> குருத்து

March 16, 2013

ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நாவிற்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!

ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும்,
பங்காளி ஐ.நாவிற்கும்
 காவடி தூக்குவதை நிராகரிப்போம்!

தமிழகத்தில் மீண்டும்
மக்கள் எழுச்சியை தோற்றுவிப்போம்!!


தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

*இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்சே கும்பலை தண்டிக்க,
சிங்கள குடியேற்றம் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட
இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க,
ஈழத் தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட
குறுக்குவழித் தீர்வு ஏதுமில்லை.

*  தமிழகத்தின் வீதிகளில் 80களின்
மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோம்!

*அன்று முள்ளிவாய்க்கால் முதலைக் கண்ணீர்
2009 தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்கு!
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து
இன்று ஜெனிவாக் காவடி!

தமிழ் மக்களே!
*ஈழத்தின் துயரத்தை விலைபேசும்
ஓட்டுப் பொறுக்கிகளை நம்பாதீர்!

* இந்தியா, இனப் படுகொலையின் பங்காளி, கூட்டாளி,
ஈழத்தின் பகையாளி ‍என இன்றாவது
ஒப்புக்கொள்ளும் யோக்கியர்களே!
போர்க்குற்றாவளி இராஜபக்சேவை தண்டிக்க
இந்தியாவையே தாஜா செய்வது யாரை ஏமாற்ற?

* உலக பயங்கரவாதி அமெரிக்காவையும் அதன் எடுபிடி
நாடுகளையும் 'சர்வதேச சமூகம்' என்று கொண்டாடுவதும்,
அவர்களிடமே இனப்படுகொலைக்கு நீதி கேட்பதும்
கேலிக்கூத்தல்லவா!

*  பிரபாகரன் கொல்லப்பட்டது போர்க்குற்றமாகாதா?
இதை மறைக்கும் தமிழினப் போராளிகளே,
நீங்கள் காப்பாற்றுவது பிரபாகரனின் பிம்பத்தை அல்ல,
கிரிமினல் இராஜபக்சேவை!

*  ராஜபக்சே மீது ராஜபக்சேவையே விசாரணை நடத்தச் சொல்லும்,
எல்.எல்.ஆர்.சி எனும் ஐ.நா வின் கபட நாடகத்துக்கும்,
இனப்படுகொலையை வழிநடத்திய மன்மோகன் அரசிடமே
ஜெனிவாவின் தீர்மானம் கொண்டுவரக்கோரும்
ஓட்டுப் பொறுக்கிகளின் நாடாளுமன்றக் கூச்சலுக்கும்
என்ன வேறுபாடு?

* காங்கிரசு, பாரதிய ஜனதா, வலது ‍ இடது
போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட
தேசிய கட்சிகள் அனைத்தும்
என்றும் ஈழத்துக்கு எதிரானவர்களே!



மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி



தொடர்புக்கு:
அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
பேச : 94448 34519

March 6, 2013

மார்ச் 8 - உழைக்கும் பெண்கள் தினம் - தெருமுனைக் கூட்டம்

மார்ச் 8 - உலகப் பெண்கள் தினத்தை உழைக்கும் பெண்கள் தினமாக வளர்த்தெடுப்போம்!
தெருமுனைக் கூட்டம்!
நாள் : 8/03/2013

நேரம் : மாலை 5 மணி

இடம் : அம்பேத்கர் சிலை அருகில், பல்லாவரம்

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை


தொடர்புக்கு : 98416 658457
அனைவரும் வருக!

March 3, 2013

பொம்மைகள்!

வண்ண பொம்மை கார்களோ
குண்டு கரடி பொம்மையோ
புதிதாய் எப்பொழுதும் கிடைப்பதில்லை.

வீண் என தூக்கிப்போடும்
வண்டி சக்கரங்களோ
உடைந்த வளையல்களோ தான்
எங்கள் பொம்மைகள்!

இதில் வருத்தம் ஏதுமில்லை!
மகிழ்ச்சியாய் தான் விளையாடுகிறோம்!