> குருத்து: ஏழு தேசிய விருதுகளை வென்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் – சில குறிப்புகள்

April 17, 2022

ஏழு தேசிய விருதுகளை வென்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் – சில குறிப்புகள்



ஒரு நல்ல எடிட்டிங் செய்த படம் எது என்றால், படம் பார்க்கும் பொழுது எடிட்டிங் நினைவுக்கு வரக்கூடாது. நல்ல படம் என்ற உணர்வு தான் வரவேண்டும். பிறகு அசைபோடும் பொழுது நன்றாக தொகுத்து இருக்கிறார்கள் என உணரவேண்டும்.


இந்தி திரையுலகில் கார்ப்பரேட் எடுக்கும் படங்களுக்கு ஒரு திட்டமிடலோடு வேலை செய்கிறார்கள். முன்கூட்டியே கதை, திரைக்கதை, வசனத்துடன் தயார் செய்து வாங்கிவிடுகிறார்கள். எவ்வளவு பட்ஜெட், ஷீட்டிங்குக்கு எவ்வளவு நாட்கள் தேவைப்படும், மற்ற பின்னணி இசை, தொகுப்பு வேலைக்கு எவ்வளவு நாட்கள் என தெளிவாக கேட்டுக்கொள்கிறார்கள். இவ்வளவு தான் பட்ஜெட். இவ்வளவு நாள் தான் ஷீட்டிங் – இதற்கு மேல் கிடையாது என்பதை விவாதித்து தெளிவாக பேசி முடிக்கிறார்கள். எல்லாவற்றையும் கணக்கிட்டு வெளியாகும் தேதி என்பதை அறிவித்துவிட்டு, வேலையில் ஈடுபடுகிறார்கள். இது நல்ல பலன் கொடுக்கிறது.

இந்தியில் சில படங்களை எடுத்த பிறகு, 18 முதல் 25 வயது வரை, 25 முதல் 35 வரை என பிரித்துக்கொண்டு, அவர்களுக்கு குறிப்பிட்ட பணம் கொடுத்து வரவழைத்து, வெளியே படத்தைப் பற்றி பேசக்கூடாது என கையெழுத்து போடவைத்து, படம் பார்க்கவைக்கிறார்கள். வேறு வேறு இந்திய நகரங்களில் இப்படி திரையிடுகிறார்கள். ”தலைவி ப்ரியங்காவிற்கு ஒரு பாட்டு வைக்காமல் இருந்தது ரெம்ப தவறு!” “படம் குழப்பமா இருக்கே!” என அவர்கள் சொல்லும் எல்லா கருத்துக்களையும் குறித்துக்கொள்கிறார்கள். சரி தவறு பரிசீலித்து எடிட்டிங்கில் மாற்றியோ, மீண்டும் சில காட்சிகளை எடுத்து இணைத்தோ திரையிடுகிறார்கள்.

#Chai_With_Chitra


0 பின்னூட்டங்கள்: