> குருத்து: பா ஜனதா
Showing posts with label பா ஜனதா. Show all posts
Showing posts with label பா ஜனதா. Show all posts

April 17, 2022

மோடியின் நண்பராய் இருந்தால் பில்லினியர்களாகிறார்கள்


மோடியின் நண்பராய் இருந்தால் பில்லினியர்களாகிறார்கள்

எதிர்ப்பவர்கள் சிறையில் வதைபடுகிறார்கள்

ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ருச்சி நிறுவனம் தொழில்முறை பிரச்சனைகளால் வீழ்ந்தது. மஞ்சகடுதாசி கொடுத்தது. பதஞ்சலி ஓடிவந்து ருச்சியை அடிமாட்டு விலைக்கு வாங்கியது. வாங்குவதற்கு வங்கிகளே கடன்களை சந்தோசமாய் தந்தார்கள். குறுகிய காலத்திலேயே வங்கிக் கடனை அடைத்துவிட்டதாக பதஞ்சலியை புகழ்கிறார்கள்.

பதஞ்சலியின் ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்க மோடி ஹெலிகாப்டரில் பறக்கிறார். ஒன்றிய அமைச்சர் யோகாவை ”வளர்க்க” ராம்தேவ்க்கு அந்தமான் அருகே தீவையே பரிசாக தருகிறார். இராணுவ கேண்டினில் நெல்லிக்காய்சாறு விற்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் ரேசன்கடையில் பதஞ்சலி பொருட்களை பொறுப்பாக விற்றுதருகிறார்கள்.

பதஞ்சலி ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடிகளுக்கும் மேலாக லாபமாக கொழிக்கிறார்கள். சர்வதேச சந்தைக்கு விரைவில் நகர இருக்கிறார்கள். ”எங்களுக்கு நடக்க தெரியாது. ஓடத்தெரியும்” என பஞ்ச் டயலாக் அடிக்கிறார்கள்.

இப்பொழுது தலைப்பை மீண்டும் படியுங்கள்.

பாஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது


கர்நாடகாவில் அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை!

பாஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது.

அரசு ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டீல் பா.ஜனதா கட்சியிலும் இருக்கிறார். செய்து முடித்த நாலு கோடி வேலைக்கு, மாநில அமைச்சர் 40% கமிசன் லஞ்சமாக கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் வழியாக பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் புகார் அனுப்பினார்.

தீடீரென சந்தோஷ் ”காணாமல்” போனார். பிறகு ஹோட்டலில் ”தற்கொலை” செய்துகொண்டதாக போலீசு உடலை கண்டெடுத்தது. அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்ய மறுத்தார் அமைச்சர். மக்களும், எதிர்கட்சிகளும் தொடர்ந்து போராடியதால் வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்துள்ளார்.

2018 மாநில தேர்தலின் பொழுது, காங்கிரசை ”10% கமிசன் அரசு” என மோடி கிண்டல் செய்தார். நான்கே வருடத்தில் 40% கமிசன் அரசாக வளர்ச்சியடைந்து பா.ஜனதா சாதனை படைத்திருக்கிறது.