நேற்று மதுரவாயில் பகுதியில் இயங்கிவரும் நிறுவனம். அவர்களுக்கு பி.எப். இ.எஸ்.ஐ கன்சல்டன்ட் ஒருவர் தேவை என்ற அழைப்பிற்கு இணங்க.. போயிருந்தேன். முதலில் நிறுவனத்தின் நிர்வாகியோடு அரைமணி நேரம் உரையாடல். சந்தேகங்கள் தெளிவடைந்ததும், நீங்களே இனிமேல் எங்கள் நிறுவனத்திற்கு ஆலோசகராக தொடருங்கள் என தெரிவித்தார். மகிழ்ச்சி.
”பணியாளர்களில் சிலர் இதன் பலனை அறியாமல் வேண்டாம் அவர்களுக்கு நீங்கள் விளக்க முடியுமா?” எனக் கேட்டார். விளக்கலாமே என்றவுடன், அந்த அலுவலகத்தில் கூட்டத்திற்கான அரங்கில் உடனே 10 பேருக்கும் மேலாக வந்தார்கள்.
முதலில் 20 நிமிடங்கள், பி.எப், இ.எஸ்.ஐ குறித்து அதன் நல்ல பலன்கள் குறித்து விளக்கினேன். பிறகு அவர்கள் 20 நிமிடங்கள் கேள்விகள் கேட்கலாம் என்றேன்.
சில கேள்விகள் எல்லாம் ஹைலைட்டாக இருந்தது ஆச்சர்யம்.
அந்த பணியாளர்களிலேயே அந்த பெண் தான் இளமையானவர். ”இங்கு நான் வேலை செய்கிறேன். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தால், அங்கு போய் இந்த திட்டத்தில் தொடர முடியுமா?”
”நான் ஏதோ பிரச்சனையில் வேலை செய்யும் பொழுது இறந்துவிடுகிறேன். எங்கள் குடும்பத்திற்கு இந்த நலன்கள் எப்படித் தெரியும்?”
நேரம் போனதே தெரியாமல், 40 நிமிடங்கள் கேள்விகள் கேட்க கேட்க விளக்கிக்கொண்டிருந்தேன்.
பிறகு நிர்வாகத்தினர் கொஞ்சம் பதட்டமாகி, பிறகு இன்னொருமுறை தொடரலாம் சார் என தெரிவித்தனர். விடைபெற்று வந்தேன்.
உங்களுக்கும் ஏதேனும், இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். நன்றி.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment