எனக்கு நானே விதித்துக் கொண்ட பத்துக் கட்டளைகள்!
1) பசிக்காமல் அமிர்தமே ஆனாலும் உண்ணாதே. தினமும் பத்து நிமிடமாவது கையைக் காலை ஆட்டு.
2) கழிப்பறையிலாவது சுவாசத்தைக் கவனி.
3) எதிர்மறைகளில் இருந்து தப்பித்து விலகி, நெருப்பு வளையமிட்டு, அதற்கு நடுவே ஒளிந்து கொள்.
4) கேட்பது, பார்ப்பது, படிப்பது மூன்றிற்கும் சம அளவு முக்கியத்துவம் தந்து விடு.
5) எதிலுமே மிதமான போதைக்கு உன்னைப் பழக்கு.
6) உறவுகளிடம் காது என்கிற உறுப்பை அதிகம் பயன்படுத்து.
7) யாராக இருப்பினும் தேவைக்கு அதிகமாக எதையும் சொல்லாதே. தேவைக்கு அதிகமான எதையும் கேட்காதே.
8) நன்றாகப் பழக்கமான உச்சி என்றாலும் சிறு பிடிமானமாவது இல்லாமல் நிற்காதே.
9) நீராய் உன்னைப் பாவனை செய்து கொள். வாய்க்கிற எந்தப் பாத்திரத்திலும் நிறைவாய் நிறைந்து கொள்.
10) நிதமும் இப்படி எதையாவது, மாடு எந்நேரமும், அசை போடுகிற மாதிரி எண்ணிக் கொண்டிருக்காமல், குறைந்தபட்சம் ஒரு தேநீரையாவது ரசித்துக் குடி.
- சரவணன் சந்திரன், எழுத்தாளர்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment