> குருத்து: கதிர்நிலவன் - ஷாலினி திருமணம் சிறப்பாக நடைபெற்றது!

January 26, 2024

கதிர்நிலவன் - ஷாலினி திருமணம் சிறப்பாக நடைபெற்றது!


இந்த பதிவு நண்பர்கள் சம்பந்தப்பட்டது! மற்றவர்கள் கடந்து செல்லுங்கள்!


நன்றி.


***

நண்பர்களுக்கு,

 

வணக்கம். இன்று நமது இமேசுகுமார் ‍-  மணிமேகலை தம்பதிகளின் இரண்டு மகன்களில் மூத்தவர் கதிர்நிலவன் - ஷாலினி திருமணம் சென்னை கோடம்பாக்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது.

 

மதுரையில் இருந்து நண்பர் வேல் – விஜி தம்பதியினரும், (TVS) சரவணன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.  ஆங்கில ஆசிரியர் லியோ தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.  ரமேசுகுமார் அவர்களின் தம்பி வழக்கறிஞர் ரூபனைப் பார்த்தோம்.

 

சென்னையில் இருந்து, நான் துணைவியாருடன் கலந்துகொண்டேன். இலக்கியா 12 வது படிப்பதால், தேர்வு நெருக்கடியால் அழைத்து வரமுடியவில்லை. மனோகரன் அவர்கள் கலந்துகொண்டார்.  நண்பர் சண்முகசுந்தரம் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.  சங்கர பாண்டியன் தன் குடும்பத்துடன்  கலந்துகொண்டார். கண்ணன் வெளி மாநிலத்தில் இருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை. அவருடைய துணைவியார் மீனா, தன் பசங்க இருவருடனும் வந்து கலந்துகொண்டார்.

 

முன்பே இனியனின் துணைவியார் உமா  தன் பிள்ளைகளுடன் கலந்துகொண்டார் என வேலு சொன்னார். அவருடைய பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆகையால் அவசரமாய் கிளம்பிவிட்டார்கள் என சொன்னார்கள்.

 

மணிமேகலை அக்காவின் அண்ணன் கபிலன் அவர்களை பல ஆண்டுகள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி.

 

இரமேசுகுமார் தன் குடும்பத்துடன் அவர்கள் சென்னையில் தான் குடியேறியிருக்கிறார். அவரை விரைவில் வீட்டுக்கு போய் சந்திக்கவேண்டும்.

 

சுவையான சாப்பாடு. மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டு எல்லோரும் விடைபெற்றோம்.

 

பல ஆண்டுகள் கழித்து, இப்படி சந்தித்ததில், உரையாடியதில் மகிழ்ச்சி. மதுரை நண்பர்கள் எப்பொழுது சென்னை வந்தாலும் என்னை அழையுங்கள். சந்திப்போம்.

 

நன்றி.

 

 

 

 

 

0 பின்னூட்டங்கள்: