> குருத்து: நிதி நெருக்கடி : அமெரிக்காவில் 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்!

July 31, 2009

நிதி நெருக்கடி : அமெரிக்காவில் 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்!

முன்குறிப்பு : நேற்று தான் 4 மாதத்தில் 32 வங்கிகள் என மே மாத இறுதி செய்தி பார்த்தோம். இப்பொழுது புதிய செய்தி 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்.

***

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 64 வங்கிகள் திவாலாகியுள்ளன. சராசரியாக மாதத்துக்கு 9 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா முழுமையாகச் சிக்கித் தவிப்பதையே இது காட்டுகிறது. இதிலிருந்து மீள அமெரிக்காவிற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க வங்கிகளில் கடந்த ஆண்டே நிதி நெருக்கடி தலை தூக்கத் தொடங்கிவிட்டது. 2008-ம் ஆண்டில் 25 வங்கிகள் திவலானதாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை இப்போதே இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. ஜூலை மாதத்தில் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செக்யூரிட்டி வங்கியின் கிளைகளாகும்.

இந்த வங்கிகளின் பெரும்பாலனவைகளின் மொத்த சொத்து மதிப்புக்கும் வங்கியில் உள்ள வாடிக்காளையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி மிகவும் குறைந்துவிட்டது. இதனால் சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. கிராம அளவில் செயல்படும் வாட்டர் போர்டு கிராம வங்கியும் நிதி நெருக்கடியின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

மிகப்பெரிய வங்கிகளான சிட்டி குரூப், கோல்ட்மேன் ஆகியவை மற்றுமே கடைசி காலாண்டு முடிவில் குறைந்த அளவு லாபத்துடன் செயல்பட்டுள்ளன. வட்டார அளவில் செயல்பட்டு வந்த வங்கிகள் அனைத்தும் நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும், பொருளாதார நிலைமை மேலும் மோசமாக என தெரிகிறது.

நன்றி : தினமணி (26.07.2009)

0 பின்னூட்டங்கள்: