ஒரிசாவின் ஒதுக்குப்புறமான ஒரு கிராமம். ஊரில் யாருக்கு பேய் பிடித்தாலும், அந்த வயதான அம்மாவிடம் அழைத்து வருகிறார்கள். அந்த அம்மாவும் பேயை விரட்டுகிறார். கொடுக்கும் சொற்ப பணத்தை கொண்டு தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
(நாயகனான)
மகன் - ஊரில் குளத்தை குத்தகைக்கு எடுத்து
அதில் கிடைக்கும் சொற்பமான மீன்களை ஊரில் விற்று வருகிறார். ஊரில் ஒரு மருத்துவரின் மகளோடு காதல் வயப்படுகிறார். துபாய்க்கு போய்விடலாமா என்றால், அதற்கும் ஒரு கணிசமான
தொகை தேவைப்படுகிறது.
ஒரு இரவு
நண்பனுடன் ஊர் திரும்பும் பொழுது, பைக் சாவி தொலைந்து போனது என ஒரு பெரிய மரத்தில்
ஆணியடித்து இருந்ததை தற்செயலாக புடுங்க, அவனுக்குள்
ஒரு ஆவி உள்ளே புகுந்துவிடுகிறது.
அந்த ஆவி
பக்கத்து ஊரில் ஒரு பெரிய மனிதரின் மகளை ஒரு ஏழை காதலித்தான் என்பதற்காக, பெண்ணை அப்பனே
கொ*ன்று அந்த பழியை அவன் மீது போட்டு, ஒரு பெரிய கும்பல் கொடூ*ரமாக அடித்தே கொ*ன்று
விடுகிறது. அந்த ஆவி எப்ப இவர்களை போ*ட்டுத்தள்ளலாம்
என வெ*றியுடன் காத்திருக்கிறது.
பிறகு நடப்பது
எல்லாம் களேபரம் தான். திடீர் திடீரென ஆடுகள் காணாமல் போகின்றன. கொலைகள் நடக்கின்றன.
அந்த அம்மா தன் மகனை ஆவியிடமிருந்து காப்பாற்ற
போராடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***
யாரோ இருவர்
இந்த படத்தை ஆஹோ ஓஹோ என எழுதியன் என் கண்ணில் பட இந்த படத்தை தேடி பிடித்து வைத்திருந்தேன்.
IMDB யிலும் 7.8 யாக இருந்தது. ஆனால் குறைவான ஆட்கள் தான் வாக்களித்திருக்கிறார்கள்.
நம் தமிழ்
உலகில் இது மாதிரி படங்களை எடுத்து, எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டோம். அவர்கள் இப்பொழுது
தத்தி, தவழ்ந்து வருகிறார்கள்.
அங்கு இந்த
படம் ஓரளவு நல்ல வசூலாகியிருக்கிறது. நாயகன்,
நாயகி பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் அந்த நாயகனின்
அம்மா ஈர்த்தார். பேய் பிடித்தவரிடம் சமயோசிதமாக நடந்துகொள்வது. பேய் உள்ளே புகுந்ததாய், வீட்டாரை ஆட்டி வைப்பது என நன்றாக செய்திருந்தார். மகனை ஏதோ செய்யப்போகிறான் என (அவனும் பேய் ஓட்டுபவன்
தான்) கணவனையே தூக்கி மரத்தில் தொங்கவிடுவது எல்லாம்… “வேற லெவல்”
யாரும் ஆர்வமாக
தேடிப் போய் பார்த்து என்னைத் திட்டாதீர்கள்.

0 பின்னூட்டங்கள்:
Post a Comment