> குருத்து: வாசிப்பது தடைப்படாமல் இருக்க....!

July 19, 2021

வாசிப்பது தடைப்படாமல் இருக்க....!


காலை 4.30 எழுந்துகொள்வேன் அப்பொழுதிலிருந்தே வாசிக்கத் தொடங்கிவிடுவேன்..

இரவு 9.30 படுக்கச் சொல்லுவேன் 9.25 வரை கையில் புத்தகம் இருக்கும்.

ஒரு புத்தகத்தை முடித்து அடுத்த புத்தகத்தை எடுக்கும் வழக்கம் இல்லை. ஒரே நேரத்தில் பல துறை தொடர்பாகப் புத்தகங்களை வாசிப்பது வழக்கம்..
அப்படி இப்பொழுது என் மேஜையில் 11 புத்தகங்களை வாசித்துக் கொண்டு இருக்கிறேன்..

ஒரு புத்தகம் முடித்து அடுத்த புத்தகம் வாசிக்கலாம் என்று முடிவு செய்தால் சில நேரம் வாசிக்கும் புத்தகம் 2 பக்கம் கூட தண்டமுடியாத அளவு பொறுமையாகச் செல்லும். அப்பொழுது மூடி வைத்துவிடுவோம். இப்படித் தொடர்ந்தால் வாசிப்பது தடைப்படும்..

அப்படியே சில நாள் வாசிக்காமலேயே சென்றுவிடும்... மீண்டும் வசிக்கும் நிலை ஏற்படத் தாமதமாகும்.

அதனால் ஒரு கடினமான புத்தகம் கூடவே எளிமையான, சுவாரசியமான புத்தகமும் வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் முதல் புத்தகம் மூடி வைக்கிறீர்களே அப்பொழுது எளிமையான புத்தகம் எடுத்து வாசிக்க வேண்டும்..

இப்படிச் செய்வதால் தினமும் வாசிக்கும் நிலை இருக்கும். முதலில் வாசிப்பது தடைப்படக்கூடாது. எந்த புத்தகம் படிக்கிறோம் என்பதைவிடத் தினமும் வாசிக்கிறோமா என்று பார்க்கவேண்டும்..

அதனால் எப்பொழுதும் இரண்டுக்கு மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வைத்துக் கொண்டால் வாசிப்பு தொடர்ந்து இருக்கும்.. அப்படிப் பல தலைப்புகளில் 11 புத்தகங்கள் என் மேஜையில் உள்ளது.

வாசிக்கும்பொழுது குறிப்பு எடுத்துக்கொள்ளும் வழக்கம் உண்டு. அப்படி சில குறிப்பேடுகள் சேர்த்து உள்ளன.முழுவதும் வாசித்த பிறகே குறிப்பு எடுப்பேன்.
புத்தகம் வாசிக்கும் நண்பர்கள் இந்த முறையை முயன்று பார்க்கலாம்...

- எழுத்தாளர் நக்கீரன் உரையிலிருந்து...
முகநூலில் இருந்து.....

0 பின்னூட்டங்கள்: