> குருத்து

March 8, 2024

ரணம் - அறம் தவறேல் (2024)


நாயகன் அடையாளம் அழிந்து, சிதைந்த முகங்களைப் பார்த்து, வரைந்து தரக்கூடிய முக மீட்டுருவாக்க திறமையான வரை கலைஞர்அவர் தரும் ஓவியத்தை வைத்து போலீசு தனது விசாரணையை நடத்துகிறதுகூடுதலாக சுயமாக துப்பறிந்து வழக்கை முடிக்கவும் உதவி செய்கிறார்.

ஒருநாள் போலீசு ஸ்டேசன் வாசலிலேயே முழுவதும் எரிக்கப்பட்ட இரண்டு கால்கள், இன்னொரு ஸ்டேசன் வாசலில் கைகள், இன்னொரு இடத்தில் உடலும் கிடைக்கின்றன. தலையை காணவில்லை. அதற்கு பதிலாக ஒரு முகமூடி மட்டும் கிடைக்கிறது.

யார் செய்தது என விசாரணையை இன்ஸ்பெக்டரும், ஒருபக்கம் நாயகனும் விசாரணை செய்யும் பொழுது, திடீரென நாயகனை போனில் அழைத்துஇனிமேல் வழக்கை விசாரிக்காதே என சொல்கிறார். சொன்ன நாளில் இருந்து இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார்

புதிய பெண் அதிகாரி வருகிறார்இருவரும் விசாரணை செய்துக் கொண்டிருக்கும் பொழுது, நாயகன் தனித்து ஆராய்ந்து முழு உண்மையையும் கண்டறிகிறார்.

ஸ்டேசன் வாசல்களில் கிடைத்தது ஒருவருடைய உடல் பாகங்களா, அல்லது பலருடையதாஏன் இந்த கொலைகள்? இதற்கு பின்னால் யார் இருப்பது என்பதை ஒரு உணர்ச்சிகரமான  பிளாஷ்பேக்குடன் சுவாரசியமாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

****


நாயகன் வைபவை இங்கொன்றும் அங்கொன்றும் பார்த்த மாதிரி இருக்கிறது. 25வது படம் என்கிறார்கள். ஆச்சர்யம். அவர் குண இயல்புக்கேற்ப (!) அந்தப் பாத்திரமும் பொருந்தி போகிறது. ஆனால், திடீர் திடீரென அவருக்கு அதிர்ச்சி ஏற்படுவது, நரம்பு சுளுக்கி கொள்வது எல்லாம் கதைக்கு அத்தனை பொருந்தி போகவில்லை.

படம் மிஸ்கினின் சேரன் நடித்தயுத்தம் செய் படத்தை நினைவுப்படுத்துகிறதுஅதிலும் மக்கள் கூடும் இடங்களில் உடல் பாகங்களை கையாண்டிருப்பார்கள். அதில் மிஷ்கின் உணர்வுப்பூர்வமாய் நன்றாக கையாண்டிருப்பார்இதில் அந்த உணர்வு  கிடைக்கவில்லை என்பது தான் படத்தின் பெரிய பலவீனம். நாயகனுக்கு அறிமுகம், ஒரு சண்டைக் காட்சி, ஒரு பாடல் என படத்தின் துவக்க காட்சிகள் இன்னும் சோர்வை ஊட்டுகின்றன.

இன்ஸ்பெக்டர் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை எல்லாம், தனிநபராக நாயகன் கண்டுபிடிக்கிறார் என்பது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா! நந்திதா கொடுத்த பாத்திரத்தை நன்று செய்திருக்கிறார்தன்யா சமாளித்திருக்கிறார்

அடுத்து ஸ்பாய்லர் அலர்ட். இவ்வளவையும் படித்துவிட்டு படம் பார்க்கும் மன உறுதி கொண்டவர்கள் இத்தோடு நகர்ந்துவிடலாம்.  மீதி பேர் தொடருங்கள். J

படத்தில் சொன்ன முக்கிய விசயம்இறந்த உடல்களோடு புணர்வது என்பது மிகவும் கேவலம். அது புனிதமான உடல் அல்லவா! இப்படி அறம் தவறி நடக்கலாமா என்பது தான் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷெரீப் சொல்ல வந்த செய்தி. அவருடைய கவலை சரியானது தான்.

இறந்த உடலோடு உறவு கொள்ளுதல் என்பதை மருத்துவ ரீதியாக Necrophilia என பெயர் வைத்திருக்கிறார்கள்இந்த பழக்கம்  சில நூற்றாண்டு காலமாக நீட்டித்துவருகிறது என வரலாறு சொல்கிறதுஇந்த சிக்கலை எதிர்கொள்ளஅழகான பெண்கள் இறந்தால், உடலை சில நாட்கள் அழுகவிட்டு, அதற்குப் பிறகு தான் புதைத்திருக்கிறார்கள்.   சில மன்னர்களுக்கு இந்த கெட்ட பழக்கம் இருந்திருக்கிறது.

திருமணமாகாத பெண்கள் இறக்கும் பொழுது, அப்படியே புதைத்தால், ”நிம்மதி இல்லாத ஆவியாக அலைவார்கள் என ஒரு குறிப்பிட்ட சமூக வழக்கப்படியே  அந்த பெண்ணின் உடலோடு புணர்ந்துவிட்டு, புதைக்கிற/எரிக்கிற பழக்கமும் இருந்திருக்கிறது என்கிற செய்தியை ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள்/பழக்கவழக்கங்கள் நிறைய உள்ள சமூகம் தானே நம்முடையது.

சம காலங்களில், உயிரோடு பாலியல் பலாத்காரம் செய்வது ஒரு வகை கொடூரம் என்றால், கொன்றுவிட்டு அதன்பிறகு உறவு கொள்வதை பல சீரியல் கொலையாளிகள் தொடர்ந்து செய்திருக்கிறார்கள்.

இறந்த உடலை உறவு கொள்ளுதல் தகுமா? ”புனித உடல் அல்லவா என்று பார்ப்பதை விடஇப்போதைக்கு இரண்டு இடங்கள் தான் அதற்கான வாய்ப்பு. ஒன்று சுடுகாடு. இன்னொரு இடம் மார்ச்சுவரி. இரண்டையும்  சிசிடி உட்பட கண்காணிப்பை கடுமையாக்கினால் நிலைமை கட்டுக்குள் வரும்.

சமூகத்தில் உயிரோடு வாழும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத இந்த சமூகத்தில்இறந்த உடல்களைப் பற்றி கவலைப்படுமா இந்த அரசும், இந்த அமைப்பு முறையும் என்பது தான் நமது கவலை.

திரையரங்கில் பிப்ரவரியில் வெளிவந்தது. விரைவில் ஓடிடிக்கு  வந்துவிடும்.

Dinosaurs (2023)


இந்தப் படம் நன்றாக இருந்தது என யாரோ எழுத, பார்த்தேன்.


வடசென்னையை களமாக கொண்ட படம். இரண்டு ரவுடிகள். அவர்களுக்குள் நடக்கும் மோதல்களே கதை.

ஒரு அம்மா அவருக்கு இரண்டு மகன்கள். தன் கணவன் ரவுடியாக வாழ்ந்து, அவருக்கு ஏற்பட்ட கதி தன்னுடைய மகன்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என ரவுடித்தனத்திலிருந்து ஒதுக்கி வைத்து, இருவரையும் வளர்க்கிறார். இதில் தம்பி தான் நாயகன்.

இதில் ஒரு ரவுடியின் தம்பியை கொன்ற வழக்கில், கொன்ற ரவுடியின் கையாட்கள் எல்லோரும் கைதாக, அதில் ஒருவருக்கு பதிலாக நண்பனை காப்பாற்றுவதற்காக நாயகனின் அண்ணன் பழியை ஏற்று ஜெயிலுக்கு போகிறார்.

இதில் கோயில் வசூலுக்காக பணத்தை வாங்கி வர ஒருமுறை மட்டும் போய்வா! என சொன்னதற்காக அதே ரவுடி வீட்டிற்கு அழைத்துப்போகிறார்கள். போன இடத்தில் கொன்றவர்களின் இவனும் ஒருவன் என அறிந்து விரட்டி விரட்டி கொல்கிறார்கள்.

பிறகு என்ன நடந்தது என்பதை அடிதடி, வெட்டுகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
****


பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றி, தன் நண்பன் ஜெயிலுக்கு போயிருக்கிறான். பிறகு அதே ரவுடி சொன்னார் என ஒரு இடத்திற்கு பணம் வாங்க போவாரா! என்பது பெரிய நெருடல். ஆனால் அங்கு மாட்டிக்கொண்டது, தெரியாமல் அவனை கொன்றுவிடக்கூடாது என தம்பியை கொன்ற ஆட்களை வேறு வேறு வகைகளில் சரிப்பார்ப்பது, பிறகு கொன்றவர்களின் அவனும் ஒரு ஆள் என முடிவு செய்து கொலை வெறியோடு துரத்துவது வரைக்குமான அந்த காட்சிகள் நல்ல விறுவிறுப்பு,

ரவுடித்தனம் வேண்டாம்! வேண்டாம்! என திரும்ப திரும்ப ரவுடித்தனத்தின் பல அம்சங்களையும் ஒவ்வொன்றாக காட்டுவது, இன்னும் வட சென்னையைப் பற்றியான எதிர்மறையான அம்சங்களையே எடுப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?

வட சென்னை ஏன் அப்படி இருக்கிறது? என்பதை அதன் சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை விளக்கி நல்ல அரசியல் படங்கள் வரவேண்டும். அதற்கான சில படங்களும் சம காலத்தில் வரத் துவங்கியிருப்பது நல்ல தொடக்கம்.

இந்தப் படத்தின் இயக்குநர் பல புதுமுகங்களை கொண்டு எம்.ஆர். மாதவன் நன்றாகவே இயக்கியிருக்கிறார். அவரின் அடுத்தப் படத்தை ஆர்வமாக எதிர்நோக்கலாம். நாயகனாக உதய் கார்த்திக், மற்ற சில பாத்திரங்களும் நினைவில் நிற்பது சிறப்பு. “Die no Sirs”என படத்தின் பெயருக்கு படத்திலேயே ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். அது அத்தனை பொருத்தமாயில்லை. வேறு ஒரு நல்ல பெயரை கொடுத்திருக்கலாம்.

பிரைம் வீடியோவில் இருக்கிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

Brave Citizen (2023) தென்கொரியா


ஒரு உயர்நிலைப் பள்ளி. எந்தவித ராக்கிங்கும் நடக்கவில்லை என விருது பெற்ற பள்ளி. ஆனால் அது பெரிய பொய். போலீசு உயரதிகாரி அப்பா, அரசு தரப்பு வழக்கறிஞர் அம்மா என செல்வாக்கு உள்ள அவர்களுடைய மகன் தினம் யாரையாவது தன் குழுவோடு டார்ச்சர் செய்துக்கொண்டே இருக்கிறான்.


நாயகி அந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராய் சேர்ந்திருக்கிறார். பாக்சிங்கில் தேசிய அளவில் பங்கேற்கும் நபராய் இருந்தாலும், அப்பா பெற்ற கடனுக்காக அதை எல்லாம் விட்டுவிட்டு, ஒரு ஆசிரியராக வேலை செய்ய வந்திருக்கிறார்.

நடக்கிற அனைத்தும் பார்த்துக்கொண்டு எளிதாய் கடக்கமுடியவில்லை. அந்த பையன் நாயகியையும் விட்டுவைக்கவில்லை. தொந்தரவு செய்கிறான். வேலையை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். அதே சமயத்தில் அவனையும் கட்டுப்படுத்தவேண்டும் என முடிவெடுத்து, ஒரு பூனை மாஸ்க் போட்டுக்கொண்டு தன்னையும் மறைத்துக்கொண்டு அவனை எதிர்கொள்கிறாள்.

பிறகு என்ன ஆனது என்பதை கலகலப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
***


ரெம்ப லைட்டான படம். நாயகியை மையப்படுத்திய படம். பெரும்பாலும் பள்ளி வளாகத்திலேயே முடித்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தெரிந்தே இவ்வளவு அட்டூழியம் செய்யமுடியுமா என யோசித்தால், முடியாது தான். அதுவும் அந்த மாணவன் கல்லூரி முடித்துவிட்டு, வேலைக்கு செல்கிற வயது உள்ள ஆளாய் போட்டிருப்பது நெருடல். பொருத்தமான ஆள் கிடைக்கவில்லை போல!

நேற்று கடுமையான உடற்சோர்வு. எந்த வேலையையும் செய்யமுடியவில்லை. இப்படி ஒருபடம் தேவையாய் இருந்தது.

அமேசான் ஓடிடியில், தமிழ் டப்பிங்கிலேயே கிடைக்கிறது. பாருங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்க மாட்டேன்.