ஹைதர் அலி காலத்தில் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துவங்கி, அவரது மகன் திப்பு சுல்தான் அதை இன்னும் விரிவுப்படுத்தியுள்ளார்.
உலகில் இருந்து நிறைய அரிய தாவரங்களை சேகரித்து வளர்த்துள்ளனர். ஆங்கிலேயர்கள் இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியுள்ளனர்.
240 ஏக்கர் +, 1800 வகை தாவரம் + மரம் என விதவிதமாய் வளர்ந்து நிற்கிறது.
இத்தனை ஆண்டு கால வரலாறு பூங்காவின் மரங்களே பெரிதாய், மிகப்பெரியதாய் வளர்ந்து நிற்பதே சாட்சி. பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சி. எத்தனை வெயில் அடித்தாலும் வாங்கப்பா பார்த்துக்கலாம் என பூங்கா சவால் விடுகிறது.
நடந்து கடப்பது அத்தனை கால் வலியையும், உடன் மகிழ்ச்சியையும் தருகிறது. பூங்காவை சுற்றி வர சின்ன வண்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ரூ.100 கட்டணம். அது கேட் எண் 2 ல் இருக்கிறது என்கிறார்கள்.
நாங்கள் இந்த வசதி அறியாமல், எண் நான்கில் நுழைந்து கேட் எண் 2 கண்டுப்பிடிப்பதே சிரமமாகிவிட்டது.
ஒன்று மொழி பிரச்சனை. எந்த பக்கம் என கேட்டாலும் சிலருக்கு தெரியவில்லை. இன்னொன்று ஆங்காங்கே நிர்வாகம் போர்டு வைக்காதது ஒரு குறை.
இன்று ஞாயிறு விடுமுறை குடும்பங்களோடு பலர் வந்திருந்தார்கள்.
நுழைவுக்கட்டணம் ரூ. 50. இது எப்பொழுதாவது பயணிப்பவர்களுக்கு கூட சரி. ஆனால் உள்ளூர் வாசிகளுக்கு இது சிரமம் தான்.
மாத பாஸ் போல ஏதேனும் ஏற்பாடு செய்து கொடுத்தால் சரியானது.


0 பின்னூட்டங்கள்:
Post a Comment