> குருத்து: February 2008

February 16, 2008

இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம் - அரங்கக் கூட்டம் நிகழ்ச்சி நிரல்




பிப்ரவரி 19, 2008


செவ்வாய், மாலை 4 மணி
பத்மா ராம் மகால்(ராம் தியேட்டர்)
83, N.S.K சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 24

இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்


தலைமை :
சு.ப தங்கராசு
பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு,
அனைத்திந்திய செயற்குழு உறுப்பினர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.


உரையாற்றுவோர்:
நீண்ட பயணம் சுந்தரம்
மாநிலச் செயலாளர் இ.பொ.க (மா.லெ)
..
தமிழேந்தி
மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சி,
..
இல.கோவிந்தசாமி
செயலாளர் இ.பொ.க (மா.லெ) செங்கொடி
..
சங்கர சுப்பு
வழக்குரைஞர்,
மாநிலத்தலைவர்,
இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்.
..
சாந்திர பகதூர்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,
..
இந்தியா.ஏ.எஸ். குமார்
மாநில துனைத்தலைவர்,A.I.C.C.T.U
..
த.வெள்ளையன்
தலைவர்,தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.
..
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி.
..
தொல்.திருமாவளவன்
பொதுச் செயலாளர்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
..
தியாகு
பொதுச் செலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
..
சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
..
மருதையன்
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
..
சிறப்புரை:

பவன் பட்டேல்செயலாளர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.

லட்சுமண் பந்த்
செயலாளர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,
இந்தியா.

சி.பி.கஜீரேல்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள பொதுவுடமைக் கட்சி, (மாவோயிஸ்ட்)

நன்றியுரை:

வ.கார்த்திகேயன்

செயலாளர்,
புரட்சிகர - மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

தொடர்புக்கு:

அ.முகுந்தன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை - 24
அழைக்க - 94448 34519

நன்றி : http://www.sivappualai.blogspot.com

February 10, 2008

தூங்கிய போலீசும், கொள்ளை போன துப்பாக்கிகளும்! - செய்தி விமர்சனம்!

தர்மபுரி அருகே நள்ளிரவில் மர்ம மனிதர்கள் துணிகரம்

போலீஸ் நிலையத்தில் புகுந்து 6 துப்பாக்கிகள் கொள்ளை

- தினத்தந்தி, 10.02.2008


ஸ்காட்லாண்டு போலீசுக்கு அப்புறம், புத்திசாலித்தனத்தில், சுறுசுறுப்பில் தமிழ்நாடு போலீஸ் தானே இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். இப்படி கண்ணும், கருத்துமாய் வேலை செய்யும், இவர்களை உற்சாகப்படுத்த, நிறைய பதக்கங்களும், பரிசுகளும் அரசுகள் அள்ளித் தருகின்றன.

"போலீஸ் நிலையத்தில் புகுந்து 6 துப்பாக்கிகள் கொள்ளை" என்று படித்ததும், எப்படியும் போலீசு தடுத்திருப்பார்கள். இரண்டு மணி நேரத்திற்காவது, துப்பாக்கி சண்டை நடந்திருக்கும். போலீசுக்கும், கொள்ளையருக்கும் நிறைய காயம் அடைந்திருப்பார்கள் என பில்டப்போடு, செய்தியை படித்தால்,

"நள்ளிரவு 12.30 மணியளவில் இவர்கள் கண் அயர்ந்த வேளையில் மர்ம மனிதர்கள் சிலர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தனர். "லாக்-அப் அறையின் பூட்டை கடப்பாரை மற்றும் கம்பிகளால் உடைத்து உள்ளே சென்றனர்"

- சப்பென்று போய்விட்டது.

கடப்பாரை வைத்து உடைத்து, உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்றால், காவல் நிலையத்தில், போலீசு யாருமே இல்லை என்று தான் அர்த்தம்.

இந்த செய்தியையும், போலீசின் நடைமுறையையும் சேர்த்து யோசித்துப் பார்த்தால், இப்படியும் நடந்திருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது.

* இரண்டு நாளைக்கு முன்பு, ஒரு ஹெட் கான்ஸ்டபிள் ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பான வேலை. நடந்தது என்னவோ, கான்ஸ்டபிள் செம போதையாகி, கைதி, கான்ஸ்டபிளை பொறுப்பாக நீதிமன்றத்துக்கு வந்து சேர்த்தார். பிறகு, நடக்கமுடியாமல் காக்கிசட்டையுடன் தரையில் கிடக்க பிறகு போலீஸ் போலீசை அள்ளிச்சென்றது.

- தர்மபுரியிலும், இப்படி போலீசு செம போதையில் எங்கோ விழுந்து கிடந்திருக்கலாம்.

* சில மாதங்களுக்கு முன்பு, லஞ்ச பணத்தை பங்கு போடுவதில், போலீசு இருவர் கட்டிபுரண்டு சண்டை போட்டனர்.

- தர்மபுரியிலும், இப்படி போலீசு போட்டி போட்டு, லஞ்ச பணத்தை வசூலிக்க சென்றிருக்கலாம்.

எனக்கென்னவோ, இது திடீரென்று நடந்ததாக தெரியவில்லை. பல நாட்கள் இப்படி யாரும் இல்லாமல் காவல் நிலையம் இருந்திருக்கிறது.

போலீசின் லஞ்சம், பொறுப்பற்ற நடைமுறையின் மீது வெறுப்படைந்த பொதுமக்களே, துப்பாக்கிகளை எடுத்து, பக்கத்தில் எங்காவது புதைத்து வைத்திருக்கலாம் என தோன்றுகிறது.