> குருத்து: கட்டமைக்கப்பட்ட சிந்தனை (Structured thinking) – ஒரு வரி ஆலோசகருக்கு ஏன் அவசியம்?

December 2, 2025

கட்டமைக்கப்பட்ட சிந்தனை (Structured thinking) – ஒரு வரி ஆலோசகருக்கு ஏன் அவசியம்?


கட்டமைக்கப்பட்ட சிந்தனை என்றால் சிக்கலான விஷயத்தை படிநிலைகளாகப் பிரித்து, ஒழுங்காக சிந்தித்து, தெளிவான முடிவை எடுக்கும் திறன்.”


அதாவது,  எது? – ஏன்? – எப்படி? – அடுத்தது என்ன? என்ற கேள்விகளை வரிசையாக வைத்து சிந்திக்க வைக்கும் முறை.


வரி உலகில்வேகமான பகுப்பாய்வு, தவறில்லாத முடிவு, நம்பிக்கை அளிக்கும் விளக்கம்இந்த மூன்றுக்கும் அடித்தளம் இதுவே.


பார்பரா மிண்டோ சொல்வது போல்: சிக்கலான விஷயத்தையும் ஒரு நல்ல கட்டமைப்பில் வைத்துட்டீங்கன்னா, அது எளிதாகி விடும்.”

 

இதன் முக்கிய தன்மைகள்

 

1) தெளிவு  - முதலில்— “பிரச்சினை என்ன?” “நாம் எதை முடிவு செய்யணும்?” என்பது நேராகத் தெரியும். இது பாதி பிரச்சினையை தீர்த்துவிடும்.

 

2) பிரிப்புத் திறன் - பெரிய பிரச்சினையைக் கத்தரித்துப் போடும் மாதிரி சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.


உதாரணம்:  GST Notice → நிகழ்வுகள், சட்டம், ஆவணங்கள், பிரச்சினைகள், அபாயங்கள், முடிவு

 

3) காரணவிளைவு சிந்தனை


ஏன் இது நடந்தது?”
இதனால் என்ன விளைவாகும்?”
என்ற நேரடி சிந்தனை.
கற்பனைக்கும், ஊகத்துக்கும் இடமில்லை.

 

4) முன்னுரிமை


முதலில் எதைப் பார்க்க வேண்டும்?
பின்னர் எதைப் பார்க்க வேண்டும்?
இது நேரத்தையும், தவறுகளையும் குறைக்கும்.


5) சுருக்கத் திறன்

 

பெரிய விஷயத்தை 3–5 வரிகளில் சொல்ல முடிவது.
இது ஒரு ஆலோசகரின் அறிவின் தெளிவைக் காட்டும்.

 

6) தேவையான தகவல் மட்டும் எடுத்துக்கொள்ளுதல்


அனைத்து தகவல்களையும் தலையில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
முடிவை நிர்ணயிக்கப் பயன்படும் தகவலை மட்டும் பிடித்துக்கொள்ளுங்கள்.

 

வரி ஆலோசகருக்கு இது தரும் நன்மைகள்


வாடிக்கையாளர் குழப்பமாகச் சொன்ன விஷயத்தை உடனே ஒழுங்குபடுத்த முடியும்

தீர்வுகளை வரிசையாக, நம்பிக்கை தரும் வகையில் சொல்ல முடியும்

சிக்கலான வரித்தகவல்களையும் மிக எளிய மொழியில் விளக்க முடியும்

முக்கிய பிரச்சினையை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம்

உங்க முடிவு தெளிவாக இருப்பதால், வாடிக்கையாளர் நம்பிக்கை தானாக உயரும்

 

இந்த திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?

 

1) “நிகழ்வுகள்சட்டம்பகுப்பாய்வுமுறை

எந்த வழக்கையும் இப்படி அமைக்கவும்:

என்ன நடந்தது? (நிகழ்வுகள்)
எந்த சட்டம் பொருந்துகிறது? (சட்டம்)
இரண்டையும் பார்த்தால் என்ன முடிவு? (பகுப்பாய்வு)
இது 100% தெளிவைத் தரும்.

 

2) Mind Map / Tree Structure


ஒரு வெற்றுப் பக்கத்தில்:   Issue → துணை பிரச்சினைகள்தேவைப்படும் ஆவணங்கள்அபாயங்கள்முடிவு

இப்படி எழுதுங்கள்மூளை உடனே ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கிறது.

 

3) ஒவ்வொரு வழக்கையும் 5 வரிகளில் சுருக்கி எழுதுங்கள்


இது brain- கட்டமைப்புடன் சிந்திக்கக் கட்டாயப்படுத்தும் மிகச் சக்திவாய்ந்த பயிற்சி.

 

4) “IF – THEN” (நேரடி காரணவிளைவு) முறை

 

வரி துறைக்கு இது மிக நேரடி உதவி:

• IF invoice 2 வருடம் பழையது → THEN credit கிடைக்காது
• IF consignment note
இல்லை → THEN GTA ஆகாது
• IF 36(4) mismatch
இருந்தால் → THEN ITC வரம்பு வரும்

இதனால் உங்கள் முடிவு சுழலும் கத்தி போல கூர்மையாகி விடும்.

 

5) வழக்கு கோப்பை எப்போதும் ஒரே ஒழுங்கில் வைத்துக்கொள்ளுங்கள்


Cover note → நிகழ்வுகள்ஆவணங்கள்சட்டம்குறிப்புகள் → Reply draft
கோப்பு சுத்தமாக இருந்தால்உங்கள் சிந்தனையும் சுத்தமாக இருக்கும்.

 

6) தினமும் 10 நிமிடம் “Reverse Analysis”

ஒரு GST தீர்ப்பு/செய்தியை எடுத்து:
பிரச்சினை என்ன?
அதை எப்படி பிரித்தார்கள்?
காரணவிளைவு என்ன?
இதை செய்து பார்த்தால் சிந்தனை மிக வேகமாக வளர்ந்து விடும்.

 

7) ஒரு கேஸை 3 கோணங்களில் பாருங்கள்

 

துறையின் பார்வை
வரியாளரின் பார்வை
சட்டத்தின் நடுநிலை பார்வை

இதனால் பிரச்சினையின் முழு படத்தையும் தெளிவாகப் பார்க்க முடியும்.

 

இறுதியாக…


கட்டமைக்கப்பட்ட சிந்தனை என்பது ஒழுங்காகச் சிந்திக்கும் திறன் + காரணவிளைவு புரிதல் + முன்னுரிமை + தெளிவான முடிவு
இதன் சேர்க்கை.

ஒரு வரி ஆலோசகருக்கு இது தேர்வு செய்யும் திறமையல்ல
வேலைக்கே அவசியம் வேண்டிய திறன்.


- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

 


0 பின்னூட்டங்கள்: