> குருத்து: சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன்?

January 16, 2023

சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன்?


நிலவுகிற அரசுக்கு எதிராக கேள்விகள் எழுப்பியதற்காக சாக்ரடீசுக்கு மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது.


வாழ்வின் இறுதி நிமிடங்களில் நிற்கிறார். சாக்ரடீசிடம் கலக்கம் இல்லை. ஒரு கோப்பையில் விஷம் தருகிறார்கள்.

சாக்ரடீஸ் கேட்கிறார். ”இதில் சில துளிகளை கடவுளுக்கென்று தெளிக்கலாமா! ”

“கூடாது. (கடவுளை வைத்து இன்னும் நிறைய காரியங்கள் இருக்கின்றன. கடவுள் செத்துப்போய்விடக்கூடாது அல்லவா!) உங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது.” என்கிறார்கள்.

சுற்றி இருந்த சீடர்களும், ஆண்களும் அழுகிறார்கள். “அன்பின் மிகுதியில் அழுவார்கள் என்பதற்காக தான் பெண்களை வெளியே அனுப்பினோம். இப்பொழுது நீங்கள் அழுகிறீர்களே!” என்கிறார் சாக்ரடீஸ். பழரசத்தைப் போல அருந்துகிறார்.

கொல்லப்படும் பொழுது அவருக்கு வயது 71.

****

சாக்ரடீஸின் காலம் கிமு 399 – கி.மு 470. ஏதென்ஸ் அரசமைப்பு எப்படி இருந்நது? அங்கிருந்த சூழ்நிலை என்ன? சாக்ரடீஸ் என்ன கேள்விகளை எழுப்பினார்? அதனால் சமூகத்தில் என்ன விளைவுகள் ஏற்பட்டன என்பதை, ஒரு குட்டிப்பெண், தனது அப்பாவிடம் கேள்விகளை எழுப்புவதின் மூலம் உரையாடல்களை அமைத்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

நிலவுகிற அரசு தவறுகள் செய்யும் பொழுது, அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை சிறையில் தள்ளி சித்திரவதை செய்வதும், அதிகப்பட்சம் சட்டதின் வழியே, சட்டத்திற்கு புறம்பாகவும் கொல்வது அன்றிலிருந்து இன்று வரைக்கும் நடைமுறையாக தான் இருக்கிறது. அதற்காக கேள்விகளை எழுப்பாமல் இருக்க முடியுமா? எழுப்பிக்கொண்டே இருப்போம்.

குழந்தைகளுக்காக இந்தப் புத்தகம் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால், பெரியவர்கள் படித்தாலே அந்த காலக்கட்ட கட்டமைப்பை புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் சிரமமாக தான் இருக்கிறது.

நல்லப் புத்தகம். குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள்.

ஆசிரியர் : எம்.எம். சசீந்திரன்

தமிழில் : யூமா வாசுகி

பக்கங்கள் : 65

விலை : 50

வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
Readingmarathon2023

0 பின்னூட்டங்கள்: