> குருத்து: November 2012

November 30, 2012

வாஜ்பேயி சுதந்திர போராட்ட தியாகியா?

//குஜ்ராலின் மறைவு இந்திய சரித்திரத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய கடைசி தேசியத் தலைவர் ஐ.கே. குஜ்ராலாகத்தான் இருப்பார். //

குஜராலின் மறைவை ஒட்டி, தினமணி வைத்தியநாதன் இன்றைய தினமணியில் தலையங்கத்தில் மேற்படி எழுதியிருக்கிறார். இப்படி எழுதியதன் மூலம் வாஜ்பேயி "சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்" என்ற ஆர்.எஸ்.எஸ். அம்பிகளின் பொய்யை வைத்தியநாதன் மறுக்கிறார். ஒருவேளை வாஜ்பேயி செத்துப்போய்விட்டாரோ என தேடிப்பார்த்தேன். உயிருடன் தான் இருக்கிறார்.


வரலாறு என்னவென்றால், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடந்த சமயத்தில், ஒரு கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கொடியை ஏற்றினார்கள். இந்த விசயம் கேள்விப்பட்டு பிரிட்டிஷ் காவல்துறை சுற்றி வளைத்த பொழுது, வாஜ்பேயி கைதானார். அதுவரை சரி! அதற்கு பிறகு தான் டிவிஸ்ட். "கொடி ஏற்றியவர்களை காட்டிக்கொடு! உன்னை விட்டுவிடுகிறோம்" என்றதும், காட்டிக்கொடுத்துவிட்டு, பாதுகாப்பாய் வீட்டுக்கு போனவர் தான் இந்த வாஜ்பேயி.


இது வரலாறு. சில வருடங்களுக்கு முன்பு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வாஜ்பேய்க்கு சுதந்திர போராட்ட தியாகி என பில்டப் கொடுத்து பேசினார்கள். அப்பொழுது தான் வாஜ்பேயின் துரோக வரலாறு வெளியே வந்தது!

November 21, 2012

கசாப்பிற்கான செலவு!

கசாப்பிற்காக பாதுகாப்பான சிறை கட்டியது, இந்தோ-திபேத் படையினர் 250 பேரை தேமே என பாதுகாப்புக்காக நிறுத்தியது என மத்திய அரசும், மாநில அரசும் செலவு செய்த தொகை ரூ. 30 கோடி!

- போலி என்கவுன்டர் புகழ் 'காக்க.. காக்க' சூர்யா போல பேசுகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 'நமது' பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவிற்காவும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே சிந்தித்து செயல்படுகிறார். அவருக்காக செய்யப்படும் அனைத்து செலவுகளையும் இந்தியா தான் வெட்டியாக செலவு செய்கிறது! மக்கள் தலையில் தான் வரியாக சுமத்தப்படுகிறது!

# கணக்குப்பார்த்தா எல்லாத்தையும் கணக்கு பார்க்கனும்!

//மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் மன்மோகன்சிங் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 2001 மற்றும் 2007 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். - விக்கிபீடியா//

November 6, 2012

இன்று புரட்சி நாள்னு சொல்லு!

ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணுடன் பள்ளி செல்லும் வழியில்..

"புது டிரஸ் போட்டா பிறந்தநாள்னு நினைப்பாங்கப்பா!"

"பிறந்தநாள் கிடையாது!  புரட்சி நாள்னு சொல்லு! எல்லோரும் ஸ்வீட் சாப்பிட்டு, கொண்டாட வேண்டிய நாளுன்னு உன் பிரண்ட்ஸ்கிட்ட‌ சொல்லு!"

போகிற வழியில் ஸ்வீட் கடையை பார்த்ததும், லட்டு சாப்பிடுகிற 'பீம்' நினைவுக்கு வந்து...

"எல்லோருக்கும் லட்டு கொடுக்கலாமா!"

"நிறைய செலவாகும் பாப்பா! அவ்வளவு வசதி கிடையாது. எல்லோருக்கும் சாக்லெட் கொடுக்கலாம்!"

சாக்லெட் வாங்கி, பள்ளி ஆசிரியரிடம் ரசிய புரட்சி தினத்தை சுருக்கமாய் விளக்கி, சக மாணவர்களுக்கு தரச்சொல்லி பேசும் பொழுது, சமீப காலங்களில் குழந்தைகளுக்கு சாக்லெட் தரக்கூடாது என பள்ளி விதிமுறை இருக்கிறது. ஏதாவது சாப்பிட்டு விட்டு தொந்தரவு ஆனால், சிக்கலாகிவிடும் என்பதால் இந்த விதிமுறை என்றார்.  பரவாயில்லை என வாழ்த்துக்களை மட்டும் பகிர்ந்துவிட்டு விடைபெற்றேன்.