> குருத்து

July 31, 2009

காங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்கள்!

நன்றி : Lightink

முன்குறிப்பு : பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் காங்கிரசுகார்களிடம் கைமாறிய பிறகு, கடந்த 60 ஆண்டுகளாக பெரும்பான்மையான காலங்களில்... மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி ஆண்டிருக்கிறது.
அவர்களுடைய இந்த 60 ஆண்டு கால சாதனை பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அரிசிக்காக கைஏந்த வைத்தது தான். இப்பொழுது அதிலும் தில்லு முல்லு பண்ணுகிறார்கள் அயோக்கியர்கள்.

நாம் கையேந்தும் வரைக்கும் தான் அவர்கள் இப்படி தில்லு முல்லு காட்டுவார்கள். நாம் விளைவித்த நம் தானியங்களை கிடங்குகளில் உள்ளே புகுந்து நாம் கைப்பற்றும் காலம் என்றைக்கு வரப்போகிறதோ?

****
காங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்களை பதிவர் லைட்ங்க் விரிவாக பதிவு செய்துள்ளார். படியுங்கள்.
****
காங்கிரஸ் கட்சியானது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தன்னுடைய தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மாதம் ஒன்றிற்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, கிலோ 3 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது.

இப்போது ஆட்சிக்கும் வந்துவிட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணைநோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அளித்திட்ட உறுதிமொழியை நிறைவேற்றக்கோரி நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ஆட்சியாளர்கள் இப்போது ஒரு புதிய சூழ்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு கடைப்பிடித்த தன் விளைவாக, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம்.

தேசிய மாதிரி சர்வேயானது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் கணக்கிடும் முறையை மாற்றியமைத்துவிட்டது. இதன்படி, 1993-94இல் 36 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 1999-2000இல் 26.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது ஐந்தாண்டுகளுக்குள் 10 சதவீதம் குறைந்துவிட்டதாம். இது அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ள புதுச்சரடு. மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேறு இருக்க முடியாது.

அரசாங்கம் அமைத்திட்ட அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழு தன்னுடைய அறிக்கையில், நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீத மக்கள், அதாவது 83.6 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானமின்றி உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த 20 ரூபாயில் இன்றைக்குள்ள விலைவாசி உயர்வில் என்ன செய்ய முடியும்?

பருப்பு, தானியங்கள், சமையல் எண் ணெய்கள், காய்கறிகள், அரிசி, கோதுமை என
அனைத்துப் பொருள்களின் விலைகளும் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

உண்மை நிலைமை இவ்வாறிருக்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறைந்துவிட்டதாக, அரசு அறிவிக்கிறது.

இவ்வாறு அரசு அறிவிப்பதற்குக் காரணம், அரசு அளித்திட இருப்பதாகக் கூறும் சுகாதார இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களையும் பெரும் பகுதி மக்கள் பெற முடியாமல் செய்வதற்கே யாகும்.

இந்தியாவில் ஏழைகளின் நிலைமை குறித்து உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களில் 42 சதவீதத்தினர் உலக அளவில் கணக்கிடப்படும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாக அது குறிப்பிட்டிருக்கிறது. அதன் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகத்தில் பட்டினியால் வாடுவோரில் 50 சதவீதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் உடல் நலத்திற்குத் தேவையான உணவு விகிதத்தில் 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உண்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களில் பத்தில் ஒன்பது பேர் ஊட்டச்சத்துக் குறைவாலும், ரத்தச் சோகையாலும் பீடிக்கப்பட்டவர்கள். கர்ப்பிணிப்பெண்களின் ரத்தச்சோகையால், பிறக்கும் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் வறுமை ஒழிப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் அரசு, மேலே கூறியவாறு வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கதைவிடுகிறது.

அதுமட்டுமல்ல, முன்பெல்லாம் வறுமைக் கோட்டைக் கணக்கிடும்போது ஒரு நபர் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு 2400 ஆக இருக்க வேண்டும் என்று கணக்கிட்டு வந்தார்கள். அரசு இப்போது அதனையும் 2100 கலோரி என்று குறைத்துவிட்டது. அதாவது 2400 கலோரி உணவு உட்கொள்ள ஒருவருக்கு 567 ரூபாய் தேவைப்படும் என்றால், 2100 கலோரி உணவுக்கு 327 ரூபாய் போதுமானது. உண்மையில் இந்த 327 ரூபாய் கணக்கு என்பது 1868 கலோரி உணவுக்காகத்தான் வருகிறது.

