல்லாமோ பேசி முயற்சி செய்கிறார். தணிக்கையாளர் கொஞ்சம் கூடுதலாக காட்டினால், தன் நிலைக்கு ஆபத்து வராது என நினைக்கிறார். ஆனால், முதலாளிகள் கறாராக மறுத்துவிடுகிறார்கள். 

முதலாளிக்கு இன்னும் அழுத்தம் கொடுத்தால், தணிக்கையாளரை மாற்றிவிடுவார்கள்; தன் பொழப்பு போய்விடும் என்பதால், அதற்கு தகுந்தாற் போல பொய்கணக்கை தயாரிக்க துவங்கிவிடுகிறார். முதலாளிகள் எல்லா துறை அதிகாரிகளையும் லஞ்சத்தால் வாயை மூடிவிடலாம் என தங்களது சொந்த அனுபவத்திலும், சக முதலாளிகளின் அனுபவ பகிர்விலும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். 

இந்த நாட்டில் நேர்மையாக அனைத்து வரிகளையும் செலுத்துபவர்கள் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தான்!

September 10, 2012

மக்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து சைதையில் ஆர்ப்பாட்டம்! 100 தோழர்கள் கைது!

மக்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து சைதையில் ஆர்ப்பாட்டம்! 100 தோழர்கள் கைது!

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்ட உள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும்

இன்று மக்கள் மீது போலீசு நடத்திய கொடூர தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டை கண்டித்து, இன்று மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் 100 பேர் வரை கைதானார்கள்.

போராடும் மக்களுக்கு தோள்கொடுப்போம்! ஆபத்தான அணு உலையை இழுத்து மூடுவோம்!

September 8, 2012

காதல் திருமணமும்! பெற்றோர்களின் சம்மதமும்!

இன்று ஒரு காதல் திருமணம். அலுவல் ரீதியான‌ நண்பர் அவர். மூன்று வருடங்களாக காதலித்தும், போராடியும் இருவீட்டிலும் சம்மதிக்க வைத்தார்கள். இருவரும் வசதியான குடும்பத்து ஆட்கள் எல்லாம் இல்லை. லோயர் மிடில் கிளாஸ் தான். வயது இருவருக்கும் 27 தாண்டாது. இப்பொழுது தான் சம்பாதிக்க துவங்கியிருக்கிறார்கள். இருவர் வீட்டிலும் இவர்கள் தான் ஒரே பிள்ளை. அதனால், கடனெல்லாம் வாங்கி, தடபுடலாக திருமணம் நடந்தது. 1000 பத்திரிக்கை ரூ. 15000 ஆனதாம். மொத்த பட்ஜெட் 5 லட்சத்திற்கும் மேல்! என்றார்.   இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் கடனை கட்டுவதில் தான் இவர்களின் வாழ்க்கை நகரும்.

நிறைய காதல் திருமணங்களை தொழில் நிமித்தமாகவும், நட்பு ரீதியாகவும் மதுரை பெண் வழக்க‌றிஞர் ஒருவர் நடத்தி வைப்பார்.  அவர் அடிக்கடி சொல்வார். "காதலர்க‌ள் அவர்களின் நண்பர்கள் மட்டும் வந்தால், அந்த திருமணம் சடங்கு, சம்பிராதயங்கள், வரதட்சணை, மொய் இன்றி எளிமையாக நடக்கும்.  ஒருவர் வீட்டில் சம்மதித்து பெற்றோர் வந்துவிட்டார்கள் என்றால் கூட திருமணத்தில் எல்லா கோளாறுகளையும் கொண்டுவந்துவிடுவார்கள்.  என்னைப் பொறுத்தவரையில் கல்யாணம் முடியும்வரையில் பெற்றோர்கள் வராமல் இருப்பது நல்லது என்பார். :)"

சரிதானே! :)