> குருத்து: August 2018

August 30, 2018

1084ன் அம்மா - வங்க நாவல், இந்திப்படம், தமிழ் நாடகம்

1084ன் அம்மா (1997) - வங்க நாவல், இந்திப்படம், தமிழ் நாடகம்

1970களில் நக்சல்பாரி (Naxalbadi) எழுச்சி நாடு முழுவதும் சமூக மாற்றத்தை விரும்பிய இளைஞர்களை ஈர்த்தது. போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. ஆளும் மத்திய, மாநில அரசுகள் நக்சல் இளைஞர்களை வேட்டையாட துவங்கியது. வங்கத்தின் தெருக்களில் துரத்தி, துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட, அடித்தே கொல்லப்பட்ட பலநூறு இளைஞர்களில் ஒருவர் தான் பிரதி (Brati).

பிரதியின் குடும்பம் மேட்டுக்குடி குடும்பம். நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியது அவர்களுடைய ’தகுதிக்கு’ இழுக்காக படுகிறது. ஆகையால் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதியினுடைய தடயங்களை அரசாங்க ஏடுகளில் இருந்து முற்றிலுமாய் அழித்துவிடுகின்றனர்.

தனது பிரியத்துக்குரிய மகனின் தடயங்களை தேடிச் செல்கிறார் அம்மா. அதன் வழியே தன் மகனின் கனவுகளை, லட்சியங்களை காணுகிறார். உலகம் இரண்டாக இருப்பது முகத்தில் அறைகிறது.
****

இந்த நாவலை எழுதியவர் மகாசுவேதா தேவி. வங்கத்தைச் சேர்ந்தவர். சமூக செயற்பட்டாளர். சமீபத்தில் தான் இறந்தார். இந்த நாவல் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு என இந்தியாவின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவலை என் நண்பர் ஒருவர் பரிசளித்தார்.

இந்தியில் முக்கியமான இயக்குநரான இயக்குநர் கோவிந்த் நிஹாலனி இயக்கி #Hazaar_Chaurasi_Ki_Maa என்ற பெயரில் 1997ல் வெளியே வந்தது. ஜெயா பச்சன் 18 வருட இடைவெளிக்கு பிறகு பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். பிரதியின் காதலியாக நந்திதாதாஸ் நடித்தார். படம் தேசிய விருது வென்றது. இப்பொழுதும் யூடியூப் தளத்தில் கிடைக்கிறது.

கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்களில் சென்னையில் இந்த நாவலை நாடகமாக ஒரு குழு மேடையேற்றினார்கள். 1 மணி நேரம் 20 நிமிடம். ஒரு நாவல் படித்து பத்து ஆண்டுகள் ஆனபின்பும், சில காட்சிகள் மனதில் நிரந்தரமாக தங்கிவிடும் அல்லவா! அப்படிப்பட்ட சில காட்சிகளை அழுத்தம் திருத்தமாக நாடகத்தில் கொண்டு வந்திருந்தார்கள். பிரதான கதாபாத்திரமான அம்மா பாத்திரத்தில் நாடகத்துறை சார்ந்த மங்கை அருமையாக நடித்திருந்தார்.

போலீசாக நடித்தவரும், காதலியாக நடித்தவரும் பாத்திரத்தில் பொருந்தியிருந்தார்கள்.செப்டம்பர் மாதம் சென்னையில் மீண்டும் போடுவதாக அறிவித்தார்கள். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக பாருங்கள்!
***

மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தால், தேசிய பாதுகாப்பு சட்டம், தடுப்பு காவல் சட்டத்தை போட்டு, அரசு சிறையில் தள்ளுகிறது. மீண்டும் மீண்டும் போராடினால் போலி மோதல் கொலைகள் என இப்பொழுதும் இந்த நாவலில் எழுப்பப்படுகிற கேள்விகள் சமூக நிலைமைக்கு பொருந்தி போகிறது. சமூகத்தில் அநீதிகள் நீடிக்கும் வரை பிரதிகள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள். இருக்கிறார்கள். அதனால், இன்றைக்கும் நக்சல்கள் என்றால்...ஆளும் வர்க்கங்கள் குலைநடுங்கி போகின்றன.

”மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!” 

லைலாவின் அழகை காண மஜ்னுவின் கண்கள் வேண்டும்

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. நாயகனுக்கு பின்தலையில் அடிப்பட்டு, ஆழ்மனதில் (!) இருந்த காதலி கூட மறந்து போய், (ஆனால் எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது காதலித்த சாயீரா பானு நினைவில் நிற்பாள்) திருமண வரவேற்பில் தன் அருகில் நிற்கும் நாயகியை ப்பா! யார்டா இந்த பொண்ணு? பேய்மாதிரி இருக்கு!” என சொல்லும் பொழுது, நாயகி முதலில் வருத்தம் கொள்வாள். இரண்டாவதுமுறை, மூன்றாவது முறை சொல்லும் பொழுது, மெலிதாய் கண்கசிவாள். காதல் திருமணம். திருமணத்தில் உடன்பாடு இல்லாத அம்மாவும், அப்பாவும் பிரச்சனை செய்துவிடக்கூடாதே என்பதற்காக, பீறிட்டு வரும் அழுகையை கவனமாய் மறைத்துக்கொள்வாள்.

பல்வேறு களேபரங்களுடன் வரவேற்பு முடிந்து, அடுத்த நாள் திருமணமும் முடிந்து… மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இரவெல்லாம் தூங்கி எழுந்த பிறகு, மறந்த எல்லா நினைவுகளும் மீண்டும் வந்துவிடும். வரவேற்பு, திருமணம் முடிந்ததே அவனுக்கு நினைவுக்கு வராது. நிம்மதி பெருமூச்சுடன், நண்பர்கள் நடந்த அனைத்தையும் விளக்குவார்கள்.

பிறகு வீடு திரும்பும் வழியில், நண்பனின் அந்த சாதாரண செல்பேசியில் உள்ள புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வருவான். திருமண வரவேற்பில் நிற்கும் நாயகியைப் பார்த்து “இந்த போட்டோல தனம் ரெம்ப அழகா இருக்கில்லா!” என்பான் கண்களில் காதலுடன்!. புன்னகைத்துக்கொண்டே வண்டியை ஓட்டிச்செல்வான் நண்பன்.
எனக்கு நினைவுக்கு வந்தது இந்த வார்த்தைகள் தான்!

"லைலாவின் அழகை காண மஜ்னுவின் கண்கள் வேண்டும்”

August 17, 2018

பூங்கா - சில குறிப்புக்கள்!


பூங்காவிற்கும் எனக்கும் நெருங்கிய பந்தம் உண்டு.
வீடு ஒரு பூதம் போல! நமக்கு ஏதாவது வேலைகள் கொடுத்துக்கொண்டே
இருக்கின்றன.
வீட்டில் படிப்பதற்கான எல்லா போராட்டங்களும் தோற்றுவிட்ட பிறகு, நம்மை அரவணைப்பது பூங்காக்கள் தான்! நண்பர்களுக்கும் பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன்.
 
அமைதியும் மரங்கள் தருகிற குளிர்ச்சியும் படிப்பதற்கு இதமான சூழல் தருபவை!
 சில ஆண்டுகளுக்கு முன்புவரை பூங்காக்களின் நிலை படுமோசம். அந்தந்த பகுதி மக்களின் முயற்சியா, ஏதும் உலக வங்கித்திட்டமா என தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக பூங்காக்கள் சென்னையில் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அளவில் பராமரிக்கப்படுகின்றன.
 மற்றப்படி, பூங்காக்களில் படிக்கும் பொழுது போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறவர்கள், நண்பர்கள், காதலர்கள் முக்கியமாக குழந்தைகள்.
சென்னையில் முழுநேர பூங்காக்கள் மிக குறைவு தான்! மற்றப்படி, பூங்காக்கள் விடிகாலையிலேயே விழித்துக்கொள்கின்றன. காலை 10.30 வரை இயங்குகின்றன. மீண்டும் மாலை 4 மணிக்கே திறந்துகொள்கின்றன. இரவு 8.30 -க்கு பாதுகாவலர் விசில் ஊதி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்.
 "ரசியாவில் எங்கெங்கு காணினும் பூங்காக்களுக்கு நடுவே வீடுகள் இருக்கின்றன" என்பார் வைரமுத்து வடுகப்பட்டி முதல் வால்காவரை' புத்தகத்தில்!
நினைத்துப் பார்த்தாலே சந்தோசமாக இருக்கிறது! அதற்கு சமூக மாற்றமல்லவா செய்யவேண்டியிருக்கும்! :)
 எதுவும் போராட்டம் இல்லாமல் எளிதில் கிடைத்துவிடுவதில்லை

வீட்டில் படிப்பதற்கான எல்லா போராட்டங்களும் தோற்றுவிட்ட பிறகு, நம்மை அரவணைப்பது பூங்காக்கள் தான்! நண்பர்களுக்கும் பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன்.அமைதியும் மரங்கள் தருகிற குளிர்ச்சியும் படிப்பதற்கு இதமான சூழல் தருபவை!சில ஆண்டுகளுக்கு முன்புவரை பூங்காக்களின் நிலை படுமோசம். அந்தந்த பகுதி மக்களின் முயற்சியா, ஏதும் உலக வங்கித்திட்டமா என தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக பூங்காக்கள் சென்னையில் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அளவில் பராமரிக்கப்படுகின்றன.மற்றப்படி, பூங்காக்களில் படிக்கும் பொழுது போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறவர்கள், நண்பர்கள், காதலர்கள் முக்கியமாக குழந்தைகள்.சென்னையில் முழுநேர பூங்காக்கள் மிக குறைவு தான்! மற்றப்படி, பூங்காக்கள் விடிகாலையிலேயே விழித்துக்கொள்கின்றன. காலை 10.30 வரை இயங்குகின்றன. மீண்டும் மாலை 4 மணிக்கே திறந்துகொள்கின்றன. இரவு 8.30 -க்கு பாதுகாவலர் விசில் ஊதி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்."ரசியாவில் எங்கெங்கு காணினும் பூங்காக்களுக்கு நடுவே வீடுகள் இருக்கின்றன" என்பார் வைரமுத்து வடுகப்பட்டி முதல் வால்காவரை' புத்தகத்தில்!நினைத்துப் பார்த்தாலே சந்தோசமாக இருக்கிறது! அதற்கு சமூக மாற்றமல்லவா செய்யவேண்டியிருக்கும்! https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f4c/1/16/1f642.pngஎதுவும் போராட்டம் இல்லாமல் எளிதில் கிடைத