> குருத்து: போலீசு துறை எப்படிப்பட்டது தெரியுமா?

April 26, 2022

போலீசு துறை எப்படிப்பட்டது தெரியுமா?


ஆயுதப்படை வீரர்களுக்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளிக்கும் அவர் சொல்வார்.

“கீழே இருக்கிற மரத்துக்கு கீழே ஒரு கார்டு (Guard) நிற்கிறான் இல்லையா? அவன் எதுக்கு நிற்கிறான்னு தெரியுமா? கந்தசாமின்னு ஒரு கமாண்டண்ட் (Commandant) இருந்தார். ரெம்ப பக்தியான மனுசன். ரோட்ல ஒரு கல்லைப் பார்த்தாலே கடவுள்னு கையை எடுத்து கும்பிடற ஆள். ஒரு நாள், இங்க லெட்சுமிகடாட்சமா ஒரு வேப்ப மரம் இருந்தா நல்லா இருக்கும்ல! என சொல்லி என்னை ஒரு கன்றை நடச் சொன்னார். நானும் நட்டேன். ஆடு வந்து இரண்டு முறை தின்னுட்டு போயிருச்சு! கடுப்பாகி, ஒரு ஆளை பாதுகாப்புக்கு போடுங்க!ன்னு ஒரு உத்தரவு போட்டார். கன்று வளர்ந்து மரமாயிருச்சு! அவரும் செத்துப்போய் பன்னிரெண்டு வருசமாச்சு! அதிகாரி உத்தரவுன்னு அதுக்கு பிறகு வந்த யாரும் அந்த உத்தரவை திரும்ப வாங்கவில்லை. அந்த கார்டுக்கு ஏன் அங்க நிற்கிறோம்னு தெரியாது! கார்டு போடுறவனுக்கு ஏன் போடுறோம்னு தெரியாது! இவங்கள எந்த கேள்வியும் கேட்கமுடியாது. கேட்டாலும் பதிலும் கிடைக்காது. இது தான் போலீசு துறை!” என்பார்.

- "டாணாக்காரன்" படத்தில் ஒரு காட்சி.

0 பின்னூட்டங்கள்: