மாலை ஏழு மணி போல அந்த கடையை கடந்த பொழுது, பசித்தது. உணவகத்தில் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு தோசை சொல்லி… தந்தார்கள். கொடுத்த தேங்காய் சட்னி நன்றாக புளித்தது.
பக்கத்து டேபிள்களில் எந்தவித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அதெப்படி எனக்கு மட்டும்? இருந்தும் கேட்டுவிடலாம் என கிச்சனுக்கு போனேன். எல்லோருக்குமே 20 வயது தாண்டாது. இளம் பெண்கள்.
அந்த பெண்ணுக்கு பின்னால், இன்னொரு பெண் வேகவேகமாக பார்சலுக்கு அந்த கெட்டுப்போன தேங்காய் சட்னியை ஒரு எந்திரம் போல பார்சல் செய்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், ஒரு மாதிரியாக இருந்தது. ”கெட்டுப்போயிருச்சுன்னு சொன்னேன். அந்த பெண் எதுவும் கேட்காத மாதிரி பார்சல் பண்ணிகிட்டு இருக்கு!” என்றேன். பதிலில்லை.
இந்த பெண்களிடம் பேசி பிரயோஜனமில்லை என புரிந்தது. ”இங்க யாரும்மா மேனேஜர்?” என்றேன். (போய் சொல்லிக்கங்க! என்ற மாதிரி) கை காட்டியது. அந்த இளைஞனும் 2000 கிட்ஸ் தான். “சட்னி கெட்டுப்போயிருச்சு! கெட்டுப் போன சட்னியை பார்சல் பண்ணிக்கிட்டு இருக்காங்க!” என்றேன்.
என்னுடன் கிச்சனுக்கு வந்தார். சட்னி அரைத்துக்கொண்டிருந்த தகவலைச் சொன்னதும், “சார் உங்க டேபிளுக்கு போங்க! நான் கொடுத்துவிடுகிறேன்” என்றார். கொஞ்ச நேரத்தில் ஒரு அம்மா புது சட்னியைக் கொண்டு வந்தார். இப்பொழுது தான் பக்கத்து டேபிள்களில் இருந்து கெட்டுப் போன சட்னியைப் பற்றி புகார் சொல்லிகொண்டிருந்தார்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment