> குருத்து: March 2013

March 26, 2013

ஈழம் : இராஜபக்சேவை தண்டிப்பது எப்படி? - தோழர் மருதையன்

முன்குறிப்பு : ஈழ தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழக தழுவிய அளவில் மக்கள் போராட்டங்கள் நடந்துவருகின்றன.  இந்த போராட்டம் குறித்தான பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் பதிலளித்தார். முன்பு ஆடியோவாக வெளிவந்த பேட்டி, இப்பொழுது "இராஜபக்சேவை தண்டிப்பது எப்படி?" என நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. வாங்கிப் படியுங்கள்!

விலை ரூ. 10

39 பக்கங்கள்   

*****

 "ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு ‘எதிராக’ அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர்.

    தோழர் மருதையன் இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே ஆடியோவாக வெளியிடுகின்றோம். இது யூ டியூபில் பொருத்தமான படங்களுடன் வீடியோ ஃபைலாக உங்கள் பார்வைக்கு வருகின்றது.

    ஒரு மணி நேரம் – இருபத்தி மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த நேர்காணலில் அமெரிக்காவின் நோக்கம், மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தும் ஏகாதிபத்தியங்கள், ஈழத்தை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும் இந்தியா நண்பனா இல்லை எதிரியா, ஈழ விடுதலை குறித்த காரியவாதப் பார்வை, புலிகளின் அரசியல் தவறுகள், இது தொடர்பான முப்பதாண்டு வரலாறு, திமுக, அதிமுகவின் சவடால் அரசியல், தற்போது போராடும் தமிழக மாணவர்கள் என்று ஈழம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் தோழர் மருதையன் விளக்குகிறார்.

    ஈழம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் சரி, தவறு குறித்த வெளிப்படையான கருத்துக்கள், நடைமுறையில் செய்ய வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை என்று ம.க.இ.க.வின் அணுகுமுறை மற்றும் நடைமுறை, செல்ல வேண்டிய இலக்கை துல்லியமாக காட்டுகின்றதா என்பதை வாசகர்கள் முடிவு செய்யலாம்.

    தற்போதைய சூழலின் அவசரமான, பரபரப்பான தருணத்தில் சவடால்கள், வீராவேசமான முழக்கங்கள், இரத்த உறவு சென்டிமெண்டுகள் இன்னபிற ஜோடனைகள் ஏதுமின்றி வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

    இந்த நேர்காணலை உங்கள் நட்பு வட்டாரத்தில் விரிந்த அளவில் கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

******
வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை - 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

March 19, 2013

Judgement at Nuramberg - Film (1961)

//போர்க்குற்றவாளிகளை சுதந்திரமான, நடுநிலையான விசாரணை மூலம் தண்டிக்க இரண்டாம் உலகப் போருக்கான நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை போல் சுதந்திரமாக நடத்தினால்தான் தண்டிக்க முடியும் - புரட்சிகர மாணவ இளைஞர் முன்னணி//

இந்த கோரிக்கை இப்பொழுது பரவலாக பேசப்படுகிறது. இந்த விசாரணை குறித்த படமொன்று 1961ல் வெளிவந்தது.  2009ல் இந்த படத்தைப் பற்றிய் ஒரு அறிமுக குறிப்பாக எழுதியிருந்தேன். தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிற வேளையில் இந்த படத்தை மீள்பதிவு செய்கிறேன்.

*****

ஜெர்மனி, இட்லர், நாஜிப்படை, வதைமுகாம், படுகொலைகள்.... பற்றிய பட வரிசையில் பார்க்க வேண்டிய படம் – நூரம்பர்க்கில் தீர்ப்பு.

இரண்டாம் உலகப்போர் முடிந்து, ஜெர்மனி வீழ்ச்சியடைகிறது. நாஜிக்களின் கணக்குப்படியே படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் மக்கள். நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கும் இந்த படுகொலைகளை நாஜிக்களின் சட்டப்படி தண்டனை தர‌ தீர்ப்பு வழங்கிய ஒரு தலைமை நீதிபதி, மற்றும் 3 நீதிபதிகள் மீதான வழக்கு விசாரணை தான் படத்தின் களம்.

படத்தின் முதல் காட்சி. ஒரு பெரிய பாரம்பரிய கட்டடம். அதில் நாஜிக்களின் சின்னமான ஸ்வஸ்திக் தூண் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. அதை குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது.

இந்த குற்ற விசாரணை துவங்குகிறது. குற்றங்களை நிரூபிக்க அரசு தரப்பு அந்த நான்கு நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்புகளை கத்தை கத்தையாக சமர்ப்பிக்கிறது. நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடுகிறவர் அவர்கள் நாஜிக்களின் சட்டப்படி தான் இயங்கினார்கள். அவர்கள் மேல் எப்படி குற்றம் சொல்லமுடியும் என வாதாடுகிறார்.


நாஜிக்களின் ஆட்சியின் பொழுது, நடந்த குற்ற வழக்குகளில் குறிப்பாக இரண்டு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஒரு வழக்கு – கம்யூனிஸ்டு ஒருவரின் மகன் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு அவரை மலடாக்குகிறார்கள். (Sterilized). நீதிமன்றத்திற்கு வந்து தனக்கு இழைத்த குற்றத்தை விளக்குகிறார்.

மற்றொரு வழக்கு – ஆர்ய இனத்தை சேர்ந்த ஒரு 16 வயது பெண், யூத பிரிவைச் சேர்ந்த ஒரு வயதான பெரியவர் அந்த பெண்னுடன் பழகினார் என்பதற்காக, குற்றம் என சொல்லப்பட்டு, 1942ல் அவரை கொன்றுவிடுகிறார்கள். அந்த பெண் மீண்டும் வந்து விளக்குகிறார்.

1948ல் வழக்கு விசாரணை துவங்கி 8 மாதங்களாக நடைபெற்று 1949ல் முடிவடைகிறது. இறுதியில்... நான்கு நீதிபதிகளுக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

படம் 1961ல் வெளிவந்திருக்கிறது. 1949 - 1961 என 12 ஆண்டுகளுக்குள்ளேயே ஆயுள் தண்டனை பெற்ற நாலு நீதிபதிகளில் ஒருவர் இறந்து விடுகிறார். மீதி 3 பேர் விடுதலை ஆகிவிட்டார்களாம்.

படத்தில் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வழக்கு விசாரணை படத்தை
இவ்வளவு விறுவிறுப்பாக எடுக்க முடியுமா என்பது ஆச்சர்யம் தான். ஆங்கில படங்களில், இதுவரை வந்த வழக்கு விசாரணை படங்களில் சிறந்த படங்களில் ஒன்று எனவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்திற்கு

சிறந்த படம் - (Best Picture)
சிறந்த நடிகர் (Best Actor) ,
சிறந்த நடிகர் (Best Leading Role)
சிறந்த துணை நடிகர் (Best actor supporting Role)
சிறந்த துணை நடிகை (Best actress supporting role, )
சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography)
சிறந்த கலை இயக்கம் (Best Art Direction)
சிறநத உடையமைப்பு (Best Costume design)
சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing)
சிறந்த கருப்பு வெள்ளை படம் (Best Black & White movie)
சிறந்த திரைக்கதை(Best writing, Screenplay)
சிறந்த இயக்கம் (Best Director) – என

படம் 11 வகைகளில் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
186 நிமிடங்கள் – படம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடினாலும், கொஞ்சம்
கூட அலுப்பு தட்டாமல் நகர்கிறது. கதை களம் அப்படி! கண்டிப்பாக பாருங்கள்.




பின்குறிப்பு : படத்தில் நான்கு நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடும் பொழுது... இந்த படுகொலைகளுக்கு இந்த நீதிபதிகள் குற்றவாளிகள் என்றால்.. இட்லரை புகழ்ந்துரைத்தாரே சர்ச்சில் அவரும் குற்றவாளி தான். ஜெர்மனியின் நடவடிக்கைகளில் அமெரிக்க முதலாளிகள் பெரும் லாபத்தை சம்பாதித்தார்களே... அவர்களும் குற்றவாளிகள் தான். இந்த படுகொலைகளை உலகம் பார்த்துகொண்டிருந்ததே உலகமே குற்றவாளி தான் என வாதாடுவார்.

உண்மை தான். இதோ நம் அருகேயே ஈழமண்ணில் மக்களை இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கில் கொன்றழிக்கிறது. மக்களை முகாம்களில் வதைக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரசியா என பல நாடுகள் ஆயுதங்கள் தந்து உதவுகின்றன. ஏகாதிபத்தியங்களும் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவுகின்றன. தடுக்க முடிந்ததா நம்மால்? ஈழ படுகொலைகளை தடுக்க ஒரு துரும்பை கூட எடுத்துப் போடாத நாமும் கூட ஒருவகையில் குற்றவாளிகள் தான்.

March 16, 2013

ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நாவிற்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!

ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும்,
பங்காளி ஐ.நாவிற்கும்
 காவடி தூக்குவதை நிராகரிப்போம்!

தமிழகத்தில் மீண்டும்
மக்கள் எழுச்சியை தோற்றுவிப்போம்!!


தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

*இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்சே கும்பலை தண்டிக்க,
சிங்கள குடியேற்றம் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட
இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க,
ஈழத் தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட
குறுக்குவழித் தீர்வு ஏதுமில்லை.

*  தமிழகத்தின் வீதிகளில் 80களின்
மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோம்!

*அன்று முள்ளிவாய்க்கால் முதலைக் கண்ணீர்
2009 தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்கு!
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து
இன்று ஜெனிவாக் காவடி!

தமிழ் மக்களே!
*ஈழத்தின் துயரத்தை விலைபேசும்
ஓட்டுப் பொறுக்கிகளை நம்பாதீர்!

* இந்தியா, இனப் படுகொலையின் பங்காளி, கூட்டாளி,
ஈழத்தின் பகையாளி ‍என இன்றாவது
ஒப்புக்கொள்ளும் யோக்கியர்களே!
போர்க்குற்றாவளி இராஜபக்சேவை தண்டிக்க
இந்தியாவையே தாஜா செய்வது யாரை ஏமாற்ற?

* உலக பயங்கரவாதி அமெரிக்காவையும் அதன் எடுபிடி
நாடுகளையும் 'சர்வதேச சமூகம்' என்று கொண்டாடுவதும்,
அவர்களிடமே இனப்படுகொலைக்கு நீதி கேட்பதும்
கேலிக்கூத்தல்லவா!

*  பிரபாகரன் கொல்லப்பட்டது போர்க்குற்றமாகாதா?
இதை மறைக்கும் தமிழினப் போராளிகளே,
நீங்கள் காப்பாற்றுவது பிரபாகரனின் பிம்பத்தை அல்ல,
கிரிமினல் இராஜபக்சேவை!

*  ராஜபக்சே மீது ராஜபக்சேவையே விசாரணை நடத்தச் சொல்லும்,
எல்.எல்.ஆர்.சி எனும் ஐ.நா வின் கபட நாடகத்துக்கும்,
இனப்படுகொலையை வழிநடத்திய மன்மோகன் அரசிடமே
ஜெனிவாவின் தீர்மானம் கொண்டுவரக்கோரும்
ஓட்டுப் பொறுக்கிகளின் நாடாளுமன்றக் கூச்சலுக்கும்
என்ன வேறுபாடு?

* காங்கிரசு, பாரதிய ஜனதா, வலது ‍ இடது
போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட
தேசிய கட்சிகள் அனைத்தும்
என்றும் ஈழத்துக்கு எதிரானவர்களே!



மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி



தொடர்புக்கு:
அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
பேச : 94448 34519

March 6, 2013

மார்ச் 8 - உழைக்கும் பெண்கள் தினம் - தெருமுனைக் கூட்டம்

மார்ச் 8 - உலகப் பெண்கள் தினத்தை உழைக்கும் பெண்கள் தினமாக வளர்த்தெடுப்போம்!
தெருமுனைக் கூட்டம்!
நாள் : 8/03/2013

நேரம் : மாலை 5 மணி

இடம் : அம்பேத்கர் சிலை அருகில், பல்லாவரம்

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை


தொடர்புக்கு : 98416 658457
அனைவரும் வருக!

March 3, 2013

பொம்மைகள்!

வண்ண பொம்மை கார்களோ
குண்டு கரடி பொம்மையோ
புதிதாய் எப்பொழுதும் கிடைப்பதில்லை.

வீண் என தூக்கிப்போடும்
வண்டி சக்கரங்களோ
உடைந்த வளையல்களோ தான்
எங்கள் பொம்மைகள்!

இதில் வருத்தம் ஏதுமில்லை!
மகிழ்ச்சியாய் தான் விளையாடுகிறோம்!