ஒரு நாள் வாழ்க்கை குறித்து சமீபத்திய ஒரு சமஸ் பேட்டியில் சொல்கிறார்.
திரைப்பட உலகில் பிசியாக இருந்த பொழுது, காலை 4 மணிக்கு எழுந்திருப்பேன். நான்கு மணிக்கு சமஸ்கிருத ஆசிரியர் வீட்டுக்கு வந்துவிடுவார். அரை மணி நேரம் வகுப்பு.
ஒருமணி நேரம் பூஜை செய்வேன். 6.50 க்கு ஸ்டுடியோ கிளம்புவேன். 7 மணிக்கு இசை கோர்ப்பு பணி துவங்கிவிடும். ஒரு உதவியாளர் அன்று பதிவு செய்வதற்காக காத்திருக்கும் மெட்டை இசைக் குறிப்புகளை கொண்டு நினைவூட்டுவார். டேப் ரிக்கார்டர் வந்த பிறகு அதில் உள்ள மெட்டை போட்டுக்காண்பிப்பார்.
அந்த பாடலுக்குரிய இசைக் கோர்வைகளை எழுத துவங்குவேன். எந்த பாடலுக்கும் அரை மணி நேரம் தான் எடுத்துக்கொள்வேன். (ஒரே ஒரு பாடல் மட்டும் 45 நிமிடம் ஆகியிருக்கிறது. ) நான் எழுதியதை வைத்து, இசைக் கலைஞர்களையும், பாடகர்களையும் வரச்சொல்லி சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பார்கள். இந்த இடைவேளையில் ஒரு மணி நேரம் தியானம் செய்வேன்.
காலை உணவு சாப்பிட்டுவேன். இசைக்கலைஞர்கள் அவரவர்களுக்கான குறிப்புகளைப் பெற்றுக்கொண்டு எனக்காக காத்திருப்பார்கள். அதை எப்படி வாசிப்பது என தெரியாது. என்ன பாடலுக்கு வந்தோம் என தெரியாது. ஓவ்வொருவருக்கும் சொல்லிக்கொடுத்து, திருத்தங்கள் செய்து சொல்லிக்கொடுத்து, ரிகர்சல் துவங்கும்.
இந்த வேளையில் பாடலாசிரியர் வருவார். அவருக்கு விளக்கி, பாடலை அரை மணி நேரத்தில் பெற்று, பாடகர்கள் காத்திருப்பார்கள். அவர்களுக்கு பாடலை விளக்கி… பயிற்சி கொடுத்து…. மொத்தமாக இசைக் கலைஞர்களோடு பாடலை பாடத் துவங்கி பயிற்சி எடுப்பார்கள். இடையிடையே திருத்தங்கள் செய்வேன். எப்பொழுது பிழையில்லாமல் பாடுகிறார்களோ அப்பொழுது பாடல் பதிவு நடக்கும்.
கொஞ்சம் சிரமமான பாடலாக இருந்தால்… திரும்ப திரும்ப பாடிக்கொண்டே இருப்பார்கள். பாடல் பதிவின் வேலை (Shift) என்பது 7 முதல் 1 மணி வரை. அதற்குள் பாடலை முடிக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த வேலை நேரத்திற்கு போய்விடும். பெரும்பாலும் 1 மணிக்குள் பாடலை முடித்துவிடுவோம்.
அடுத்த பாடல் இதே போல 2 முதல் 9 வரை தொடரும். அதற்கு பிறகு வீட்டுக்கு போய், கிளம்பி… மீண்டும் பெசண்ட் நகர் போய் கர்நாடக சங்கீத பயிற்சி தொடரும். வீடு திரும்ப 12 மணியாகிவிடும்.
அடுத்த நாள் காலை 4 மணிக்கு மீண்டும் துவங்கும்.
சாதனைக்கு பின்பு இத்தனை உழைப்பு இருக்கிறது.
நம்ம ஒரு நாள் வாழ்க்கை வந்து வந்து போவது தான் சிரமமாக இருக்கிறது. இப்படியெல்லாம் யோசிப்பதை தடுக்க முடியாதா? 

0 பின்னூட்டங்கள்:
Post a Comment