> குருத்து: அமெரிக்கா
Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

August 28, 2013

அமெரிக்கா கூட காடு வெட்டிதான்! :)


நண்பரின் நண்பர் வேலை நிமித்தமாக அமெரிக்கா ஒரு மாதம் சென்று வந்தார். போய் வந்ததற்காக, பாப்பாவிற்கு ஒரு பரிசு தரும் பொழுது சொன்னார்.

அமெரிக்காவில் சில பொருட்கள் வாங்க போயிருந்தேன். ஒரு நல்ல காட்டன் சாக்ஸ் எடுத்து பார்த்தேன். அதில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக" இருந்தது. எல்லா பருத்தி சம்பந்தமானவைகளும் இந்தியா, பாகிஸ்தான் என இருந்தன. அதன்பிறகு, எடுத்த பல பொருட்களும் "சீனாவில் தயாரிக்கப்பட்டதாக' வே இருந்தது என்றார்.

நாமெல்லாம் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், டாலரை கொடுக்க வேண்டியிருக்கிறது. சர்வதேச செலாவணி டாலராக இருப்பதால், அமெரிக்கா எவ்வளவு வேண்டுமென்றாலும் இறக்குமதி செய்ஞ்சுட்டு, காட்டில் மரங்களை வெட்டி வெட்டி டாலராக அச்சடிச்சுட்டு தர்றான்! சீனா மட்டுமே தான் கையில் வைத்திருக்கிற டாலர் கையிருப்பை அமெரிக்காகிட்ட கொடுத்து, இதுக்கு பதிலா தங்கமா கொடுன்னு சொன்னா, அமெரிக்கா திவால்னு மஞ்ச நோட்டீஸ் கொடுத்திருவான்!

January 27, 2012

அமெரிக்கா - இணையத்தை முடக்க நினைக்கிறதா?


இந்த மாதம் அமெரிக்க பாராளுமன்றத்தில் இணையம் தொடர்பாக இரு மசோதாக்கள் விவாதிக்கப்பட இருந்தன. ஒன்று சோபா (SOPA), அறிவுசார் சொத்துடைமை காப்புரிமைச் சட்டம், மற்றொன்று பிபா (PIPA) தகவல் திருட்டை தடுக்கும் சட்டம்.

முகநூல், கூகுள், டிவிட்டர் என பிரபல சமூக வலைத்தளங்கள் எல்லாம் தங்கள் வலைத்தளங்களை ஒருநாள் கதவடைப்பு செய்து, மக்கள் ஆதரவுடன் போராடினார்கள். இப்பொழுது அந்த மசோதாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் துவக்கம் தான். கட்டற்ற சுதந்திர இணையத்தை முழுவதையும் முடக்குவது தான் அமெரிக்காவின் உள்நோக்கம் என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில் சட்டத்தின் சாரமான 'காப்புரிமை'யே பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவானது. மக்கள் விரோதமானது. உதாரணமாக, இரத்த புற்று நோயை கட்டுப்படுத்த, தினமும் உட்கொள்ளும் மாத்திரைகள் 4. இந்திய நிறுவனங்களின் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ. 90. ஒரு நாளைக்கு ரூ. 360/-. மாதம் ரூ. 11,000 ஸ்வீடன் நிறுவனமான நோவார்ட்டிஸ் நிறுவனம் இந்த மருந்திற்கான காப்புரிமை வாங்க முயன்று கொண்டிருக்கிறது. அதன் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ. 1000. ஒரு நாளைக்கு ரூ. 4000. ஒரு மாதத்திற்கு ஒன்னேகால் லட்சம். இந்தியாவில் ஆண்டுதோறும் ரத்தப்புற்றுநோய்கள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 24000 பேர். காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுவிட்டால், மக்கள் செத்துமடியவேண்டியது தான்.

இதே காப்புரிமையை இணையத்தில் பொருத்தினால், ஒரு திரைப்படத்தின் பாடல்களின் விலை மட்டும் ரூ. 100. டிவிடியிலோ ஒரு புதுபடத்தை ரூ.400 லிருந்து ரூ. 500. என விலை வைக்கிறார்கள். திரையரங்கில் படம் பார்த்தோமென்றால், நுழைவுச்சீட்டின் விலையே நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ. 500 ஆகிவிடுகிறது. மற்ற இதர செலவுகளை கணக்கிட்டால் ரூ. 700-ஐ நெருங்கிவிடும். நடுத்தர வர்க்கமே 4 மாதத்திற்கு ஒரு படம் தான் பார்க்கமுடியும். காப்புரிமை இல்லாதபொழுதே நிறுவனங்களும், பிரபலங்களும் கோடிகளில் கொழிக்கிறார்கள். கருப்புபணத்தில் திளைக்கிறார்கள்.

மற்றொரு கோணத்தில் இந்த விசயத்தை பார்த்தால், சமகாலத்தில் செய்திகளை வழங்கும் ஊடகங்களில் பெரும்பான்மையானவை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துகொண்டவை. எழுச்சியோடு ஆயிரக்கணக்கில், லட்சகணக்கில் போராடும் மக்கள் போராட்டங்களை மறைக்கிறார்கள். திரிக்கிறார்கள். இந்த இடத்தை இணையம் இட்டுநிரப்புகிறது. இப்படித்தான், கடந்த ஆண்டில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என பல்வேறு நாடுகளில் மக்கள் நிலவுகிற பிற்போக்கு, ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக எழுச்சியோடு போராடினார்கள். இந்த போராட்டத்தின் வெற்றியை ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது தனிக்கதை. இந்த போராட்டங்களில் எல்லாம் இந்த சமூக தளங்கள் மக்களிடையே தகவல் தொடர்பில் நிறைய பங்காற்றின.

இந்த சமூக தளங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்போ, முற்போக்கு கருத்தோ எல்லாம் பொங்கிவரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மாறாக, இணையத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாக, பொதுவுடமைக்கு எதிராக கட்டுரைகள் தான் மலிந்துகிடக்கின்றன. திரைப்படம், பொழுதுபோக்கு அம்சங்கள் தான் நிறைய தேடப்படுகின்றன. பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. படிக்கப்படுகின்றன. 2008ல் கூகிளில் மூன்று கோடிபேர் தேடிப்பார்த்த நடிகை நம்மூர் நமீதா. அதற்காக நமீதா நன்றியெல்லாம் தெரிவித்தார்.ஆக, சமூகத்தில் எத்தனை சதவிகிதம் முற்போக்கு கருத்துக்கள் இருக்கிறதோ, அவ்வளவு தான் இணையத்திலும் இருக்கின்றன.

சமூக மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிற முற்போக்கு தளங்களை, புரட்சிகர அமைப்புகளின் தளங்களை முடக்குவது தான் இவர்களின் நோக்கம். உதாரணமாக, தமிழில் வெளிவரும் வினவு தளத்தில், மதங்களின் பிற்போக்குத் தன்மைகளை விமர்சித்து கட்டுரைகள் எழுதினால், அடிப்படைவாதிகள் உடனே வினவு தளத்தை முடக்கவேண்டும் என கோபமாக கருத்துசொல்கிறார்கள்.

September 15, 2011

நாடோ வல்லரசு! மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள்!

//"அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும் பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்" - என அமெரிக்காவின் 'ஜனநாயகத்தை'ப் புட்டு வைக்கிறார், மிகப்பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட்.

"அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றதாழ்வு அமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்" எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும் பொழுது, ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூறமுடியும்.//

- அமெரிக்கக் கடன் நெருக்கடி : மைனரின் சாயம் வெளுத்தது! புதிய ஜனநாயகம் கட்டுரையிலிருந்து...
******

அமெரிக்காவில் வறுமை அதிகரிப்பு

வாஷிங்டன், செப்.14: அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இந்தப் புள்ளிவிவரம் உறுதி செய்கிறது.

"அமெரிக்காவில் வருவாய், வறுமை, மற்றும் சுகாதாரக் காப்பீடு 2010' என்ற தலைப்பில் அமெரிக்க சென்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2010-ம் ஆண்டு அமெரிக்காவில் 4.62 கோடி பேர் (15.1%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இதுவே, அதற்கு முந்தைய 2009-ம் ஆண்டில் 4.36 கோடி பேர் (14.3%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. மேலும் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2010-ம் ஆண்டில் சுகாதாரக் காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 4.9 கோடியாக (16.3%) அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு குறைந்தவர்களில் 1.6 கோடி (22%) பேரும், 18-லிருந்து 65 வயதுக்குள் உள்ளவர்களில் 2.6 கோடி (13.7%) பேரும் வறுமையில் வாடுகிறார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அமெரிக்க அரசின் வறுமை கணக்கிடும் முறை: 4 பேர் உள்ள குடும்பத்தில் வருவாய் அளவு ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக (22,314 டாலர்) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமை கோட்டில் வரும். இதுவே தனிநபரின் வருவாய் ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக இருந்தால் அவர் வறுமையால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

தினமணி - 15/09/2011

April 18, 2011

அடே கடவுளே! மார்க்சியவாதிகள் சொன்னது உண்மைதான்!-அசாங்கே!

அமெரிக்க அரசு முதல் இந்திய அரசு வரை பல்வேறு நாட்டு அரசுகளின் ரகசிய சதித்திட்டங்களை ஆவண ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருவது "விக்கிலீக்ஸ்" என்ற இணையத்தளம். இதன் முதன்மை ஆசிரியர் ஜூலியன் அசாங்கே.

இவரது விரிவான பேட்டி ஒன்றை இந்து நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அவரது பதிலும் வருமாறு:

கேள்வி : அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி, உலகத்துக்கே ஜனாதிபதி என்பதைப் போல நடந்து கொள்கிறார் என்றும், இந்திய அரசின் கொள்கைகளை நிர்ணயிப்பதில் அமெரிக்க அரசு பெரும் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் நீங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறதா?

பதில் : இல்லை. மற்ற நாடுகளிடம் அமெரிக்கா எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கான ஆவணங்களையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். அவற்றைப் பார்க்கும் போது, இந்தியாவிடம் அமெரிக்க நடந்து கொள்வது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.

இந்த ஆவணங்கள் அனைத்தும் எனக்கு கிடைத்ததும் அவற்றை நான் படிக்கத் தொடங்கினேன். அப்போது தான், "அடக் கடவுளே! தென் அமெரிக்க நாடுகளின் மார்க்சியவாதிகள் 1960‍‍ஆம் ஆண்டுகளில் சொன்னதெல்லாம் உண்மைதான்!" என்று நான் நினைத்தேன்.

அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மீது ஏராளமான புகார்களை அந்த மார்க்சியவாதிகள் கூறிவந்தார்கள். அவை வெற்று வசனம் அல்ல. அது மட்டுமல்ல. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் என்பது அமெரிக்க முதலாளிகளின் கருவிதான் என்றே தோன்றுகின்றது. இந்த அமைச்சகத்தின் பிரதிநிதிகள் உலகம் முழுவதும் சென்று அனைத்து நாடுகளின் அரசியல், தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்திலும் தலையிடுகிறார்கள் என்பதும் தெரிகிறது.

இவ்வாறு அசாங்கே கூறியுள்ளார்.

"தோழமை" இதழிலிருந்து..

August 20, 2010

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!*


பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக "பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு மாற்று ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பதை சமீபத்திய நாடாளுமன்ற நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தயவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம், நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவை மையப்படுத்தியுள்ள பிரச்னைகள், உலகமயமாக்கல் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துச் செயல்படுவதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம்.
அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக்கப்படும் என்பதுதான் நிலைமை.

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்துக்குமுன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும், அரசையும் மனம் குளிர்விக்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் குறியாக இருக்கிறார் என்கிறார்கள். மன்மோகன் சிங்கின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில் காங்கிரஸýம், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியேகூட முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான் குறிப்பிடவேண்டிய ஒன்று.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால்தான் இந்த நிபந்தனை.

இழப்பீட்டுக்கு ஓர் உச்சவரம்பு விதிப்பதன் மூலம் அணுவிபத்தால் ஏற்படும் தலைமுறைகளைக் கடந்த பாதிப்புகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்காது. அணுமின் நிலையங்களை அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமே நிறுவ முடியும் என்பதால் தங்களது நாட்டு முதலீட்டாளர்களின் இழப்பைக் குறிப்பிட்ட வரம்புக்குள் நிறுத்த அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு விரும்புகிறது.

போபாலில் நடந்த விஷவாயுக் கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் முழுமையான இழப்பீடு கொடுக்காத நிலையில், இன்னமும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும், நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி சலித்துவிட்டிருப்பதும் இதுபோன்ற விபத்துகளில் இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஆனால், அப்படிப்பட்ட இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அணுசக்தி என்பது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு முழுமையான இழப்பீடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதும்கூட ஒரு நல்லரசின் கடமை.

கடந்த மக்களவையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்த இழப்பீட்டு மசோதாவில் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்? தங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அது என்ன நிபந்தனைகள்?

முதலாவதாக, அணுசக்திக் கூடங்கள் தனியார் தரப்பில் விடப்படக் கூடாது என்பதும் அரசுதான் நடத்த வேண்டும் என்பதும். இரண்டாவதாக, அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 500 கோடியாக இருந்ததை 1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தேவைப்பட்டால் மேலும் உயர்த்திக் கொள்ளும் அதிகாரமும் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதும்.

முன்பு தயாரிக்கப்பட்ட மசோதாவின்படி, அணுசக்தி உற்பத்தியாளர்களின் இழப்பீடு 500 கோடி என்றும், அதற்குமேல் இழப்பீடு தரப்பட வேண்டுமானால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் இருந்தது. இப்போது பாஜகவின் கோரிக்கையின்படி அரசு நிறுவனமாக மட்டுமே அணுசக்திக் கூடங்கள் அமைக்கப்படும் என்கிற நிலையில் இழப்பீடு எவ்வளவு இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்வது என்பதுதானே நியாயம். அரசே நடத்தும்போது உச்சவரம்பின் அவசியம் தேவையில்லையே!

இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி, அரசு நிறுவனமாக அணுசக்திக் கூடங்களை அமைத்து, பிறகு அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டிருப்பது இந்த மசோதாவிலிருந்தே பளிச்செனத் தெரிகிறதே. அப்படியானால் இது மக்களை முட்டாளாக்கும் மசோதாதானே?

சரி, மின்உலைகளில் தயாரிப்புக் குறைபாடுகள் இருந்தால் அதற்கு உலைகளை வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்குமா? அவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாகப் பெறப்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு மசோதா பதில் சொல்லவில்லையே, ஏன்?

பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் ஓரினப் பறவைகள். பொருளாதாரக் கொள்கையிலும், பன்னாட்டு நிறுவன ஆதரவிலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். ஏனைய மாநிலக் கட்சிகள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றனவே, ஏன்? அவர்களைப் பொறுத்தவரை அணுவாவது.. உலையாவது.. விபத்தாவது.. இழப்பாவது..! உறுப்பினர்களின் சம்பள உயர்வுதான் இப்போதைய கவலை!
மக்களைப் பற்றியும் வருங்காலச் சந்ததியினரைப் பற்றியும் இவர்கள் எங்கே கவலைப்படுகிறார்கள்...?

நன்றி : தினமணி தலையங்கம் - 19/08/2010

பின்குறிப்பு : தினமணியின் தலையங்கத்தில் 'ஒரு மரத்து பறவைகள்" என சாந்தமாக தலைப்பு தந்திருந்தார்கள். பொருத்தமாக சொல்ல வேண்டுமென்றால்..."ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்" என்ற தலைப்பு தானே பொருத்தமாக இருக்கிறது. அதனால் தான் மாற்றி வைத்தேன்.

March 7, 2010

சுதந்திரம் பறிபோகிறது...?

மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில்
ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?

பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...''
சீச்சீ... சிறியர் செய்கை!

-நன்றி : தினமணி ... 27/02/2010 தலையங்கம்.

February 1, 2010

விருதுகளுக்குப் பின்னால்!

விருதுகளும் பட்டங்களும் ஜமீன்தாரி சிந்தனையின் பாதிப்பால் ஏற்பட்டவை என்று கூறினால் அதைப் பலரும் மறுக்கக்கூடும்.​ அளப்பரிய சேவை செய்தவர்களையும்,​​ திறமையாளர்களை​யும் கெளரவிப்பது ஏன் என்று அவர்கள் கேட்கக்கூடும்.​ நியாயம் தான்.​ ஆனால் தங்களது சேவையை சமுதாயம் அங்கீகரிக்கிறது என்பதை எண்ணிப் பெருமைப்படுவதுடன் நின்றுவிடாமல் அந்த விருதையோ,​​ பட்டத்தையோ பெயருடன் இணைத்துக்​கொண்டு பெருமை தட்டிக்​கொள்​வது அவசியம்​தானா என்று கேட்கத்​தோன்றுகிறது.​

ஒருவரின் சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் வழங்கப்படுவது​தான் பல்கலைக்​கழகங்களால் தரப்​படும் கெளரவ டாக்டர் பட்டம்.​ இந்தியாவிலேயே மிக அதிகமான பல்கலைக்​கழகங்களால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்​பட்டவர் பண்டித ஜவஹர்லால் நேருவாகத்​தான் இருக்கும்.​ அவர் ஒரு​போதும் தன்னை டாக்டர் ஜவஹர்லால் நேரு என்று அழைப்பதை விரும்பவில்லை.​ கெளரவ டாக்டர் பட்டத்தை யாரும் தனது பெயருக்கு முன்னால் போட்டுப் பெருமை தட்டிக்​கொள்வதில்லை என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார்.​

இன்னாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் தரப்பட​வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல்,​​ தனியார் நிகர்நிலைப் பல்கலைக்​கழகங்​கள் நகைச்சுவை நடிகர்கள் உள்பட பலருக்கும் டாக்டர் பட்டத்தை வாரி வழங்குகின்றன.​ அதை நமது ஊடகங்களும் விளம்பரப்படுத்தி மகிழ்கின்றன.​ விருதுகளும் பட்டங்களும்,​​ அமெரிக்காவில் உள்ளது​போல விரைவிலேயே விலை நிர்ணயம் செய்யப்​பட்டாலும் நாம் வியப்படையத் தேவையில்லை.

அரசு விருதுகள் வழங்குவது என்பதைத் தவிர்க்க இயலாது தான். மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளும் தங்களது மதிப்பையும், மரியாதையையும் இழந்து கேலிப்பொருள்களாக மாறிவருவது வேதனைக்குரிய ஒன்று. ஆட்சியாளர்களின் அடிவருடிகளும், ஆளூட்கட்சியின் நலம் விரும்பிகளும் மட்டுமே இந்த விருதுகளின் பட்டியலில் இடம் பெறுபவர்களில் பெரும்பான்மையினர் என்பஹு இந்தியாவின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்றாகிவிட்டது.

தகுதிக்கும், திறமைக்கும் தரப்பட்டுள்ள அங்கீகாரம் என்பது போய், நன்றி விசுவாசத்துக்காகத் தரப்படும் நற்சான்றிதழ் தான் இந்த விருதுகள் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

மாநில விருதுகள் தான் இப்படியென்றால், மத்திய அரசின் "பத்ம பூஷண்' விருதுகளின் நிலைமையும் அது தான் என்கிற போக்கு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த வருடத்திய "பத்மபூஷண்' விருதுகளின் பட்டியல் அமெரிக்காவாழ் இந்தியரான ஹோட்டல் அதிபர் சந்த்சிங் சத்வாலின் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனிதர் அமெரிக்காவில் பல மோசடிகளில் தொடர்புடையவர் என்பதும், ஒரு அரசியல் தரகர் என்பது தெரிந்தும், இவருக்குப் "பத்ம பூஷண்" விருது தரப்படுகிறது என்றால், அது தெரியாமல் நடந்த தவறல்ல!​

இரண்டாண்டுகளுக்கு முன்பே பிரதமரின் அலுவலக்த்தில் "பத்மஸ்ரீ' விருதுக்காக சத்வாலின் பெய​ரைச் சிபாரிசு செய்த​போது வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த மனிதரின் பின்னணி​யைக் காரணம் காட்டி அதைத் தடுத்து நிறுத்தியது.​ அப்போது பத்மஸ்ரீ விருதுக்கு நிராகரிக்கப்​பட்ட இவரது பெயர்,​​ இப்போது பத்மபூஷண் விருதுக்குத் தகுதிபெற்றிருக்கிறது என்றால் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.

சந்த்சிங் சத்வாலின் மோசடிப் பின்னணி என்ன தெரியுமா?​ பஸ்ட் நியூ​யார்க் என்கிற வங்கியில் இவரும் ஓர் இயக்குநர்.​ அந்த வங்கியில் 12 மில்லியன் டாலர் ​(சுமார் 60 கோடி ரூபாய்)​ கடன் வாங்கியதுடன்,​​ கடனைத் திருப்பிக் கொடுக்க வழியில்லாத பலருக்கும் ​ கடன் வழங்க​வும் பரிந்துரைத்தவர் இந்த சத்வால்.​ அந்த வங்கியே இவருடைய கைங்கர்யத்தால் திவாலாகி​யது. பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்கிற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் இவர் மீது ​ வழக்குத் தொடர்ந்​தது.​ தனது மொத்த வங்கி சொத்தின் மதிப்பே 2,600 டாலர்​தான் என்றும்,​​ வங்கிக் கையிருப்பு நூறே நூறு டாலர்​தான் என்றும் வாக்கு​மூலம் வழங்கிய​வர் 12 மில்லியன் டாலர் கடன் வாங்கிய இந்த சந்த்சிங் சத்வால்.​ பல மில்லியன் டாலர் பெறு​மானமுள்ள ஆடம்பர பங்களாவில் குடியிருந்து​கொண்டு அது தனது தம்பியின் வீடு என்றும், தாம் அங்கே 5,000 டாலர் வாடகைக்கு இருப்பதாகவும்,​​ தானும் மனைவியும் ஹோட்டலில் வேலைக்காக பெறும் 7,600 டாலர் சம்பளப்பணத்தில் வாடகை தருவதாகவும் பொய் வாக்குமூலம் வழங்கியவர்​தான் இவர்.​

நமது இந்தியக் கைவண்ணத்தை சத்வால் அமெரிக்காவிலும் காட்டினார்.​ அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் தற்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனுக்கு மிகவும் நெருக்கமானவராகி​விட்டார்.​ விளைவு?​

1997-ல் இவர் தர​வேண்டிய 12 மில்லியன் டாலர் கடன் தொகை,​​ பில் கிளிண்டனின் பதவிக்​காலம் முடிய ஒரு மாதம் இருக்கும்​போது வெறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாலராகக் குறைக்​கப்பட்டு தள்ளுபடி செய்யப்​பட்டு​விட்டது.​ இப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா​வின் தேர்தலுக்கும் பெரிய அளவில் நிதி வசூலித்துக்​கொடுத்து அவருக்கும் நெருக்கமாகிவிட்டிருக்​கிறார் சந்த் சிங் சத்வால்.​

சத்வாலுக்கு "பத்மபூஷண்' தரப்படுவதன் காரணம் என்னவாம் தெரியுமா?​ இவர் இந்திய அமெ​ரிக்க அணு​சக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்குப் பாடுபட்டவராம்.​ இவரை​விட அதிகமாகப் பங்களிப்பு நல்கியவர்கள் பலர் இருந்தும்,​​ வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எதிர்ப்புத் தெரிவித்த பிறகும்,​​ இந்த மனிதரின் பல்​வேறு நிதி மோசடிகளும் பின்னணியும் தெரிந்திருந்தும் இவருக்கு இந்தியாவின் மிகவும் கெளரவமான "பத்மபூஷண்' விருது வழங்கப்படு​கிறது என்றால் அந்த விருதுக்கு இனிமேல் மரியாதை எப்படி இருக்கும்?​

சந்த் சிங் சத்வாலுக்கு "பத்ம​பூஷண்' விருது தரப்​பட்டால் தவறான முன்னுதாரணம் ஏற்பட்டு​விடும்.​ விருதுகளை விலைக்கு வாங்கலாம் என்கிற நிலைமை ஏற்பட்டு​விடக்​கூடாது.

தினமணி தலையங்கத்திலிருந்து... 02.01/2010

January 28, 2010

இந்திய ஐ.டி. துறைக்கு பாதிப்பு: வெளிப்பணி ஒப்படைப்புக்கு வரிச்சலுகை ரத்து!


வாஷிங்டன், ஜன.28: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்துள்ள புதிய மசோதாவால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.


ஏற்கெனவே சர்வதேச தேக்க நிலை காரணமாக பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்நிலையில் அதிபர் பராக் ஒபாமா தனது ஓராண்டு பதவி நிறைவை ஒட்டி நிகழ்த்திய உரையில் வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ) மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.


வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ) பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும். காப்பீடு, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ன் போன்ற பணிகளை பிபிஓ முறையில் நிறைவேற்றும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும்.


அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதற்காகவே வரிச் சலுகை ரத்து செய்யப்படுகிறது என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.


தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான மசோதாவில் இப்புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் வேலையின்றி தவிப்பவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. எனவே வேலைவாய்ப்பு மசோதா மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க அரசு தீவிரமாக உள்ளது. இதைப் போல மேலும் சில பரிந்துரைகளை அளிக்குமாறு செனட் சபையை ஒபாமா கேட்டுக் கொண்டார்.


உலகிலேயே அதிக அளவில் வெளிப்பணி ஒப்படைப்புப் பணியை மேற்கொள்ளும் நாடாக இந்தியா விளங்குகிறது. அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவால் இத்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.


2008-09-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு 5.8 சதவீதமாகும். 1997-98-ம் நிதி ஆண்டில் இது 1.2 சதவீதமாக இருந்தது.


அமெரிக்க நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக பணிகளை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றன. இதில் ஆங்கிலப் புலமை மிகுந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் பெற்றவர்களின் விகிதம் அதிகமாக இருந்ததால் இங்கு அதிக அளவில் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.


தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் உண்மையிலேயே கடந்த சில ஆண்டுகளில் இழந்த 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்றும் ஒபாமா குறிப்பிட்டார். தற்போதைய நடவடிக்கையால் ஏற்கெனவே 20 லட்சம் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.


2010-ம் ஆண்டில் அரசின் முன்னுள்ள பிரதான பிரச்னைகளில் முக்கியமானது வேலை வாய்ப்பை உருவாக்குவதே ஆகும் என்று ஒபாமா சொன்னார்.


புதிய வேலைவாய்ப்பு மசோதா மூலம் வால் ஸ்டிரீட்டில் உள்ள வங்கிகள் திரும்பச் செலுத்திய 3,000 கோடி டாலர் தொகையைக் கொண்டு சமுதாய வங்கிகள் உருவாக்கப்பட்டு சிறு வணிகத்துக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் வர்த்தகத்தை பிரதானமாகக் கொண்டே புதிய மசோதா அமையும். அத்துடன் அரசும் வர்த்தகம் பெறுக தேவையான உதவிகளை அளிக்கும். இதன் மூலம் ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் ஒபாமா சுட்டிக் காட்டினார். மனித வள மேம்பாடு மற்றும் கல்வியில் அதிக முதலீடு செய்ய அரசு தீவிரமாக உள்ளது.


தற்போது வழங்கப்படும் உயர்நிலைப் பள்ளி கல்வியானது வேலை வாய்ப்பைப் பெறுவதற்கானதாக அமையவில்லை. அனைவரும் கல்லூரி படிப்பைத் தொடரும் வகையில் அளிக்க அரசு முயன்றுள்ளது. மக்கள் செலுத்தும் வரிப் பணம் வங்கிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்டு அது மாணவர்களுக்கு கல்விக் கடனாக வழங்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.


அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏற்றுமதியை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒபாமா கூறினார்.


இதன் மூலம் இறக்குமதியை மட்டுமே அமெரிக்கா நம்பியிருக்காது என்ற மறைமுக தகவலை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமணி - 29/01/2010

December 20, 2009

அமெரிக்கா - நடப்பு டிசம்பரில் இதுவரை 16 வங்கிகள் திவால்!

அமெரிக்காவில், சென்ன ஒரே வாரத்தில் ஏழு வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இதனையடுத்து, இவ்வாண்டில், இதுவரையிலான காலத்தில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகியுள்ளன். சென்ற 2008-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது (25 வங்கிகள்) இது ஐந்து மடங்கிற்கும் மேல் அதிகமாகும்.

நடப்பு டிசம்பர் மாதத்தில், இதுவரையில் 16 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வங்கிகள் திவால் ஆகியுள்ளன.

அமெரிக்காவில், லேமான் பிரதர்ஸ் திவால் ஆன பிறகு, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இதில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலை இழப்பு விகிதமும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் வங்கிகள் தொடர்ந்து திவால் ஆகிவருவது, சென்ற ஆண்டில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடும் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்பதை காட்டுகிறது.

நன்றி : தினத்தந்தி - 21/12/2009

November 22, 2009

பொருளாதாரம் - சில குறிப்புகள்

பொருளாதார சமச்சாரங்கள் மற்ற துறை சமாச்சாரங்களை போல நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பொருளாதார சமச்சாரங்கள் தான் நாட்டின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கின்றன.

பொருளாதார செய்திகளை பல தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பொருளாதார விசயங்களை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள கூடிய கட்டுரைகள் தமிழில் கிடைப்பது அரிதாக தான் இருக்கிறது.

இதற்கு முன்பாக பொருளாதாரம் தொடர்பாக, கட்டுரைகள் எழுதப்பட்ட பொழுதும், வேறு சில பதிவர்கள் எழுதிய கட்டுரைகளையும் நன்றி சொல்லி வெளியிட்ட பொழுதும், எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாகவும் நண்பர்களும், தோழர்களும் தெரிவித்திருந்தார்கள்.

குருத்து தளத்தில் அரசியல், திரைப்படம், பண்பாடு என தலைப்புகளில் எழுதினாலும், கூடுதலாக பொருளாதார விசயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன். (நமக்கு எது உருப்படியாக வருகிறதோ அதையே செய்வோம் என்ற நல்லெண்ணம் தான்) உங்கள் கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். முடிந்தமட்டிலும் சுவாரசியமாக படிக்கும் விதங்களில் எழுத முயற்சிக்கிறேன்.

கட்டுரைகளின் தலைப்புகளை கிளிக்கினால், அந்தந்த கட்டுரைகளுக்கு இட்டுச்செல்லும்.

கடந்த பதிவுகளில்... எழுதப்பட்ட பொருளாதார கட்டுரைகள்:

* பணவீக்கம் என்றால் என்ன? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* வறுமைக்கோடு என்றால்? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவ பொருளாதாரம்

* பங்குச்சந்தை சூதாட்டம்

* பங்கு சந்தையும் குரங்கு கதையும்

* டாலர் யானை புகுந்தாலும் நட்டம்; வெளியேறினாலும் நட்டம்

* ஊக வணிகம் - பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?

* கொள்ளையடிப்பது நிதிமூலதன கும்பல்கள்! பரிதவிப்பது தொழிலாளர்கள்!

* பந்தய ஒப்பந்தங்கள் - சில குறிப்புகள்

* பெட்ரோலில் முடிந்தமட்டும் கொள்ளையடி! - பதிவர் லைட்ங்க்

* என்ரான் ஊழல் - அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்!

* பந்தய ஒப்பந்தங்களின் தன்மை

* இந்திய வளர்ச்சியின் உண்மைநிலை - டாக்டர் அர்ஜூன் சென்குப்தா - மொழிபெயர்ப்பு - லைட்ங்க்

*. அந்நிய முதலீடு - சில குறிப்புகள் - பதிவர் லைட்ங்க்

* அமெரிக்க திவால் - பொன் முட்டை இடும் வாத்து" திட்ட ஊழல்

* அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவம் ஆளும் தகுதியை இழந்துவிட்டது.

* அமெரிக்க திவால் - மார்க்சியமே உரைகல் - புதிய ஜனநாயகம்

* சத்யம் கம்யூட்டர்ஸ் - இன்னொரு என்ரான் ஊழல்

* கார்ப்பரேட் கிரிமினல்கள் - பதிவர் லைட்ங்க்

* பற்றி பரவுகிறது வர்க்கப் போராட்டம், அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்.

* நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால் - தட்ஸ்தமிழ்

* காங்கிரசு அரசின் புள்ளிவிவர பித்தலாட்டங்கள் - பதிவர் லைட்ங்க்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும் - பாகம் 2

* தங்கம் விலை எகிறுவது ஏன்? -பாகம் 1 - டிமேட் அக்கவுன்ட் என்றால்? - தினமணிக்கதிர்

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 2 - தங்கம் எதற்காக? - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 3 - தங்கம் எதற்காக? கட்டுரையின் தொடர்ச்சி - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

August 4, 2009

'எங்கேயாவது போயிடுங்க: விமான டிக்கெட் இலவசம்" - அமெரிக்க அவலம்!


வீடற்றவர்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவர்களை வேறு இடங்களுக்கு விரட்ட புதிய சலுகை திட்டத்தை அமுல்படுத்தி உள்ளது.

என்ன சலுகை தெரியுமா? நகரை விட்டு போய்விடுவதாக சொன்னவுடன், உடனே விமான டிக்கெட் இலவசம்.

அமெரிக்காவில், சில மாநிலங்களில் வீடற்றோர் அதிகரித்து வருகின்றனர். நிதி நெருக்கடி காரணமாக வேலை வாய்ப்பு இல்லாததால், சமீப காலமாக இவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், நியூயார்க் போன்ற முக்கிய நகரங்களிலும் இவர்கள் எங்கும் பரவியுள்ளனர்.
இவர்களுக்காக தனி முகாம்களை நியூயார்க் அரசு நிர்வாகம் அமைத்துள்ளது.

சமீப காலமாக வீடற்றோர் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதால், அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பி விட முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

நியூயார்க்கில் இருந்து வெளியேற, விரும்பும் குடும்பங்களுக்கு இலவச விமான டிக்கெட் அளிக்கப்படும். அவர்கள், உறவினர் நண்பர் உள்ள இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். செலவுகளை முழுமையாக நிர்வாகம் ஏற்கும் என்று நியூயார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நியூயார்க்கில், வீடற்றோருக்கான முகாம்கள், கடந்த இரண்டாண்டாக அதிகரித்து வருகின்றன. இவர்களுக்கு பல கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. 2007, ஆண்டுக்குப் பின் 550 குடும்பத்தினர் இங்கு முகாமிட்டு உள்ளனர்.

சலுகை திட்டத்தை சிலர் தான் ஏற்றுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமக நிதி நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவில், பல மாநிலங்களிலும் உள்ள பலர் வேலையிழந்து விட்டனர். அவர்கள், அரசு தரும் வேலையற்றோர் உதவித்தொகையை வைத்துத்தான் நாட்களை கடத்துகின்றனர்.

நன்றி :
தினமலர் - 05/08/2009

தொடர்புடைய பதிவுகள் :

New York gives homeless people a one-way ticket to leave city

August 3, 2009

அமெரிக்கா - மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்!


நன்றி : உறையூர்காரன்

முன்குறிப்பு : அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு இல்லாமல் வாழ்வது... உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதற்கு சமம். அமெரிக்காவில் மருத்துவத்திற்கான காப்பீடுத்தொகை மிக மிக அதிகம். வேலை செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் தனது ஊழியர்களுக்கு காப்பீடு எடுத்து விடுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளால், நிறுவனங்கள் கோடிகளில் தொழிலாளர்களை வெளியே பிடித்து தள்ளிவிட்டது. இதனால் தொழிலாளர்களும், பொதுமக்களில் பலரும் மருத்துவ காப்பீட்டை புதுப்பிக்க முடியவில்லை.

அமெரிக்காவில் சுகாதார கொள்கைப் பற்றிய பேச்சு, கடந்த தேர்தலிலேயே எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக, ஒபாமா அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பொழுது... அமெரிக்காவில் மருத்துவம் மிக செலவு பிடிக்கிறது என்றார். கடந்த ஜூனிலும் அமெரிக்காவில் மருத்துவ செலவு வெடிகுண்டைப் போல ஆபத்தானதாக தோற்றமளிப்பதாகவும், மருத்துவ துறையை சீரமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது தான் உண்மையான அமெரிக்கா!

****

அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் எவ்வளவு அதிகம்? மருத்துவ காப்பீட்டுத்துறை நிறுவனங்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றன? வல்லரசு அமெரிக்காவில் மக்கள் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள்? கனடா, பிரான்ஸ், பிரிட்டன், கியூபா நாடுகளில் மருத்துவ நிலைமைகளை மைக்கேல் மூர் எடுத்த சிக்கோ என்ற ஆவணப்படம் விரிவாக விவரிக்கிறது. பதிவர் உறையூர்காரன் அந்த படத்தைப் பற்றி ஒரு நல்ல அறிமுகம் தந்திருக்கிறார். படியுங்கள்.

****


சமீபத்தில் மைக்கேல் மூர் ((Michael Moore) என்பவர் இயக்கிய‌ சிக்கோ (Sicko) என்கிற ஆவணப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. Health Insurance என்கிற பெயரில் அமெரிக்க
மருத்துவத்துறை எப்படி வணிகமயமாக்கப்பட்டது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது அந்த ஆவணப் படம். பீட்டர் என்கிற அமெரிக்கர் தன் காயங்களுக்கு தையல் போடும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த படம்.

அமெரிக்க பிரஜையான பீட்டர் தன் காயத்திற்கு மருத்துவம் பார்க்க மருத்துவரிடம் செல்ல முடியாது. ஏனென்றால் அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லை. ஆனால் இந்த திரைப்படம் பீட்டர் போன்றவர்களைப் பற்றியது அல்ல‌ என்கிறார் இயக்குனர்.அடுத்து ரிக் என்பவர் தன்னுடைய இயந்திர வாள் பட்டறையில் வேலை செய்யும்போது அவருடைய நடுவிரலும் மோதிர விரலும் துண்டாகி போய்விடுகிறது. அவர் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மோதிர விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 18000 டாலரும் நடு விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 60000 டாலரும் செலவாகும் என்கிறார்கள். அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லாததால் தன்னிடம் இருந்த சேமிப்பின் மூலம் 18000 டாலர் கொடுத்து மோதிர விரலை மட்டும் ஒட்டிக் கொள்கிறார். அவருடைய நடு விரல் இங்குதான் உறங்குகிறது என்று ஒரு குப்பைமேட்டை காட்டுகிறார். அமேரிக்காவில் சுமார் ஐந்து கோடி பேருக்கு காப்பீடு இல்லை. ஆனால் இந்த ஆவணப் படம் அவர்களைப் பற்றி இல்லை என்கிறார்.

அடுத்து லாரி மற்றும் டானா ஸ்மித் என்கிற முதிய தம்பதியினர் டென்வர் (கொலராடோ) நகரத்தில் உள்ள தங்கள் மகளின் வீட்டிற்கு சென்று அங்குள்ள பொருள் வைக்கும் அறையில் தங்குகின்றனர். டானா ஒரு பத்திரிக்கை நிருபராகவும் லாரி ஒரு இயந்திர வல்லுனராகவும் பணிபுரிந்து நல்ல பொருளாதார நிலையில் இருந்து அவர்களது ஆறு பிள்ளைகளையும் நல்லபடியாக படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வந்தவர்கள். இதற்கிடையில் லாரிக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது, அடுத்து டானாவை புற்றுநோய தாக்கியது. இவர்கள் மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் Co-pay, deductables என்று அபரிமிதமான பொருளாதார சுமையால் தங்கள சொந்த வீட்டை விற்று தங்கள் மகளின் வீட்டில் அடைக்கலம் தேடி செல்கின்றனர்.தங்கள் மருத்துவ செலவை சமாளிக்க தள்ளாத வயதிலும் உழைக்கும் ஒரு பெரியவர், ஒல்லியாக இருந்ததால் மருத்துவ காப்புரிமை மறுக்கப்படும் ஒருவர், அதேபோல குண்டாக இருந்ததால் காப்புரிமை மறுக்கப்படும் இன்னொரு பெண்மணி, விபத்தில் சிக்கியபின் ஆம்புலன்ஸ் செலவை தர மறுக்கும் காப்புரிமை நிறுவனம், மனசாட்சிக்கு விரோதமாக காப்பீட்டு கோரிக்கைகளை நிராகரிக்க நிர்பந்தபடுத்தப்பட்டதால் பணியை விட்டு விலகும் ஒரு காப்பீட்டு நிறுவன ஊழியர் என பலரின் அனுபவங்களை படம் பிடித்துக் காட்டுகிறார் இயக்குனர். சிறுநீரகத்தில் புற்றுநோய் வந்த ஒருவருக்கு அவரது தம்பி சிறுநீரக தானம் செய்ய முன்வந்தும், காப்பீட்டு நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படும் என்று அவரது அறுவை சிகிச்சைக்கு Experimental என்ற காரணம் கூறி காப்பீடு தரமுடியாது என மறுக்கிறது காப்பீட்டு நிறுவனம். உரிய‌நேர‌த்தில் சிகிச்சைய‌ளிக்க‌ப் ப‌டாம‌ல் அவ‌ர் இறந்துவிடுகிறார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த சிறுநீரக நோயாளியின் மனைவி மருத்துவத்துறையில் பணி புரிபவர் என்பதுதான். ம‌ருத்துவ‌த்துறையில் பணிபுரிப‌வ‌ரின் க‌ண‌வ‌ருக்கே இந்த‌ அவ‌ல நிலையென்றால் சாமானிய‌ர்க‌ளின் நிலையை சற்று நினைத்துப் பாருங்க‌ள்.

அமெரிக்காவின் அண்டைநாடான க‌ன‌டாவிலோ நிலைமை முற்றிலும் த‌லைகீழாக‌ இருக்கிற‌து. அங்கு ம‌ருத்துவ‌ரிட‌ம் செல்வ‌த‌ற்கு நோயாளியாக‌ இருந்தால் ம‌ட்டும் போதும், ப‌ண‌க்கார‌ராக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. மிசிகன் (Michigan) மாநில‌த்தில் வ‌சிக்கும் ஒரு பெண் த‌ன் குழ‌ந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் எல்லைத் தாண்டி க‌ன‌டாவிற்கு சென்று ம‌ருத்துவ‌ம் பார்த்துக் கொள்கிறார். சில‌ அமேரிக்க‌ர்க‌ள் ம‌ருத்துவ‌ செல‌வை ச‌மாளிக்க‌ க‌ன‌டிய‌ர்க‌ளை திரும‌ண‌ம் செய்துக்கொள்வ‌தாக‌ அவ‌ர் கூறுகிறார். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளான அமேரிக்க அரசியல்வாதிகள், கனடாவில் பை பாஸ் அறுவை சிகிச்சைக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என புரளிகளை கிளப்பி பொது நல்வாழ்வு திட்டத்திற்கான கோரிக்கைகளுக்கு ஆப்பு வைக்கிறார்கள்.

அடுத்து இய‌க்குன‌ர் பிரிட்ட‌னுக்கு செல்கிறார். அங்கு ம‌க்க‌ளுக்கு ம‌ருத்துவ‌ சேவை முற்றிலும் இல‌வ‌சமாக‌ அளிக்க‌ப் ப‌டுவ‌தை உண‌ருகிறார். பிரிட்ட‌னில் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணிபுரியும் ஒருவ‌ரைப் பேட்டி காண்கிறார். அவ‌ர் அமெரிக்க‌ ம‌ருத்துவ‌ர்க‌ளைப் போல‌வே வ‌ச‌தியாக‌ வாழுவ‌தையும் சுட்டிக் காட்டுகிறார். அடுத்து ஒரு ம‌ருந்த‌க‌த்திற்கு செல்கிறார். அங்கு ஒரு ம‌ருந்து சீட்டைக்
காட்டி இத‌ற்கு எவ்வ‌ள‌வு செல‌வாகும் என்று கேட்கிறார். அத‌ற்கு ம‌ருந்த‌க‌ உழிய‌ர் 6.60 ப‌வுண்டுக‌ள் ஆகும் என்கிறார். 60 மாத்திரைக‌ள் வாங்கினால் எவ்வ‌ள‌வு ஆகும் என்கிறார்?. அத‌ற்கும் அதே ப‌தில்தான் வ‌ருகிற‌து. 90, 120, 180 என்று எவ்வ‌ள‌வு வாங்கினாலும் 6.60 ப‌வுண்டுக‌ள்தான் ஆகும் என்கிறார். அந்த‌ நோயாளி ப‌தினெட்டு வ‌ய‌துக்குட்ப‌ட்ட‌வ‌ராக‌வோ அல்ல‌து வேலையில்லாத‌வ‌ராக‌வோ இருந்தால் அந்த‌ 6.60 ப‌வுண்டுக‌ள் கூட‌ க‌ட்ட‌வேண்டாம்.

அடுத்து ஒரு ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்கிறார். அங்கு குழ‌ந்தைப் பெற்று விடுபெற்று வ‌ரும் ஒரு த‌ம்ப‌தியிட‌ம் இந்த‌ பிர‌ச‌வ‌த்திற‌கு எவ்வ‌ள‌வு செல‌வான‌து என‌க் கேட்கிறார். அவ‌ர்க‌ள் ஒரு ப‌வுண்டு கூட‌ த‌ங்க‌ள் கையிலிருந்து செல‌வாக‌வில்லை என்கிறார்க‌ள். அந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணிபுரியும் ஒரு ம‌ருத்துவ‌ரிட‌ம் நீங்க‌ள் ஒரு நோயாளிக்கு சிகிச்சைய‌ளிக்கும் முன்ன‌ர் அந்த‌ நோயாளியின் காப்பீட்டு நிறுவ‌ன‌த்திட‌ம் அனும‌தி பெற‌வேண்டுமா என‌ கேட்ட‌தும் அப்ப‌டியெல்லாம் ஏதுமில்லையென்றே ப‌தில் வ‌ருகிற‌து. அந்த‌ ம்ருத்துவ‌ம‌னை முழுதும் அலைந்து திரிந்து Cashier என்று எழுதியிருக்கும் ஒரு இட‌த்தை க‌ண்டுப்பிடிக்கிறார். அங்கு இருப்ப‌வரிட‌ம் சென்று இந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனைத்து வித‌மான‌ சிகிச்சைக‌ளும் இல‌வ‌ச‌ம் என்னும்ப‌ட்சத்தில் எத‌ற்காக‌ ஒரு காசாள‌ர் என வின‌வுகிறார். "உட‌ல் நிலை மிக‌வும் மோச‌மாக‌ இருக்கும் சில‌ர் ம‌ருத்துவம‌னைக்கு வாட‌கையுந்தில் வ‌ந்தால் அந்த‌ வாட‌கையுந்திற்கு அவ‌ர்க‌ள் செல‌வ‌ழித்த‌ ப‌ண‌த்தை அவ‌ர்க‌ளுக்கு திருப்பித் த‌ர‌வே இங்கு நான் உள்ளேன்" என்கிறார் அந்த‌ காசாள‌ர்.

அமெரிக்காவில் ப‌ணிப்புரிந்த‌ ஒரு பிர‌ஞ்சு பிர‌ஜையின் க‌தையை அடுத்த‌தாக‌ விவ‌ரிக்கிறார் இய‌க்குனார். ப‌திமூன்று ஆண்டுக‌ளாக‌ அமெரிக்காவில் பணிபுரிந்த‌ அவ‌ரிட‌ம் அமெரிக்க‌ ம‌ருத்துவ காப்பீடு எதுவும் இருக்க‌வில்லை. ஒருநாள் அவ‌ர் புற்றுநோயால் தாக்க‌ப்ப‌டுகிறார். அமெரிக்காவில் சிகிச்சைப் பெற‌முடியாம‌ல் பிரான்சுக்கு திரும்புகிறார். அவ‌ர் பிரெஞ்சு அர‌சுக்கு வ‌ரியென்கிற‌ பெய‌ரில் ஒரு சென்ட் கூட‌ செலுத்திய‌தில்லை. அவ‌ரிட‌ம் பிரெஞ்சு ச‌மூக‌ பாதுகாப்பு எண் கூட‌ இருக்க‌வில்லை. ஆனாலும் அவருக்கு பிரெஞ்சு ம‌ருத்துவ‌ம‌னையில் இலவசமாக சிகிச்சைய‌ளிக்கப்ப‌டுகிற‌து. மூன்று மாத தீவிர சிகிச்சைக்கு பிற‌கு அவ‌ருடைய‌ ம‌ருத்துவ‌ரை சந்திக்கிறார். இப்போது நீங்க‌ள் ப‌ணிக்கு திரும்ப‌ இய‌லுமா என்று ம‌ருத்துவ‌ர் வின‌வ‌, அத‌ற்கு சிறிது கால‌ம் என‌க்கு ஒய்வு தேவைப்ப‌டும் என‌ அவ‌ர் கூற‌. உட‌னே அந்த‌ ம‌ருத்துவ‌ர் அந்த‌ நோயாளிக்கு மூன்று மாத‌ ஒய்வு தேவைப்ப‌டும் என்று குறிப்பெழுதி அர‌சுக்கு அனுப்புகிறார். அவ‌ர‌து மூன்று மாத‌ ஒய்வுகால‌த்தில் அவ‌ர‌து ச‌ம்ப‌ள‌த்தின் 65 ச‌த‌விகித‌த்தை அர‌சு அவருக்கு வ‌ழ‌ங்குகிற‌து.

இன்னொரு பிரெஞ்சு பெண்ம‌ணிக்கு அவ‌ர‌து பிர‌ச‌வ‌த்திற்கு பிற‌கு செவிலியாக‌ ஒரு பெண்ணை பிரேஞ்சு அர‌சே நிய‌மிக்கிற‌து. வார‌த்திற்கு நான்கு ம‌ணிநேர‌ம் அந்த‌ செவிலிப்பெண் அந்த‌ தாய்க்கு உத‌வி புரிகிறார்.

அடுத்து வருவதுதான் அமெரிக்க முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல் காயிதா தீவிரவாதிகளாக் நியூயார்கின் வர்த்தக மையம் தகர்க்கப்பட்டபோது மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்கிற காரணத்தினால் அவர்களது மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாண அரசுகள் மறுத்துவிடுகின்றன. அதேசமயத்தில் 9/11 சதிவேலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலையில் சர்வதேச தரமான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகின்றன.

இயக்குனர் மூர் இந்த தன்னார்வலர்களை ஒரு படகில் ஏற்றிக் கொண்டு குவான்டனாமோ பேயிற்கு புறப்படுகிறார். குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலை எல்லையில் நின்று இவர்கள் 9/11 தாக்குதலின்போது சேவை செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு கைதிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையை அளியுங்கள் என்று கூக்குரலிடுகிறார். ஆனால் பாவம் கேட்பார் யாருமில்லை.

அவர்கள் நால்வரும் எல்லைதாண்டி க்யூபாவிற்குள் நுழைகிறார்கள். அங்குள்ளவர்களிடம் விசாரித்து ஒரு மருத்துவமனைக்கு செல்கிறார்கள், அங்கு அவர்களின் பெயர், பிறந்த தேதி
மட்டும் பதிவேட்டில் எழுதிவிட்டு இலவசமாக சிகிச்சையளிக்கிறார்கள். மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்த கம்யூனிச தேசம்தான் அமேரிக்கர்கள் மத்தியில் ரவுடி தேசம் அமேரிக்க அரசியல்வாதிகளால் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்பதை உணர்கிறார்கள்.அடுத்து மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்குகிறார்கள். அமேரிக்காவில் 120 டால்ருக்கு விற்கப்படும் ஒரு மருந்து அங்கு வெறும் 5 சென்டுக்கு கிடைப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இலவசமாக அளிக்கப்படும் மருத்துவ சேவை அமெரிக்காவில் மட்டும் ஏன் வியாபார மயமாக்கப்பட்டது என்கிற கேள்வியுடன் முடிகிறது இந்த ஆவணப்படம்.இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஒடும் இப்ப‌ட‌த்தின் ஒரு சில‌ முக்கிய‌ ப‌குதிக‌ளையே நான் ப‌திந்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் முழுப் ப‌ட‌த்தையும் பாருங்க‌ள்.அமேரிக்கா போன்ற வ‌ல்ல‌ர‌சு நாட்டில் வாழ்வ‌தைவிட‌ பிரான்சு, க்யூபா போன்ற‌ ந‌ல்லர‌சு நாட்டில் வாழ்வதே ம‌னிதாபிமான‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளின் விருப்ப‌மாக‌ இருக்க‌க்கூடும்.

***

பின்குறிப்பு : இந்த படம் ஜுன் 2007ல் வெளிவந்தது. பொருளாதார நெருக்கடி துவங்குவதற்கு முன்பே அமெரிக்காவில் இந்த நிலைமை என்றால்... தொடங்கிய பிறகு நிலைமையை நம்மால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.



தொடர்புடைய பதிவுகள் :







July 31, 2009

நிதி நெருக்கடி : அமெரிக்காவில் 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்!

முன்குறிப்பு : நேற்று தான் 4 மாதத்தில் 32 வங்கிகள் என மே மாத இறுதி செய்தி பார்த்தோம். இப்பொழுது புதிய செய்தி 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்.

***

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 64 வங்கிகள் திவாலாகியுள்ளன. சராசரியாக மாதத்துக்கு 9 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா முழுமையாகச் சிக்கித் தவிப்பதையே இது காட்டுகிறது. இதிலிருந்து மீள அமெரிக்காவிற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க வங்கிகளில் கடந்த ஆண்டே நிதி நெருக்கடி தலை தூக்கத் தொடங்கிவிட்டது. 2008-ம் ஆண்டில் 25 வங்கிகள் திவலானதாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை இப்போதே இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. ஜூலை மாதத்தில் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செக்யூரிட்டி வங்கியின் கிளைகளாகும்.

இந்த வங்கிகளின் பெரும்பாலனவைகளின் மொத்த சொத்து மதிப்புக்கும் வங்கியில் உள்ள வாடிக்காளையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி மிகவும் குறைந்துவிட்டது. இதனால் சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. கிராம அளவில் செயல்படும் வாட்டர் போர்டு கிராம வங்கியும் நிதி நெருக்கடியின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

மிகப்பெரிய வங்கிகளான சிட்டி குரூப், கோல்ட்மேன் ஆகியவை மற்றுமே கடைசி காலாண்டு முடிவில் குறைந்த அளவு லாபத்துடன் செயல்பட்டுள்ளன. வட்டார அளவில் செயல்பட்டு வந்த வங்கிகள் அனைத்தும் நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும், பொருளாதார நிலைமை மேலும் மோசமாக என தெரிகிறது.

நன்றி : தினமணி (26.07.2009)

July 29, 2009

நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால்!



முன்குறிப்பு : அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகி வருகிறது. மாதம் ஒரு முறை இந்தந்த வங்கிகள் திவால் என செய்திகள் அறிவிக்கின்றன. இது உண்மையான திவாலா! என்பதும் முதலாளித்துவ சமுதாயத்தில் கேள்விக்குறியது. இந்த பொருளாதார மந்தத்தை பயன்படுத்தி கொண்டு, உலக முதலாளிகளிலிருந்து உள்ளூர் முதலாளிகள் வரை பல வகைகளில் நிறைய லாபம் பார்த்திருக்கிறார்கள். தொழிலாளர்களை மந்தத்தைக் காரணம் காட்டி மிரட்டி பணிய வைக்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சதியை நாம் புரிந்து கொள்ள இந்த செய்திகளை தொகுத்துப் பார்க்க வேண்டும். முதலில் செய்திகளை தொகுப்போம். பிறகு விவாதிக்கலாம்.

நியூயார்க்: 2009 புத்தாண்டு தொடங்கிய நான்கே மாதங்களில் 32 வங்கிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதாவது மாதத்துக்கு 8 வங்கிகள் என்ற விகிதத்தில் வங்கிகள் திவால் அல்லது பெரும் நஷ்டம் காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.

s1600-h/ameican_westbank.jpg">
இந்த திவாலான வங்கிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது சில்வர்டன் வங்கி, சிட்டிஸன்ஸ் கம்யூனிட்டி வங்கி மற்றும் அமெரிக்கா வெஸ்ட் வங்கி. நேற்று முன்தினம்தான் இந்த வங்கிகள் மூடப்பட்டன.

சில்வர்டன் வங்கிக்கு 4.1 பில்லியன் டாலர் சொத்துக்களும், 3.3 பில்லியன் டாலர் வைப்புத்
தொகையும் உள்ளன. ஆனாலும் கடன் காரணமாக இந்த வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

நாடு பொருளாதார மீட்சி நிலைக்கான அறிகுறி தெரியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்காவின் நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என மூடப்பட்டு வருவது அந்நாட்டு நிதித்துறையை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

2008-ம் ஆண்டிலிருந்து இததுவரை 57 வங்கிகள் அமெரிக்காவில் மூடப்பட்டுள்ளன.

நன்றி : தட்ஸ்தமிழ்

http://thatstamil.oneindia.mobi/news/2009/05/03/98821.html

January 16, 2009

கார்ப்பரேட் கிரிமினல்கள்


நன்றி : லைட்ங்க்

நீங்கள் துப்பாக்கி முனையில் யாரை யாவது மிரட்டி சில ஆயிரம் ரூபாய்களை கொள்ளையடித்தீர்களானால் இந்த நாட்டில் உங்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி. ஆனால் உங்கள் மீது நம்பிக்கை வைத்து மற்றவர்கள் கொடுக்கிற பெருவாரியான பணத்தை வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டால் உங்களுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கிடைக்காது. ஓராண்டோ அல்லது அதிகபட்சமாக மூன்றாண்டோ சிறைவாசம் மட்டுமே.

பசியால் துடிக்கிற ஒருவர் ஒரு கடையில் உணவுபொருளை திருடிவிட்டால் அவரை பல ஆண்டுகள் சிறைக்குள் தள்ள முடியும். ஆனால் இந்திய பங்குச் சந்தை, மையம் கொண்டிருக்கிற மும்பை தலால் தெருவில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் வாழ்க்கை முழுவதும் சேமித்த பணத்தை சூறையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. இதுதான், பெரும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் செய்யும் கடும் குற்றங்கள் மீதான இந்திய சட்ட நடைமுறையின் அதிகபட்ச பிரதிபலிப்பு.

பெரும் நிறுவன கிரிமினல்கள் மீது மிகவும் சாதுவான முறையில் நடந்து கொள்ளும் விதத்திலேயே இந்திய சட்ட அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது.

கடந்த புதன்கிழமை புத்தாண்டு கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. சில மணி நேரங்களிலேயே, இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்களில் ஒன்றான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில், தாங்கள் முதலீடு செய்திருந்த பணம் பங்குச்சந்தையில் காணாமல் போய்விட்டதை, ஆயிரக்கணக்கான இந்திய முதலீட்டாளர்கள் அறிந்து பதறினர்.
சத்யம் நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்று. உலகம் முழுவதும் பெரும் நிறுவனங்கள் என்று பட்டியலிடப் பட்ட 500 கம்பெனிகளில் இதுவும் ஒன்று.

இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக பங்குதாரர்களின் பணத்தை சூறையாடிய அதன் தலைவர் ராமலிங்க ராஜூ, தற்போது சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார். நேற்றுவரைக்கும் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து எதையும் செய்யாத இந்த கார்ப்பரேட் பிசினஸ் மேக்னட், இன்று சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறுவது விந்தையானது.

ராஜூவுக்கு தெரியும், இந்திய சட்ட அமைப்புமுறை தன்னைப்போன்ற பெரும் பணக்காரர்களுக்கு உதவியாகவே இருக்கிறது என்று. தான் சிறைக்கு செல்லப் போவதில்லை என்றும் அவருக்குத் தெரியும். ஒருவேளை அப்படி நடந்தாலும், முதலீட்டாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஏராளமான வழக்கறிஞர்களை விலைக்கு வாங்கி ஓரிரு நாட்களிலேயே அவரால் பெயிலில் வரமுடியும்.

சத்யம் நிறுவன ஊழல் இந்த நாட்டில் நடக்கிற முதல் ஊழல் அல்ல. ஹர்சத் மேத்தாவில்
துவங்கி, கேதன் பரேக் முதல் சி.ஆர்.பன்சாலி (பார்க்க: படம்) வரை நம்மிடம் ஏராளமான மோசடிப் பேர்வழிகளின் பட்டியல் இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த 5,651 கம்பெனிகளில், 2,750 கம்பெனிகள் மாயமாய் மறைந்து போய்விட்டன; சும்மா போகவில்லை, தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்களின் பணத்தை பல நூறு கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டு காணாமல் போய்விட்டன.

ஆனால் இவர்களுக்கெல்லாம் சட்ட ரீதியான தண்டனை கிடைத்ததா?

இந்த பெரும் ஊழல்களின் விளைவாக, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனார்கள். ஆயிரக்கணக்கானோர், தங்களது வாழ் நாள் சேமிப்பை இழந்தார்கள். ஆனால் குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப் படவில்லை.

உலகம் முழுவதும் பொதுவாக ஊழல் பேர்வழிகள் என்று வெறுப்புணர்வு உண்டாக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளை விட, இந்த கார்ப்பரேட் கிரிமினல்கள் ஆபத்தானவர்கள். ஊழல்செய்த அரசியல்வாதிகள் கூட, சில பல ஆண்டுகள் சிறையில் கழிக்கிறார்கள்.

இங்கு நடப்பதற்கு மாறாக சில வளர்ந்த நாடுகளில் கார்ப்பரேட் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படு கிறது. 2006ல் அமெரிக்காவில் நிதி நிறுவன ஊழல் செய்து மாட்டிக்கொண்ட ஜெப்ரி கே ஸ்கில்லிங்கிற்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார். மிகப்பெரும் ஊழலில் சிக்கிய என்ரான் நிறுவனத்தின் தலைவர் கென்னத் லே-க்கு
(பார்க்க: படம்) 20 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசம் துவங்குவதற்கு முன்னரே அவர் இறந்துபோனார். அந்த நிறுவனத்தின் ஊழலுக்கு உதவிய தணிக்கையாளர் ஆர்தர் ஆண்டர்சனின் நிறுவனம் மூடப்பட்டது.

நிதி முறைகேடு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்ட வேர்ல்டு காம் நிறுவனர்களில் ஒருவரான பெர்னார்டு எப்பர்ஸ் 25 ஆண்டு சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார்.

சத்யம் நிறுவனத்தில் ராமலிங்க ராஜூவும் அவரது கூட்டாளிகளும் நிதி கணக்குகளை கள்ளத்தனமாக மாற்றி எழுதியுள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட தண்டனைகளைப் போல இவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று சத்யம் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்க முடியுமா? இவர்கள் மேற்கொண்ட மோசடி கணக்குகளுக்கு சான்றிதழ் கொடுத்த ஆடிட்டர்களுக்கு சிறைவாசம் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? இதற்கு, ‘இல்லை’ என்று ஒரே பதில்தான் இருக்கிறது.

இந்திய தண்டனைச்சட்டம் 1860ல் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தை உருவாக்கிய தாமஸ்
பாபிங்டன் மெக்காலே, (பார்க்க: படம்) முற்றிலும் இன ரீதியான மற்றும் வர்க்க ரீதியான பாகுபாட்டோடுதான் இச்சட்டத்தை வடிவமைத்தார். இச்சட்டம் அப்போதைய பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும், அவர்களது இந்திய கூட்டாளிகளுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய நிதிக்குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட தண்டனை அளிக்கவில்லை.

பிரிட்டிஷ் இந்தியாவில், நிர்வாகத்திலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் பிரிட்டிஷ்காரர்களே உயர்அதிகாரிகளாக இருந்தனர். இவர்கள் நிதி தொடர்பான குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்தும், அவர்களது உள்ளூர் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஜமீன்தார்கள், ஏழை மக்களின் நிலங்களை மோசடி செய்து அபகரித்த போதிலும் அவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காதவிதத்தில் இந்திய தண்டனைச்சட்டம் வடிவமைக்கப்பட்டது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு உடல் ரீதியாக போலீசாரால் தண்டனை ஏதும் தரப்படாதவிதத்தில் இந்த சட்டம் அமலாக்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டை விட்டு போனபின்னரும், இந்த சட்டங்களில் சில, ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவானதாக இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய தண்டனைச்சட்டம் மட்டுமல்ல, வேறு சில நிதிச்சட்டங்களும் கூட இந்த வகைப்பட்டவையே. இப்படித்தான், பெரு மளவு வருமான வரி ஏய்ப்பு செய்தாலும் கூட வெகுசில மாதங்கள் மட்டுமே தண்டனை அளிக்கிற வருமான வரிச்சட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். வருமானவரி சட்டத்தில், பெரும்பாலான குற்றங்களுக்கு அபராதம் செலுத்தினால் போதும் என்றே விதிகள் உள்ளன.

இதனால்தான் வரி ஏய்ப்பும் மோசடியும் ஊக்குவிக்கப்படுகிறது. சிறிய வணிகர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை வரி ஏய்ப்பு எளிதாக செய்ய முடிகிறது. பலவீனமான சட்டங்கள் இருப்பது அவர்களுக்கு தெரியும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படித்தான் மெகா மோசடிகளை செய்ய அச்சமின்றி துணிந்துள்ளன. இவற்றை தண்டிக்க வலுவான சட்டங்கள் மட்டுமின்றி அரசியல் உறுதியும் தேவை. போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். மிகப்பெரிய பேரழிவு அது. ஆனால் இந்த நிறுவனத்தின் தலைவர் வாரன்
ஆண்டர்சன் (பார்க்க: படம்) கைது செய்யப்பட்ட அடுத்த நாளே வெளியில் வந்துவிட்டார். இந்திய தொழில் நிறுவனங்களின் வரலாற்றில் மிகப் பெரும் குற்றம் இழைத்த இந்த நிறுவனத்தின் தலைவரை, இந்த குற்றத்திற்கு எப்படி பொறுப்பாக்குவது என்று சட்டத்திற்கு தெரியவில்லை.

இந்தியாவில் புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்டங்கள், பழைய சட்டங்களில் திருத்தங்கள், நீதித்துறை ஆணையம் ஆகியவற்றை பற்றி தீவிரமாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன மோசடி வெளியாகியுள்ளது. இந்த மிகப்பெரும் கார்ப்பரேட் குற்றத்தை இந்திய சட்டம் எப்படி கையாளுகிறது என்பதை பார்ப்போம்.

நன்றி : http://lightink.wordpress.com

January 6, 2009

அமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”


இன்றைக்கு அமெரிக்க பொருளாதார திவாலுக்கு பிறகு, பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. எல்லாம் ஏற்கனவே பலமுறை பேசி, பேசி ஓய்ந்து புளித்துப்போன விசயங்கள். முதலாளித்துவம் அதன் தலை முதல் வால் வரை அனைத்தும் அழுகிவிட்டது.

மீண்டும் மீண்டும் எழும் பொருளாதார சுனாமியைத் தவிர்க்க இதோ மார்க்சியம் தீர்வு சொல்கிறது.

"உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு".

மார்க்சின் மூலதனத்தை இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். நன்றாக படிக்கட்டும்.

இனி மார்க்சியம் தான் உலகை ஆளும்.


October 20, 2008
Banking crisis gives added capital to Karl Marx’s writings
Roger Boyes in Berlin


Bankers of the world, unite! You have nothing to lose but your bonuses, houses in Esher, holidays in the Caribbean and your Jermyn Street shirts. The upside is that you have the time, at last, to read the complete works of Karl Marx.
The prophet of revolutionaries everywhere, the scourge of capitalism, is enjoying a comeback.
In Germany Das Kapital, which for the past decade has been used mainly as a doorstop, is flying off the shelves as the newly disenfranchised business class tries to work out the root of the present crisis.
“Marx is fashionable again,” declares Jörn Schütrumpf, head of the Berlin publishing house Dietz, which brings out the works of Marx and his collaborator Friedrich Engels. Sales have trebled – albeit from a pretty low level – since 2005 and have soared since the summer.... continues.
http://business.timesonline.co.uk/tol/business/economics/article4974912.ece
****
ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (பு.ஜ.வில் வெளிவந்த கட்டுரையின் இறுதிப் பகுதி தொடர்கிறது)

மார்க்சியமே உரைகல்


"முதலாளித்துவ உற்பத்தி முறையில், ஒரு நெருடிக்கடிக்கான தீர்வு இன்னொரு நெருக்கடிக்குத் தான் இட்டுச் செல்லும்; நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்கி, தமது ஏகபோக ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும்; நாடாளுமன்ற என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடி மறைக்கும் திரை'' என மார்க்சியம் முன்னறிந்து கூறிய பல உண்மைகளை இந்த "நெருக்கடி'' உலக மக்களின் முன்னே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது.

முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்ற சோசலிசம்தான் தீர்வு; உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு என்கிறது மார்க்சியம்.

ஆனால், முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களில் ஒரு சாரர், பங்குச் சந்தை சூதாட்டத்தைச் சட்டம் போட்டுக் கண்காணிக்க வேண்டும்; கள்ளனை விடக் காப்பாளன் திறமைசாலியாக இருக்க வேண்டும் எனத் தீர்ப்பு சொல்கிறார்கள். காகிதச் சட்டங்களின் மூலம் முதலாளித்துவத்தின் ஊழலையும், மோசடித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என நம்புவது கடவுள் நம்பிக்கையைவிட மூடத்தனமானது. முதலாளித்துவச் சட்டங்கள், சுண்டெலியை வேண்டுமானால் பிடிக்குமேயொழிய, பெருச்சாளிகள் தப்பிப் போவதைக் கண்டு கொள்ளாது.

பங்குச் சந்தை சூதாடிகளும், வங்கிகளும் 1930இல் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, கண்காணிப்புச் சட்டங்கள் போடப்பட்டன. 1990இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தடுக்க, பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் சட்டங்கள் நீக்கப்பட்டன. இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க, ""மீண்டும் சட்டம்கண்காணிப்பு'' என்பது கிழடு தட்டிப் போன தீர்வாகும்.

இன்னொரு பிரிவினரோ, "சந்தை தவறு செய்யாது; பேராசையால் தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக''க் கண்டுபிடித்து, "நிதி நிறுவனங்கள் பேராசையைத் துறக்க வேண்டும்'' என உபதேசித்து வருகிறார்கள். இந்த அறிவுரைக்கு முதலாளிகளின் பதில் என்ன தெரியுமா?

அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான "ஏ.ஐ.ஜி''க்கு, 8,500 கோடி
டாலர்களைக் கொடுத்து, அந்நிறுவனம் திவாலாகிவிடாமல் கை தூக்கி விட்டது, அமெரிக்க அரசு. இந்தப் பணம் கைக்குக் கிடைத்த மறுநிமிடமே, அந்நிறுவனம் முகவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில், கலிபோர்னியா மாநிலத்தில் மொனார்க் கடற்கரையில் உள்ள ஆடம்பரமான செயிண்ட் ரேகிஸ் உல்லாச விடுதியில் 4,43,000 டாலர் செலவில் களிவெறியாட்டக் கூத்தை நடத்தியது. ஏ.ஐ.ஜி. அதிகாரிகள் மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பது வெளியே கசிந்தவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதனால், ஏ.ஐ.ஜி. மற்றொரு களியாட்டக் கூத்தை நடத்த முடியாமல் கைகழுவியது; எனினும், ""நிகழ்ச்சி ரத்தானது தங்களைச் சோர்வடையச் செய்துவிட்டதாக''க் குறைபட்டுக் கொண்டார்கள், அதன் அதிகாரிகள்.

ஊதாரித்தனத்தையும், ஒட்டுண்ணித்தனத்தையும் கைவிட மறுக்கும் இக்கும்பலை, "சீட்டுக்
கத்தரித்து வாழும் சுகஜீவிகள்'' என அடையாளம் காட்டினார், லெனின். இச்சமூக விரோதக் கும்பலைப் போதனைகளால் திருத்திவிட முடியாது. இவர்களையும், இவர்களைப் பாதுகாக்கும் ஏகாதிபத்திய சமூகக் கட்டமைப்பையும் தூக்கியெறியும் போராட்டமே தீர்வாகும்!

• செல்வம்

நன்றி :
புதிய ஜனநாயகம் – நவம். 2008

December 31, 2008

அமெரிக்க செனட் சீட் விலைக்கு வேண்டுமா?



“ஒபாமாவால் உருவான செனட் காலிப் பதவியை விற்கக்கூடிய சில்லரைத்தனமான செயலை கவர்னரே செய்திருப்பதும் நடந்துள்ளது. இது பிக்பாக்கெட்டுக்குச் சமமான செயலாகும். பொதுமக்களின் பணத்தைச் சூறையாடுவதாகும்.”-

பத்திரிக்கையாளர் சாய்நாத் எழுதிய கட்டுரையிலிருந்து...

****

அமெரிக்க அதிபராக இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒபாமா, முன்பு இல்லியனாய்ஸ் மாகாணத்திலிருந்து செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயித்ததும் செனட் பதவியை நவம்பர் 18 – யன்று ராஜினாமா செய்துவிட்டார். ஏனென்றால்.. அமெரிக்க அதிபராய் இருப்பவர் வேறு எந்த அவையிலும் உறுப்பினராக இருக்ககூடாது. எந்த அதிகார பொறுப்பிலும் இருக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது.

அந்த காலியான செனட் பதவியை தான் இல்லியனாய்ஸ் மாகாண ஆளுநர் ராட் பிளகோஜெவிக் (ஒபாமாவுடன் படத்தில் இருப்பவர்) நல்ல விற்பனைக்கு விற்க முயன்ற நிலையில், பிடிபட்டு எப்.பி.ஐ. யால் டிசம். 9 தேதியன்று கைது செய்யப்பட்டார்.

இந்த செய்தி உலகம் முழுவதும் தெரிந்து நிலை மோசமான நிலையில் ஒபாமா உட்பட பலர் அந்த கவர்னரை ராஜினாமா செய்ய கோரியும், அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரைக்கும் கூட அமெரிக்க சட்டத்தில் தண்டிக்க இடம் இருக்கிறதாம். அதனால் என்ன? சட்டம், தண்டனை எல்லாம் ஏழை பாழைகளுக்கு தான்.

ஜாமீன் தொகையாக 4500 டாலர் கொடுத்து வெளியிலும் வ்ந்துவிட்டார்.


நேற்று இந்த கறைபடிந்த கவர்னர் அமெரிக்க செனட் உறுப்பினராக ரோலண்ட் டபிள்யூ. பூரிஸ் (காண்க : படம்) என்பவரை நியமித்தும் விட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களாகவும், மாகாண கவர்னர்களாகவும் அமர்ந்திருப்பவர்களின் யோக்கியதை இவ்வளவு தான்.

December 30, 2008

இன்றைய அமெரிக்காவின் நிலை!


இதுவரை 1 கோடியே 3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள். நவம்பரில் மட்டும் 5 லட்சத்து 33 ஆயிரம் பேர்.

(டிசம்பர் 6ந்தேதி நிலவரப்படி)

America isn't working: jobless total rockets to a 34-year peak
• In one month, 533,000 people join unemployed
• Wall Street pins its hopes on more Fed intervention


“Yesterday's announcement brings the jobless total to 10.3 million people out of a workforce of 154.6 million”

from :

http://www.guardian.co.uk/business/2008/dec/06/usemployment-useconomy

ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தாலே பதட்டமாய் மாறும் அமெரிக்கனின் வாழ்வில் ஜனவரி 2008ல் துவங்கிய இந்த வேலை இழப்பு, தொடர்கதையாகி வருகிறது.

பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பொழுதே, தற்கொலைகள் அதிகமாய் நடக்கும் தேசம் அமெரிக்கா! இனி கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கும்.

இப்படி பொருளாதார சுனாமியில் சிக்கித் தவிக்கிற மக்களை காப்பாற்றாமல், தனது தில்லுமுல்லுகளால் இந்த் சுனாமியை உருவாக்கிய முதலாளிகளை காப்பாற்ற துடிக்கிறது அமெரிக்க நாடாளுமன்றம். ஏனென்றால், செனட்டில் இருப்பவர்கள், மாகாண கவர்னர்களாய் அமர்ந்திருப்பவர்கள் பலர் முன்னாள் சூதாடிகள்.

தொடந்து வரும் கட்டுரையை படியுங்கள். உண்மை புரியும்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த ட்கட்டுரையின் 4-ம்பகுதி (பிற 3 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

அமெரிக்க நாடாளுமன்றத்தின் வேசித்தனம்

இக்கேடுகெட்ட கிரிமினல்தனத்தையும், ஒட்டுண்ணித்தனமான சுரண்டலையும் தட்டிக் கேட்க
வக்கற்ற அமெரிக்க நாடாளுமன்றம், இந்த ஊதாரித்தனத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு இச்சமூக விரோதக் கும்பலிடம் கெஞ்சுகிறது. உலகத்தில் எந்த மூலையில் ""தவறு'' நடந்தாலும் சண்டப் பிரசண்டம் செய்யும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ், இச்சூதாடிக் கும்பலிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மர்மம் என்ன?

அமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

பால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ""நன்கொடை'' கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

""வால்ஸ்ட்ரீட்'' சூதாடிகள் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம், நன்கொடை கொடுப்பது ஒருபுறமிருக்க, அவர்களே தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர், மேயர் பதவிகளைப் பிடித்து விடுகிறார்கள். அரசுப் பதவிகளை விலைக்கு வாங்குவதிலும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்தான் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன் முன்னாள் தலைவர் கோர்ஸைன் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் இருந்து செனட் சபைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தற்பொழுது அம்மாநில ஆளுநராகவும் இருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைவர்களாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃப்ரைடுமேன், ராபர்ட் ருபின், ஜோஸுவா போல்டன் உள்ளிட்ட பலர் கிளிண்டன், புஷ் நிர்வாகங்களில் அதிகாரமிக்க பசையுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்களால், மக்களுக்காக... என நீட்டிமுழக்கப்படும் மக்களாட்சியின் தத்துவம், அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் சூதாடிகளால், சூதாடிகளுக்காக, சூதாடிகளின் ஆட்சியாகவே இருக்கிறது.

உண்மை இப்படியிருக்க, அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கூட பாராக் ஒபாமா ஆட்சியைப்
பிடித்தால், அமெரிக்க மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒபாமாவோ தனது ஆலோசகராக ராபர்ட் ருபினை வைத்துக் கொண்டிருக்கிறார்.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ருபின், சப்பிரைம் லோன் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்த தளபதிகளுள் ஒருவர்; இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இலாபமடைந்துள்ள ""சிட்டி குரூப்'' வங்கியின் தற்போதைய தலைவர். எனவே, அமர்த்யா சென் போன்ற அறிஞர்களின் ஜோசியம், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் முட்டாள்தனத்தைப் போன்றதுதான்!

• செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 29, 2008

அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்!

மருத்துவரை சந்திக்க காத்திருந்த வேளையில் என்னருகே நடுத்தர வயதில் ஒருவரும் காத்திருந்தார். நிறைய செய்திதாள்கள், நிறைய சங்கதிகள் கொண்ட தாள்களைப் புரட்டிக்கொண்டேயிருந்தார். பேச்சுக்கொடுத்தேன்.

‘நீங்கள் பங்குச்சந்தை முகவரா?’

‘ஆம்’ என்றார்.

'அமெரிக்கா - மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதே! என்ன காரணம் சார்?'

‘சப் பிரைம் லோன்’ தான் காரணம். வங்கிகள் கடனைக் கட்ட வசதியில்லாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தது தான் காரணம்’ என்றார்.

‘இதை பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு இதுதான் உண்மையான காரணமா சார்? ’

‘நீங்கள் சொல்வது சரி தான். இதையும் மீறி அங்கு என்னவோ நடந்திருக்கு. ஆனால் உண்மையை மறைக்கிறார்கள்” என்றார்.

****

இந்த மாபெரும் நெருக்கடிக்கு திரைமறைவில் நடந்த விவகாரங்களை ஒவ்வொன்றாக அலசிக் கொண்டே வருகிறோம்.

திவாலான மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்த நெருக்கடிக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்கள். என்ரான் விசயத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் துணை நிர்வாகிகள் எப்படி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள் என ஏற்கனவே பார்த்தோம்.

மக்கள் தங்களுடைய சேமிப்பு பணங்களை மிகப்பெரிய நிறுவனங்களில் போட்ட பணம் எல்லாம் செல்லாக்காசுகளாக மாறிப்போய்விட்டன. ஆனால், அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் எப்படி லாபம் சம்பாதித்தார்கள் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது. படியுங்கள்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. – புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையின் 3ம்பகுதி (2 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

நிதி நிறுவன அதிபர்களின் ஒட்டுண்ணித்தனம்

லேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பியர் ஸ்டெர்ன்ஸ் உள்ளிட்டுப் பல நிதி நிறுவனங்களும்,
வங்கிகளும் திவாலாகிப் போனதால், அந்நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் போண்டியாகிப் போனார்கள் எனக் கருத முடியாது. இச்சூதாடிகள் எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவதில் கில்லாடிகள் என்பதால், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி நகர நகர, இவர்களின் சம்பளமும் போனசும் எகிறிக் கொண்டே போயின.

உலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத்
திவாலாகி விட்ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.

மெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக
அதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டுஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.

இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.

இத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமில் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை; இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்.

என்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், ""தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது'' என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்.

- செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 26, 2008

இன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்!

அமெரிக்காவில் ஆதரவற்றவர்களுக்கு, அனாதைகளுக்கென்று இலவச உணவு தரும் ஒரு விடுதி இருக்கிறது. தினமும் 1250 நபர்களுக்கு மட்டும் உணவு தருகிறது.

அமெரிக்க திவாலுக்கு பிறகு இன்றைக்கு அந்த விடுதியில் கூட்டம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம் . தினமும் 1600 பேருக்கு மேலாக குவிகிறார்களாம். சமாளிக்கமுடியவில்லை என அந்த விடுதியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

- நன்றி - ‘மக்கள் செய்திகள் – 26.12.2008

****

அமெரிக்க மக்களின் நிலை இப்படி பரிதாபமாய் இருக்கிறது. இவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாத அமெரிக்க அரசு, பல தில்லுமுல்லுகளால் திவாலாகிப் போன அல்லது திவால் நோட்டீஸ் கொடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்து அரசிடம் (மக்களின் வரிப் பணத்தை) நிதி கேட்கும் பல்வேறு முதலீட்டு வங்கிகள், வங்கிகள், நிதி நிறுவனங்களளை கை தூக்கி விடுவதற்காக 70000 கோடி அமெரிக்க டாலர்களை அள்ளித்தர முடிவு செய்திருக்கிறது.

அதில் நடக்கும் தில்லு முல்லுகளை பின்வரும் கட்டுரை விவரிக்கிறது. முதல் பாதி ஏற்கனவே பதிவில் போட்டாயிற்று. இரண்டாம் பகுதி தொடர்கிறது.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.

பேய் அரசாண்டால்...


இந்த "நெருக்கடி''யின் இரண்டாவது அத்தியாயம் நிதி ஆதிக்கக் கும்பலைக் கைதூக்கி விடும் படலம், முதல் அத்தியாயத்தைவிட மிகவும் சுவையானது. மிரட்டல், கூட இருந்தே குழி பறித்தல், கழுத்தறுப்புப் போட்டியில் ஒரு நிறுவனம் இன்னொன்றை விழுங்குதல், அரசு தூக்கியெறிந்த எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்ள நாய்ச் சண்டை போடுதல் என்ற முதலாளித்துவத்தின் நவரச "நற்குணங்களையும்' இதில் காண முடிந்தது.

"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயத்தில்தான் 2006இல் ஹென்றி ஜெ.பால்சன் என்பவர் அமெரிக்காவின் நிதி மந்திரியாக (Treasury Secretary)
நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்தில் நடந்த "வாட்டர் கேட்'' ஊழலின் முக்கியப் பங்காளியாக இருந்து தண்டிக்கப்பெற்ற ஜான் எர்லிச்மேன் என்ற அதிகாரியின் கீழ் நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டவர்தான் நிதி மந்திரி பால்சன். (படத்தில் புஷ்யுடன் இருப்பவர்)

1974இல் கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியில் நுழைந்த பால்சன், 1998இல் ஒரு
அதிரடிக் கவிழ்ப்பின் மூலம், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியைக் கைப்பற்றினார். ஏறத்தாழ 53 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான கோல்டன் சாக்ஸ் நிறுவனப் பங்குகள் பால்சனிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. "முதலீடு செய்வதில் துணிந்து சவால்களைச் சந்திக்கக் கூடியவர்'' என முதலாளித்துவப் பத்திரிகைகள் பால்சனைப் புகழ்ந்து தள்ளுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நிதி மந்திரி பால்சன் கைதேர்ந்த சூதாடி.

பால்சன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து
கோல்டுமேன் சாக்ஸையும், அந்நிறுவனத்தில் இருந்த தனது முதலீட்டையும் பாதுகாத்துக் கொண்டதோடு, கோல்டுமேன் சாக்ஸுக்கு எதிரான முதலீட்டு வங்கிகளை ஒழித்தும் கட்டினார். லேமேன் பிரதர்ஸ் என்ற முதலீட்டு வங்கி திவாலாகவும்; ஜே.பி.மார்கன்சேஸ், பியர் ஸ்டெர்ன்ஸ் நிறுவனத்தையும்; பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லிஞ்ச் நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் அனுமதித்த பால்சன், இதன் மூலம் கோல்டுமேன் சாக்ஸை அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளுள் ஒன்றாக மாற்றினார்.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அரசின் ஆதரவோடு பல நிறுவனங்களை விழுங்கிய பாங்க் ஆப் அமெரிக்கா, ஜே.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் ஆகிய மூன்று வங்கிகளும், அமெரிக்காவின் மொத்த வங்கி சேமிப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. நெருக்கடிக்கு முன்பாக 21.4 சதவீதமாக இருந்த இம்மூன்று வங்கிகளின் சேமிப்பு, இன்று 30 சதவீதத்தை நெருங்கி விட்டது.

வங்கி முதலாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் நடுத்தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம், நிதி மந்திரி பால்சனும் அம்முதலாளிகளைக் கரையேற்ற 70,000 கோடி அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு மானியமாக வாரிக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றம், மக்களின் போராட்டத்தால் இந்த மானியத்திற்கு ஒப்புதல் கொடுக்கத் தயங்கிய பொழுது, நிதி மந்திரி பால்சன், "பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்'' என்ற தொனியில் மிரட்டியிருக்கிறார். பால்சன் மிரட்டலாகச் சொன்னதை, வங்கி முதலாளிகள் பங்குச் சந்தையைக் கவிழ்த்துச் செய்து காட்டினார்கள்.


அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ""வால் ஸ்ட்ரீட்'' சூதாடிகள் வீசி எறியும் எலும்புத் துண்டுக்குக் காத்துக் கிடக்கும் நாய்கள் என்பதால், தங்களின் முனகலைக் குறைத்துக் கொண்டு, சூதாடிகளுக்கு மானியம் வழங்கும் இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, அதற்காகத் தனிச் சட்டத்தையும் உருவாக்கினார்கள்.

இந்தச் சட்டம், "மதிப்பிழந்து கிடக்கும் சொத்துக்களை, எந்த வங்கியிடமிருந்தும், என்ன விலை கொடுத்தும் வாங்குவதற்கான அதிகாரத்தை'' நிதி மந்திரி பால்சனுக்கு அளிக்கிறது. மேலும், "பொருளாதாரச் சரிவைத் தடுக்கும் நோக்கங்கொண்ட'' பால்சனின் இந்த முடிவுகளை, எந்தவொரு நீதிமன்றமோ, அரசின் வேறெந்தப் பிரிவோ கேள்வி கேட்கவோ, அதனை மறுபரிசீலனை செய்யவோ உரிமை கிடையாது என்ற உள்விதியும் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை "பொருளாதாரப் பொடா'' எனலாம். பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய அதிகாரிகளைத் தண்டிக்க முடியாது என்பது போல, இந்த மானியத் திட்டத்தை பால்சன் உள்நோக்கத்தோடு தவறாகப் பயன்படுத்தியிருந்தாலும், அவரை எதிர்காலத்தில் கூடத் தண்டித்துவிட முடியாது. ஊழலுக்கு, இதைவிட அதிகபட்ச சட்டபூர்வ பதுகாப்பை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது.

இந்த 70,000 கோடி டாலர் பெறுமான மானியத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அமெரிக்க வங்கிகளுக்கிடையே நாய் சண்டையே நடந்து வருகிறது. நிதிமந்திரி பால்சன், தான் பங்குதாரராக உள்ள கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மற்றவர்களை விட முந்திக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் காய்களை நகர்த்தி வருகிறார். இப்பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்காக,
நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய துறைக்கு நீல் கஷ்காரி என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மந்திரி பால்சன், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்தபொழுது, அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து, பால்சனின் கையாளாகச் செயல்பட்டவர்தான் நீல் கஷ்காரி.(படத்தில் இருப்பவர்)

அமெரிக்க வங்கிகளிடம் அடமானமாகக் கிடக்கும் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்காக நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள துறைக்கு வில்லியம் கிராஸ் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற வதந்தி அடிபடுகிறது. வில்லியம் கிராஸ், பால்சனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, திவாலாகிப் போன ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு அடமான நிறுவனங்களை அமெரிக்க அரசு தேசியமயமாக்கியபொழுது, அதன் மூலம் 1,700 கோடி அமெரிக்க டாலர்களை இலாபமாகச் சுருட்டிக் கொண்டத் திருட்டுப் பேர்வழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008