> குருத்து: வங்கி உணவு நேரம்!

April 25, 2025

வங்கி உணவு நேரம்!


பஞ்சாப் நேசனல் வங்கிக்கு இன்று நேரடியாக‌ போயிருந்தேன். இப்பொழுதெல்லாம் இணையத்திலேயே வரவு செலவு நடப்பதால், வங்கிக்கு போகவேண்டிய தேவை இல்லாமல் இருக்கிறது. நண்பர் ஒருவர் ஒரு உதவி கேட்டதால், போயிருந்தேன்.


காசாளர் இருக்கையில் இல்லை. சாப்பிட போயிருப்பதாக தெரிவித்திருந்தார்கள். நான் போகும் பொழுது 2.10. 2.30க்கு காசாளர் வந்து சேர்ந்தார். அதுவரை என்னைப் போல வாடிக்கையாளர்கள் காத்திருந்தார்கள்.

வங்கியின் தொழில் நேரம் : 10 முதல் 4 மணி வரை எழுதிப்போட்டிருக்கிறார்கள். ஏன் ஒரு ஊழியர் சாப்பிட போகமாட்டாரா! அந்த நேரத்தை தெளிவாக எழுதி போடலாமே! வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் குறையும் அல்லவா! வழக்கமாக 1.30 முதல் 2 மணி வரை இருக்கும் என நினைத்து... 2.10க்கு போனால், அந்த சமயத்தில் சாப்பிட போயிருக்கிறார்.

ஏன் முறையாக தெரிவிக்க‌வில்லை? ஒருவேளை காசாளர் சாப்பிட செல்லும் பொழுது, வேறு ஒரு ஊழியர் தற்காலிக பொறுப்பேற்க வேண்டுமா? இல்லையெனில், அதில் உள்ள நடைமுறை சிக்கலில் அதை செய்யவில்லையா?

நிறை இருந்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள். குறை இருந்தால், எங்களிடம் சொல்லுங்கள் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் வங்கி மேலாளரை இருக்கையில் இல்லை. அவரும் சாப்பிட சென்றுவிட்டார் என நினைக்கிறேன்.

சரி. அங்குள்ள ஒரு பணியாளரிடம் தெரிவித்தால், அவங்க 2.15க்கு தான் சாப்பிட சென்றார் என சிம்பதியுடன் சொல்கிறார். ”அவங்களுக்கான சாப்பாடு நேரத்தை தாரளமாக எடுத்துக்கொள்ளட்டடும். சாப்பாடு நேரம் என ஏன் போர்டில் தெரிவிக்கவில்லை என்றேன்?” புன்னைகைத்து அமைதியாகிவிட்டார். அவரிடம் பதில் இல்லை.

குறுஞ்செய்தியில்... வங்கிக்கு சென்று வந்த அனுபவம் கேட்டார்கள். வந்த பொழுது காசாளர் சாப்பிட சென்றிருக்கிறார். போர்டில் உணவு நேரத்தை எழுதிப் போடுங்கள். இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தேன்.

நான் சொல்வது சரியா? உங்கள் அனுபவம் என்ன?

0 பின்னூட்டங்கள்: