மணமகன் ஜெயவர்தன் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர். சமூக அக்கறை கொண்டவர். கலைஞர் மீதும், பிரபாகரன் மீதும் மிகுந்த பிரியம் கொண்டவர். சமுகத்திற்கான போராட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டு வருபவர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மணமகளைத் தேடிக்கொண்டிருந்தார். அதில் சில கலகலப்பான அனுபவங்களையும் அவ்வப்பொழுது பகிர்ந்துகொள்வார்.
நேற்று வரவேற்பு நிகழ்ச்சி. இன்று காலை திருமணம்.
தோழர் பொழிலன் தலைமை தாங்க.. திருமணத்தை முன்நின்று நடத்துகிறவர்
அற்புதம் அம்மாள்.
குடும்பத்தோடு கலந்துகொண்டு, புத்தகங்களை பரிசாக தந்து வாழ்த்தி வந்தோம்.
தம்பதிகள் தொடர்ந்து சமூகத்தின் மீது அக்கறையோடு செயல்பட வாழ்த்துவோம்!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment