> குருத்து: இந்துத்துவம்
Showing posts with label இந்துத்துவம். Show all posts
Showing posts with label இந்துத்துவம். Show all posts

June 13, 2022

சனாதன தர்மம் என்றால்?


ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது,"

- ஆளுநர் ரவி.
”சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம் என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.

பகவத் கீதையில் கிருஷ்ணன் என்கிறவன் தானே கடவுள் என்கிறான். மக்களை நான்கு வகையாய் பிரித்தவன் தானே என்கிறான். ஓரொர் பிரிவுக்கும் அடிப்படையாக ஒரு குணம் என்கிறான். இந்த அடிப்படை குணம் என்பது innate அல்லது inborn அதாவது கூடவே வருவது அதவாவது பிறவியில் உண்டானது என்கிறான். பிராமணனை உன் குணப்படி கோயில் பூசாரியாக கடமையை செய் என்கிறான். சத்திரியனை பார்த்து அரசாங்கம் சண்டை கடமைகளை செய் அதற்க்கான குணம் உண்டு என்று சொல்கிறான். வைசியன் என்பவனைப்பர்த்து மாடுகள் வளர்த்து அதற்க்கான குணம் உனக்கு உண்டு என்றான். இவர்களை இரண்டுமுறை பிறந்த உயர் பிறவிகள் என்றான். நான்காவதாக உள்ள சூத்திரர்களைப் பார்த்து குணம் ஏதும் சொல்லாமல் முன் கூறிய மூவருக்கும் வேலையாளக இரு என்றான். இந்த பிரிவினையை செயத தன்னாலேயும் மாற்ற முடியாது என்றும் சொன்னான்.

கிருஷ்ணன் இது மட்டுமா சொன்னான்? அவரவர் கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றான். சூத்திரன் எவ்வளவு தான் வீரமுள்ளவனாய் இருந்தாலும் சத்திரியன் கடமை வேலை செய்யக்கூடாது என்றான். சத்திரியன் எவ்வளவு தான் படித்திருந்தாலும் பூஜை வேலைகளை செய்யக்கூடாது என்றான். அப்படி செய்தால் பாவங்கள் உண்டாகும் என்றான். இந்த பாவங்கள் அடுத்த பிறவியில் தொடரும் என அச்சுரித்தினான். இன்னும் சொல்கிறான் மற்ற கொள்கைகளை மதங்களை ஒதுக்குகுங்கள் என்றான். தன்னை வழிபாடு செயதால் கீழுள்ள பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மாட்சிமை அடையலாம் என்றான். இதெல்லாம் இரகசியம் என்றான்.”

- இணையத்தில் இருந்து...
****
சுருக்கமாக சனாதன தர்மத்தை மக்கள் கடைப்பிடிப்பது மூலம் இந்த மண்ணிலேயே அவர்களுக்கான சொர்க்க பூமியை உருவாக்குவது தான் அவர்களின் நோக்கம். நமக்கெல்லாம் செத்ததுக்கு பிறகு தான் ”சொர்க்கம்”.

February 18, 2022

Ramanujan (2014) தமிழ்ப்படம் – ஒரு பார்வை

 




கணித மேதை இராமனுஜரின் கதை (1887 – 1920)

துவக்கப் பள்ளிச் செல்லும் வயதில் இருந்து படம் துவங்குகிறது. ”பூஜ்யத்திற்கு மதிப்பில்லை” என பாடம் நடத்தும் ஆசிரியரிடம் ”மதிப்பு உண்டே” என முரண்படுகிறார். கல்லூரி படிக்கும் பக்கத்து வீட்டு அண்ணனின் கணித புத்தகத்தை படிக்க கேட்கிறார்.  சிரித்துக்கொண்டே கொடுக்கிறார்.  அடுத்தநாள் திரும்ப தரும் பொழுது, ”படித்து முடித்துவிட்டேன்” என்கிறார். சந்தேகம் எழுப்பினால், தயக்கம் இல்லாமல் பதில் அளிக்கிறார். வியந்துபோகிறார்கள்.

கணிதம், கணிதம் என எப்பொழுதும் கணிதத்திலேயே இருக்கிறார். பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண்ணோடு தேறுகிறார். ஆனால், கல்லூரியில் மற்ற பாடங்களில் கவனம் செலுத்ததால், தோல்வியடைகிறார்.  அவரின் குடும்பமோ எப்பொழுதும் வறுமையிலேயே இருக்கிறது. மூத்தவனான இராமனுஜன் ஏதாவது நல்ல வேலைக்கு போவான் தங்கள் சிரமம் தீரும் என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது, இவரின் நிலை கவலை அளிக்கிறது. வழக்கம் போல கல்யாணம் முடித்தால், பொறுப்பு வந்துவிடும் என அவருக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள்.

இராமனுஜரின் திறமையை புரிந்துகொண்டு இப்பொழுது சென்னை (அப்பொழுதைய மதராஸில்) ”இவர்களை எல்லாம் போய் பார்” என அனுப்பிவைக்கிறார் உள்ளூர்காரர்.  சிலர் நிராகரித்தாலும், அரசு அதிகாரியான இங்கிலீஷ்காரர் அவரை ஆதரிக்கிறார். துறைமுகத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறார்.

இன்னொரு வெள்ளைக்காரர் இவருடைய திறனை அறிந்து, இன்னும் சலுகைகள் தருகிறார். இராமனுஜர் பிரிட்டனில் உள்ள கணித அறிஞர்களுக்கு கடிதம் எழுதுகிறார்.   அதில் ஒருவர் அவரின் திறமையை கண்டறிகிறார்.  1914ல் பிரிட்டனுக்கு வரவழைக்கப்பட்டு, கேம்பிரிட்ஜில் படிக்க துவங்குகிறார். அவருடைய கணிதத்தில் உள்ள மேதைமையை அறிந்து, பல்கலை கழகம் அங்கீகரிக்கிறது. அதன் மூலம் உலக அளவில் பெரிய அங்கீகாரம் பெறுகிறார்.

பிரிட்டனில் படிக்கும் காலத்திலேயே அவரை டி.பி என்கிற காச\நோய் தாக்குகிறது. அப்பொழுது அதற்கான மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை. பலவீனமாக இருக்கும் அவரை குணமாக்க அசைவம் சாப்பிட மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்  அசைவம் சாப்பிட மறுக்கிறார். முதல் உலகப்போர் காலம் என்பதால், அவர் இந்தியா வருவதற்கு தாமதமாகிறது. 1919ல் இந்தியா வரும் பொழுது மிகவும் சிக்கலான நிலையில் வந்து சேர்கிறார்.  1920ல் அந்த கணித மேதை 33வயதில் மரணிப்பதோடு படம் முடிவடைகிறது.

****

உலகம் கடந்து வந்த பாதையில் இந்தியாவின் பங்குக்கு தசம எண்களை தந்ததிலும், இராமனுஜரின் பங்கும் முக்கியத்துவமானவை என்கிறார்கள்.  அவருடைய கண்டுபிடிப்புகளான எண்களின் பகுப்பாய்வு கோட்பாடு, நீள்வளையச்சார்புகள், தொடரும் பின்னங்கள் மற்றும் முடிவிலா தொடர்கள் ஆகியவை அவருடைய கணித தேற்றங்களில் சில. அவைகள் நூற்றாண்டுகள் கடந்தும் நாம் பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரத்திலும், ஆன்ட்ராய்டுகளிலும் இன்றும் பயன்படுகின்றன. அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக இராமனுஜரின் பிறந்த நாளான டிசம்பர் 22ந் தேதியை தேசிய கணித தினமாக இந்தியா அறிவித்துள்ளது.

படத்தில்…. கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் இராமனுஜரின் கணிதத் திறமையை புரிந்துகொள்கிறார்கள். அவரிடம் விவாதிக்கிறார்கள். “நீங்கள் ஒரு கணிதத்தை போட துவங்குகிறீர்கள். உடனே அதன் விடையை சொல்லிவிடுகிறீர்கள்.  நீங்கள் ஒவ்வொரு படியாக (Step by Step) போகாததால்,  எங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை”. அதற்கு, இராமனுஜர் ”ஒரு கணக்கை போட துவங்கும் பொழுதே அதற்கான பதில் உடனே நினைவில் வந்துவிடுகிறது.. எழுதிவிடுகிறேன். அடுத்த கணிதம் என்னை உள்ளிழுத்துவிடுகிறது. அதை போட துவங்கிவிடுகிறேன்” என்கிறார்.

இராமனுஜர் ”சாதியில்” அய்யங்கார்.  அவரை பிரிட்டனுக்கு அழைக்கும் பொழுது, கடல் கடந்து சென்றால், ”சொந்த சாதியைச்” சேர்ந்தவர்கள் தள்ளி வைத்துவிடுவார்கள் என அம்மா அழுகிறார்.  ”அப்ப நான் போகவில்லை” என்கிறார். அறிவியலின் மீதான பிரியத்தால், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள், இந்தியாவின் வங்காளத்திலிருந்து இருந்து படிக்கும் ஒருவரை அழைத்து கேட்கிறார்கள்.  ”அது அதுக்கு உரிய பரிகாரம் செய்துவிட்டால் போதும்” என்ற இரகசியத்தை சொல்கிறார். பிறகு தான் இராமனுஜரை வரவழைக்கிறார்கள்.  இதே சாதிக்காரர்கள் தான், இராமனுஜர் இறக்கும் தருவாயில், வெளிநாடு போனதால் தான் இந்த நிலை. இங்கிருந்தால் நமக்கும் அந்த தோஷம் பிடித்துவிடும் என தலை தெறிக்க ஓடிவிடுகிறார்கள்.  அவர் மீது மரியாதை கொண்ட மற்ற ”சாதிக்காரர்கள்” தான் இறுதி காரியங்களையும், மரியாதையும் செய்கிறார்கள்.

இராமனுஜர் வெளிநாடு செல்ல அழைப்பு வரும் பொழுது, அவருடைய அம்மா ”ஏற்கனவே நீ உடல் சரியில்லாதவன். அங்குள்ள குளிர் ஒத்துக்காது. ஆகையால் போகாதே!” என்கிறார்.  எதிர்பார்த்தது போலவே உடல்நிலை சிக்கல் வருகிறது. கணக்கிலேயே நேரம் காலம் தெரியாமல் மூழ்கி இருப்பதால், சாப்பாட்டையும் தவறவிடுகிறார். அங்கு சைவ உணவு சரியான பக்குவத்தில் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. உடல்நிலையை சரி செய்ய மருத்துவத்திற்காகவாவது அசைவம் சாப்பிட மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.  நிலைமைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறார். உடல்நிலை இன்னும் மோசமாகிறது.

இராமனுஜருடைய துணைவியாரை வரவழைக்கலாம். உடனிருந்து சமைத்து பார்த்துக்கொள்வார் என ஆலோசனை சொல்கிறார்கள். அவரும் கடிதம் எழுதுகிறார். விசயத்தின் முக்கியத்துவதை உணராமல், அவருடைய அம்மா கடுமையாக மறுத்துவிடுகிறார்.  அதற்கு பிறகான காலத்தில் ஒரு இடத்தில் காரணம் சொல்வார். ஒரு ஜாதககாரன் “உன் மகன் அல்ப ஆயுசிலேயே செத்துருவான். அவன் பொண்டாட்டியை அவன் கூட இருக்கவிடாமல் பார்த்துக்கொண்டால், ஆயுசு கூடும்” என சொன்னதாக சொல்வார்.  இராமனுஜரை கொன்றது பாதி நோய் என்றால், சடங்குகளும், பகுத்தறிவு அற்ற உணவு பழக்கமுறையும் மூட நம்பிக்கைகளும் தான் பாதி கொன்றிருக்கின்றன. படத்தில் வெவ்வேறு இடங்களில் இராமனுஜர் அழுவார்.  அவர் மனதார ஏற்றுக்கொண்ட சாதி, மத மூட நம்பிக்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் சிக்கி கொண்டதால் வந்த அழுகை தான் என்பதாகத் தான் எனக்குப்பட்டது.

படம் பார்க்கும் பொழுது, உடைமையிலும், அதிகார வர்க்கத்திலும் என உயர் மட்ட இடங்களிலும்  ”உயர் சாதியில்” பிறந்தவர்களின் ஆதிக்கம் நன்றாகவே பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு ”உயர் சாதியில்’ பிறந்த இராமனுஜரையே அங்கீகரிக்க முடியாமல், சோத்துக்கு வழியில்லாமல் அல்லாட விட்டிருக்கிறார்கள்.  வெளிநாடு போகவேண்டும் என்ற நிலையில் சாதிய பழக்க வழக்கங்களை, சடங்குகளை சொல்லி, கட்டையை போட்டிருக்கிறார்கள்.  இதே இராமனுஜர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால், இவர்கள் எல்லாம் எப்படி கையாண்டிருப்பார்கள்? என்ற சிந்தனை வருவதை தவிர்க்கமுடியவில்லை.

இப்படி எல்லா இடங்களிலும் தங்கள் அதிகாரம் கொண்டிருந்த பார்ப்பனர்களாலும், ஆதிக்கச் சாதியை சேர்ந்தவர்களாலும், கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த சமூக மாற்றத்தை பொறுக்க முடியாமல் தான், இந்த மண்ணிலேயே தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்க தான் ஆர்.எஸ்.எஸ் துடிக்கிறது. பொய் பிரச்சாரங்கள், கலவரங்கள் என சாம, தான, பேத, தண்ட என எல்லா வழிகளிலும் முயல்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடியதால் தான் அந்த இருண்ட காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். மீண்டும் அதே காவி இருளில் விழாமல் இருக்க.  இப்பொழுதும் அதே ஒற்றுமையுடனும், உறுதியோடும் எதிர்கொள்ளவேண்டும்.

மற்றபடி, இராமனுஜராக நடிகை சாவித்திரியின் பேரனான, பிக்பாஸ் புகழ் அபினய் வருகிறார். சரத்பாபு, சுஹாசினி, இராதாரவி, செல்வா, நிழல்கள் ரவி என தெரிந்த முகங்களாக பலரும் வருகிறார்கள். அனைவரும் கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள்.  ”பாரதி” படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். யூடியூப்பில் இலவசமாகவே பார்க்க கிடைக்கிறது. பாருங்கள்.

June 1, 2018

ஜியானின் ’நல்ல நினைவுகளும்’, மோடியின் நான்காண்டு ’சாதனைகளும்”!


டோரிமான் தொடரில் வருகிற ஜியான் ஒரு முரட்டு பையன். அவன் ஒரு நாள் தெருவில் நடந்து வர, எதிரே வீட்டு நாயொன்று தெருவில் வருகிறது. அவனைப் பார்த்ததும் அவனுடன் ஒட்டிக்கொள்கிறது. சிறிது நேரத்தில் ஜியான் வயதில் ஒரு பெண் அந்த நாயை தேடி வருகிறாள். தங்கள் நாய்க்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, மிகுந்த ”நன்றி” சொல்கிறாள். ”தங்கள் நாய், நல்லவர்களிடம் மட்டுமே போகும். நீங்கள் நல்லவர்” என பாராட்டு பத்திரமும் தருகிறாள். 

இந்த ‘நல்ல’ நினைவோடு, உற்சாகமாய் விசிலடித்துக்கொண்டே தெருவில் வருகிறான். எதிரே வந்த பையன் கவனமில்லாமல் இவன் மீது மோத இருவரும் தெருவில் உருள்கிறார்கள். ஜியான் எழுந்து, அந்த ‘நல்ல’ நினைவை நினைத்துப் பார்க்கிறான். மோதிய அதிர்ச்சியில் அந்த ‘நல்ல’ நினைவு கலைந்துவிடுகிறது. செம கடுப்பாகி, மோதியவனை துவைத்து எடுக்கிறான்.

***

மோடியின் கடந்த நான்கு ஆண்டு செயல்பாடுகளான பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமுலாக்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், நீட்டை அமுல்படுத்தியது என மக்களை இடைவிடாமல் தொடர்ச்சியாய் தாக்கிக்கொண்டு, எப்பொழுதும் பதட்டமாக தான் வைத்திருக்கிறது. மக்கள் முன்பு சேமித்து வைத்திருந்த சில ’நல்ல’ நினைவுகளும் தொலைதூரத்திற்கு காணாமல் போய்விட்டன.

ஜியான் நல்ல வலுவான பையன். அதனால் எதிராளியை துவைத்து எடுத்துவிட்டான். பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் தனித்தனியாக போராடிக்கொண்டிருப்பதால், நம்மால் துவைக்க முடியவில்லை. நாம் எல்லோரும் ஓரணியில் திரண்டு போராடினால், நமக்கும் சாத்தியம் தான்! நமக்கும் நிறைய நல்ல நினைவுகள் நிச்சயமாய் கிடைக்கும்! 

June 22, 2015

யோகாவும் ஆர்.எஸ்.எஸ்.யும்!

மோடி அரசின் கோரிக்கையை ஐ.நா. அங்கீகரித்து ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினம் என அறிவித்து இருக்கிறது. யோகாவை கல்லாக் கட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம் பம்பரம் போல சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்து மாடுகளுக்கு தருவார்கள். அதுபோல இந்துத்துவவாதிகள் யோகாவிற்குள் இந்துத்துவ கருத்துக்களை வைத்து தந்துகொண்டிருக்கிறார்கள். இனியும் தருவார்கள்.

வீட்டிற்கு அருகில் உள்ள பார்க்கில் காலையில் இரண்டே இரண்டு ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவரின் வாரிசுகள் ஏதோதோ புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்லி, தரையில் எதையும் விரிக்காமல் மண் தரையிலேயே உருண்டு புரண்டு உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். இன்று யோகா தினத்தை சாக்காக வைத்து 20 பேரை திரட்டியிருந்தார்கள்.

நான் யோகா எதிர்ப்பாளன் எல்லாம் கிடையாது. கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக யோகா வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5.30 முதல் 6.30 வரை போய்க்கொண்டிருக்கிறேன். ஆஸ்துமா தொந்தரவு இருந்தபடியால், மூச்சுப்பயிற்சிக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் துவக்கத்தில் போனேன். 1 வருடத்தில் ஹோமியோபதி மருந்தினாலும், யோகாவின் உதவியினாலும், உணவுக் கட்டுப்பாட்டினாலும் ஆஸ்துமாவிலிருந்து விடுதலை பெற்றேன். இருப்பினும், மரபு வழியாக வந்த நோய் என்பதால், அதன் வேர் இன்னும் உடலில் இருப்பதால், தொடர்ந்து யோகாவை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

யோகா செய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கமுடியும். ஏதேனும் ஒரு நோயில் சிரமப்பட்டுக்கொண்டிப்பவர்கள் யோகாவை தொடரும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளமுடியும். யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்கள் வெகு சீக்கிரத்தில் நின்றுவிடுவார்கள். நாலுநாள், 10 நாள், 30 நாள், 6 மாதம் என நின்று போனவர்கள் அதிகம். பகுதியில் நான்கு வருடங்களில் பாதிபேரை யோகாவை வைத்தே பழக்கமாகியுள்ளேன்.

திருமணத்தில் ஐயர் ஓதுவது போல யோகா வாத்தியார்கள் அதன் செய்முறையில் புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்கள். மாணவர்களும் சொல்வார்கள். ஒருமுறை அர்த்தம் கேட்டபொழுது, இதெல்லாம் சொன்னால் ரெம்ப நல்லது என்றார். அர்த்தம் தெரியவில்லை என புரிந்துகொண்டேன். நான் மந்திரங்களை சொல்வதில்லை. அவர்களும் ஏன் சொல்லவில்லை என கேள்வியும் கேட்பதில்லை. இந்த நான்கு வருடங்களில் 7 வாத்தியார்கள் மாறியிருக்கிறார்கள். ஒரு சிலர் வகுப்பு முடிகிற தருவாயில், இந்துத்துவ கருத்துக்களை நைச்சியமாக பேசுவார்கள். நான் அதில் கேள்வி எழுப்புவதின் மூலம் அவர்களை இடைமறித்திருக்கிறேன். இப்பொழுது உள்ள வாத்தியார் கருத்துக்கள் பேசுவதில்லை. தொல்லையும் இல்லை. தொடருகிறேன்.

நான் யோகா சேரும் பொழுது ரூ. 350 இருந்தது. இப்பொழுது ரூ.600 வாங்குகிறார்கள். விசாரித்த பொழுது, பல இடங்களில் யோகாவை வைத்து நிறைய கல்லாக் கட்டுகிறார்கள் என தெரிய வந்தது. உடல் உழைப்பு செய்கிறவர்கள் வருவதில்லை என சொல்ல தேவையில்லை. உடல் உழைப்பிலிருந்து பிரிந்த நடுத்தர வர்க்கம் தான் பெரும்பாலும் யோகாவை நாடுகிறார்கள்.

நடுத்தரவர்க்கத்தில் பலர் தான் மோடி அப்படி, இப்படி என இல்லாத பில்டப் எல்லாம் கொடுத்தார்கள்.  அதனால் தான் மோடி அரசு யோகாவிற்கு ஒரு அமைச்சரவையை உருவாக்கி சுறு சுறுப்பாக வேலை செய்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் என் செல்பேசிக்கு யோகா நல்லது என நாலைந்து குறுஞ்செய்திகளை அரசு அனுப்பி வைத்திருக்கிறது!

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஆள் பிடிக்க அவர்களுக்கு கோயில், கும்பாபிசேகம், கலவரம் என பலவற்றில் இப்பொழுது யோகாவும் சேர்ந்துள்ளது. யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்களை ஆர்.எஸ். எஸ். சிறிது சிறிதாக தன் இந்துத்துவ வெறிக்கருத்துக்களை திணிக்கும். நாம் தாம் கவனமாய் இருக்கவேண்டும்!

July 30, 2014

சமஸ்கிருத வாரம் - இந்துத்துவாவின் திணிப்பு!


February 20, 2014

தில்லைக் கோயில் மீட்பு மாநாடு - நக்கீரன்

தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமே ஒப்படைத்து அநியாயத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தச் சூழலில், தில்லைக் கோயில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் பங்கேற்புடன் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் கடந்த 16.02.2014 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக இம்மாநாட்டின் நோக்கத்தை விளக்கி சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் முழுக்க புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் பேருந்துப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், குடியிருப்புப் பிரச்சாரம், சுவரெழுத்துப் பிரச்சாரம் என விரிவான அளவில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர்.
சிதம்பரம் நகரில் திரும்பிய பக்கமெல்லாம் விவாதத்தைத் தூண்டும் முழக்கங்களுடன் மாநாட்டு அறிவிப்பு சுவரெழுத்துக்கள் விரிவான அளவில் செயப்பட்டிருந்தன.
 ஜி.எம். வாண்டையார் மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு தலைமைமேற்றுப் பேசிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ராஜூ, சாதித் தீண்டாமைக்கு எதிராகவும், ஆலயத் தீண்டாமைக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினார்.
 அடுத்து வாழ்த்துரை வழங்கிய, முன்னாள் இந்து சமய அறநிலையத்துறைய அமைச்சர்  வி.வி.சாமிநாதன், சோழர்கள் காலத்தில் கண்காணிப்பு சபை அமைக்கப்பட்டு அரசு கட்டுப்பாட்டில்தான் ஆலயங்கள் இருந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், கனகசபையின் முன் நின்று தமிழில் பாடியதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டு, நடராசனுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிறுவினார்.
 அடுத்துப் பேசிய, அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தலைவர் மதியழகன், தில்லைக் கோயிலை அரசே ஏற்று நடத்துவதற்கேற்ப தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும்; அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.
 சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியின் தலைமையாசிரியர் புலவர் மூ.சோக்கப்பன் பேசுகையில், அர்ச்சகர் பயிற்சி பெறும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு செமுறை பயிற்சியளிப்பதற்காக அரசு அனுமதியுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றதையும், பார்ப்பனர் அல்லாதவர்கள் என்பதற்காகவே கோயிலுக்குள் நுழைய விடாமல் பார்ப்பனர்களால் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதையும் குறிப்பிட்ட அவர் ஆலயங்களில் பார்ப்பனர்கள் கடைபிடிக்கும் ஆலயத்தீண்டாமையின் பல்வேறு பரிமாணங்களை தம் சோந்த அனுபவத்திலிருந்து விளக்கினார்.
 இதனைத் தொடர்ந்துப் பேசிய, சிவனடியார் ஆறுமுகசாமி, தமிழ்ல பாடினா சாமி செத்துடும்னு சோல்றான் தீட்சிதன். தமிழ் தமிழ்னு பேசுறவனெல்லாம், தமிழ் அறிஞர்களெல்லாம் எங்கேப் போனான்? ஒரு தீட்சிதனையாவது கேள்விகேட்டானா? தமிழை இழிவுப்படுத்துற ஒரு தீட்சிதனையாவது அடிச்சானா? அயரை பார்த்து கிலி கொண்டு நிக்கிறான். தீட்சிதன் கழுத்தப்புடுச்சி தள்ளினாலும், தள்ளாடுற வயசுல நானே கனகசபை மேலேறி தமிழ்ல பாடுறேன். தமிழ்னு பேசுறவனெல்லாம் கீழே நின்னு கேட் கம்பியை புடிச்சிகிட்டே தேவாரம் பாடுறான். தீட்சிதன் சாபம் விட்ருவான்னு பயப்படுறான். வம்பு தும்புனு பன்னுனாதான் பிரச்சினை தீரும்" என்றார் அவர்.
 மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மாங்குடி மோகன், கட்சி பேதமின்றி சிதம்பரம் கோயிலின் 4 வீதிகளிலும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்பட வேண்டும். அதுவே இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும்" என்றார்.
 மாநாட்டு வாழ்த்துரைகளைத் தொடர்ந்து, மாநாட்டின் காலை அமர்வு தொடங்கியது. போராடிப் பெற்ற வழிபாட்டு உரிமையை பார்ப்பனியத்திடம் பறிகொடுப்பதா" என்ற தலைப்பில் பேசிய மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலர் தோழர் வாலசா வல்லவன், 1872 இல் ஆலயத்தில் நுழைய முயன்ற 2000 நாடார்கள் படுகொலை செயப்பட்டது; 1917இல் சிதம்பரம் கோயிலின் 4 ராஜவீதிகளிலும் தாழ்த்தப்பட்டோர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றக்கோரி நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டம்; குத்தூசி குருசாமி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டம்; திருவண்ணாமலை கோயில் நுழைவுப் போராட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரமை பட்டியலிட்டு, இவ்வாறு போராடிப் பெற்ற உரிமையை மீண்டும் பார்ப்பனியத்திடம் பறிகொடுப்பதா என்றுக் கேள்வி எழுப்பிய அவர், நீதிமன்றத்தை மட்டுமே நாடியிருக்காமல் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும் என்றார்.
 காலை அமர்வின் இறுதியாக உச்சிக்குடுமி மன்றத் தீர்ப்பும் தில்லைக் கோயில் மீட்பும்" என்றத் தலைப்பில் பேசிய, உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ரா.சகாதேவன், 1877 தொடங்கி இன்று வரையில் அதிகாரத் தாழ்வாரங்களில் முன்குடுமியைக் காட்டியே கீழ்த்தரமான முறையில் தீட்சிதர்கள் தமக்கு சாதகமான உத்தரவுகளை எவ்வாறெல்லாம் பெற்று வந்திருக்கின்றனர் என்பதை வரலாற்று ஆதாரங்களிலிருந்தும் இவ்வழக்கிற்காக தாம் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய சோந்த அனுபவத்திலிருந்தும் அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், இந்த வழக்கிற்காக நாங்கள் சட்டப்புத்தகத்தைப் பயன்படுத்தி வாதிட்டதைவிட பெரியாரின் எழுத்துக்களைத்தான் அதிகம் மேற்கோள்காட்டி வாதிட்டிருக்கிறோம்" என்ற அவர், இனி நீதிமன்றத்தை நம்பிப்பயனில்லை, ஒரு வழக்குரைஞராகவும் இந்த வழக்கில் வாதிட்ட அனுபவத்தி லிருந்தும் இதனைச் சோல்கிறேன். மக்கள் போராட்டங்களின் மூலம்தான் இந்த சமூகக் கொடுமைக்கு முடிவு கட்ட முடியும்." என்று அறைகூவி அமர்ந்தார் அவர்.
 விழுப்புரம்  தமிழர் நய்யாண்டி மேளத் தப்பாட்டக்குழுவின் அரங்கம் அதிரும் பறைமுழக்கத்தோடு தொடங்கியது மதிய அமர்வு. கோயில்கள் - மடங்கள் உள்ளிட்ட எல்லா மத நிறுவனங்களின் சோத்துக்களையும் மக்கள் உடமையாக்கு!" என்ற தலைப்பில் பேசிய ம.உ.பா.மையத்தின் மாநில துணைச் செயலர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன், அம்பானி, டாடா, பிர்லாக்களிடம் இருக்கும் சோத்துக்களின் மதிப்பையும் பத்மனாபா சுவாமி கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், சாயிபாபா, சங்கர மடங்கள், மதுரை ஆதினங்களிடம் கோடிக்கணக்கில் செல்வங்கள் கொட்டிக் கிடப்பதையும் ஒப்பிட்டு பட்டியலிட்டார். இராஜராஜ சோழன் காலத்தில் மட்டும் 400 விதமான வரிகள் வசூலிக்கப்பட்டதை குறிப்பிட்ட அவர் இது போன்று மக்களிடமிருந்து வரியாகப் பறித்து சேர்த்தவைதான் இந்த கோயில் சோத்துக்கள் என்பதை ஆதாரங்களுடன் நிறுவினார். இந்தச் சோத்துக்களையெல்லாம் அரசின் உடமையாக்கப்பட வேண்டும் என்றார்.
 மதிய அமர்வின் இறுதியாக முதல் ஆலய நுழைவுப் போராளி நந்தனாரும் சாதித் தீண்டாமை ஒழிப்பும்" என்ற தலைப்பில் பேசிய ம.க.இ.க.வின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன், கி.பி.16ம் நூற்றாண்டில் முதன் முதலில் தில்லை மண்ணிலிருந்துதான் தீண்டாமைக்கெதிரான குரல் எழுந்திருக்கிறது. பார்ப்பன மனுநீதி கோலோச்சிய அந்தக் காலகட்டத்தில் கோபுர தரிசனத்தைத் தவிர வேறு உரிமையற்ற நந்தன் தன்னந்தனியாக தில்லைக்கோயிலுக்குள் நுழைந்தது சாதாரண விசயமில்லை. தமிழகத்திற்கு மட்டுமே உரிய மரபு இது. இத்தகையத் தீண்டாமை எதிர்ப்புப் பாரம்பரியம் கொண்ட தமிழகம் இன்று தீட்சிதனிடம் தோற்றிருக்கிறது. தமிழ் வழிபாட்டுரிமையை இழந்திருக்கிறது. இது வெட்கக்கேடு!" என்றார்.
 ஆலயத்தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டும்; நந்தன் நுழைந்த சிதம்பரம் கோயிலின் தெற்குவாயிலை அடைத்து நிற்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள், மாநாட்டு அரங்கில் பலத்த கரவொலிகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டன.
 சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு  அனுமதி வழங்க மறுத்துவிட்டது, சிதம்பரம் நகரப் போலீசு. மாநாடு நடைபெற்ற ஜி.எம்.வாண்டையார் மண்டபத்திலிருந்து பொதுக்கூட்டத் திடலான அனந்தீஸ்வரன் கோயில் தெருவை சென்றடைய இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். பயணக்களைப்பையோ, அரைநாள் அரங்கில் அமர்ந்திருந்த சோர்வையோ பொருட்படுத்தாமல், ஒருவர் பின் ஒருவரா அணிவகுத்துச் சென்றனர், தோழர்கள். இதனை, அறிவிக்கப்படாத பேரணி என்றே சோல்ல வேண்டும்.
 இதனைத் தொடர்ந்து, வி.வி.மு.வின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் தலைமையில் தொடங்கியது பொதுக்கூட்டம். தமிழையும் தமிழர்களையும் இழிவுப்படுத்தும் பார்ப்பனக் கும்பலை அம்பலப்படுத்திப் பேசினார் பு.ஜ.தொ.மு.வின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் கலை. மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துப்பிரிவு உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆலயத் தீண்டாமைக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார் பு.மா.இ.மு.வின் விழுப்புரம் மாவட்ட செயலர் தோழர் செல்வக்குமார்.


 நந்தனார் ஆவு மையத்தைச் சேர்ந்த தோழர் காவியச் செல்வன் பேசுகையில், ம.உ.பா.மையமும் அதன் ஒருங்கிணைப்பில் புரட்சிகர அமைப்புகள் பங்கேற்று நடத்தும் அனைத்துப் போராட்டங்களுக்கும் தமது ஆவு மையம் துணைநிற்கும் என்றார்.
 தில்லைக்கோயில் பிரச்சினைக்காக தி.க.வீரமணியும் தி.மு.க.வும் ஏன் வாதாட வில்லை எனக் கேள்வி எழுப்பிய சிதம்பரம் முன்னாள் நகர் மன்றத்தலைவர் வி.எம்.எஸ். சந்திர பாண்டியன், காவிரி பிரச்சினையில் கர்நாடாகவும், முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரளாவும், சோத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத போது, நாம் மட்டும் இந்த உச்சுக்குடுமிமன்றத் தீர்ப்புக்கு ஏன் கட்டுப்பட வேண்டும் என்றுக் கேள்வி எழுப்பினார்.
 உழைக்கும் மக்களுக்கு எதிரானத் தீர்ப்பு என்றுச் சாடிய எழுத்தாளர் இமயம், எனது காலத்தில் ஏதாவது நன்மை செதுவிட்டு செல்கிறேன்" என்று தில்லைவழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேசியதைக் குறிப்பிட்டு  பிறப்பின் அடிப்படையில் நீதிமுறை நடைபெறும் நிலையில் இத்தகைய நீதிமன்றங்கள் அவசியமா? என்றுக் கேள்வி எழுப்பினார்.
 பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு மட்டுமின்றி, மாநாடு நடைபெற்ற ஜி.எம்.வாண்டையார் மண்டப நிர்வாகிகளை மிரட்டிய சிதம்பரம் நகரப் போலீசின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்திய ம.உ.பா.மை யத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ, மக்கள் போராட்டத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தீர்ப்பை செல்லாததாக்க வேண்டும் என்று அறைகூவினார்.
 சமூகம், இலக்கியம், இசை என பல்வேறு தளங்களிலும் தமிழகம் கண்டிருந்த பார்ப்பன எதிர்ப்பு மரபைப் பட்டியலிட்டுப் பேசிய ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் துரை.சண்முகம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல சிறப்புப் புரோகித மண்டலங்களாக பார்ப்பன ஆதிக்கத்தின் கீழுள்ள கோயில்கள் மாறிவருவதையும், தமிழ்மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு பார்ப்பன மயமாக்கப்படும் அபாயத்தையும் அம்பலப்படுத்திப் பேசினார்.
 சோரணையற்றுக்கிடக்கும் தமிழனைத் தட்டியெழுப்பிய எப்ப உனக்கு சோரணை வரும்" என்ற பாடல்; தீட்சிதர்களை அம்பலப்படுத்திய சிவன் சோத்து குலநாசம்" என்ற பாடல்; தில்லானா மோகனாம்பாள் வைத்தி கதாபாத்திரத்துடன் சு.சாமியை ஒப்பிட்டுப் பாடிய சு.சாமி... சப்ளை அண்ட் சர்வீஸ்" என்ற பாடல்; நீதிமன்றத்தை அம்பலப்படுத்திய நீதிமன்றமா? பார்ப்பன சாதி மன்றமா?" என்ற பாடல்; மற்றும் தமிழகத்தை நெருங்கும் பார்ப்பன அபாயத்தை அறிவித்த நெருங்குதடா இருள் நெருங்குதடா.." பாடல் என பார்வையாளர்களின் உணர்வைத் தட்டியெழுப்பியது என ம.க.இ.க.வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி.
 தில்லைக்கோயிலை தீட்சிதனுக்கே பட்டா போட்டுக் கொடுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறம்; இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து அனைத்துக் கோயில்களும் விடுவிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கையை முன்வைக்கும் சு.சாமி மற்றும் இன்னபிற பார்ப்பனக் கும்பலின் கூப்பாடு மறுபுறம் என தமிழகத்தில் மீண்டும் பார்ப்பனக் கும்பல் தலையெடுக்கத்துணியும் இந்தப் பின்புலத்தில் அவற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடைபெற்றுள்ள இம்மாநாடு, பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்துவதற்கான நம்பிக்கையான தொடக்கம்.
 தோழர் மருதையன் தனது மாநாட்டு உரையில் சுட்டிக்காட்டியதைப் போல, இது கோயில் விவகாரம் அல்ல; அரசியல் ரீதியில் பாசிச அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறோம். திருப்பித் தாக்குவதொன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி". தில்லைக் கோயில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு உணர்த்தும் செய்தியும் அதுதான்!

 - இளங்கதிர்

September 26, 2013

இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” - ஆர்ப்பாட்ட செய்திகள்!


”இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞ்ர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதன் ஒரு பகுதியாக, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் தோழர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.பு.மா.இமு-வின் சென்னை மாவட்ட இணைச்செயலாளர் தோழர்.சேட்டு கண்டன உரையாற்றினார். 10 பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

திருச்சி வேர்ஹவுஸ் பாலத்தின் அருகில் காலை 11.30 மணியளவில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் தலைமையில் 19 பெண்கள் உட்பட 120-க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர். அனைத்து தோழமை அரங்கின் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் கூடி நின்று நோட்டீஸ்களை வாங்கிப் படித்தனர்.

June 21, 2013

ம.க.இ.க குறித்து அவதூறு பிரச்சாரம் : இந்து முன்னணிக்கு கண்டனம்!

இந்துமுன்னணி அமைப்பு எங்களைக் குறித்து அவதூறுப் பிரசாரம் செய்து வருகிறது, இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று அந்த அமைப்பின் சார்பில் மக்கள் கலை இலக்கியக் கழக பொதுச்செயலர் மருதையன் வெளியிட்ட அறிக்கையில்,
மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற எமது அமைப்பு 1980 முதல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொதுவுடைமைப் பண்பாட்டு அமைப்பாகும். எமது செயல்பாடுகளும் புதிய கலாச்சாரம் என்ற எமது பத்திரிகையும், தமிழக மக்களும் எல்லா அரசியல் இயக்கங்களும் அறிந்தவை. எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சமச்சீர் கல்விக்கான போராட்டத்தையும் தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தையும் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் அமைப்பு. விவசாயிகள் விடுதலை முன்னணி முல்லைப்பெரியார் போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டிய அமைப்பு.

எமது அமைப்பு சமூக மாற்றத்துக்காகவும் புரட்சிக்காகவும் போராடும் அமைப்பு. நக்சல்பாரி புரட்சியாளர்களைப் பற்றிய எமது நிலையை, அரசு ஒடுக்குமுறை பற்றிய எமது கண்டனத்தை எங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதை தமிழகமே அறியும்.

அவ்வாறிருக்கையில் எமது அமைப்பினைப் பற்றிய பொய்களையும், அவதூறுகளையும் இந்து முன்னணி கூறி வருகிறது. அதுவும், நாங்கள் இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் என்பதனால் இத்தகைய அவதூறுகளை இந்து முன்னணி நீண்ட நாட்களாகவே பரப்பி வருகிறது.

1993 இல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நாங்கள் நடத்திய போது அதற்கு 90 இலட்சம் ரூபாய் பாகிஸ்தானிலிருந்து பணம் வந்தது என்று கூசாமல் பொய் பிரச்சாரம் செய்தது இந்து முன்னணி. பின்னர் சிதம்பரம் கோயிலின் சிற்றம்பலத்தில் தமிழ் பாடும் போராட்டத்தை நாங்கள் நடத்திய போதும், அக்கோயிலில் நடைபெறும் முறைகேடுகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைத்து அதனை அறநிலையத்துறை ஏற்க வழக்கு தொடுத்தபோதும், எமக்கு எதிர் அணியில் இருந்தது இந்து முன்னணி.

தற்போது அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்கள், பிறப்பின் காரணமாக அர்ச்சகராக முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் நாங்கள்தான் வழக்காடுகிறோம். இறுதி விசாரணை நிலையில் உள்ள இந்த வழக்கில் மாணவர்களை அச்சுறுத்தி விரட்டும் பல நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இன்று இந்து முன்னணி எங்களைக் குறித்து வெளியிட்ட அவதூறு அறிக்கை என்று சந்தேகிக்கிறோம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- என்று கூறியுள்ளார்.

-தினமணி,  06, June 2013

May 2, 2013

“சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்”


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வெளியீடு,

விலை ரூ. 60.00

நூலின் முன்னுரை

நாய்க்கன் கொட்டாயில் ஒரு கொடிய வன்கொடுமைக் குற்றத்தை அரங்கேற்றியது மட்டுமின்றி, சாதி கடந்த திருமண எதிர்ப்பு, வன்கொடுமைச் சட்ட எதிர்ப்பு என்று ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். வன்னிய சாதிப் பெண்களைக் காதலித்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றனர். இவையனைத்துக்கும் இன்று தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் பா.ம.க தலைவர் ராமதாசு, 90 களின் துவக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையின் நாயகனாக காட்டப்பட்டவர்.

எண்பதுகளின் இறுதியில் வன்னியர் சங்கத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசியல் அரங்கில் இறக்கியபோதே, அதன் சாதிய பிழைப்புவாத முகத்தை புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது. இருப்பினும் எம்.ஜி.ஆருக்கு வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் கட்சியும் கொள்கையும் தயார் செய்து கொடுத்தது போலவே, ராமதாசுக்கு புரட்சி வேசம் கட்டி விடுவதற்கு ஏராளமான அறிஞர்களும் பேராசிரியர்களும் வரிசையில் நின்றனர்.

“இழக்கப் போவது சாதிகளை மட்டுமே! அடையப் போவதோ பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம்!” “ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே, ஒன்று சேருங்கள்! ஆளும் பாசிச கும்பல்களைத் தூக்கி எறியுங்கள்!” என்ற முழக்கங்களை பா.ம.க. மீது சுமத்தி, ராமதாசுக்கே தோன்றாத கோணங்களில் இருந்தெல்லாம் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அறிவாளிகள் பொழிப்புரை போட்டனர். நிறப்பிரிகை கனவான்கள், ப.கல்யாணி, பழமலய், பிரபஞ்சன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் பெ.மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு, சுப.வீ என இவர்களுடைய பட்டியல் மிக நீண்டது. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதி, சாதி ஒழிப்பு, நாடாளுமன்ற முறை மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவை சாத்தியம் என்ற மாயையை உருவாக்குவதில் மாஜி புரட்சியாளர்கள், மற்றும் அறிவுத்துறையினர் முன்னிலை வகித்தனர்.

சாதிய, வர்க்க ஒடுக்குமுறையை நிலைநிறுத்தும் பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்படும் மேற்படி அரசு அமைப்பு, சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை தாக்கித் தகர்க்கும் அரசியல் புரட்சியின்றி சமூகப் புரட்சி சாத்தியமில்லை. பழைய கட்டுமானத்தின் கீழ் ஒடுக்கப்படும் சாதியினர் சமத்துவம், ஜனநாயகத்தைப் பெற முடியாது என்ற புரட்சிகர அரசியலை நிராகரித்து, அடையாள அரசியலையும் அதன்வழி சாதிய பிழைப்புவாத அரசியலையும் இவர்கள் கொண்டாடினர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை ராஜதுரையும் ராமதாசு, திருமாவளவன் உள்ளிட்டவர்களை நிறப்பிரிகை கும்பலும் துதிபாடினர்.

தங்களால் கொண்டாடப்பட்ட இந்த நபர்கள், காங்கிரசு, பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க என்று மாறி மாறி கூட்டணி சேர்ந்து கொண்டபோது இவர்கள் வாய் திறக்கவில்லை. தாங்கள் முன்வைத்த அரசியல் தவறு என்று ஒப்புக்கொள்ளவோ விளக்கம் கூறவோ இல்லை. தாங்கள் முன்வைத்த கருத்துகளை நம்பி, இந்தப் பிழைப்புவாதிகளின் பின்னால் சென்ற எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து போனது பற்றியும் இவர்கள் கவலைப்படவில்லை. கம்யூனிசக் கொள்கை மற்றும் புரட்சிகரக் கட்சியின் மீது இளைஞர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை புரட்சிகர இயக்கங்களில் சேரவொட்டாமல் தடுப்பதுமே இவர்களுடைய நோக்கமாக இருந்து வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ அல்லது உதவியில்லாமலோ இவர்கள் இந்த ஆளும்வர்க்கத் தொண்டினை நிறைவேற்றி வருகிறார்கள்.

ஓட்டுக்கட்சித் தலைவர்கள் கூட தமது அரசியல் சந்தர்ப்பவாதங்களுக்கு மக்களிடம் விளக்கமளிக்கிறார்கள். அவற்றின் விளைவாக மதிப்பிழக்கிறார்கள். ஆனால் அடையாள அரசியல் என்ற பெரில் சாதிய பிழைப்புவாதிகளையும், சாதி வெறியர்களையும் உருவாக்கி, வளர்த்து விட்ட இந்த அறிவுத்துறையினர் மட்டும், தாங்கள் தயாரித்த தீவட்டிகள் ஊரையே கொளுத்துவது தெரிந்தும், ஒரு பாசிஸ்டுக்குரிய அலட்சியத்துடன் மவுனம் சாதிக்கிறார்கள். தாங்கள் பிரச்சாரம் செய்த கருத்துகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்காமல் நழுவுகிறார்கள். பின் நவீனத்துவம், பெரியார், அம்பேத்கர், காந்தி, முகமது நபி என்று காற்றடிக்கும் பக்கமெல்லாம் பறந்து, பசையுள்ள இடங்களில் ஒட்டிக் கொள்கிறார்கள்.

நாடாளுமன்ற அரசியலின் சீரழிவு, சாதிய பிழைப்புவாதிகளை சுயேச்சையாகத் தோற்றுவிப்பதையும், அடையாள அரசியல் அத்தகைய பிழைப்புவாதங்களுக்கு கவுரவமும் அந்தஸ்தும் அளித்து, ஜனநாயகப் புரட்சி அரசியலை சீர்குலைப்பதற்கு பயன்படுவதையும் இந்நூலின் கட்டுரைகளை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும்.
_________________________________________________________________________________

சாதி – தீண்டாமை ஒழிப்பு: என்ன செய்யப் போகிறீர்கள்?
விலை ரூ.10 – மகஇக-புமாஇமு-புஜதொமு-விவிமு-பெவிமு, வெளியீடு

1997ல் கொடியங்குளம் ‘கலவரத்தை’ ஒட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து கோயில் நுழைவு, பொதுக்கிணற்றில் நீர் எடுத்தல், தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை உடைப்பு, அடிமைத் தொழில் செய்ய மறுப்பு, சாதி-தீண்டாமை மறுப்புத் திருமணங்கள் போன்ற வடிவங்களில் எமது அமைப்புகள் சாதி வெறிக்கு எதிரான போராட்டத்தை நடத்தின. ஆதிக்க சாதி வெறி கருத்துக்களை அம்பலப்படுத்தும் இந்த சிறு வெளியீடும் பல்லாயிரக் கணக்கில் கொண்டு செல்லப்பட்டது.

அன்று போக்குவரத்துக் கழகத்துக்கு விடுதலை வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்த சாதிவெறியர்கள், இன்று சாதி கடந்த காதல் திருமணங்களை எதிர்த்து நாயக்கன் கொட்டாய் சாதி வெறித் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். பா.ம.க. தலைவர் ராமதாசு, அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை என்ற சாதிவெறி அமைப்பு உருவாக்கியிருக்கிறார். காதல் திருமணங்களாலும் வன்கொடுமை வழக்குகளாலும் ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டிருப்பது போல சித்தரிப்பதன் மூலம், சாதி-தீண்டாமை கருத்துக்களை இக்கும்பல் புதுப்பிக்கிறது.

இதன் பொருட்டு இவர்கள் இன்று முன் வைக்கும் வாதங்கள் அனைத்தும், அன்றும் முன்வைக்கப்பட்டவைதான். அவ்வாதங்களை முறியடிக்கும் இவ்வெளியீடு சாதி வெறியை முறியடிக்கும் கையேடாக பயன்படும் என்பதால், அதனை மீண்டும் பதிப்பித்திருக்கிறோம்.

******

புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367

புதிய கலாச்சாரம்
16, முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
சென்னை – 600083

தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876

November 30, 2012

வாஜ்பேயி சுதந்திர போராட்ட தியாகியா?

//குஜ்ராலின் மறைவு இந்திய சரித்திரத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய கடைசி தேசியத் தலைவர் ஐ.கே. குஜ்ராலாகத்தான் இருப்பார். //

குஜராலின் மறைவை ஒட்டி, தினமணி வைத்தியநாதன் இன்றைய தினமணியில் தலையங்கத்தில் மேற்படி எழுதியிருக்கிறார். இப்படி எழுதியதன் மூலம் வாஜ்பேயி "சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்" என்ற ஆர்.எஸ்.எஸ். அம்பிகளின் பொய்யை வைத்தியநாதன் மறுக்கிறார். ஒருவேளை வாஜ்பேயி செத்துப்போய்விட்டாரோ என தேடிப்பார்த்தேன். உயிருடன் தான் இருக்கிறார்.


வரலாறு என்னவென்றால், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடந்த சமயத்தில், ஒரு கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கொடியை ஏற்றினார்கள். இந்த விசயம் கேள்விப்பட்டு பிரிட்டிஷ் காவல்துறை சுற்றி வளைத்த பொழுது, வாஜ்பேயி கைதானார். அதுவரை சரி! அதற்கு பிறகு தான் டிவிஸ்ட். "கொடி ஏற்றியவர்களை காட்டிக்கொடு! உன்னை விட்டுவிடுகிறோம்" என்றதும், காட்டிக்கொடுத்துவிட்டு, பாதுகாப்பாய் வீட்டுக்கு போனவர் தான் இந்த வாஜ்பேயி.


இது வரலாறு. சில வருடங்களுக்கு முன்பு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வாஜ்பேய்க்கு சுதந்திர போராட்ட தியாகி என பில்டப் கொடுத்து பேசினார்கள். அப்பொழுது தான் வாஜ்பேயின் துரோக வரலாறு வெளியே வந்தது!

June 27, 2012

தனிநபர் பகுத்தறிவாதம்

நண்பனின் மூத்த சகோதரியின் கணவர் 'ஹார்ட் அட்டாக்கால்' திடீரென இறந்தார்.  நண்பனுடன் இறப்பு நிகழ்வுக்கு போயிருந்தேன்.  இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லை. அவருடைய மனைவியின் சகோதரியின் பிள்ளையை வைத்து, எல்லா சடங்குகளும் 'குறைவின்றி' செய்தார்கள்.

இதில் நகை முரண் என்னவென்றால், தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கடுமையாக எதிர்த்தவர் அவர்..  தமிழக அரசின் போக்குவரத்து துறையில் குமாஸ்தாவாக சேர்ந்து, ஓய்வு பெறும் பொழுது, சூப்பரின்டடாக (Supt.)  வெளியேறினார்.  எந்த அமைப்பிலும் இல்லை.  குடும்பங்களில், உறவுகளில் தன் கருத்துக்கு  யாரையும் வென்றெடுக்கவும் இல்லை.

கொஞ்சம் யோசித்திருந்தால், தன் இறப்பிற்கு பிறகு சடங்குகளற்ற முறையில் தான் அடக்கம் செய்யவேண்டும் என உயில் போல எழுதி வைத்திருக்கலாம் அல்லது நெருங்கிய மரியாதைக்குரிய உறவுகளிடம் தனது ஆசையை நிறைவேற்ற சொல்லி தெரிவித்திருக்கலாம்.  நான் கவனித்தவரையில் சாவை எதிர்கொள்ளும் பக்குவம் தமிழ் சமூகத்திற்கு வரவில்லை எனலாம்.

தனிநபர் பகுத்தறிவுவாதத்திற்கு ஏற்பட்ட உதாரணம் இது!

November 24, 2010

அயோத்தி தீர்ப்பு - அரங்கக்கூட்டம்!

'சர்ச்சைக்குரிய இடம்' யாருக்கு என்பதை, அலகாபாத் தீர்ப்பு அறிவிக்கும் பொழுது, இந்தியா முழுவதும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என இந்திய அரசும், பல கட்சித் தலைவர்களும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனால், சொல்லப்பட்டதோ அயோக்கியதனமான தீர்ப்பு. அதற்குப் பிறகு காத்த அமைதியும் அநியாயமானது.

நாடு முழுவதும் உண்மையான ஜனநாயகம் குறித்து கவலைப்படுகிறவர்கள், நீதி மன்ற பாசிசத்தை அம்பலப்படுத்திட வேண்டும். அவர்கள் விரும்பும் "நீதி"க்கு வேண்டும் அமைதியை குலைக்க வேண்டும்.

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

நீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்க கூட்டம்!


நிகழ்ச்சி நிரல்:

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை : ”நீதித்துறை பேசும் காவி மொழி”
திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”
திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”
திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் : வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு!
அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

ஏற்பாடு :

மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.

தொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் – 9884455494

February 23, 2009

தில்லையில் வெற்றிப் பேரணியும், பொதுக்கூட்டமும்!




“தீட்சிதர்களின் ஆதிக்கத்தை தகர்த்தோம்!
தில்லை கோயிலை மீட்டோம்!”


என்ற இரண்டு முழக்கங்களின் அடிப்படிடையில், தில்லையில் கடந்த சனிக்கிழமையன்று(21.02.2009) வெற்றிப்பேரணியும், பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேரணிக்கு காவல்துறையால் முதலில் தடை விதிக்கப்பட்ட்டிருந்தது. பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தில்லை இயக்கம் மக்கள் இயக்கமாக நடத்தியதன் விளைவாக, கடைசி நாளில் அனுமதி வழங்கப்பட்டது.

திட்டமிட்ட படி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - புரட்சிகர அமைப்புகள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் தனது அணிகளோடு வந்திருந்தனர். பெரும்பாலும் செஞ்சட்டை அணிந்த தோழர்கள்.

பேரணி தில்லையின் கோவிலின் கீழ ரத வீதிக்கு அருகே துவங்கியது. வெற்றிப்பேரணியில் சர வெடி அதிர்ந்தது.

தப்பாட்ட குழுவினரின் அதிரடியான தப்பாட்டத்தால் உற்சாகம் களைக்கட்டியது. தாளத்திற்கு தக்கவாறு குழுவினரின் ஆட்டம் இருக்கிறதே! அப்பப்பா! தீட்சிதர்களை மண்டியிட வைத்த குஷியில் வந்த ஆட்டம்.

அடுத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் கேலியான காட்சி சித்திரம்

“இரட்டை இலை சின்னத்தை
தனது விரல்களில் காண்பித்து கொண்டே
பார்ப்பனத் திமிருடன் நடந்து வரும்
“அம்மா!”
“அம்மாவின்” முந்தானையை பிடித்தபடி
காலில் விழுந்த படியே வரும்
சட்டையில்லாமல்
பூணுலுடன் கொழுத்த தீட்சிதர்

தீட்சிதர்களின்
அந்தரங்க சேஷ்டைகளுக்காக
செருப்பால்
அடித்துக்கொண்டே வரும்
4 பெண்கள்”


வெடியை விட, தப்பாட்டத்தை விட, முழக்கங்கள் தில்லை வீதிகளில் காற்றைக் கிழித்தன.

“தமிழில் பாடும் போராட்டம்
முதல் வெற்றி கண்டது பார்!

ஆலயம் மீட்கும் போராட்டம்!
அடுத்த வெற்றியை கண்டது பார்!

நக்சல்பாரிகளின் தலைமையிலே
உழைக்கும் மக்களின் போராட்டம்
வென்றது பார்! வென்றது பார்!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு
கிரிமினல் கேசில் சிக்கியுள்ள
தீட்சிதர்களை கைது செய்யாததின்
மர்மம் என்ன?

தில்லை நகர காவல் துறையே
பதில் சொல்! பதில் சொல்!

விரட்டியடிப்போம்!
விரட்டியடிப்போம்!
தீட்சிதர்களை
கோயிலை விட்டே
விரட்டியடிப்போம்!
தில்லையை விட்டே
விரட்டியடிப்போம்!

நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை
இடித்து தகர்த்திடுவோம்!
தகர்த்திடுவோம்!


தில்லையில் கோவிலைச் சுற்றி, முக்கிய வீதிகளான கீழ வீதி அருகே தொடங்கி, தெற்கு வீதியில் வந்து, மேல ரத வீதியில் ஊர்வலம் வந்த வழி நெடுகிலும் பொதுமக்கள் ஆர்வமாய் பேரணியைக் கண்டனர். கையில் வைத்திருந்த முழக்க அட்டைகளில் உள்ள வாசகங்களை வாசித்தனர். தொண்டர்கள் பொதுமக்கள் பலருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.

தில்லை மக்கள் இது போன்றதொரு, செஞ்சட்டைகள் அணிந்த நீண்ட, எழுச்சியான ஊர்வலத்தை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டார்கள்.

பேரணியால் தில்லை அதிர்ந்தது ஒரு புறம்! மறுபுறம் -தீட்சிதர்களின் இதயம், வயிறு எல்லாம் பயத்தால் அதிர்ந்திருக்கும்.

(பொதுக்கூட்டம் பற்றி அடுத்தப் பதிவில்)

February 6, 2009

தில்லை தீட்சிதர்களின் லீலைகள் – ஒரு புகார் மனு!


தில்லை தீட்சிதர்கள் காஞ்சி சங்கராச்சாரியார் செய்த லீலைகளுக்கு சற்றும் சளைக்காதவர்கள். கோவில் வருவாயில் தின்று கொழுத்து, அவர்கள் சிதம்பரம் கோவிலுக்குள் செய்த அட்டூழியங்களை நாத்திகர்களாகிய ம.க.இ.க காரர்கள் சொன்னால் சந்தேக கண் கொண்டு பார்க்கிறார்கள்.

இதோ சிதம்பரத்தில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோ, தமிழக முதலமைச்சர், உள்துறை செயலர் ஆகியோருக்கு விரிவான புகார் ஒன்றை கடந்த ஆண்டு அளித்துள்ளார். படியுங்கள்.

இந்த புகார் உட்பட பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையிலேயே தீட்சிதர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இனி அவர் அளித்த புகார் மனுவை அவரது சொற்களிலேயே தந்துள்ளேன்:

சிதம்பரம் நடாஜர் கோயில் தீட்சிதர்கள் யாருக்கும் அந்த சமூகத்திற்குச் சொந்தமல்ல என்று 100 ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்திருக்கிறது. இருந்தாலும் பெரிய கோயிலை, தீட்சிதர்கள் தங்கள் சமூகத்திற்குச் சொந்தமான சொத்துபோல்
தீட்சிதர்கள் கோயிலின் 4 கோபுர வாயிற் கதவுகளையும் பிறகு 2-வது உட்பிரகார கதவுகளையும் இரவில் மூடிக்கொண்டு, கோயில் வெளிப்பிரகாரத்திலும் உட்பிரகாரத்திற்குள்ளும் சுமார் 10 தீட்சிதர்கள் அடங்கிய கும்பல்கள், கள்ள சாராயம், அயல்நாட்டு மதுபானங்கள் சகலத்தையும் குடிப்பதும், பரோட்டா, சிக்கன், மட்டன், ஆம்லட், அவிச்ச முட்டை சகலமும் சாப்பிட்டு விட்டு, வெற்றிலை, பீடி, சிகரெட், பான்பராக் போட்டுக்கொண்டு, பெண்களுடன் உறவு கொண்டு, சொர்க பூமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திடுக்கிடும் 2 அல்லது 3 கொலைகளையும் நடத்தி, அதை குடித்துவிட்டு இறந்து விட்டார்கள் என்று மறைத்துவிட்டார்கள். அந்த ரௌடி தீட்சிதர்களும் நல்ல பணக்காரர்கள். சாமி பைத்தியம் பிடித்தவர்களிடம் குளத்தை தூர் வார வேண்டும். திருப்பணி செய்ய வேண்டும் என்று பணத்தைக் கணிசமாக வசூல் செய்து, ஆளுக்கு ஒரு செல்போன் வைத்துக்கொண்டு, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தங்களுக்கு முதலமைச்சரும் சில அமைச்சர்களும் வேண்டியவர்கள் என்று சொலலிக்கொண்டு, போலீசைப் பயமுறுத்துகிறார்கள்.
நடராஜர் கோயிலுக்குள் பஞ்சமா பாதகம் செய்து, போலீஸ் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் முக்கிய தீட்சிதர்கள் பெயர்கள்: (1) தில்லை தீட்சிதர் த.பெ.
கீர்த்திவாசக தீட்சிதர், சபாநாயகர் கோயில் தெரு (2) ராஜா தீட்சிதர் த.பெ. குப்புசாமி தீட்சிதர், கீழரத வீதி (3) பட்டு தீட்சிதர் த.பெ. கோபால் தீட்சிசதர், வடக்கு சந்நதி (4) கனகு தீட்சிதர் த.பெ. வைத்திநாத தீட்சிதர், கீழ வீதி, (5) குப்புசாமி தீட்சிதர் த.பெ. சிச்சுவடி மணி தீட்சிதர், கீழரத வீதி (6) முருக தீட்சிதர், (7) அமர்நாத் தீட்சிதர், கீழ வீதி முதலாவோர்.

சிதம்பரம் டவுன் கீழ ரத வீதியில் உள்ள வேம்பு தீட்சிதர் மகன் மூர்த்தி தீட்சிதரை சுமார் ஒரு வருடத்திற்கு முன் நடராஜர் கோயில் உள் பிரகாரத்திற்குள் கருங்கல் தூண் அல்லது சுவற்றில் மோதி, தீட்சிதர்கள் கொன்றுவிட்டார்கள். மேல கோபுர வாசல் வழியாக கோயில் முதல் பிரகாரத்திலிருந்து, கற்பகிரகம் உள்ள உள் பிரகாரத்திற்குள் செல்லும் மேல் புறமுள்ள கதவு, காலை 6.3.4 மணியாகியும் ஒரு நாள் திறக்காமல், கோயிலுக்குள் பக்தர்கள் போக முடியாமல் திணறிக்கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது ப.சிதம்பரம் கட்சியைச் சேர்ந்த திரு. நாகராஜன், இன்னும் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கீழ சந்நதி வழியாக ஒரு ஆட்டோ வந்தது. மேல்புறம் கோயில் கதவு திறக்கப்பட்டு, மேலே கண்ட தீட்சதர்கள் மூர்த்தி தீட்சிதரை ரத்தம் ஒழுக ஒழுக துக்கி வந்ததைப் பார்த்து, கொலை நடத்திருக்கும் என்று சந்தேகப்பட்டு, ராஜ்குமார் மேலரத வீதி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் செய்திருக்கிறார்.

போலீஸ் கொலை கேசு என்று தெரிந்ததும், உடனே வராமல் ராஜ்குமாருடன் வாதம் செய்து, டி.எஸ்.பி.க்குப் புகார் செய்வேன் என்று தெரிவித்த பிறகு வேண்டாவெறுப்புடன் போலீசுடன் குற்றம் நடந்த இடத்திற்குப் போனபோது, ஆட்டோ டிரைவரை விசாரித்தால் யார் அவரை அழைத்து வந்த தீட்சிதர் என்பதும் மற்றும் என்ன நடந்தது என்பதும் தெரியும்.

ஆனால், ராஜ்குமார் போலீசிடம் சொல்லி, புலன் விசாரணை செய்ய சொல்லிவிட்டுப் போய்விட்டார். பிணத்தை வேம்பு தீட்சிதர் வீட்டில் போட்டுவிட்டு, குற்றம் செய்தவர்கள்
போய்விட்டார்கள். பணத்தை வசூல் செய்து, பங்கு பிரித்துக் கொள்வதில் மூர்த்தி தீட்சிதர் சரியாக கணக்கு வரவு செலவு காட்டாமல் ரூ.50000-க்கு மேல் மறைத்துவிட்டதாக தகராறு செய்ததால் மற்ற தீட்சிதர்கள் கல் தூணில் மோதி கொன்றுவிட்டதாகத் தகவல். மூர்த்தி தீட்சிதருக்கு கே.அடுரிலிருந்துதான் ஒரு ஆதிதிராவிடர் கள்ளச் சாராயம் கொண்டு வந்து கொடுத்து, அதை சொம்பில் ஊற்றி வைத்துக்கொண்டு, நடராஜப் பெருமாள் உள்ள பொற்சபையிலேயே வைத்துக்கொண்டு, தீர்த்தம் சாப்பிடுவது வழக்கமாம்.

கே.ஆடூரில் மளிகைக் கடை வைத்திருந்த செல்வராஜ் மனைவியை சிதம்பரம் கோயிலுக்கு அழைத்துவந்து அனுபவிப்பதில் தகராறு ஏற்பட்டு, செல்வராஜை சிதம்பரத்தில் கொன்று, ஆட்டோவில் ஊருக்குக் கொண்டு போனார்கள். இறந்து போன செல்வராஜ் மனைவி சிதம்பரத்தில் தான் இருக்கிறார். அவள் பெயர் ராஜகுமாரி.

போலீஸ், டிபூடி கலெக்டருக்குச் சொல்லி, பினத்தைப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். சந்தேகப்பட்ட கொலை வழக்கு என்று பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தீட்சதர்களை விசாரித்திருந்தால் உண்மை தெரியும். இறந்துபோன மூர்த்தி தீட்சிதர் குடித்துவிட்டு குடும்பத்தில் தொல்லை கொடுத்து வந்ததால் கொலை கேசு புகார் செய்ய பயந்து, போஸ்மார்டம் பண்ணுவதைத் பெரிய தீட்சிதர்கள் முயன்று கொலை குற்றத்தை மறைக்க முயன்றிருக்கலாம்.

ஆனால், கோயில் பொது இடம், புனிதமான இடம். பக்தர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடம். அதற்குள் கொலை நடக்க போலீஸ் அனுமதிக்கக்கூடாது. மூர்த்தி கொலை நடந்த இரவுக்கு முன்னாள் மாலை, காலம் சென்ற மக்கள் தலைவர். ஜி.கே.மூப்பனாருக்கு, அம்மன் கோயிலில் உள்ள சித்திரகுப்தருக்கு, இ.காங்கிரஸ் நிர்வாகிகள் திரு. நாகராஜன், திரு.ராஜன் போன்றவர்கள் இறந்துபோன மூர்த்தியை வைத்துதான் விசேஷ பூஜை செய்திருக்கிறார்கள். எனவே, சிதம்பரம் டவுன் போலீஸ் இதற்குமுன் கோயிலில் நடந்த ராயர் கொலையையும் புலன் விசாரிக்காமல் விட்டுவிட்டதால், நடராஜர் கோயிலின் புனிதத்தையும் அங்கு வருகிற வயதானவர்கள் மற்றும் பக்தர்கள் உயிர் உடமைகளைக் காப்பாற்றவும் முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி. மூலம் விசாரனை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கோர்டில் நிறுத்த அரசு உத்தரவிட வேண்டும்.

மூர்த்தி கொலைக்கு முன் வீட்டு புரோக்கர் ராயர் என்ற ஒரு ஏழை சில தீட்சிதர்களால் 1/4 பிராந்தி பாட்டிலை கீழவீதியிலுள்ள ஆட்டோ ரிக்ஷாக்காரர்களில் ஒருவர் பிடுங்கிக் கொண்டதால் அவர் அன்று டவுன் போலீஸ் சர்க்கிளாக இருந்த இப்ராகிம் ராவுத்தரிடம் பிடிபட்டு, தீட்தர்கள் தான் பிராந்தி பாட்டில், பரோட்டா, சிக்கன் எல்லாம் வாங்கிவரச் சொன்னார்கள் என்று கீழகோபுர வாசலில் தீட்சதர்களைக் காட்டிக் கொடுத்தாலும் ராயரை உதைத்து கொன்று, கோபுர வாசலுக்குள் போட்டுவிட்டார்கள் என்று தகவல்.

கீழ கோபுர வாசலில் பிராந்தி, பாட்டில், பரோட்டா, சிக்கன் பொட்டலத்துடன் வந்தவரைப் பிடித்த டவுன் போலீஸ் ஏன் அதில் சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குத் தொடரவில்லை? அல்லது ராயர் இறந்த பிறகாவது சந்தேகப்படவில்லை? சந்தேகப் பட்ட கொலை என்ற ராயர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்பது முக்கியமாக கவினிக்க வேண்டிய விஷயம்.

இதுவும் பொதுஇடம். புனிதமான இடம். கோயிலுக்குள் நடந்த கொலை. கடந்து 1 வருடத்தில் கோயிலுக்குள் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றனர்.

ராயர் கொலை நடந்த இரவு பல்லாக்கு திருவிழா. மூர்த்தி கொலை, ராயர் கொலைக்கு முன் ஒருவர் கோயிலுக்குள் வந்து, அம்மன் கோயிலில் குடித்துவிட்டு தூங்கும் ஒருவரை தீட்சிதர்கள் பங்கு மாமுல் கேட்டு, கொடுக்காததால், சிவகங்கை குளத்திற்கு அருகில் கொன்றுவிட்டதாக ஒரு தகவல். சிதம்பரம் டவுனில் தீட்சிதர்கள் மீது புகார் கொடுக்கவே பயப்படுகிறார்கள் என்று எனக்கு கிடைத்த தகவல்களை முதலமைச்சருக்கும் உள்துறை செயலாளருக்கும் உரிய நடவடிக்கைக்கு அனுப்புகிறேன்.

மதிப்புக்குரிய குமாஸ்தாக்கள் சங்கத் தலைவர் திரு.ராஜ்குமார், காங்கிரஸ் தலைவர் திரு. நாகராஜ், திரு.ராஜு முதலியவர்களை விசாரித்தால் விளக்கமாகச் சொல்வார்கள்.

தயவுசெய்து தீட்சிதர்கள் தாட்சண்யத்திற்காகவோ, தீட்சதர்கள் மீது வழக்குப் போட்டால் தெய்வ குற்றம் ஏற்படும் என்று பயந்தோ, வழக்கு சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரிக்காமல் விட்டால் மனித உரிமை மீறல் குற்றத்திற்காக மனித உரிமைக் கமிஷனுக்குப் புகார் செய்ய வேண்டிவரும்.

வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலை அரசு எடுக்க எவ்வளவு காரணங்கள் உண்டோ, அதைவிட 1000 காரணங்கள் இருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க கொள்ளையர்கள், கொலைக்காரார்கள், ஆணவக்காரர்கள், சர்வாதிகாரிகள் கடாராமாக விளங்கும் கோயிலை, மனித உரிமைகளும், இந்திய அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளையும் மதிக்காமல் மிதிக்கும் சில தீட்சிதர்கள் பிடியில் இருந்து மீட்டு, அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்

நன்றி – லைட்ங்க் (lightink)

http://lightink.wordpress.com

August 11, 2008

நில ஒதுக்கீடும், எரியும் காஷ்மீரும்!



முன்குறிப்பு : காஷ்மீரில் 'பனிலிங்கத்தை' வழிபடும் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக காஷ்மீர் அரசு நில ஒதுக்கீடுசெய்தது. அதற்கு பிறகு, காஷ்மீர் மக்களின் தொடர்போராட்ட்ங்களுக்கு பிறகு அரசு ரத்து செய்துவிட்டது.

இப்பொழுது, ஆர்.எஸ்.எஸ்.யும் அதன் பரிவாரங்களும் இந்த பிரச்சனையை கையில் எடுத்து நாடு முழுவதும் வழக்கம் போல கலவரங்களை செய்து வருகிறார்கள்.

சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு இடமில்லையா? என விசப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த கட்டுரை இந்த பிரச்சனைக்கு பின்பு அரசியலை தெளிவாக விளக்குகிறது.

*******

காசுமீர் மாநிலத் தலைநகர் சிறீநகருக்குத் தென்கிழக்கே 111 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக, 39.88 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை, சிறீஅமர்நாத் ஆலய வாரியத்திற்குச் சில நிபந்தனைகளுடன் கடந்த மே மாத இறுதியில் கை மாற்றிக் கொடுத்தது, காங்கிரசுக் கூட்டணி அரசு.


பல்டால்தோமெயில் வனப்பகுதியில் உள்ள இந்த நிலத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பக்தர்கள் யாரும் முன்வைக்கவில்லை. அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், சிறீ அமர்நாத் ஆலய வாரியத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.கே.சின்ஹாதான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஆளுநருக்கு, பக்தர்கள் மீது அப்படியென்ன கரிசனம் என்று கேட்கிறீர்களா? முன்னாள் உயர் இராணுவ அதிகாரியான எஸ்.கே.சின்ஹாவின் மனமும், மூளையும் ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களால் நிறைந்தது என்பதுதான் இதற்கான காரணம்.



மாநில ஆளுநரே முன்வைத்தபோதும், இந்தக் கோரிக்கை மாநில அரசின் ஒப்புதலைப் பெற முடியாமல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தூசிப் படிந்து கிடந்தது. எஸ்.கே.சின்ஹாவின் பதவிக் காலம் முடியும் தருணத்தில்தான், அவரின் ஆசை நிறைவேறியது. இந்த ஒப்புதலை அளித்ததன் மூலம் அக்.2008இல் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், ஜம்முவில் உள்ள இந்துக்களின் வாக்குகளை அள்ளிவிட முடியும் எனக் கணக்குப் போட்டது, காங்கிரசுக் கட்சி. ஆளுநர் எஸ்.கே.சின்ஹா மனநிறைவோடு, ஜூன் மாத இறுதியில் காசுமீரை விட்டு வெளியேறிப் போக, காசுமீர் பள்ளத்தாக்கில் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள், 1990களில் காசுமீரின் சுயநிர்ணய உரிமைக்காக நடந்த போராட்டங்களுக்கு இணையாக இருந்ததாகத் "தேசிய'ப் பத்திரிகைகள் அரண்டு போய் எழுதியிருந்தன.


இந்திய அரசுக்கு எதிரான காசுமீர் மக்களின் உணர்வை, 2002இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்களாக அறுவடை செய்து கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி, அத்தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசோடு சந்தர்ப்பவாதக் கூட்டணி வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்தான், சீறிஅமர்நாத் ஆலய நிர்வாகத்திற்கு 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கிக் கொடுக்க ஒப்புதலும் கொடுத்தார். ஆனால், இந்த ஒதுக்கீடுக்கு எதிராக காசுமீர் முசுலீம்களின் போராட்டம் வீச்சாக எழுந்தவுடன் தேர்தல் பயத்தால் இக்கட்சி பிளேட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டியது.


மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியதோடு நில்லாமல், கூட்டணி ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. காங்கிரசுக் கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில், நில ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்ததோடு, ஆட்சியையும் பறி கொடுத்தது.


நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை, இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகப் பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. ''ஒரு 40 ஹெக்டேர் நிலத்தைப் பெறும் உரிமைகூட இந்துக்களுக்கு இல்லையா?'' என்ற கேள்வியைப் போட்டு, "இந்துக்களை' உருவேற்ற முயன்றது, அக்கட்சி. நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, ஜூலை 3 அன்று ''பாரத் பந்தை'' அறிவித்து, நிலப்பிரச்சினையைத் "தேசிய'ப் பிரச்சினையாக்க முயன்றது.


அமர்நாத் பனிலிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு 40 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு, காசுமீர் முசுலீம்கள் மத அடிப்படைவாதத்தில் மூழ்கிப் போய்விட்டதாகத் தேசியப் பத்திரிகைகள் இப்போராட்டத்தைச் சாடி எழுதியிருந்தன. சமகால காசுமீரின் வரலாற்றை அறிந்திராத சாதாரண வாசகன்கூட, இந்தக் கேள்வியை எழுப்பக் கூடும். பா.ஜ.க.வும், தேசியப் பத்திரிகைகளும் எழுப்பிய இக்கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கருதக்கூடும். ஆனால், அமர்நாத் பனிலிங்க வரலாறு வேறானது.


···


அமர்நாத் யாத்திரை என்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வருவது அல்ல; மேல்சாதி இந்துக்கள் தங்களின் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் காசிஇராமேசுவரத்திற்குச் சென்று வருவது போன்ற "புனிதமானதும்' அல்ல. காணாமல் போன தனது கால்நடைகளைத் தேடிப் பனிக் காடுகளில் அலைந்து திரிந்த ஒரு முசுலீம்தான், அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனிக்குன்றை முதலில் பார்த்தார். அந்த முசுலீம் வந்து சொல்லித்தான் இந்துக்கள் இந்த அதிசயத்தைத் தெரிந்து கொண்டனர். அந்தப் பனிகுன்றுக்குப் பனிலிங்கம் எனப் பெயரிட்டு, அதற்கு ஏதோ மகிமை இருப்பதாகக் கருதி, ஆண் டுதோறும் யாத்திரை போய் தரிசித்து வரத் தொடங்கினர்.


இந்தப் பனிலிங்கம் மற்றும் அதைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பு, பேடாகுந்த் பகுதியில் வசிக்கும் முசுலீம் குடும்பங்களிடம் தான் இருந்து வந்தது. 1990களில் காசுமீரில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வெடித்த பிறகு, அதற்கு எதிரான ஆயுதமாக, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வாய்ப்பாக, இந்த யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோடு, அரசே ஏற்பாடு செய்து நடத்தும் யாத்திரையாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, ஹஜ் யாத்திரையைப் போன்று, அமர்நாத் யாத்திரையை புனிதப்படுத்தும் தில்லு முல்லைச் செய்தது; செய்தும் வருகிறது. பார்ப்பனர்கள் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிடும் விநாயகர் ஊர்வலமாக மாற்றப்பட்டதைப் போல, அமர்நாத் யாத்திரை, காசுமீர் முசுலீம்களுக்கு எதிரானதாக உருமாற்றப்பட்டது. பக்தி, இந்து பாசிசமாகியது.


கரசேவைக்குத் தொண்டர்களைத் திரட்டி அனுப்புவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கும் "இந்துக்களை'த் திரட்டி அனுப்புவதை ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே செய்து வருகிறது. இதனால் பனிலிங்கத்தை வணங்க வரும் "பக்தர்களின்' எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே செல்லத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காரணமாகக் காட்டி, இரண்டு வாரமே நடந்து வந்த அமர்நாத் யாத்திரையின் காலஅளவு, ஒரு மாத காலமாக நீட்டிக்கப்பட்டது. யாத்திரையை நிர்வகிப்பது என்ற பெயரில் தனியாக வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவராக ஜம்முகாசுமீர் மாநில ஆளுநர் இருப்பார் என்றும்; அதே சமயம் ஆளுநர் இந்துவாக இருந்தால் மட்டுமே வாரியத்தின் தலைவராக முடியும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டன. முசுலீம்களின் மேற்பார்வையிலும்; உதவியோடும் நடந்து வந்த அமர்நாத் யாத்திரையை அவர்களிடமிருந்து பறித்து, இந்துமயமாக்கும் சதிகள் 1990க்குப் பிறகு ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்டன.


எஸ்.கே.சின்ஹா, ஜம்முகாசுமீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, இந்த இந்துமயமாக்கம் மேலும் தீவிரமடைந்தது. ''அமர்நாத் யாத்திரையின் கால அளவை ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதமாக அதிகரிக்க வேண்டும்; பகல்காமிலிருந்து அமர்நாத் செல்லும் பாதையிலும்; பால்தாலில் இருந்து அமர்நாத் செல்லும் பாதையிலும் உள்ள வனப்பகுதி நிலங்களை அமர்நாத் வாரியத்திற்கு ஒதுக்க வேண்டும்; அமர்நாத் வாரியம் அரசின் தலையீடின்றி, சுதந்திரமாக இயங்க வேண்டும்'' என மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வந்தார், அவர். அமர்நாத் வாரியத்திற்கு திடீரென 39.88 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக வாரியத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் பதில் அளிக்க வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிய பொழுது, ''ஆளுநர் சட்டமன்றத்துக்கு கட்டுப்படத் தேவையில்லை'' எனத் திமிராகப் பதில் அளித்தார், எஸ்.கே.சின்ஹா.


ஜம்முகாசுமீர் மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் கட்டாயமாக இணைத்துக் கொண்டபொழுது, ''காசுமீரைச் சேராதவர்கள் அம்மாநிலத்தில் ஒரு துண்டு நிலம் வாங்குதற்குக் கூட அனுமதி கிடையாது'' என்ற உரிமை அளிக்கப்பட்டது. இந்திய இராணுவம் பாசறைகளை அமைப்பது என்ற பெயரில், ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்த உரிமையை மீறி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், காசுமீர் பள்ளத்தாக்கு மக்களின் பங்கின்றி உருவாக்கப்பட்டுள்ள அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதை, காசுமீரி முசுலீம்கள் இன உரிமை மீறலாகவும், ஆக்கிரமிப்பாகவும் பார்த்தார்கள். பாக். தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் காசுமீரி முசுலீம்களை வேட்டையாடிவரும் இந்திய இராணுவத்தின் அக்கிரமங்களுக்கு எதிராக காசுமீரி முசுலீம்களிடம் கனன்று கொண்டிருந்த கோபம், இந்த நில மாற்ற உத்தரவால் பற்றி எரியத் தொடங்கியது.


அரசு வெளியிட்ட நில மாற்றம் தொடர்பான உத்தரவில், ''அமர்நாத் வாரியம் அந்நிலத்தில் யாத்திரை வரும் பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியாகத் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளலாம்'' என்ற சலுகையை வழங்கியிருந்தது. காசுமீரி முசுலீம்கள் அச்சலுகையை, ஜம்முகாசுமீரில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சதித்தனம் நிறைந்ததாகவே பார்த்தார்கள். ''இந்துக்கள் இரண்டு மாதம் மட்டுமே தங்கிச் செல்லுவதால், மக்கள் தொகையில் எப்படி மாற்றம் வரும்?'' என்ற கேள்வியை எழுப்பிய பா.ஜ.க.வும், தேசியப் பத்திரிகைகளும், காசுமீரி முசுலீம்களின் சந்தேகம் ஊதிப் பெருக்கப்படுவதாகக் குற்றஞ்சுமத்தினர்.


இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து சிறுபான்மையினர் ஆகிவிடும் அபாயம் இருப்பதாகப் புளுகிவரும் பா.ஜ.க; காசுமீர் முசுலீம்களின் சந்தேகத்தைக் குற்றஞ்சுமத்துவது வேடிக்கையானது. இதுவொருபுறமிருக்க, காசுமீர் பிரச்சினையைத் தீர்க்க, முசுலீம்கள் நிறைந்த காசுமீர் பள்ளத்தாக்கையும்; இந்துக்கள் நிறைந்த ஜம்முவையும் மற்றும் லடாக் பகுதியையும் தனித்தனியாகப் பிரித்து, காசுமீரைக் கூறு போட்டுவிடலாம் என்ற திட்டம் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த பொழுது பரிசீலிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ம், அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், காசுமீர் முசுலீம்களின் சந்தேகத்தைத் தேவையற்ற அச்சம் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.


அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி காசுமீரி முசுலீம்கள் போராடிக் கொண்டிருந்த பொழுதுதான், இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரையும் தொடங்கியது. இப்போராட்டத்தை ஒடுக்க போலீசும், துணை இராணுவப் படைகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு காசுமீரி முசுலீம்கள் கொல்லப்பட்டனர். எனினும், இப்போராட்டத்தால் அமர்நாத் யாத்திரைக்கோ, அதில் கலந்து கொண்ட "இந்துக்களுக்கோ', முசுலீம்களாலோ, முசுலீம் அமைப்புகளாலோ சிறு இடையூறும் ஏற்படவில்ல. வழக்கம்போலவே, மலைமேல் ஏற முடியாத பக்தர்களைப் பல்லக்கில் தூக்கிச் செல்வது தொடங்கி, "இந்து' பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிப்பது உள்ளிட்டு எல்லாவிதமான உதவிகளையும் காசுமீரி முசுலீம்கள் செய்துகொடுத்தனர். காசுமீரி முசுலீம்கள் நடத்திய போராட்டம் மதவெறியின் அடிப்படையில் நடைபெறவில்லை என்பதை அமைதியாக நடந்த அமர்நாத் யாத்திரையே நிரூபித்து விட்டது.


ஆனால், காசுமீர் மக்களின் போராட்டத்திற்கு எதிராக ''பாரத் பந்த்'' நடத்திய பா.ஜ.க. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜம்முகாசுமீர் கலைக்கூடத்தை அடித்து நொறுக்கியது; மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் நகரில், ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் முசுலீம்களின் குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தூர் முசுலீம்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றபொழுது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இறந்துபோனார்கள்.
சிறீ அமர்நாத் ஆலய வாரியத்திற்கு அளிக்கப்பட்ட நிலம் ரத்து செய்யப்பட்டதை, காசுமீரி முசுலீம்கள் இந்துக்களின் மீதான வெற்றியாகப் பார்க்கவில்லை. சுயநிர்ணய உரிமையை மறுத்து வரும் இந்திய அரசின் மீதான வெற்றியாகவே கருதுகிறார்கள். அமர்நாத் யாத்திரை பக்தியின் அடிப்படையில் நடைபெறுவதாகக் கருதும் "இந்துக்கள்', யாத்திரையில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு செய்வதை எதிர்க்க வேண்டும்; பேடாகுந்த் முசுலீம்களின் உரிமையை மறுத்து அமைக்கப்பட்டுள்ள வாரியத்தைக் கலைக்கக் கோர வேண்டும். இது அவர்களின் "கடமை' மட்டுமல்ல; இரு நூற்றாண்டுகளாக அமர்நாத் யாத்திரை எவ்விதத் தடங்கலும் இன்றி நடைபெறுவதற்கு பொறுப்போடு உதவி வரும் காசுமீரி முசுலீம்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடனும் ஆகும்.


· செல்வம்

புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் இதழிலிருந்து

நன்றி - தமிழரங்கம்

http://www.tamilcircle.net/index.php?view=article&catid=68%3A2008&id=2601%3A2008-08-07-21-09-07&option=com_content&Itemid=30

December 26, 2007

இரத்தம் தோய்ந்த செங்கல் - குஜராத்!



கொதிக்கின்ற - தார்ச்சாலையில் நிர்வாணமாக கிடக்கிறாள் அந்தப் பெண் - பிணமாக. அவள் உடம்பிலிருந்து உரித்தெறியப்பட்ட சேலை அருகே சுருண்டு கிடக்கிறது. கிழித்தெறியப்பட்ட அவளது உள்ளாடையின் ஒரு பாதியை தவிப்புடன் இறுகப் பற்றியிருக்கிறது அவளது இடது கை. உடலும் கையும் நசுங்கிச் சிவந்து ரத்தம் உறைந்திருக்கிறது. இடது தொடை முழுவதும் ரத்தம். உடலுக்கருகில் பரிதபமாக கிடக்கிறது அவளது பிளாஸ்டிக் செருப்பு.

அருகே ரத்தமும், வெறுப்பும் தோய்ந்த ஒரு செங்கல். கொலைகாரர்கள் அவள் மீது எறிந்த இறுதி ஆயுதம், அதுவும் கிடக்கிறது.

அவளது பெயர் கீதாபென். மார்ச் 25ம் தேதி அகமதாபாத்தில் அவளுடைய வீட்டு வாசலிலேயே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து பட்டப்பகலில் அவள் கொடூரமாகக் கொல்லப்பட்டாள்.

அவள் ஒரு இந்துப் பெண். இருந்தும் ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மாபாதகத்தைச் செய்துவிட்டாள். "அவனை ஒப்படைத்து விடு" என்று வீட்டு வாசலில் நின்று ஆர்.எஸ்.எஸ் காலிகள் மிரட்டிய போது ஒருபாறையைப் போல அவள் உறுதியாக நின்றாள் - கணவன் தப்பிச்செல்லும் வரை.

முசுலீமைக் காதலித்த குற்றம், அவன் உயிரைக் காப்பாற்றிய குற்றம். இந்த இரண்டு குற்றங்களுக்காகவும் அந்தக் கணமே, அங்கேயே அவள் நிர்வாணமாக்கப்பட்டு, நடுத்ததெருவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள்.

- செய்தி: Times of India, 19th April/2002.

கொதிக்கின்ற தார்ச்சாலையில்
நிர்வாணமாகக் கிடக்கிறாள்
அந்தப் பெண்.

கீதா பென்னின்
உயிரைப் பறித்த செங்கல்
ஆயிரக்கணக்கான முசுலீம்களின்
உயிரைக்குடித்த அதே செங்கல்

செங்கல் காவு கொண்ட
கீதா பென்னின் உயிர்
காவுக்குத் தப்பிய
அவள் கணவனின் உயிர்
கீதாபென் - கள் பலர்
குஜராத்தில் இருந்திருந்தால்
கீதா பென்
நடுவீதியில் ஆடையின்றி
பிணமாகக் கிடந்திருக்க
மாட்டாள்.

குஜராத்தும்
அம்மணமாக நின்று
அவளை வேடிக்கை
பார்த்திருக்காது.

இந்து - முசுலீம் தம்பதியர். திருமணப் பதிவு அலுவலகத்திலிருந்தும் பிற அரசு ஆவணங்களிலிருந்தும் இத்தகைய கலப்பு மணம் புரிந்தோரின் பட்டியலை சேகரித்துக் கையில் வைத்துக் கொண்டு தம்பதியரில் முசுலீமை மட்டும் கொலை செய்திருக்கிறது இந்து மதவெறிக்கும்பல். ஆனால் இது திடீரென்று நடக்கவில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் இந்து மதவெறி இயக்கங்களின் வளர்ச்சியையொட்டி குஜராத் சமூகத்தின் பண்பாடும் பாசிசமயமாகி வந்திருக்கிறது. மத மறுப்புத் திருமணத்தைக் கேலி செய்வது, இழிவு படுத்துவது, குடியிருக்க இடம் தராமல் தனிமைப்படுத்துவது ஆகியவை தொடர்ந்து நடந்திருக்கின்றன. இதனை முகாந்திரமாக வைத்தே பல முசுலீம் எதிர்க் கலவரங்கள் நடந்துள்ளன.

இவையனைத்திற்கும் மேலாக மாநில பாரதீயஜனதா அரசு ஆகஸ்டு'98ல் காவல் துறைக்கு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சுற்றறிகையை அனுப்பியது. "மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டுதான் இந்து முசுலீம் திருமணங்கள் நடைபெறுகின்றன; எனவே, இத்தகைய எல்லா திருமணங்களையும் புலன் விசாரனை செய்யவேண்டும்" எனக் கூறி இதற்க்கென தனியே ஒரு போலீஸ் படையையும் அமைத்தது குஜராத் அரசு.

மதமாற்றம் செய்வோருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் மசோதா ஒண்றை இருப்பினும் இந்த முடிவை அரசு வாபஸ் பெறவில்லை.குஜராத் பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களின் விளைவாக தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வாழும் கிறித்தவர்களையும் முசுலீம்களையும் மட்டும் கணக்கெடுப்பதற்கென்றே தனியாக ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் ஜனவரி'2000-ல் குஜராத் அரசு அறிவித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்துள்ளது.

கீதாபென்னும் திடீரெனக் கொல்லப்படவுமில்லை.

புதிய கலாச்சாரம் - மே 2002- இதழிலிருந்து

நன்றி : இயல் from http://venmani.blogspot.com

பின்குறிப்பு:

இயல் அக்டோபர் மாத இறுதியில், இதை தன் பதிவில் போட்டிருந்தார். அதை மீண்டும் எடுத்துப் போட்டதற்கு, மூன்று முக்கிய காரணங்கள்.

ஒன்று : குஜராத்தில், தனி பெரும் மெஜரிட்டி பெற்று, மோடி மீண்டும் முதல்வராகியிருக்கிறார். தனது நடவடிக்கைகளாலும், பேச்சினாலும் இட்லரின் வாரிசுகளாக அறியப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் நிறைய உற்சாகமடைந்திருக்கின்றன. அவர்களைப் பற்றி மீண்டும் நினைவுப்படுத்த இந்த பதிவு.

இரண்டு : இயல் பதிவாய் போட்டவுடனே, கெட்ட கெட்ட வார்த்தைகளால், ஆர்.எஸ்.எஸ்.
ஆதரவாளர்கள் நிறைய திட்டியிருந்தார்கள். அது எனக்கு நிறைய பிடித்துபோனது.

மூன்று : மோடி வெற்றி பெற்றதுமே, மதுசூதனன் என்ற பதிவர், வாழ்த்து சொல்லி பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கான பின்னூட்டங்களில், மதுசூதனன் இப்படி ஒரு பதில் சொல்லியிருந்தார்.

//என்வரையில் மோடி நல்லவர். ஏனென்றால் பத்து பேருக்கு கெடுதல் செய்தாலும் ஆயிரம் பேருக்கு நல்லது செய்தவர் என்பதையும் இங்கே வாதிடும் யாராலும் மறுக்க முடியாது //

மூவாயிரம் உயிர்களை கொன்று குவித்த மோடி இட்லரின் வாரிசு என்றால், மதுசூதனன் போன்றவர்கள், மோடியின் வாரிசுகள்.

October 7, 2007

ராமசாமியும், அவன் பொண்டாட்டியும், கந்தசாமியும்...

நன்றி : பால்வெளி

ஒரு குட்டி கதை சொல்லட்டா?

நம்ம ராமசாமி பொண்டாட்டிய புதுசா வேஷம் கட்டிக்கினு வந்த கந்தசாமி வூட்டுக்குள்ளாற பூந்து தூக்கினு பூட்டானாம்.. ராமசாமி ரிடர்ன் வந்து விஷயத்தை கண்டுக்கினு படா டென்ஷன் ஆகிக்கினானாம்..அப்பால கந்தசாமியோட பேக்கிரவுண்டு இன்னா, ஏதுன்னு விசாரிக்கசொல்லோ மெய்யாலுமே மெர்சலாகி போச்சு தாம் ராமசாமிக்கு.. சரி இன்னா பண்றதுன்னு வூட்டாண்ட இருந்த ஆளுங்கள எல்லாம் வலிச்சுகினு போனாலும் பத்தாதுன்னு நெனைச்சுகினு போற வழியில நம்ம வீராசாமியயும் அவம் ஆளுங்களயும் கூட்டம் சேர்த்துகினு கிளம்புனானாம். அப்படியே கெளம்பி போயி கந்தசாமியோட பேட்டைக்குள்ளாறயே ஜபர்தஸ்தா பூந்து சும்மா அடி பின்னி எடுத்துப்புட்டு, வீராசமிய வுட்டு பேட்டையில அல்லாத்தயும் கொளுத்தி போட்டுட்டு அவம்பொண்டாட்டிய மட்டும் வூட்டுக்கு இட்டாந்தானாம்.. அதுக்கு பொறவுதான் ஒரு டவுட்டானானாம்.. இன்னாடாது.. நம்ம பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த பொறவு அவ போக்கே செரியில்லயே..இத்தினி நா கந்தசாமி வூட்டுல இருக்கசொல்லோ எதுவும் மேட்டர், கீட்டர் ஆயிடுச்சான்னு..அத கேட்ட ராமசாமி பொண்டாட்டிக்கு மெய்யாலுமே மனசுக்கு கஸ்டமா பூடுச்சாம். இன்னாடாது நமக்கு கட்டுனவனும் சரியில்ல, இவனுக்கு தூக்கிட்டு போனவனே தேவலாம்போலன்னு சொல்லிகினு தாம் மேலயே நெருப்ப பத்த வச்சுகினாளாம். அவ்ளோதான்! கத முடிஞ்சு போச்சு...

இன்னாம்மே முயிக்கிறே..
இந்த கத உனுக்கு தெரியாதா..? இன்னாமே சொல்ற?
இத தானம்மே ஆயிரம், ரெண்டாயிரம் வருசமா நம்ம நாட்டுல சொல்லிகினுகீராங்க..
பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த ராமசாமியத்தான் அங்கங்க செல வச்சு கும்பிட்டுகினுகீறாங்களாமே..
இந்த கத தாம்மே நம்ம நாட்டுக்கே பேர் பெத்த ஏதோ "ராமாயணம்"னுவாங்களாமே?
----------------------------------------------------------
உங்கள் புரிதலுக்காக இங்குள்ள சென்னைத்தமிழ் வார்த்தைகள்..

வூடு - வீடு
பூந்து - புகுந்து
பேக்கிரவுண்டு - பின்னணி
மெர்சல் - பயம்
வலிச்சுகினு - சேர்த்துக் கொண்டு
பேட்டை - இடம்
ஜபர்தஸ்தாக - தைரியமாக, வலுக்கட்டாயமாக
டவுட்டு - சந்தேகம்
செல - சிலை
-----------------------------------------------------------
-படைப்புக்கு மூலக் கருத்து பேரா. பெரியார்தாசன் சொற்பொழிவில் இருந்து உருவானது..

பின்குறிப்பு :

மேலும், இது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது என்பவர்கள், சூத்திரென்றும், பஞ்சமரென்றும் சொல்லி, நாளும் உடலையும், உள்ளத்தையும் புண்படுத்துவதை நிறுத்திவிட்டு வாருங்கள். பிறகு, உங்கள் மனம் புண்படுவதைப் பற்றி யோசிக்கலாம்.