> குருத்து: முகநூலில் நான்காண்டுகள்

April 28, 2020

முகநூலில் நான்காண்டுகள்


இன்றைக்கு முகநூல் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன் என்பதைச் சொல்லி வாழ்த்து தெரிவித்தது.

கடந்து வந்த நான்கு ஆண்டுகளை ஒரு பறவைப் பார்வை பார்த்தால்...
சொந்தமாக தான் எழுத வேண்டும். வேறு எதையும் பகிரக் கூடாது என்ற தீர்மானத்தை 90% கடைப்பிடித்து உள்ளேன். சிறந்தவையாக இருக்கும் பொழுதுதான் அந்த 10% கூட பகிர்ந்திருக்கிறேன். அதனால் மன்னிக்கலாம்.

மொக்கையாக, லைக், கமெண்ட்டுக்காக எழுதி மற்றவர்களின் நேரத்தை வீணாக்க கூடாது என்ற தீர்மானத்தை கடைப்பிடித்து உள்ளேன்.
யார் நன்றாக எழுதினாலும் பாராட்ட வேண்டும் என்பதையும் கடைப்பிடித்து உள்ளேன். சில பதிவுகளை பாராட்டவில்லையே என கேட்டால்... வேலைமிகுதியில் கண்ணில்படாமல் போயிருக்கும் அல்லது அந்த பதிவில் எனக்கு உடன்பாடு இருக்காது.

புத்தகம், திரைப்படம் பொருளாதாரம் மூன்றும் பிடித்தமானவை. கடந்த காலங்களில் நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். பொருளாதாரம் தான் எழுதவில்லை. அதை எழுத நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. வரும் நாட்களில் எழுதுவேன் என நம்புகிறேன்.

முகநூலில் விவாதம் என்பது ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறது. கிடைத்த சில அனுபவங்களும் 'விவாதிக்காதே' என கற்றுத் தந்திருக்கின்றன.
மற்றபடி... யாரும் வராமல் நாம் மட்டும் டீ ஆத்தி என்ன ஆகப்போகிறது? நண்பர்கள், முகநூல் நண்பர்கள் நன்றாக எழுதினால் தொடர்ந்து உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இந்நாளில் நன்றி சொல்ல நிறைய கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி.

- முகநூலில், 19/11/2019

0 பின்னூட்டங்கள்: