சில மாதங்களுக்கு முன்பு, பணியாளர்களுக்கென இயங்கும் பி.எப். தளம் குறித்த அடிப்படைத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன். கடந்த மாதம் நிறுவனங்களுக்கென இயங்கும் பி.எப். தளம் குறித்து எழுதச்சொல்லி வாசகர்களில் இருவர் தொலைபேசியில் கோரினார்கள்.
அதனால் பி.எப்.
தளம் குறித்து இப்பொழுது பார்க்கலாம். அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஒன்று விடாமல்
எழுதினால், மூன்று, நான்கு மாதங்களுக்கு நீண்டுவிடும். ஆகையால், நிறுவனங்கள் அடிக்கடி
பயன்படுத்துகிற அம்சங்களை மட்டும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
நிறுவனங்களுக்கென இயங்கும் பி.எப். தளம்
நிறுவனங்களுக்காக
பி.எப் இயக்க கூடிய தளத்தின் முகவரி இது. https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/.
நிறுவனத்தை பதிவு செய்த பிறகு, தரப்படும் நிறுவனத்திற்கான அடையாள எண்ணையே இதற்கு
User ID யாக ஏற்படுத்தி தருகிறார்கள். உதாரணத்திற்கு,
அந்த எண் இப்படி இருக்கும். TN/AMB /XXXXXXXXXX.
துவக்கத்தில் உள்ள இரண்டு எழுத்துக்கள் மாநிலத்தை குறிக்கும். அடுத்து வருவது நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கையாள்கிற
பிஎப். கிளையின் அடையாளம். AMB என்றால் அம்பத்தூர். TAM என்றால் தாம்பரம். அடுத்து வரும் பத்து டிஜிட்
எண். பதிவு செய்யும் பொழுது கொடுக்கப்பட்ட
கடவுச்சொல்லை கொண்டு உள்ளே நுழையவேண்டும்.
நிறுவனம் தொடர்பான, பணியாளர் தொடர்பான
பல அம்சங்களை செயல்படுத்துவதற்கு இந்த தளம் உதவுகிறது.
நுழைவு (Home)
தளத்தில்
உள்ளே நுழைந்ததுமே, Home பகுதியில் நிறுவனத்திற்கு உடனடியாக தெரியும்படியான சில அறிவிப்புகளை
கண்ணில்படும்படி தருகிறார்கள். இப்பொழுது ஒரு
புதிய பணியாளரை இணைப்பதற்கு நிறுவன பொறுப்பாளரின் டிஜிட்டல் சாவியை பதியவேண்டும் என்பது
முன்நிபந்தனையாக மாற்றியிருக்கிறோம் என்ற அறிவிப்பை இப்பொழுது தெரிவித்திருக்கிறார்கள்.
வலது பக்கம் நிறுவனம் குறித்த விவரங்கள்
(Profile) இருக்கின்றன.
பணியாளர்கள் குறித்த பதிவு (Member)
இந்த பகுதியில்
நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பணியாளரின் UAN எண்ணை பதிவிட்டு தேடினால், அவருடைய விவரங்களை
பார்க்கமுடியும் (Member Profile), புதிய பணியாளரை
ஆதாரின் அடிப்படையில், அடிப்படை தகவல்களைப் பதிவு செய்வது (Register - individual),
விலக்குவது (Exit), KYC (Know your customer) பணியாளர் தொடர்பான விவரங்களான ஆதார், வங்கி கணக்கு,
பான் கணக்கு போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்வது, பணியாளர் தரும் விவரங்களை கவனமாக
சரிப்பார்த்து, DSC கொண்டு ஒப்புதல் தருவது (Approve KYC Pending for DS), பணியாளர்கள்
தங்களுடைய அடிப்படை விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யும் பொழுது அதற்காக நிறுவனம்
இணை உறுதிமொழி ஒப்பந்தத்தை (Joint Declaration) அதற்குரிய ஆவணங்களுடன் பதிவு செய்வது,
பணியாளர்கள் அவர்களுக்கென கொடுக்கப்பட்ட தளத்தில் தங்களுடைய விண்ணப்பிக்கும் பொழுது,
அது நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்து நிற்கும். அதற்கு ஒப்புதல் தருவது (Basic
Details change Requests, Approve KYC seeded by Member) என பல அம்சங்கள் இந்த பகுதியில்
இடம்பெற்றுள்ளன.
ஒரு பணியாளரை
பதிவு செய்ய ஆதாரை வைத்து பதிவு செய்கிறோம்.
அந்த பணியாளர் இதற்கு முன்பு பி.எப்.பில் சந்தாதாராக இருக்கும் பட்சத்தில் அவர்
முந்தைய நிறுவனத்தில் வேலை செய்த UAN தெரியவில்லை என்றால் கூட, ஆதாரை அடிப்படையாக வைத்து,
அவருக்கான அடையாள எண்ணை பி.எப். தளமே தெரிவித்துவிடுகிறது. அதனால் பழைய எண் தெரியவில்லையே என பழைய நிறுவனத்தை
தொடர்புகொள்ள தேவையில்லை.
நிறுவனம் குறித்த பதிவு
(Establishment)
நிறுவனம்
தொடர்பாக தகவல்கள், மின்னஞ்சல், தொடர்பு எண் மாற்றவேண்டுமென்றால், நிறுவனத்தின் பொறுப்பாளருடைய
DSCயை பதிவு செய்வது, ஆதாரை கொண்டு பதிவது (E Sign), நிறுவனத்தின் அடிப்படைத் தகவல்களைப்
பார்ப்பது (Form 5A), நிறுவனத்தின் தகவல்கள்
மாறும் பொழுது விண்ணப்பிப்பது, நிறுவனத்தின்
தணிக்கை குறித்த தகவல்கள் (E Inspection),
ஒப்பந்ததாரர் (Sub Contractor) குறித்த தகவல்கள் என பல அம்சங்கள் இதில் இடம்
பெற்ற்றுள்ளன.
பங்களிப்பைச் செலுத்துவது
(Payments)
ஒவ்வொரு மாதமும்
பணியாளர்களின் வேலை செய்த நாட்கள் எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அவர்கள் கேட்கிற (Notepad)
வடிவத்தில் மாற்றி, அதை தளத்தில் அப்லோட் செய்வது,
அதனடிப்படையில் நாம் செலுத்தவேண்டியது எவ்வளவு? அதை வங்கி (Net banking) மூலம் செலுத்துவது,
அதற்கான ரசீதுகளை பெறுவது, தாமதமாக பணம் செலுத்தும் பொழுது, அதற்கான வட்டி, எவ்வளவு?
தாமதக்கட்டணம் எவ்வளவு? என்பதையும், ஒருவேளை நிறுவனம் இயங்காமல் இருக்கும் பொழுது,
குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ. 75 செலுத்துவது எல்லாம் இந்த பகுதியில் இடம்பெறுகின்றன.
பணியாளர் சம்பந்தமான விவரங்கள்
(Dashboards)
பணியாளர்
சம்பந்தமான விவரங்களை துவக்கத்தில் பதியும் பொழுது, சில அம்சங்கள் விடுபட்டு போயிருந்தால்
(Missing Details) அதை நிரப்புவது, இப்பொழுது
எத்தனை பணியாளர்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், அவர்களின் அடிப்படைத் தகவல்களை
காண்கின்ற விவரம் (Active Member), குறிப்பிட்ட
பணியாளரின் UAN யை கொண்டு பணி செய்த காலத்தை அறிந்துகொள்வது (Member Service
details) இன்னும் சில அம்சங்கள் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளன.
நிறுவனம் குறித்த விவரங்கள் (User)
நிறுவனம்
குறித்த (User) அடிப்படை விவரங்களான மின்னஞ்சல்,
மொபைல் எண் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்து உள்ளே நுழைவதற்கான கடவுச்சொல்லை (Password) மாற்றுவதற்கான வசதி உள்ளது.
நிர்வாகம் (Admin)
சில நிறுவனங்களில்
பணியாளர் குறித்த விவரங்களை கையாளுதலை ஒருவரும், பணம் செலுத்துவதற்கு ஒருவரும் என நிர்வாக
முறையில் சில பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பார்கள். ஆகையால் ஒரு கடவுச்சொல் என்பது போதாது.
நிறுவனத்தின் நடைமுறையில் கூடுதலாக கடவுச் சொற்கள் தேவைப்படுகிறது என்றால், பி.எப்
அலுவலகத்தைத் தொடர்புகொண்டால், அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவார்கள் என்ற செய்தியை
காண்பிக்கிறது.
இணையவழி சேவைகள் (Online Services)
சமீப காலங்களில்
ஒரு பணியாளர் முந்தைய நிறுவனத்தில் இருந்து விலகி, புதிய நிறுவனத்தில் இணையும் பொழுது,
முன்பெல்லாம் சம்பந்தப்பட்ட பணியாளர் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக முந்தைய கணக்கிற்கும், புதிய
கணக்கிற்கும் பணியாளர் சம்பந்தமான அடிப்படையான தகவல்கள் ஏதும் மாறுபாடு இல்லாவிட்டால்,
தானாகவே புதிய கணக்கிற்கு மாறிவிடும் என்பது நடைமுறையாக இருக்கிறது. இதில் ஏதேனும்
சிக்கல் இருந்தால், அதை நிறுத்துவதற்கு ஒரு வசதியை (Stop Auto Transfer Request) ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தானாக மாறிவிடும்
ஏற்பாடு இருந்தாலும், சில சமயங்களில் ஏதேனும் தகவல்கள் மாறுபாடு இருந்தால், மாறாது
முந்தைய கணக்கு பணம் அப்படியே நின்றுவிடும். அப்படி இருக்கும் பட்சத்தில் மாற்ற கோருவதற்கான
விண்ணப்பம் ஒன்றை ஏற்பாடு (Transfer Claims) செய்திருக்கிறார்கள்.
பி.எப். தளம் நத்தை வேகத்தில் இயங்குவது
ஏன்?
பிஎப். தளம்
கொடுக்கிற கணக்குபடி, எட்டு இலட்சம் நிறுவனங்கள், எட்டு கோடி பணியாளர்கள், ஒரு கோடி
ஓய்வுநிதி பெறுகிறவர்கள் பி.எப் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் பணியாளர்களுடைய பிஎப் நிதி, ஓய்வுநிதி
விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக்கொண்டிருந்தவர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக அனைத்தையும்
டிஜிட்டல் வடிவத்திற்கு விரைவாக மாற போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் முந்தைய பத்தாண்டை விட, நிறுவனங்களுக்கென இயங்கும் தளத்திலும், பணியாளர்களுக்கென
இயங்கும் தளத்திலும் தினந்தோறும் இலட்சக்கணக்கில் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்
மிகவும் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய இரண்டு தளங்களுமே நத்தை வேகத்தில் இயங்குவது பெரிய
சோகம். பல சமயங்களில் குறிப்பாக காலை பத்து
முதல் ஐந்து மணி வரைக்குமான அலுவல் நேரத்தில் தளங்கள் ஸ்தம்பித்து எந்த வேலையையும் செய்யவிடாமல்
செய்துவிடுகிறது. இதனால் நிறுவனங்களில் பணிபுரியும்
பணியாளர்கள் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு முடிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
பல சமயங்களில் மாதம் தோறும் செலுத்தவேண்டிய பங்களிப்பை உரிய தேதிக்குள் செலுத்த முடியாமல்
சிரமப்படுகிறார்கள். மெல்ல இயங்குவது குறித்த கவனம் இல்லாமல், ஒரு நாள் தாமதமானாலும்,
வட்டியையும், அபராதத்தையும் கணக்கிட்டு அடுத்த மாதமே தளத்தில் தெரிவித்துவிடுகிறார்கள். சந்தாதாரர்களான பணியாளர்களும் மிகவும் அலைச்சலுக்குள்ளாகிறார்கள்.
தளம் மெதுவாக
இயங்குவதால், பி.எப். பணியாளர்களின் நேரமும்
வீணாகுகிறது. இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் இலக்குகளை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றமுடியாமலும்,
கொடுக்கப்படும் தொடர் அழுத்தத்தினாலும் சிலர் மருத்துவ விடுப்பில் செல்கிறார்கள். சிலர் விருப்ப
ஓய்வில் வேலையை விட்டே செல்கின்றனர்.
மெல்ல
இயங்குவதற்கான காரணம் என்னவென்று தேடியபொழுது…. 2010க்கு முன்பு வரை ‘பாக்ஸ் ப்ரோ’
மென்பொருள் (சாப்ட்வேர்) பயன்படுத்தபட்டு வந்தது. 2011 முதல், ‘ஆரக்கிள் மற்றும் டெவலப்பரால்’
தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதே, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ எனும்
வன்பொருளும், அதனுடன் சேர்ந்த ‘எச்.பி.’ சர்வரும் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு
வரப்பட்டது. தகவல் பரிமாற்றத்திற்காக, அன்றைய தேதியில் புதிதாக சந்தைக்கு வந்த,
100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்-5 நெட்வொர்க்’ வடங்களும் பயன்பாட்டுக்கு
கொண்டுவரப்பட்டன.
தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரைப்படி வன்பொருளை (ஹார்ட்வேர்)
பொருத்தவரை ‘எச்.பி., நிறுவனத்தின் திங்க் கிளைண்ட்’ வன்பொருளும், சர்வரை
பொருத்தவரை ‘ஐபிஎம்’ நிறுவன சர்வரும், செயல்பாட்டில் சிறப்பாக இருக்கும்
எனக்கூறப்பட்ட நிலையில் ஐபிஎம் சர்வருக்கு பதில், எச்பி சர்வர் பயன்பாட்டுக்கு
கொண்டுவரப்பட்டதற்கு அப்போதே ஆட்சேபனை எழுந்தது. எனினும், எச்பி சர்வர்
செயல்பாட்டில் ஓரளவு சிறப்பாக இருந்த நிலையில், 2016ல் அந்த வன்பொருளின்
பயன்பாட்டுகாலம் (வாரண்டி) முடிவுற்றதாக, ‘எச்.பி’ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக
அறிவித்தது
உலகளவில் வன்பொருள் ஒன்றின் வாரண்டி காலம் முடிந்ததாக
அறிவிக்கப்பட்டால், அதற்கடுத்த நிலையில் உள்ள நவீன வன்பொருளை பயன்படுத்த
வேண்டுமென்பதே விதியாக உள்ள நிலையில், 8 ஆண்டுகளாகியும் 2011ல்
அறிமுகப்படுத்தப்பட்டு காலாவதியான பழைய வன்பொருள்களாலேயே, வருங்கால வைப்பு நிதி
அலுவலகங்கள் செயல்படுகின்றன. இன்றைய தேதியில் நாடு முழுவதும், 20 சதவீதம் வைப்பு
நிதி அலுவலகங்கள் காலவதியான ‘எச்.பி. – திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’
வன்பொருள்களாலேயே இயங்குகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சியால் வன்பொருளை பொருத்தவரை, ‘எச்.பி.- திங்க்
கிளைண்ட் டி-740’ வரையும், தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் நெட்வொர்க்
வடங்கள், 1000 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்- 8 மற்றும் 9’ வடங்கள் வரையும்,
இன்றைய சந்தைக்கு வந்துள்ளன. இவ்வாறு
வந்துள்ள வன் மற்றும் மென் பொருள்களை பயன்படுத்தி, வருங்கால வைப்பு நிதி
அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படாததால் தான் தளமும் மிக மிக மெதுவாக இயங்குகிறது.
ஆகையால், இதற்கு பொறுப்பான பி.எப். நிர்வாகமும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை
எடுத்து வேகமாய் செயல்பட வைக்க வேண்டுமாய், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் சார்பாக
கேட்டுக்கொள்வோம்.
இன்னும்
வளரும்.
வணக்கங்களுடன்,
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,
9551291721
0 பின்னூட்டங்கள்:
Post a Comment