இவ்வாறு புள்ளிவிவர பித்தலாட்டங்களைச் செய்து மக்களை ஏமாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அரசின் இத்தகைய இழிவான நடவடிக்கைகளை, ஏழை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் தமிழக திமுக அரசு ஆதரித்து நிற்பது கேலிக் கூத்தாகும்

தொடர்புடைய பதிவுகள் :

இந்திய வளர்ச்சியின் உண்மையான நிலை - அர்ஜூன் சென்குப்தா

வறுமை கோடு என்றால்? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

நிதி நெருக்கடி : அமெரிக்காவில் 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்!

முன்குறிப்பு : நேற்று தான் 4 மாதத்தில் 32 வங்கிகள் என மே மாத இறுதி செய்தி பார்த்தோம். இப்பொழுது புதிய செய்தி 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்.

***

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 64 வங்கிகள் திவாலாகியுள்ளன. சராசரியாக மாதத்துக்கு 9 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா முழுமையாகச் சிக்கித் தவிப்பதையே இது காட்டுகிறது. இதிலிருந்து மீள அமெரிக்காவிற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க வங்கிகளில் கடந்த ஆண்டே நிதி நெருக்கடி தலை தூக்கத் தொடங்கிவிட்டது. 2008-ம் ஆண்டில் 25 வங்கிகள் திவலானதாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை இப்போதே இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. ஜூலை மாதத்தில் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செக்யூரிட்டி வங்கியின் கிளைகளாகும்.

இந்த வங்கிகளின் பெரும்பாலனவைகளின் மொத்த சொத்து மதிப்புக்கும் வங்கியில் உள்ள வாடிக்காளையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி மிகவும் குறைந்துவிட்டது. இதனால் சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. கிராம அளவில் செயல்படும் வாட்டர் போர்டு கிராம வங்கியும் நிதி நெருக்கடியின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

மிகப்பெரிய வங்கிகளான சிட்டி குரூப், கோல்ட்மேன் ஆகியவை மற்றுமே கடைசி காலாண்டு முடிவில் குறைந்த அளவு லாபத்துடன் செயல்பட்டுள்ளன. வட்டார அளவில் செயல்பட்டு வந்த வங்கிகள் அனைத்தும் நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும், பொருளாதார நிலைமை மேலும் மோசமாக என தெரிகிறது.

நன்றி : தினமணி (26.07.2009)

July 29, 2009

நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால்!



முன்குறிப்பு : அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகி வருகிறது. மாதம் ஒரு முறை இந்தந்த வங்கிகள் திவால் என செய்திகள் அறிவிக்கின்றன. இது உண்மையான திவாலா! என்பதும் முதலாளித்துவ சமுதாயத்தில் கேள்விக்குறியது. இந்த பொருளாதார மந்தத்தை பயன்படுத்தி கொண்டு, உலக முதலாளிகளிலிருந்து உள்ளூர் முதலாளிகள் வரை பல வகைகளில் நிறைய லாபம் பார்த்திருக்கிறார்கள். தொழிலாளர்களை மந்தத்தைக் காரணம் காட்டி மிரட்டி பணிய வைக்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சதியை நாம் புரிந்து கொள்ள இந்த செய்திகளை தொகுத்துப் பார்க்க வேண்டும். முதலில் செய்திகளை தொகுப்போம். பிறகு விவாதிக்கலாம்.

நியூயார்க்: 2009 புத்தாண்டு தொடங்கிய நான்கே மாதங்களில் 32 வங்கிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதாவது மாதத்துக்கு 8 வங்கிகள் என்ற விகிதத்தில் வங்கிகள் திவால் அல்லது பெரும் நஷ்டம் காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.

s1600-h/ameican_westbank.jpg">
இந்த திவாலான வங்கிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது சில்வர்டன் வங்கி, சிட்டிஸன்ஸ் கம்யூனிட்டி வங்கி மற்றும் அமெரிக்கா வெஸ்ட் வங்கி. நேற்று முன்தினம்தான் இந்த வங்கிகள் மூடப்பட்டன.

சில்வர்டன் வங்கிக்கு 4.1 பில்லியன் டாலர் சொத்துக்களும், 3.3 பில்லியன் டாலர் வைப்புத்
தொகையும் உள்ளன. ஆனாலும் கடன் காரணமாக இந்த வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

நாடு பொருளாதார மீட்சி நிலைக்கான அறிகுறி தெரியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்காவின் நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என மூடப்பட்டு வருவது அந்நாட்டு நிதித்துறையை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

2008-ம் ஆண்டிலிருந்து இததுவரை 57 வங்கிகள் அமெரிக்காவில் மூடப்பட்டுள்ளன.

நன்றி : தட்ஸ்தமிழ்

http://thatstamil.oneindia.mobi/news/2009/05/03/98821.html