தஞ்சைத் தமிழ் பையன் அருணும், வங்கத்தைச் சேர்ந்த தெப்லீனா பெண்ணும் பெங்களூரில் MBA படிக்கும் பொழுது காதல் கொண்டார்கள்.
பெற்றோர்கள் ஒப்புதலுடன் திருமணம் வங்க மண்ணில் ஆட்டம், பாட்டத்துடன் நடந்து... இன்று (09/03/25) தஞ்சையில் வரவேற்பு சிறப்பாக நடைபெறுகிறது.
வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசாக அஸ்வகோஷ் அவர்கள் எழுதிய "கடவுள் என்பது என்ன?" புத்தகம் பரிசாக தரப்படுகிறது.
புத்தகங்களை பரிசாக தரும் வேலையை எனக்கே ஒதுக்கியிருக்கிறார்கள். மகிழ்ச்சி.
பையனின் அப்பாவும், அம்மாவும் ஆசிரியர்கள். அப்பா இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர். அதனால் இந்தப் புத்தகங்கள்.
இப்படி எல்லா திருமணங்களிலும் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
நான் திருமண பரிசாக கடந்த 30 ஆண்டுகளாக கொடுத்து வருகிறேன். (இப்ப சொல்லாமல் எப்பொழுது சொல்வது!

0 பின்னூட்டங்கள்:
Post a Comment