தஞ்சைக்கு ஒரு திருமணத்திற்காக போய்க்கொண்டிருக்கிறோம்.
அகமதாபாத்திலிருந்து 1700 கிமீ பயணித்ததில் ரயில் மூன்றரை மணி நேரம் தாமதம்.
"வண்டி சரியாக ஏழரைக்கு வருகிறதே!" என ஆச்சர்யப்பட்டாராம்.
"நேத்து வரவேண்டிய வண்டிப்பா!" என்றாராம்.
இப்பொழுது அத்தனை தாமதமாய் ஆவதில்லை என்பதற்காக கொஞ்சம் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் ரயில் விபத்து ஏற்பட்டால் பொறுப்பேற்று பதவி விலகிய ரயில் அமைச்சர்களை அறிவோம்.
இப்பொழுதும் பெரும் விபத்துகள் நடைபெறுகின்றன. அதிகாரிகளை மாற்றம் செய்கிறார்கள். அமைச்சர் பதவி விலகுவது எல்லாம் கிடையாது.
நிற்க.
நாங்கள் போக வேண்டிய வண்டி ஒன்றரை மணி நேரமாக பெரம்பூரில் நின்றுகொண்டு இருக்கிறது.
ரயில் ஓட்டுநர் "இனிமேல் இவ்வளவு தாமதமாக வரமாட்டேன். இடம் கொடுங்கப்பா!" என கெஞ்சிக்கொண்டு இருப்பார் என நினைக்கிறேன். இன்னும் நடைமேடையை சொல்லாமல் இழுத்தடிக்கிறார்கள்.
பலரும் வண்டிகளின் அட்டவணையை அண்ணாந்து பார்த்து முறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மனம் வெறுத்து அங்கு விற்கும் தேநீரை வாங்கி குடிக்கிறார்கள். வெறுப்பின் உச்சத்தில் தான் அந்த மோசமான தேநீரை குடிக்கமுடியும்.
ஒரு அம்மா தன் குழந்தையை தள்ளு சூட்கேசில் உட்கார வைத்து சுற்றுகிறார்கள். மகிழ்ந்து சிரிக்கிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment