ஆறு மாதத்திற்கொருமுறை செல்லும் அந்த அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பொழுது, புதிதாய் ஒருவர் இருந்தார். முதலாளியிடம் பேசிக்கொண்டிருந்தார். புதியவரும் எனக்கு வணக்கம் தெரிவித்தார். ஆனால் எனக்கு அடையாளம் தெரியவில்லை. இது மண்டையை குடைகிற விசயம். கண்டுபிடிக்கும் வரை சிரமம் தான்.
இந்த அவஸ்தைக்கு அவரிடமே கேட்டுவிடலாம். உங்களை நான் பார்த்திருக்கேன். ஆனால் எங்க பார்த்தேன் என தெரியவில்லை என பட்டென கேட்டுவிட்டேன்.
வேறு இடத்தில் கேட்டால் கூட பரவாயில்லை. அந்த நிறுவனத்தில் கேட்டது இன்னும் சங்கடம். அவர் டாலி (Tally) குறித்து நன்றாக சப்போர்ட் தருவார் என அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் முதல் நாள் தான் வாய் மொழியாக சான்றிதழ் கொடுத்திருந்தேன். இப்பொழுது அவர்கள் முன்னாலேயே இப்படி கேட்டது இன்னும் சங்கடம்.
பிறகு பேசி சமாளித்து வந்துவிட்டேன். இதிலிருந்து அறிவது என்னவென்றால், கொஞ்சம் நிதானித்து பேசியிருந்தால்.. இந்த தர்ம சங்கடம் ஏற்பட்டிருக்காது. ஏன் அத்தனை அவசரம் என யோசித்துப் பார்த்தேன்.
வேறு என்ன காரணம். பலரும் புலம்புகிற மண்டையை பிளக்கிற வெயில் தான்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment