> குருத்து: தொடர் சேவையில் ஒரு புதிய சேவை

September 12, 2024

தொடர் சேவையில் ஒரு புதிய சேவை


ஒரு ஜி.எஸ்.டி ஆலோசகராக, இ.எஸ்.ஐ. ஆலோசகராக, பி.எப் ஆலோசகராக சென்னையில் இயங்கி வருவதை நண்பர்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். நிறுவனங்களுக்கு மாதாந்திர ரிட்டன்களை தாக்கல் செய்யும் வேலைகளையும் செய்து வருகிறேன். நிறுவனங்களுக்காக கணக்குகளை ஒழுங்கு செய்து, தெரிந்த தணிக்கையாளர்கள் மூலமாக வருமான வரி தாக்கல் செய்தும் தருகிறேன்.


பி.காம். எம்.காம் படித்து, தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கவுண்ட்ஸ் துறையிலேயே இருப்பதும் ஒரு பெரிய பாசிட்டிவ் தான். தொழிலை பொறுத்தவரையில் மிகவும் பிடித்தே செய்கிறேன். உரிய காலத்தில் வேலைகளை செய்வதையும் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறேன்.

ஜி.எஸ்.டி, இ.எஸ்.ஐ. பி.எப், வருமான வரி தொடர்பாகவும் தொடர்ந்து கட்டுரைகளை, குறிப்பாக நான் எழுதிய கட்டுரைகளையும் அவ்வபொழுது பகிர்ந்து வந்திருக்கிறேன். நீங்களும் படித்திருப்பீர்கள்.

இதன் தொடர்ச்சியில்… இப்பொழுது புதிதாக எல்.ஐ. சி முகவராகவும் பதிவு பெற்று அடையாள எண் பெற்றிருக்கிறேன் என்பதை பகிர்வதற்காக இந்த பதிவு.

கடந்த மாதத்தில் ஒரு வாரம் ஒரு முகவராக தேர்ச்சி பெறுவதற்கு தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும் பொழுது தான், எல்.ஐ.சி முகவர் என்பது கூடுதல் வருமானம் பார்ப்பது மட்டுமில்லை! அது ஒரு பொறுப்பான வேலை என்பதை உணர முடிந்தது.

பாலிசி எடுப்பதோடு, ஒரு முகவராக அதற்குரிய பலனைப் பெற்றுக்கொள்வதோடு வேலை முடிவதில்லை. பாலிசி எடுத்ததின் பலனை உரியவர்களுக்கு பெற்றுத் தருவது வரை, பொறுமையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும் என்பதும் அவசியம் என்பதை உணர முடிந்தது.

பயிற்சியிலும் கூட கமிசனை மனதில் கொண்டு வேலை செய்யாதீர்கள். சந்திக்கும் நண்பர்கள், மக்கள் அவர்களுடைய தேவைகளில் இருந்து என்னவிதமான பாலிசி வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க உதவி செய்யுங்கள். ஒரு சேவையாக செய்யுங்கள் என வழிகாட்டுவது பிடித்திருந்தது.

ஆகையால், எல் ஐ சி பாலிசி தொடர்பாக என்ன சந்தேகம் என்றாலும் அழையுங்கள். பழைய பாலிசிகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அழையுங்கள். பாலிசியின் காலம் முடிந்துவிட்டால், அதனை எப்படி பெறுவது என்பதை அறிந்துகொள்வதற்காகவும் அழையுங்கள். கூடுதலாக உங்களுக்கு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பொருத்தமான பாலிசி எடுக்கவும் அழையுங்கள்.

நன்றி.
தோழமையுடன்
இரா. முனியசாமி
9551291721

0 பின்னூட்டங்கள்: